Wednesday, April 28, 2010

கருணாநிதி என்ன கடவுளா?

By பழ. கருப்பையா and published in Dinamani on April 28, 2010:
கருணாநிதி செம்மொழி மாநாட்டை முடித்துவிட்டு ஓய்வு பெறப் போவதாகச் சொன்னாலும் சொன்னார். அடுத்த முடிசூட்டு விழா குறித்த பரபரப்பு செய்தி நாட்டைக் கலக்கத் தொடங்கிவிட்டது.

தேர்தலை முன்கூட்டியே சந்திப்பார் கருணாநிதி என்கிறார்கள். பொதுத் தேர்தல் என்பது இடைத்தேர்தல் அல்லவே. எத்தனையோ நிலை மாற்றங்களும், அணி மாற்றங்களும் ஏற்படுவது மட்டுமன்று; கடுமையான விலைவாசி உயர்வு; நான்காண்டு காலமாக நாடு இருளில் மூழ்கிக் கிடக்கும் அவல நிலை; ஆறுகளை எல்லாம் கட்டாந்தரைகளாக்கி, மலைகளை எல்லாம் தரைமட்டமாக்கி கொழுத்துவிட்ட ஓர் ஆட்சியை மக்கள் தரைமட்டமாக்க வேண்டிய தேர்தல் அது.

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலமும், காங்கிரஸ் காலமும் நீங்கலாக, ஆட்சி மாறி மாறியே அமைந்திருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்து இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சித் தலைவராகும் நிலையில், "அடித்து வைத்திருப்பதைக்' காப்பாற்றிக் கொள்வதுதான் ஒவ்வொருவரின் முழுநேர வேலையாக இருக்கும். ஆட்சி கிடக்கட்டும்; கட்சித் தலைமையைப் பிடித்து வைத்துக் கொள்வதற்குக் கூட முயல மாட்டார்கள். ஆட்சி இல்லாத கட்சியால் என்ன பயன்?

இப்போதைய ஆட்சி முடிவதற்குள் மணிமுடியை மாற்றிச் சூட்டக் கருணாநிதி முன்வந்தால், அது பலத்த விளைவுகளை ஏற்படுத்திக் கட்சியைக் கடகடக்கச் செய்துவிடும். கருணாநிதி ஆட்சியைக் கைவிடுவது என்பது அவரை அறியாதவர்கள் முன்வைக்கும் வாதம். இப்போது சக்கர நாற்காலியில் சட்டமன்றம் செல்லும் கருணாநிதி,பதவியிலிருந்து இறக்கப்பட்டால் ஒழியப் பதவியை விடுவதற்கான மனப்பழக்கம் உடையவரில்லை.

மேலும் கருணாநிதி என்ன தயரதனா? மகனுக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டுக்குத் தவம் செய்யப் (வானப்பிரஸ்தம்) போகலாம் என்று கருதுவதற்கு? பிறந்திருக்கிற மக்களெல்லாம் இராமனும் பரதனுமா? ""எனக்கு வேண்டாம்; நீயே வைத்துக் கொள்'' என்று பற்றற்று உதறுவதற்கு!

தனக்குப் பின்னால் யார் என்பதற்குத்தான் மகன் என்பது விடையே தவிர, தன் கண்ணோடு சாவியைக் கொடுத்துவிட்டு, மகன் வாயைப் பார்த்துக்கொண்டு, எஞ்சிய காலத்தைப் பாயில் படுத்துக் கொண்டு பழைய நினைவுகளை அசைபோடும் அளவுக்கு உலக அனுபவம் இல்லாதவரா கருணாநிதி?

ஆரியர்களுக்கு நான்கு வேதங்கள் இருக்கும்போது, திராவிடர்களுக்கு ஒரு வேதமாவது வேண்டாமா என்னும் குறையைப் போக்கத்தான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதித் தமிழை மானக்கேட்டிலிருந்து காப்பாற்றினார் என்று கூவிக் கூவிப் பாடும் புதுக் கவிஞர்களெல்லாம், அடுத்த நொடியே அத்தாணி மண்டபங்களை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பதை அறியாதவரா என்ன?

தன்னுடைய பலம் கோபாலபுரத்தில் இல்லை; கோட்டையில்தான் இருக்கிறது என்பதை எல்லாரையும்விட நன்கு புரிந்தவர் கருணாநிதி.

கருணாநிதியைச் சாணக்கியர் என்று சொல்லி அவரை மகிழ்விப்பவர்கள் இருக்கிறார்கள். எதிரியின் வலிமையை தன் மன விருப்பத்திற்கேற்றவாறு மதித்து மகிழாமல், உள்ளவாறு உணர்வதுதான் சாணக்கியம்.

ஆனால் கருணாநிதி எம்ஜிஆரின் வலிமையை வெறுந் திரைப்படக் கவர்ச்சியினால் வந்த வலிமை என்று குறைவாக மதிப்பிட்டு, இன்னொரு மாற்று நடிகனை அவருக்கு எதிராக உருவாக்குவதன் மூலம் எம்ஜிஆரைச் சாய்த்துவிடலாம் என்று தப்பாகக் கணக்கிட்டுத் தன் மகன் மு.க. முத்துவை உருவாக்கி மோத விட்டவர்.

அதன் காரணமாகப் படம் தோற்றால்கூடக் குற்றமில்லை; ஆட்சியையும் அல்லவா தோற்றார் கருணாநிதி. அதற்குப் பிறகு ஓராண்டா, ஈராண்டா? பதினான்கு ஆண்டு காலமல்லவா வனவாசம் போக நேரிட்டது. உட்கார இடமில்லாமல், மேலவைக்குப் போனார்; மேலவையும் கலைக்கப்பட்டதே. எம்ஜிஆர் வங்கக் கடலோரம் நீள்துயில் கொண்ட பிறகுதானே, மீண்டும் அரசியலையே கருணாநிதியால் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதுவா சாணக்கியம்?

இன்றும் கருணாநிதியின் அரசு சிறுபான்மை அரசுதானே. நாதியற்றுப் போன கருணாநிதியின் அரசை எற்றுவதற்கு எவ்வளவு நேரமாகும் காங்கிரஸýக்கு? கருணாநிதியைச் சார்ந்து இன்றைய காங்கிரஸ் அரசும் இல்லையே! இவ்வளவு அனுபவமுடைய தானே பொய்க்காலில் நிற்கும்போது, தன் மகனுக்குக் கருணாநிதி எப்படி முடிசூட்டுவார்?

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பங்கள் சொல்லொணா வகையில் செழிப்புற்றதுபோல, கட்சியும் வலிவு பெற முடிந்தது.

அதிகாரத்தை வைத்துப் பணம் திரட்டல்; பணத்தை வைத்து அதிகாரத்தைப் பெறல் என்னும் நச்சுச் சுற்று கருணாநிதியால் தமிழக அரசியலில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்குக் கருணாநிதி வழங்கிய கொடை இது என்று வரலாறு வரிந்து வரிந்து எழுதும்.

அவரிடமிருந்த "செல்வம்' அவருடைய குடும்பங்களுக்குள் பங்கிடப்பட்டதுபோல, அரசியல் அதிகாரமும் பங்கிடப்பட்டது. தமிழ்நாடு வடக்கு, தெற்காகப் பிரிக்கப்பட்டு இரு மகன்களும் பொறுப்பாக்கப் பெற்றனர்.

தமிழ்நாட்டு ஆட்சியில் ஒரு மகனும், மத்திய ஆட்சியில் இன்னொரு மகனும் அமர்த்தி வைக்கப்பட்டனர். மகள் மாநிலங்களவைக்கு நியமனம் பெற்றார்.

