Monday, February 8, 2010

கருணாநிதிக்கு மானமுள்ள உடன்பிறப்பின் அவசர கடிதம்!


கருணாநிதிக்கு மானமுள்ள உடன்பிறப்பின் அவசர கடிதம்!

மானமுள்ள தமிழர்கள் அனைவரும் வணக்கம்,

தமிழின தலைவர்,செம்மொழி வித்தகர்,அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் என் உயிர் தலைவன் கருணாநிதிக்கு உங்கள் இயக்கத்தின் அடிமாட்டு தொண்டன் மற்றும் உடன் பிறப்பான பகலவன் எழுதும் சிறு விண்ணப்பம்.

ஜெயராம் பிரச்சனையில் நீங்கள் மன்னிப்போம் என்று கூறி உள்ளீர்கள்.நீங்கள் அல்லவா தமிழின தலைவர்! ஆனால் இதுவா உங்கள் வழி ?

ஜெயராம் செய்த தவறுக்கு நீதி கேட்பவர்களுக்கு நீங்கள் பின்வருமாறு சொல்லலாமே

1.ஒருநாள் மனித சங்கலி போராட்டம் நடத்துவது.
2.மலையாள திரையுலகத்துக்கு (மலையாள மனோரமா) கண்டன தந்தி அனுப்புவது (ஏனென்றால் இந்த பிரச்சனை இன்னொரு மாநில கலையுலக பிரச்சனை )
3.உடன்பிறப்புகளோடு 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பது (பிற்பாதியில் பிரியாணி பொட்டலம் இலவசம் ).

இப்படி எதையாவது சொல்ல வேண்டியதுதானே.

அதை விடுத்து அண்ணா வழியில் மன்னிப்போம் என்றால் நம்முடைய உடன் பிறப்புகளின் உணர்வை எப்படி காட்டுவது?

வீட்டில் புகுந்து பெண்களை பயமுறுத்தியும், வீட்டுக்கு தீயிட்டும் நடைபெற்ற செயல்களை காவல் துறை வேடிக்கை பார்க்க முடியாது’’ என்று கூறி உள்ளீர்கள்.

சட்ட கல்லூரியில் சாதி கலவரம் ஏற்பட்டாலும் பட்ட பகலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டாலும் கடமை உணர்வோடு வேடிக்கை பார்க்கும் காவல் துறை அல்லவா நமது காவல்துறை என இந்த பாழாய் போன மக்களுக்கு தெரியாது தலைவா .

மறப்போம் மன்னிப்போம் என்றால் எதை மறக்க வேண்டும்,எதை மன்னிக்க வேண்டும் என்று சரியாக சொல்ல வேண்டியதுதானே .

மன்னிப்பு ..... தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை என்று விஜயகாந்த் ஒரு அறிக்கை விடுவார்.சீக்கிரம் பதில் அறிக்கை தயாராக வைத்து கொள்ளுங்கள்.

தமிழரின் மன்னிக்கும் உயரிய பண்பால் தான் தமிழனுக்கு இந்த இழி நிலை. தமிழனுக்கு வந்தாரைத்தான் வாழ வைக்க மட்டும்தான் தெரியும்.தன் நிலை தெரியாதவன்,தமிழனுக்கு மானமே இல்ல என அடுக்கடுக்காக இந்த இன மானத்தை அடகு வைத்திருக்கும் என் தங்க தலைவனே உனக்கு ஒரு பாராட்டு விழா நடத்த உடன் பிறப்புகளுக்கு அனுமதி உடனே வேண்டும்..
ஜெயராம் இழிவு படுத்தியது தமிழ் இனத்து பெண்களைத்தான். என் வீட்டு பெண்களையோ அல்லது என் தெலுங்கு இனத்து பெண்களையோ இழிவு படுத்தவில்லை. எனவே அவரை மன்னிப்போம் மறப்போம் என கூறி இருப்பது எவ்வளுவு பெரிய உயரிய எண்ணம.இதற்கே உங்களுக்கு பாரத ரத்னா தரப்பட வேண்டும்.

என் சகோதரி தமிழச்சியை ஒருவன் தவறாக பேசுவான்.அதை சம்மந்தமே இல்லாமல் நீங்கள மறப்பிர்களா? என சீமான் போன்றோர்கள் கேட்பார்கள்.என் சகோதரி அமிர்தத்தை கூறி இருந்தாலும் மன்னிப்பேன் என உங்கள் உயரிய மான உணர்வை ஊரறிய காட்ட வேண்டும்.
வந்தேறு களுக்கு வக்காலத்து வேண்டாம் , நாம்தமிழர் வருக எங்கள் மக்களே ! எழுக எங்கள் மக்களே .... துப்பாக்கிகளைத் தூக்கத்தான் முடியாது என்றால் செருப்புக்களையாவது கழற்றி வீசுவோம் துடப்பக்கட்டை கொண்டு தாக்குவோம் . நாதியற்று வாழ்வது இழிவாகும் என பல இளைஞர்கள் இன உணர்வோடு தயராகி போராட கிளம்புவார்கள்.அவர்களை நீங்கள் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு இட வேண்டும்.இல்லை என்றால் கழக உடன் பிறப்புகளே அவர்களை கொலை செய்வார்கள்.

ஜெயராம் வீட்ல விருதுகள் எல்லாம் உடைஞ்சிருச்சாம்.அதனால அவருக்கு அடுத்த கலைமமாமணி பட்டம் தர நீங்கள் உத்தரவு இட வேண்டும்.

தம்பி ஜெயராமா ! தமிழ் காக்க வா ! கழகம் நோக்கி வா ! கை கொடுக்க வா ! விழா எடு ! நிதி கொடு ! என் நீங்கள் உங்கள் பாணியில் இன்னும் 100 வருஷம் அரசியல் நடத்த வேண்டும் .

தமிழ் நாடில் உள்ள உனக்கு முதுகு எலும்பு கிடையாது ,கருநாயே நீ என்னடா இந்த மலையாள நாயை மன்னிக்க. நீ என்ன தமிழர் பிரிதிநிதியா? சொட்ட கருநாய்நிதி. தமிழின துரோகி என எல்லோரும் உங்களை திட்டுவார்கள்.அதையெல்லாம் இலவசமாக கேட்டு சொரணை இல்லாமல் இன்னொரு காதில் விட்டுவிடுங்கள்.
நாங்கள் மனமுள்ள சீமானாக இருக்க வேண்டாம்.ஆனால் எங்களை இலவசத்தின் பெயரில் கோமாளியாக அல்லவா வைத்து இருக்கிறிர்கள்.நீங்கள் வாழ்க நீடுடி வாழ்க.கடைசியாக உங்க வாயில் பால் ஊற்ற வேண்டும் என்று இந்த உடன்பிறப்புக்கு ஆசை.முடியுமா தறுதலை தலைவா!


பகலவன்
www.pagalavantamil.blogspot.com

Read more: http://pagalavantamil.blogspot.com/p/blog-page_8766.html#ixzz0evzstR13