Thursday, June 18, 2009

மக்களை முட்டாள் ஆக்கும் இலங்கை அரசு.

இன்று ஒரு தகுடு தகுடு தகவலை விடுதலைப்புலிகள் அமைப்பு தெரிவித்து உள்ளதாக இலங்கை புலன் ஆய்வு அறிவித்து உள்ளது. அதன் படி தேசிய தலைமை பீடம் வீரகாவியம் அடைந்து விட்டதாக தெரிவிக்க பட்டு உள்ளது.ஆனால், அந்த செய்தியிலேயே பல முரண்பாடுகள் உள்ளது அதை படித்த வர்களுக்கு நன்றாக தெரியும்புலிகளின் புலனாய்வு பிரிவு மற்றும் வெளியகப்பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எமது இயக்கத்தின் தலைவர் மற்றும் ராணுவ தளபதி தமிழீழத் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்து விட்டார். இதை புலிகளின் புலனாய்வுத் துறை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இறுதிப்போரின் போது பிரபாகரனை பாதுகாப்பான இடம் நோக்கிக் கொண்டு செல்லும் முயற்சியில் அவருடன் எமது புலனாய்வு போராளிகள் ஈடுபட்டிருந்தனர். இப்போது இந்த புலனாய்வு போராளிகள் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளனர். இவர்கள் இப்போது அளித்த தகவல்கள் மற்றும் இலங்கை ராணுவத்துடன் தொடர்புடைய எங்களுக்கு தகவல் அளிப்பவர்கள் கூறும் தகவல்கள் ஆகியவை தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்துகின்றன.
இங்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஒரு தலைவரை முக்கியமான இடத்துக்கு மாற்றும் போது எந்த தளபதியும் அவருடைய முக்கிய நபரின் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் முடித்து விட நினைப்பர்.ஆனால் இங்கு தலைவர் கொல்லப்பட்டு அவரின் உதவியாளர்கள் பத்திரமாக பாதுகாப்பு பகுதிக்கு வந்து விட்டதாக கதை புணயபபட்டு உள்ளது.
எந்த செய்தியையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வு துறையினர் ஆகிய எங்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் தலைவர் பிரபாகரன் சரண் அடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. இலங்கை ராணுவத்திடம் போரிட்டே வீரகாவியம் ஆனார் என்பதை நாங்கள் மிக திடமாக உறுதிப்படுத்துகின்றோம். இப்போது தோன்றியுள்ள மிக நெருக்கடியான காலகட்டத்தில் தலைவர் பிரபாகரன் உருவாக்கி வளர்த்தெடுத்து, நமது கைகளில் தந்து விட்டு சென்றுள்ள எமது விடுதலைப்போராட்டத்தை அதே உறுதிப்பாட்டுடன் அதே கட்டுக்கோப்புடன் அதே ஒற்றுமையுடன் நாங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வெல்லும் எமது இறுதி லட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக இப்போது உருவாக்கப்பட உள்ள நாடு கடந்த தமிழீழ அரசு அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எங்கள் முன்னாள் உள்ள கடமையாகும். தமிழீழ தேசிய தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரமரணம் அடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் , தளபதிகளுக்கும் வீரவணக்கத்தை செலுத்துவதுடன் இந்த போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு புலிகளின் புலனாய்வுத் துறை அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.
ATTN: இந்த புதிய கதையை நம்புவது அவரவர் பொறுப்பு