அண்ணா காலத்துக்குப் பிறகு இரா. செழியனை மெல்ல அகற்றிவிட்டு அந்த இடத்தில் தன்னுடைய அக்காள் மகன் முரசொலி மாறனை அமர்த்தி அமைச்சராக்கியதுபோல, மாறனின் மகன் தயாநிதி மாறனையும் தில்லியில் அமைச்சராக்கினார் கருணாநிதி.

தன்னுடைய சுற்றம் முழுவதையும் கோபாலபுரத்தில் பக்கம் பக்கத்தில் குடியேற்றியதுபோல, தன்னுடைய முதல் சுற்றம், இரண்டாம் சுற்றம் என்று வரிசைப்படி அவர்களின் நிலைகளுக்கும் உறவுக்கும் தகப் பதவிகளையும் பங்கிட்டவர் கருணாநிதி.

ஒரு குடும்பத்திற்குள்ளேயே அதிகார மொத்தமும் இருந்துவிட்டால், வெளிப்போட்டி இருக்காது என்பது கருணாநிதியின் எண்ணம். ஆனால், அதற்குப் பிறகு குடும்பத்திற்குள்ளேயே குத்து வெட்டு நடக்கும் என்பது வரலாற்றின் அடிமட்ட மாணவர்களுக்கே தெரியுமே.

""உனக்கு இது, உனக்கு அது' என்று கருணாநிதி பங்கிட்டுக் கொடுத்ததை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரம் என்ன சோற்றுருண்டையா? ஒருவர் நான்கு உருண்டையோடு போதும் என்று எழுந்து விடுவார்; இன்னொருவருக்கு ஆறு உருண்டைகள் தேவைப்படும். வயிற்றுத் தேவையும், அதிகாரத் தேவையும் ஒன்றல்லவே! சொத்தைச் சமமாகப் பங்கிட முடியும்; அதிகாரத்தைச் சமமாகப் பங்கிட முடியுமா என்ன?

இருப்பது ஒரு முதலமைச்சர் நாற்காலிதானே? இரண்டு பேரின் குறியும் ஒன்றின்மீதுதான் என்றால் எப்படிச் சிக்கறுக்க முடியும்?

கருணாநிதி பல மோசமான அரசியல் செல்நெறிகளை உண்டாக்கியதுபோல, அழகிரி "திருமங்கலம் சூத்திரம்' என்னும் புதிய செல்நெறியை உண்டாக்கவில்லையா?

அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது; அது ஒரு குற்றமா? கருணாநிதி குடும்பத்தில் யாருக்கு ஆங்கிலம் தெரியும்? மேலும் இந்தியா என்ன இங்கிலாந்தா?

பத்தாண்டு காலமாகப் பாரதிய ஜனதாவும், காங்கிரஸýம் கருணாநிதியின் தயவால் ஆட்சியில் இருந்தும், கண்ணையே திறக்காமல் ஓராண்டுக் காலம் படுத்த படுக்கையாக இருந்த முரசொலி மாறனை துறை இல்லாத அமைச்சராக வைத்துக் கொள்ளத் தேவையில்லாமல் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்திய கருணாநிதி, இந்திய மொழிகளை எல்லாம் ஆட்சி மொழிகளாக்க தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தியதுண்டா? அப்படிச் செய்திருந்தால் தமிழுக்கு மட்டுமா வாழ்வு வந்திருக்கும்? அழகிரிக்குமல்லவா வந்திருக்கும்!

"கருணாநிதியைத் தவிர யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்' என்று அழகிரி சொன்னதன் பொருள், "நீ விலகி நில்; நான் பார்த்துக் கொள்கிறேன்' என்பதுதான்!

கி.பி. 2000-ல் அழகிரியைத் தி.மு.க.வை விட்டு விலக்கி வைத்து அறிக்கை வெளியிட்டார் பொதுச் செயலர் அன்பழகன். விவரம் தெரிந்த அழகிரி, அன்பழகனின் மீது கோபம் கொள்ளவில்லை. தன்னுடைய நீக்கத்துக்குப் பின்னணியில் இருந்த தன் தகப்பனார் கருணாநிதியோடேயே மோதிப் பார்த்தவர் அழகிரி.

தி.மு.க.வுக்கு எதிராக 2001-ல் போட்டி வேட்பாளர்களை நிறுத்திப் பணமும் செலவழித்துக் கலங்க அடித்தவர் அழகிரி. கட்சிக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அஞ்சி அழகிரியிடம் சமாதானத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் கருணாநிதி.

இதுதான் இன்றைக்கும் அழகிரியின் நிலைப்பாடு. மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது கருணாநிதியின் பாடு.
இது விசுவாசமற்ற நிலை இல்லையா என்று கேட்டால், அதிகாரத்துக்கான போட்டியில் விசுவாசம் என்ன விசுவாசம்?
மத்திய அமைச்சர் பதவியில் இருக்க விருப்பமில்லை அழகிரிக்கு. தலைவராகலாம் என்று நினைக்கிறார்.

அதற்குள் திமுக ஒரு ஜனநாயகக் கட்சி; கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று யாருக்குச் சொல்கிறார் கருணாநிதி? திமுக என்ன சங்கர மடமா? என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி!

சங்கர மடத்தில் நியமனம் பெற ஒருவர் ஸ்மார்த்த பிராமணராக இருக்க வேண்டும். திமுகவில் நியமனம் பெற கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்க வேண்டும். என்ன வேறுபாடு? நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆக முடியுமா?

"அப்படியானால் தேர்தல் நடக்கட்டும்; தலைவரைக் கட்சி முடிவு செய்யட்டும்' என்று வெளிப்படையாக அந்த அறைகூவலை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டாரே!

"நீயாக ஏன் முடிவு செய்கிறாய்? குடும்பத்திற்குள்ளாவது ஜனநாயகம் வேண்டும்' என்பது அழகிரியின் கூக்குரல்.

""என் மக்கள் இருவருக்கும் இடையே மோதல் என்றால் என் இதயத்தில் ரத்தம் வடியும்'' என்று எதற்குப் புலம்புகிறார் கருணாநிதி?

யார் தோற்றாலும் யார் வென்றாலும் கோபாலபுரத்துக்கு அது மொத்தத்தில் வெற்றிதானே!

1961-ல் சம்பத், 1972-ல் எம்ஜிஆர், நெருக்கடிநிலை காலத்தில் நெடுஞ்செழியன், ஈழப் போரின்போது வைகோ என்று ஒவ்வொருவரையாக வெளியேற்றிக் கட்சியைக் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட பிறகு, குடும்பத்திற்குள்ளே ஜனநாயகம் வேண்டும் என்று அழகிரி கோருவது அதிசயமானது என்றாலும் நியாயமானதுதானே!

முதல்வருக்கான போட்டி நடக்கப் போவதில்லை; கருணாநிதி நாற்காலியை விட்டு இறங்கப் போவதில்லை. அப்படி ஒருவேளை நடக்கும் என்று கொண்டால், அது கருணாநிதி நினைப்பதுபோல் இருமுனைப் போட்டியாக இருக்காது; மும்முனைப் போட்டியாகவே இருக்கும்.

தயாநிதி மாறன் திமுககாரராகவே, நேரே முகங்காட்டாத காங்கிரஸôல் களமிறக்கப்படுவார். தயாநிதியிடம் இல்லாத பணமா? ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரும் "போதும்; போதும்' என்னும் அளவுக்குப் பணத்தால் அடிக்கப்படுவார்கள்.
காங்கிரஸின் தயவில்லாமல் கருணாநிதியே ஆட்சியில் இருக்க முடியாதே! கருணாநிதியின் மகன்களால் எப்படி முடியும்?

திமுகவின் சார்பாக சிறுபொழுதுக்கு யார் ஆள்வது என்பதைக் காங்கிரஸ் தீர்மானிக்கும். தீர்மானிக்கும் சக்தி மாறுவதோடு திமுக வரலாறு முடியும்! தோன்றியவை எல்லாம் அழிந்தே தீரும் என்பது இயற்கை விதி!

அப்படியல்லாமல் நீருள்ள அளவும், நிலமுள்ள அளவும், காருள்ள அளவும், கடலுள்ள அளவும் நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பேன் என்று சொல்வதற்குக் கருணாநிதி என்ன கடவுளா?

Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=233685&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=கருணாநிதி%20என்ன%20கடவுளா?

Wednesday, April 21, 2010

ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுத்த் தயாராகிவிட்டார் கருணாநிதி






By திரு. பாலச்சந்திரன்.
ஈழத் தமிழர்களுக்காகத் தனது டெல்லி எஜமானர்களுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுத்த் தயாராகிவிட்டார் தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி அவர்கள். ஈழத் தமிழர்களுக்காக அவர் எழுதும் எத்தனையாவது கடிதம் இது என்பது அவருக்கேதான் வெளிச்சம்.
ஈழத்தின் இறுதி யுத்த காலத்தில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் எழுதிய கடிதங்கள் நெஞ்சுக்கு நீதியாக வெளிவரும்போதுதான் அவரது கண்ணீர்த் துளிகளின் எடையை அறிந்து கொள்ள முடியும்.
அவர் டெல்லிக்குக் கடிதங்கள் அனுப்பியிருக்காவிட்டால், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அழிக்கப்பட்டாலும், எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் அடைத்துக் காப்பாற்றியிருக்க முடியாது என்றே உலகம் இப்போதும் நம்புகின்றது. அவர், பாலு தலைமையில் கனிமொழி குழுவினரை இலங்கைக்கு அனுப்பியிருக்காவிட்டால், அந்த முள்வேலி முகாமிலிருந்து இரண்டு இலட்சம் மக்களையாவது காப்பாற்றி வேறு இடங்களுக்கு அகற்றியிருக்க முடியாது என்று ஐ.நா. கூட நம்புகின்றது.

இப்போதும் கூட, தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் கடிதங்கள் எழுதுவதால்தான் தமிழீழ மக்கள் நிம்மதியாக வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். சிங்கள ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஷ தமிழில் பேசும் நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இத்தனை சாதனைகள் புரிந்த தமிழக முதல்வர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழர்கள் சிலர் புழுதி வாரித் தூற்றுவதைச் சகிக்க முடியாமல், பல காங்கிரஸ் பிரமுகர்கள் தீக்குளிக்கும் முயற்சியில் கூட இறங்கியுள்ளார்கள்.
தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களுக்குத் தனது குடும்பப் பிரச்சினையையே தீர்க்க நேரம் போதாமல் இருக்கும் நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு யார் வருகிறார்கள்? விமான நிலையத்திலிருந்து யார் போகிறார்கள்? அங்கிருந்து யார் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள் என்பதையா பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ஒரு பக்கம் அழகிரி - ஸ்டாலின் பிரச்சினை விசுவரூபம் கொள்கிறது. மற்றொரு பக்கம் மனைவியும் துணைவியும் முட்டி மோதிக்கொள்கிறார்கள். யார் தலைமாட்டில்? யார் கால் மாட்டில்? என்ற பிரச்சனை இன்றுவரை சோனியாவாலும் தீர்க்க முடியாததாகவே நீடிக்கின்றது. அதற்காக ஒரு அரை நாள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்றால், அங்கேயும் தலைமாடு, கால்மாடு பிரச்சினை உருவாகிவிடுகின்றது.

அரசியல் வாழ்வில், தேவைக்கும் அதிகமாகப் பணத்தைச் சம்பாதித்து, இந்தியாவின் பணக்கார முதல்வர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டாலும், தேவைக்கு அளவிற்காவது நிம்மதியைச் சம்பாதிக்க முடியாத துக்கம் கருணாநிதியின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது. வாலிப காலத்தில் அதிகமாக ஆசைப்பட்டதால் வாரிசுகள் தொகை அளவுக்கு மீறி இப்போது அவரைத் தொல்லைப்படுத்தி வருகின்றது. மூத்த மகன் முத்து முதல், கடைக்குட்டி கனிமொழி வரை சொத்துக்கு மட்டும் சண்டை போட்டால் பரவாயில்லை, அவர்கள் பதவிகளுக்கும் போட்டி போடுவதால் சங்கடம் அவரது தலைக்குமேல் குந்தியே உள்ளது. தமிழகத்தை ஸ்டாலினுக்கும், டெல்லியை அழகிரிக்குமாகப் பகிர்ந்தாலும் பிரச்சினை தீர்வதாக இல்லை. ஆங்கிலம் புரியாத அழகிரி, தனக்குத் தோதான இடமாகத் தமிழகத்தையே தேர்வு செய்கிறார். கனிமொழியும் தனக்கு எதுவும் இல்லையா? என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். மூத்த மகன் முத்து குடும்பத்துடன் ஐக்கியப்பட்டு விட்டாலும், தான் தலைவரால் ஒதுக்கப்படுவதாகப் புலம்பிக்கொண்டுதான் உள்ளார்.

செல்வம் மட்டுமல்ல, ஊடகத் துறையும், சினிமாத் துறையும் கூட இப்போது கருணாநிதியிடம் அடைக்கலமாகியுள்ள நிலையில், அசக்க முடியாத சக்தியாக உருவாகிவரும் தனது குடும்பத்தில் சகோதர யுத்தம் உருவாகிவிடக் கூடாது என்பதனாலேயே பாட்டி வடை சுட்ட கதை போல், அடிக்கடி தமிழீழ விடுதலைப் போர் இன்றைய நிலையை அடைந்ததற்கு சகோதர யுத்தமே காரணம் என்று தமது வாரிசுகளுக்கு கதை சொல்லி வருகின்றார்.

இத்தனை குடும்பக் குழப்பங்களுக்கு மத்தியில் அன்றாடம் அல்லாடும் மு. கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழருக்காக எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? மன்னிக்க வேண்டும்இ சோனியாவின் அன்புக் கட்டளைக்குப் பின்னர் எம்மை எல்லாம் ஈழத் தமிழர் என்று அழைப்பதைத் தவிர்த்து, இலங்கைத் தமிழர் என்றே விழித்து வருகின்றார். மயிலிடம் இறகு கோருவது போல், ராஜபக்ஷவிடம் தமிழர்களுக்கான உரிமைகளைக் கேரலாம் என்பதே தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் சோனியா சிந்தனை. அதை மீறி, மகிந்தருக்கு கோபம் வரும் வகையில் நடந்து மகிந்த சிந்தனை ஊடாக, இலங்கைத் தமிழருக்காக அவர் பெற்றுக் கொடுக்க விரும்பும் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியுமா? தேசியத் தலைவர் அவர்களது தாயார் பார்வதி அம்மாளைத் தமிழகத்தில் தரை இறங்க விடுவது தனது இலட்சியப் பயணத்திற்கு இடைஞ்சலாக அமையும் என்பதை மு. கருணாநிதி அவர்கள் புரிந்து கொண்டதில் என்ன தப்பைக் காண முடியும்?

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் சோனியா சிந்தனையும், மகிந்த சிந்தனையும் சந்திக்கும் இடத்தில் இலங்கைத் தமிழருக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பும் இடத்தில்இ பார்ர்வதி அம்மாளின் தமிழகப் பயணம் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அவரைத் திருப்பி மலேசியாவுக்குப் பத்திரமாக அனுப்பியதுடன், சோனியா சிந்தனையில் மாற்றங்களை உருவாக்க டெல்லிக்குக் கடிதம் எழுதும் தனது தீர்மானத்தை வெளியிட்டுள்ளார். விடுதலைப் பலிகளையும், அவர்களோடிருந்த மக்களையும் அழித்துவிட்டதனால், சோனியாவிற்கு இருந்த பயங்கரவாத அச்சத்தைத் தீர்க்க முன்நின்று செயற்பட்ட மு. கருணாநிதி அவர்களது தியாகத்தை சோனியா காந்தி உணராமல் விட்டுவிடுவாரா?

ஈழத் தமிழர்கள்மீது சிங்கள தேசம் இன அழிப்பு புரிந்தபோது, அரை நாள் உண்ணாவிரதம் இருந்து சோனியாவின் மனத்தை மாற்றிய கருணாநிதி அவர்கள், செல்வி ஜெயலலிதாவின் முன்னைய தீர்மானத்தின் காரணமாக நாடு கடத்தப்பட்ட பார்வதி அம்மாள் மீண்டும் தமிழகம் வந்து வைத்தியம் செய்துகொள்ள மீண்டும் ஒரு அரை நாளை உண்ணாவிரதத்திற்காக ஒதுக்கமாட்டாரா? மு. கருணாநிதி அவர்களைக் கைது செய்து சிறைப்படுத்திய முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சதி செய்தே, தற்போதைய முதல்வர் மு. கருணாநிதிக்குத் தெரியாமல் திருமதி பார்வதி அம்மாள் அவர்களைத் தமிழகத்தில் தரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பிவிட்டார் என ஆத்திரப்படும், அவ்வப்போது ஆட்சியில் அமர்பவர்களுக்கு ஜால்ரா போட்டுத் தன்னை நிரப்பிக்கொள்ளும் கி. வீரமணி சொல்வதை நம்பாமல் இருக்க முடியுமா?
பாவம், முத்துக்குமாரன்... தமிழக மக்களை இவர்களிடமிருந்து மீட்க முயன்று தோற்றே போய்விட்டான்.

Monday, April 19, 2010

கருணா(ய்)நிதி, உமது ஆத்துமா சாந்தி அடையாது அலைந்து திரியும்: தமிழரசன்



தமிழீழத்தின் தாயை
தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல் விமான நிலையத்தில் வைத்தே விமானத்தை விட்டு வெளியில் வரவிடாமல் அந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தான் எதிரி என்பதை மிகவும் தெளிவாகக் கட்டியுள்ளார் திராவிடன் கருணாநிதி.

ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவனுக்கு ஏன் எம்தாயின் வேதனை புரியவில்லை இவனும் ஒரு நோயாளிதானே இருந்த இடத்தைவிட்டு எழும்பமுடியாதவன் சோனியாவைக் கண்டதும் கட்டிப்பிடிக்க எழுந்துவிடுவாய் பின்பு நாட்காலியில் உட்காருவதற்கு சிரமப்படுவாய்.

தமிழ்ச்செல்வனுக்கு கவிதை எழுதினாய் கண்டனம் தெரிவித்தார் ஜெய அம்மா கவிதை எழுதவும் அஞ்சலி செலுத்தவும் உடலில் தமிழ்ரத்தம் ஓடவேண்டும் என்றாய் ஆனால் மருத்துவ சிகிச்சைக்க வந்த அம்மாவை திருப்பி அனுப்பிய உமக்கு உடம்பில் என்னரத்தம் ஓடுகிறது?. என்று சொல்லவே இல்லை எமக்குத் தெரியும் உமது உடம்பில் ஓடுவது காங்கிரஸ் இரத்தமா அல்லது திராவிட இரத்தமா இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும்.

நீர் நினைக்கலாம் எல்லாம் சுலபமாக முடிந்துவிட்டது என்று ஆனால் நீர் நினைப்பதுபோல ஒன்றும் முடிந்துவிடவில்லை இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறது எம் தமிழ் இனத்திற்கு செய்த துரோகங்களுக்கெல்லாம் நீர் இந்தப்பிறவியிலேயே அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறீர் என்பதை மறந்துவிடாதீர்.

தமிழர்களின் சாபக்கேடுகள் எல்லாம் உம்மை சும்மா விடாது உமக்கு நல்லசாவே வராது படுக்கையில் படுத்தபடியே புழுப்பிடித்து துடிதுடித்து சாவாய் செத்தபிறகும் உமது ஆத்துமா சாந்தி அடையாது அதுக்கும் அலைந்து திரியும் பயந்து பயந்து வாழ்ந்து செத்துப் போ…..

Source: http://kavishan.blogspot.com

Saturday, April 17, 2010

(கருணா(ய்)நிதி)... தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் : நெடுமாறன்

















Source: www.tamilwin.com

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த தாயாரை, உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடி
த்த கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். இச் செயலுக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து ஆறு மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு இன்று (16.04.2010) இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார்.

படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக விஜயலட்சுமி என்ற பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல் வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர். பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிச்சைக்காக அவர் இங்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.

இந்திய அரசு ஆறு மாத காலத்திற்குரிய விசாவை இன்று காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்? அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும். காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்திய அரசுமே பொறுப்பாவார்கள்.

அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை.

விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்ற போது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள். விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது.

விமான நிலையத்தில் தனியான பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். ஆனால் சென்னை புறநகர் காவல்படையினர் அத்து மீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள். முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாமல் இது ஒரு போதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு அவரே முழுமையான பொறுப்பாளி ஆவார்.

உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியத் தலைவரான பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்தத் தாயாரை, தாய் தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்த கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

_________________________________________________________
பிரபாகரனின் தாயாருக்கு மலேஷியா ஒரு மாத கால விஸா வழங்கியது : சிவாஜிலிங்கம்

இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திரும்பிச் சென்ற பிரபாகரனின் தாயாருக்கு மலேஷிய அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் ஒரு மாத கால விஸா வழங்கியுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மையார் நேற்று இரவு இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்திய அரசாங்கம் ஆறு மாதகால விஸாவை பார்வதி அம்மையாருக்கு வழங்கியிருந்த போதிலும் கூட ஏன் அனுமதி மறுத்தது என்பது தெரியவில்லை. இரவு 10.15 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமானத்திலிருந்து தரை இறங்க அனுமதிக்காமல் அப்படியே 10.45 மணியளவில் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார் என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை தான் இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதற்கும், பிரபாகரனின் தாயாரின் இந்திய வருகைக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை என்றும் சிவாஜிலிங்கம் கூறினார்.

பிரபாகரனின் தாயாரை இலங்கையிலிருந்து மலேஷியா செல்வதற்காக சிங்கப்பூர் வரை கே.சிவாஜிலிங்கம் அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புணர்தலின் உச்சியில் லீனா மணிமேகலை

Source: http://www.vinavu.com/2010/04/17/pala-rising/
“என் கவிதைக்கு எதிர்ப்பு என்று பெயர் வை” என்ற படாடோபமான தலைப்பின கீழ், சீமாட்டி லீனாவையும் அவருடைய கவுஜையையும் காப்பாற்ற, கருத்துரிமைக் காவலர் அ.மார்க்ஸ் தலைமையில் ஏப்ரல் 15 ஆம் தேதி ஒரு கூட்டம் நடந்தது.

போலீசால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட (இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த்து) ஒரு புகார், சில இணைய தளங்களில் லீனாவின் எழுத்துக்கு எதிராகப் பரவிவரும் கலாச்சார அடிப்படைவாதம் – இதுதான் தமிழகத்தில் படைப்பாளிகளைச் சூழ்ந்து வரும் பேராபத்தாம். இதற்காக ஒரு கண்டனக் கூட்டம்.

சீமாட்டி லீனாவின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள் எழுத்தாளர் உலகில் ஏற்கெனவே பிரசித்தம் போலும்! பலரும் கழட்டிக் கொள்ளவே, விவகாரம் அ.மார்க்சின் மானப்பிரச்சினையாகி விட்டது. ஒண்ணரை கவிதை எழுதினவன், சரக்கடித்து விட்டு மூளையிலிருந்து கவிதை வெளியேறுவதற்காக காத்திருப்பவன், படைப்பாளிகளுடன் சரக்கைப் பகிர்ந்து கொண்டதனாலேயே படைப்பாளி ஆனவன்.. உள்ளிட்ட ஒரு லிஸ்டு தயாராகி விட்டது.

அதில் சில பேரைத் தொடர்பு கொண்டு “ஐயா இது நீங்க எழுதின கவிதைதானா” என்று கேட்டோம். அவர்களோ “எனக்குத் தெரியவே தெரியாது. இது மண்டபத்தில எவனோ செய்த சதி” என்று பதறினார்கள். இப்படி ‘அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும்’ பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், முக தாட்சண்யத்துக்கு அஞ்சி வந்து விட்டு, நாற்காலியில் உட்காரவும் முடியாமல், எழுந்திருக்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தவர்கள்.. என மொத்தம் 50 பேர் இருக்கும். மீதி 50 பேர் ம.க.இ.க தோழர்கள், ஆதரவாளர்கள்.

கம்யூனிசத்தையும், அதன் தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இழிவுபடுத்தி லீனா எழுதியிருந்த கவுஜைக்கு விளக்கம் கேட்டு ம.க.இ.க தோழர்களும், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களும் அந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்கள். பதில் கிடைக்கவில்லை. அல்லக்கைகளின் ஊளைச்சத்தமும், வசவுகளுமே பதிலாகக் கிடைத்தன. ஆவேசமாக அடிக்க வந்தார் சீமாட்டி லீனா.

இருந்த போதிலும் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதோ, கலகம் செய்வதோ அங்கு சென்ற தோழர்களின் நோக்கமாக இருக்கவில்லை. எழுப்ப வேண்டிய கேள்விகளை மட்டும் உரையாகவும், இறுதியில் முழக்கமாகவும் எழுப்பி விட்டு அமைதியாக அரங்கை விட்டு வெளியேறினார்கள் தோழர்கள்.

கூட்டத்தலைவர் அ.மார்க்சுக்கோ, அரங்கத்தின் நாற்காலிகள், ஜன்னல்களுக்கோ, மிக முக்கியமாக கவுஜாயினி லீனாவின் மேக்கப்புக்கோ எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. “கலாச்சார போலீசிடமிருந்து” படைப்பாளிகளைப் பாதுகாப்பதற்காக வரவழைக்கப்பட்டிருந்த காக்கிச் சட்டைப் போலீசுக்கு ‘படைப்புச் சுதந்திரத்தை’ காப்பாற்றத் தடியடி நடத்தும் வேலையும் இல்லாமல் போயிற்று. இது கதைச்சுருக்கம்.

தோழர்கள் அரங்கை விட்டு வெளியேறிய பின்பு, “ம.க.இ.க காரர்கள் செய்ததிலேயே முட்டாள்தனமான காரியம் இதுதான்” என்று தோழர்களின் நடவடிக்கை பற்றிக் கருத்துரைத்தார் அ.மார்க்ஸ்.

அதென்னவோ உண்மைதான். “தோழர்களை அடிப்பதற்கு ஓங்கின லீனாவின் கையை அங்கேயே முறிக்காமல் வந்தது முட்டாள்தனம்” என்றுதான் அரங்கை விட்டு வெளியே வந்த பெண் தோழர்கள் குமுறினார்கள்.

என்ன செய்வது சீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தில் கூட இப்படித்தான் நடந்தது. கருவறையில் நுழைந்த தோழர்கள் பட்டாச்சாரிகளையும் கைத்தடிகளையும் நாலு தட்டு தட்டி உருட்டி விட்டார்கள். எவனாவது செத்துத் தொலைஞ்சால் அப்புறம் கருவறைப் பிரச்சினை கல்லறைப் பிரச்சினை ஆகி, காரியம் கெட்டு விடும் என்பதால், “அடி வாங்கினாலும் பரவாயில்லை. திருப்பி அடிக்க வேண்டாம்” என்று தோழர்கள் நிறுத்திக் கொண்டார்கள். அப்புறம்தான் பாப்பான்கள் தம் “வீரத்தை” காட்டினார்கள்.

அங்கே பாப்பான்கள் காட்டிய வீரத்துக்கும் இங்கே படைப்பாளிகள் காட்டிய வீரத்துக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ரெண்டும் ஒண்ணுதான்.

இருந்த போதிலும், அரங்கத்தில் ஊளையிட்ட அல்லக்கைகளும் தோழர்கள் வெளியேறிய பின்னர் மேடையில் வீரவசனம் பேசியவர்களும் வேறுவிதமாக நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவசரப் படாதீர்கள். அடுத்த கூட்டத்தில் சந்திக்காமலா போய்விடுவோம்?

இனி அ.மார்க்சிடம் வருவோம். “ம.க.இ.க வினர் முட்டாள்கள்” என்ற சான்றிதழை வழங்கியதற்காக அ.மார்க்சுக்குப் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.

மாவோயிஸ்டுகள் தேசத்துரோகிகள் என்கிறார் ப.சிதம்பரம். இதைவிட கவுரவமான சான்றிதழை மாவோயிஸ்டுகளுக்கு யாரேனும் தர இயலுமா? ஒருவேளை சிதம்பரம் மாதிரியான நபர்கள் மாவோயிஸ்டுகளை “தேசபக்தர்கள்” என்று சொல்லியிருந்தால் எவ்வளவு மானக்கேடாக இருந்திருக்கும் – யோசித்துப் பாருங்கள்!

“மார்க்சியமே முட்டாள்தனமான சித்தாந்தம்” என்பதுதான் அறிஞர் அ.மார்க்சின் கருத்து. எனவே முட்டாள்கள்களாகிய நாங்கள் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுவதில் வியப்பில்லைதானே!

இனி, முட்டாள்கள் அறிவாளிகளை எதிர்கொண்ட முறை பற்றியும் அறிவாளிகளின் நடத்தை பற்றியும் பார்ப்போம்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே கூடியிருந்தவர்களிடம் துண்டறிக்கையை விநியோகித்திருந்தார்கள் தோழர்கள். இந்து மக்கள் கட்சியை எதிர்த்து நடத்தப்படுவதாக கூறப்படும் இந்தக் கூட்டம், உண்மையில் ம.க.இ.க வை எதிர்த்து நடத்தப்படுவதுதான் என்பதை அந்த துண்டறிக்கையில் கூறியிருந்தோம். அதன் அடிப்படையில் கூட்டத்தினருக்கும் பேச்சாளர்களுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

அ.மா பேசத் தொடங்கினார். “கருத்துரிமை, படைப்பு சுதந்திரம் இந்து மக்கள் கட்சி” என்று சுற்றி வந்தாரே தவிர இந்தக் கூட்டம் ம.க.இ.க வைக் குறி வைத்தே நடத்தப்படுகிறது என்பதை மழுப்பினார், மறைத்தார்.

இ.ம.கட்சி, ம.க.இ.க, வினவு தளம் ஆகியோரை இணைத்து லீனா ஏற்கெனவே எழுதியிருந்ததார். இதையே குமுதம் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார். போலிக் கம்யூனிஸ்டு ச.தமிழ்ச்செல்வனும் தனது அறிக்கையில் பெயர் சொல்லாமல் ம.க.இ.கவை தாக்கியிருந்தார். கூட்டம் பற்றித் தொலைபேசியில் விசாரித்தவர்களிடம் வினவு தளத்தை எதிர்த்தும்தான் கூட்டம் நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்திருக்கிறார் அ.மார்க்ஸ். ஆனால் அந்த உண்மையை அவர் கூட்டத்தில் பேசவில்லை.

மார்க்ஸ் பேசி முடித்தவுடன் ஒரு தோழர் இந்தக் கேள்வியை எழுப்பினார். ஊளைச் சத்தம்தான் பதிலாக வந்த்து. “யாரைக் கண்டித்து கூட்டம் நடத்துகிறோம் என்று சொல்லக்கூடத் துணிவில்லாத கோழைகள் எதுக்குடா கூட்டம் நடத்துறீங்க?” என்று உரைப்பது மாதிரி இன்னொருவர் கேட்டார். பிறகு அல்லக்கைகள் தலைவர் நாற்காலியை சூழ்ந்து கொண்டார்கள்.

கூட்டம் தொடர்ந்தது. அடுத்து ராஜன் குறை பேசினார். உலகளவில் வளர்ந்து வரும் முதலீட்டியம்தான் இப்படிப்பட்ட தடை கோரும் போக்குக்கு காரணம் என்று ஒரு தத்துவத்தை உதிர்த்தார். சீமாட்டி லீனா இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி ஆகிவிட்டார். அவருடைய கவுஜையில் உதிர்ந்த மயிர் உலக முதலீட்டியத்தையே ஒரு ஆட்டு ஆட்டியிருக்கிறதென்றால் சும்மாவா?

அப்புறம் “திராவிட இயக்கம் புராணங்களை எதிர்த்தது. ஆனால் புராணப்படங்களுக்கு தடை கோரவில்லை. சும்மா வுட்டுட்டா அது தானா செத்து போயிடும்” என்றார். இப்போது அவரது கூற்றுப் படி சீமாட்டியின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கவிதை புராணக்குப்பையாகி விட்டது. ஒரே நேரத்தில் ஒரே கவிதையை ஒரே வாசகன் எப்படி பன்முக வாசிப்புக்கு உள்ளாக்க முடியும் என்பதற்கு ராஜன் குறையின் உரை ஒரு எடுத்துக்காட்டு. இந்த தெளிவுரைக்குப் பிறகு மீண்டும் கேள்வி எழுப்பினார்கள் தோழர்கள்.

“இப்ப லீனாவின் கவிதைக்கு நாங்கள் தடை விதிக்க சொன்னோமா?” “நாங்க கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்” என்றார்கள். “25 பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அப்புறம் 26 அவதாக உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்றார் அ.மார்க்ஸ். நாங்கள் எங்கள் கேள்வியை கேட்டு விடுகிறோம். அப்புறம் 25 பேரும் விளக்கம் சொல்லட்டும் என்றார்கள் தோழர்கள்.

மீண்டும் அல்லக்கைகளின் கூச்சல். குழப்பம். பிறகு வேறு வழியில்லாமல் தோழர் கணேசனைப் பேச அனுமதித்தார்கள். “கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது” என்றார்.

உடனே சீறியெழுந்த சீமாட்டி லீனா, தோழர் கணேசனை அடிப்பதற்கு கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண் தோழர்கள் சீமாட்டிக்கு உரிய மொழியில் பதில் அளிக்க, கையில் செருப்பை எடுத்தனர். படைப்பாளிகள் என்ற பெயரில் அழைத்து வரப்பட்டிருந்த சில லும்பன்கள் வசவு மாரி பொழிந்தனர். லீனாவின் கணவர் ஜெரால்டு (???????) ஆத்திரமாக ஏதோ கத்திக் கொண்டிருந்தார். “உங்க மனைவி லீனா எது வேணா எழுதுவாங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா விளக்கம் சொல்லக்கூட மாட்டாங்களா?” என்று ஜெரால்டைக் கேட்டார் ஒரு தோழர். “ஏண்டா, தொழிலாளிய கை நீட்டி அடிப்பீங்க. கேட்டா படைப்பாளி உரிமையா? இங்கயே உரிச்சு தொங்க விட்றுவோம்” என்றார் இன்னொரு தோழர்.

கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது நோக்கமல்ல என்பதால், ஒரு சிலரைத் தவிர மற்ற தோழர்கள் யாரும் இதில் தலையிடக் கூடாது என்று நிறுத்தப்பட்டிருந்தனர். அடிப்பதற்கு வந்த லீனாவின் கை தோழர் கணேசன் மீது பட்டிருந்தால், கணக்கு அங்கேயே முடிக்கப் பட்டிருக்கும். அவ்வாறு நடக்காமல் சில தோழர்களே தடுத்து விட்டதால், சீமாட்டியும் அல்லக்கைகளும் பிறகு வீர வசனம் பேசும் வாய்ப்பு பெற்றனர்.

அனுபவத்தை சொல் என்று கேட்டவுடனே அம்மையாருக்கு ஏன் ஆத்திரம் வருகிறது? அனுபவம்னா எந்த அனுபவம்னு அம்மா புரிஞ்சிகிட்டாங்க? அனுபவம்கிறது கெட்ட வார்த்தையா? நல்ல வார்த்தை கெட்ட வார்த்தையெல்லாம் கலக எழுத்துல உண்டா? அனுபவத்தை சொல் என்றுதானே கேட்டார். உலகின் அழகிய முதல் பெண்ணின் மூஞ்சியில் ஆசிட்டா ஊற்றினார். ஏன் துடிக்கவேண்டும்?

உண்டுன்னா உண்டுன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. எதுக்கு தமிழ் சினிமா கற்புக்கரசி மாதிரி சாமி ஆடுறே?

பெரியார் தெரியுமா? அவர் நாகப்பட்டினத்துல மாநாடு போட்ட போது, காங்கிரசு காலிகள் ஊர் பூரா “நாகம்மை தேவிடியா” ன்னு சுவத்தில எழுதினானுங்க. தி.க தொண்டர்கள் ஆத்திரத்தில் கொதிச்ச போது பெரியார் அலட்சியமாகச் சொன்னாராம் “நாகம்மை பத்தினி என்று சொன்னால் மகிழ்ச்சி அடைபவனாக நான் இருந்தால் அல்லவா, அவள் தேவடியாள் என்று சொன்னால் கோவப் படுவதற்கு?” என்று.

பெரியாரால் அப்படி சொல்ல முடிந்த்தற்கு ஒரே காரணம் – அவர் ஒரிஜினல். அது உண்மையான உணர்வு. உண்மையான முகம். சீமாட்டி கொதிக்கிறதுக்கு காரணம் – இது பேசியல் பண்ணி, ஐ ப்ரோ வுக்கு கோடு இழுத்த அம்மன். பியூட்டி பார்லர் புர்ரச்சி.

நீ “யோனிமயிரு -உபரி மதிப்பு”ன்னு எழுதினா அது கருத்துரிமை. “அனுபவத்தை சொல்லு”ன்னு கேக்குறவனுக்கு மட்டும் கருத்துரிமை கிடையாதா? அந்த உரிமை படைப்பாளிக்கு மட்டும்தான் உண்டா? எந்த ‘பார்’ல படைப்பாளிக்கு அடையாள அட்டை கொடுக்கிறீங்க?

கம்யூனிஸ்டெல்லாம் பொறுக்கின்னு நீ எழுதினா அது கவித்துவ வெளிப்பாடு. கம்யூனிஸ்டுக்கும் ஜிகாதிக்கும் ஒரே கொள்கை ஆண்குறின்னு எழுதினா அது மார்க்சியம் குறித்த அரசியல் விமரிசனம். உன் அனுபவம் என்ன ன்னு கேட்டா அது தனிநபர் தாக்குதலா?

கம்யூனிசம்தான் சமூக விடுதலைக்குத் தீர்வு என்று ஏற்றுக் கொண்டு அந்தக் கொள்கைக்காகப் போராடுபவர்களுக்கு, சொந்த வாழ்க்கையில் அந்தக் கொள்கையைப் பற்றி ஒழுகுபவர்களுக்கு பொலிடிக்கல் வேறு பெர்சனல் வேறு கிடையாது. பொலிடிக்கல்தான் பெர்சனல்.

பெண் அடிமைத்தனத்துக்கான காரணத்தை ஆய்ந்து விடுதலைக்கு வழியும் சொன்ன தத்துவத்தின் மீதும், அதனை நிரூபித்துக் காட்டிய மனித குலத்தின் மாபெரும் புரட்சிகளின் மீதும், அதற்காகத் தம் உயிரையும் வாழ்க்கையையும் ஈந்த மாமனிதர்களின் மீதும் ஒரு சொறிநாய் ஒன்னுக்கு அடித்து விட்டுப் போனால் அதைப் படைப்புரிமை என்று அங்கீகரிக்க வேண்டுமா?

ஏகாதிபத்திய எச்சில் காசுக்காக என்.ஜி.ஓக்களிடம் கையேந்தி, பெண் விடுதலைப் போராளிகள் பாரதிராஜாவிடமும் சேரனிடமும் பல்லிளித்து, அவர்களுடைய பாராட்டுக்கு புல்லரித்து, கையில் புரோஃபைலை வைத்துக் கொண்டு தன்னைத் தானே மார்க்கெட்டிங் செய்து கொண்டு, இன்னும் பெண்ணினத்தின் சுயமரியாதைக்கு இழிவு சேர்க்கும் எல்லா விதமான காரியங்களையும் செய்து வயிறு வளர்க்கும் ஜந்துவிடம் “உன் அனுபவத்தை சொல்” என்று கேட்டாலே அதற்கு கோபம் பொத்துக் கொண்டு வருமாம். ஏனென்றால் படைப்பாளி ஜந்துக்களின் பெர்சனல் வாழ்க்கை ரொம்ப புனிதமானதாம்.

வியர்வை வழிய உழைத்து சம்பாதித்து, பல்லிளிக்காமல், எவனிடமும் ஃபண்டுக்கு கையேந்தி நிற்காமல், எவனுக்கும் முதுகு சொரியாமல், கணவனின் ஆணாதிக்கம் முதல் சமூகத்தின் ஆணாதிக்கம் வரை அனைத்துக்கும் எதிராகப் போராடி, போலீசு முதல் சிறை வரையில் அனைத்தையும் எதிர்கொண்டு வாழும் பெண்களுக்குக் கோபம் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை சீமாட்டிக்கு வழங்காமல், அந்தப் பெண்களின் கையிலிருந்து செருப்பை பிடுங்கி விட்டோம். பிறிதொரு முறை கட்டாயம் அந்த வாய்ப்பை வழங்குகிறோம். இப்போது விசயத்துக்கு வருவோம்.

தம் மீது தொடுக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம், உறவுகள், நண்பர்கள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன் வரை யாரிடம் படும் அடியையும் வசவையும் தனிப்பட்டதாக கம்யூனிஸ்டுகள் எடுத்துக் கொள்வதில்லை. சாமியாடுவதும் இல்லை. தங்களுடைய பொதுவாழ்க்கையின் மீதும், அதனை வழிநடத்தும் கொள்கையின் மீதும், சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படும்போதுதான் அவர்கள் கோபம் கொள்கிறார்கள்.

அற்பர்களுக்கோ அவர்களை குண்டூசியால் லேசாக குத்தினால் போதும். உடனே “ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று வீறு கொண்டு கிளம்புகிறார்கள். இதுக்குப் பேரு படைப்பாளியின் உரிமையாம். தெரியாமத்தான் கேக்குறோம். படைப்பாளின்னா என்னா கோயில் மாடா? உழைக்காம ஊர் மேஞ்சிட்டு, தனது படைப்பாக சாணி போட்டுக் கொண்டே போனால், அதை கண்ணுல தொட்டு ஒத்திகிட்டு வாசகர்கள் பின்னாலயே வரணுமா?

“உன்னுடைய கவிதைக்கு நீயே விளக்கம் சொல்” என்றுதான் ம.க.இ.க தோழர்கள் கேட்டார்கள். படைப்பின் உக்கிரமான மனோநிலையில் வெளிப்பட்ட சாணிக்கு பொருள் விளக்கம் கூறுமாறு கோயில் மாட்டிடம் எப்படி கேட்க முடியாதோ, அதே போல படைப்பாளியிடமும் பிரதிக்கு விளக்கம் கேட்க முடியாது என்பது படைப்பாளிகளின் கொள்கை.

வினவு தளத்தில் சில மாதங்களுக்கு முன் லீனாவின் கவிதை பற்றிய விமரிசனம் வெளியான பின்பு ஒருநாள், நடு ராத்திரி 12 மணிக்கு முழு போதையில் வினவக்கு போன் செய்து “உனக்கு கவிதை தெரியுமா?” என்று கேட்டார் செல்மா பிரியதர்சன். அடுத்தது ஷோபா சக்தி. “சரி படைப்பாளிகளே, அட்ரஸை சொல்லுங்கள். நேரில் வருகிறோம்” என்றோம். உடனே அவர்களுடைய போதை தெளிந்து போனை வைத்து விட்டனர்.

நான் என்ன வேணும்னாலும் எழுதுவேன். எழுதினதுக்கு விளக்கமும் சொல்லமாட்டேன் என்பதுதான் லீனாவின் கொள்கை. அங்கே கண்டனக் கூட்டம் நடத்திய படைப்பாளிகளின் கொள்கையும் அதுதான். இப்படி பேசுபவன் படைப்பாளியா, பாசிஸ்டா? அப்படியானால் ஒரு வாசகன் அவன் புரிந்து கொண்ட முறையில் உன் கவிதைக்கு எதிர்வினை புரிவதை தவிர்க்க இயலாது. அது அவனுடைய உரிமை.

அப்படி எதிர்வினை ஆற்றக் கூடாதாம். எழுத்தை எழுத்தால்தான் சந்திக்க வேண்டுமாம். வினவு தளத்தில் அதைத்தான் செய்தோம். ஆனால் அது வக்கிரமாம், தனிநபர் தாக்குதலாம், கலாச்சார அடிப்படை வாதமாம், கலாச்சார போலீசு வேலையாம். இதை எதிர்த்து கேஸ் போடுவேனென்றும் லீனா மிரட்டினார். கேஸ் போடுறதுக்கு முன்னாடி இந்தக் கண்டனக் கூட்டம்.

சரி, என்ன தனிநபர் தாக்குதல் என்று சொல். பதிலளிக்கிறோம் என்று துண்டறிக்கையில் கேட்டோம். அதற்கும் பதில் கிடையாது. அப்போ என்னதான் செய்ய வேண்டும்? அம்மாவும் படைப்புலக ஆதீனங்களும் சொல்கிறபடியும் அவர்கள் மெச்சும்படியும் விமரிசனம் எழுத வேண்டுமா? பார்ப்பனியம் முழு அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஒரு பார்ப்பான் கூட இப்படிப் பேசியிருப்பானா தெரியவில்லையே!

கருத்தை கருத்தால் சந்திக்கணுமாம். தோழர் கணேசன் மேடையிலிருந்து அரிவாளையா காட்டினார்? “உன் அனுபவத்தை சொல்” என்று கருத்துதானே கூறினார். அம்மா எதுக்கு கையை ஒங்கினாங்க? அவுக கையத் தூக்கினாலும் படைப்பு. காலைத் தூக்கினாலும் படைப்பு. நாங்க வாயைத் தொறந்தால் கூட அது வன்முறையா?

செங்கடல் படப்பிடிப்பிலும் இதுதானே நடந்தது? தொழிலாளி தீபக்கை அடிக்க ஓங்கிய கை தானே இது? புட்டேஜைப் பத்தி எனக்குத் தெரியாது ன்னு தீபக் கருத்து சொன்னா, மறுநாள் உக்காந்து கவிதை எழுது. இல்லைன்னா போலீசுக்கு புகார் எழுது. பாசிஸ்டு இந்து மக்கள் கட்சிக்காரன் கூட புகார் தானே கொடுத்தான்.

சோபாசக்தியும் லீனாவும் செஞ்ச வேலை என்ன? டக்ளஸ் தேவானந்தாவின் காசு முதல் என்.ஜி.ஓ காசு வரை வகைவகையான எச்சில் காசுகளைத் தின்று வளர்ந்த கொழுப்புதானே, அவர்களை தீபக்கிற்கு எதிராக கை நீட்ட வைத்தது? அதே கை தானே ம.க.இ.க தோழருக்கு எதிராகவும் நீண்டது?

கம்யூனிஸ்டுக்கு எதிராக எழுதிய அந்தக் கையால், தலித் பெண்களுடைய யோனிகளைக் குதறும் தேவர் குறி, வன்னியர் குறி, கவுண்டர் குறிகளைப் பற்றி எழுது பார்ப்போம். கடைசி வரியில் “தேவன்மார் வாயில் மயிறைப் பிடுங்கிப் போட்டு” கட்டவிழ்ப்பு செய்து காட்டு பார்ப்போம்.

முன்வரிசையில் வந்து அமர்ந்த எங்கள் பெண் தோழர்களைக் கண்டவுடன் விளிம்புநிலைப் புரட்சித் தளபதிகளுக்கு எப்படி வியர்த்த்து என்பதைத்தான் பார்த்தோமே. படைப்பாளின்னா என்னா பெரிய வெங்காயமா? இவுக எழுதுவாகளாம். கேட்டா விளக்கம் சொல்ல மாட்டாங்களாம். அடேங்கப்பா, என்னா வீரம்டா!

இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த புகாரையே எடுத்துக்குவோம். ஒருவேளை போலீசு கிரிமினல் வழக்கு போடுவதாக வைத்துக் கொள்வோம். படைப்பாளி அம்மா கோர்ட்டில என்ன சொல்வாக?

படைப்புக்கெல்லாம் படைப்பாளி விளக்கம் சொல்ல முடியாதுன்னு நீதிபதிய அடிக்க கை ஓங்குவாகளா? பெரிய வக்கீலாக வைச்சு, “அந்த வரிக்கு அப்பிடி அர்த்தமில்ல, இந்த வரிக்கு இப்படி அர்த்தம் இல்ல”ன்னு விளக்கம் சொல்லி வாதாடுவாக. இல்லன்னா உள்ளே போகணுமே. அந்த பயம்.

அதாவது யோக்கியமான முறையில் கேட்டால் திமிர்த்தனம் பண்ணுவது. அடி விழும் என்று தெரிந்தால் பம்முவது. இப்படி ஆளுகளுக்குப் பேரு படைப்பாளி இல்லை -மேட்டுக்குடி லும்பன். அந்த அரங்கத்தில் ஊளையிட்டுக் கொண்டிருந்ததெல்லாம் இத்தகைய லும்பன் கும்பல்தான்.

ஐந்திலக்க சம்பளத்துக்காக பத்திரிகை முதலாளியிடம் எழுத்துரிமை, கருத்துரிமை, சுயமரியாதை உள்ளிட்ட அனைத்தையும் அடமானம் வைத்த ஊடகத்துக் காரர்கள், பதவிக்காக அதிகாரத்திடம் தலை சொரியும் பேராசிரியர்கள், உள்ளிட்ட பலர் மேடையில் பொளந்து கட்டினார்கள்.

சினிமாவில் சிரிப்பாய் சிரித்த சீனுக்கெல்லாம் சிங்காரம் பண்ணுவதற்கு, முக்கி முனகி வார்த்தை முத்தெடுக்கும் கவிஞர்களில் சிலர், “மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா” என்று ஆர்மோனியப் பெட்டிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவதில்லையா, அந்த மாதிரி காமெடி இது.

பணம், அதிகாரம், உதை இந்த மூன்றைத் தவிர வேறு எதற்கும், எப்பேர்ப்பட்ட உன்னதமான கொள்கைக்கும் இலட்சியத்துக்கும் இவர்களுடைய படைப்பிலக்கியம் பணியாதாம். நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் -தான்.

இப்படிப்பட்ட அடக்கமுடியாத ஜல்லிக்கட்டு காளைகளை ம.க.இ.க வுக்கு எதிராக அணிவகுத்து நிற்க வைக்கும் தனது நோக்கத்துக்காக, லீனா மணிமேகலை அ.மார்க்சை பயன்படுத்திக் கொண்டாரா, அல்லது அ.மார்க்ஸ் லீனா மணிமேகலையைப் பயன்படுத்திக் கொண்டாரா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த 54 நாயன்மார்ளைத் திரட்டுவதற்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு ராப்பகலாக உழைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

ஹோல்சேலாக படைப்பாளிகள் கிடைக்குமிடம் போலி கம்யூனிஸ்டு கட்சிகள்தான் என்பதால், அங்கே தீவிர கவனம் செலுத்தியிருக்கிறார்கள். தீக்கதிரில் இந்தக் கூட்டத்துக்கு விளம்பரம் வெளிவந்தது. த,மு.எ.க.ச வின் கண்டன அறிக்கையும் வெளிவந்தது. தாமரையில் சீமாட்டியின் கவிதை வெளிவந்தது. ஆனால் தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, தேவ பேரின்பன் போன்ற முக்கியப் புள்ளிகள் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை. அலப்பறைக்குத் தேவைப்படும் அல்லக்கைகளை மட்டும் சப்ளை செய்திருந்தார்கள்.

அ.மார்க்ஸ் லீனா கூட்டணி வகுத்திருந்த இந்த ம.க.இ.க எதிர்ப்பு போர்த்தந்திரத் திட்டத்தின் முக்கியமான கூறுகள் இரண்டு.

முதலாவதாக, “ம.க.இ.க வை எதிர்ப்பதுதான் உண்மையான நோக்கம் என்பது பச்சையாக வெளியே தெரிந்தால் படைப்பாளிகள் தயங்கக் கூடும் என்பதால், காமோஃபிளேஜ் ஆக இந்து மக்கள் கட்சி என்ற டுபாக்கூர் கட்சியை முன்நிறுத்தி, கூட்டம் சேர்ப்பது.

இரண்டாவதாக ம.க.இ.க வை ஒழித்துக் கட்ட வேண்டிய பகைவர்களாக கருதும் மார்க்சிஸ்டுகளை இந்த “சுதந்திரப் போராட்டத்தின்” காலாட்படையாக வளைத்துப் போடுவது.

மார்க்சிஸ்டு கட்சி அ.மார்க்சுக்கு தாய்க்கழகம். லீனாவோ கம்யூனிஸ்டு பாரம்பரியம் என்பதால் ரெண்டுமே அவருக்கு குடும்பக் கட்சி. அப்புறம் என்ன?

அ.மார்க்ஸ், மார்க்சிஸ்டு கட்சியிலிருந்து கிளம்பி, மக்கள் யுத்தக் குழு, டாக்டர் ஐயா, பின் நவீனத்துவம், தலித் அரசியல், இஸ்லாம், மனித உரிமை… என்று வனமெல்லாம் சுத்தி வந்து கடைசியாக இனத்துல அடைஞ்சு விட்டாரா அல்லது மார்க்சிஸ்டுகள் அ-மார்க்சிஸ்டுகளாகி இவருடன் இணைந்து விட்டனரா என்பதை நம்மால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. எனவே இந்தக் கூட்டணியின் ரசவாதம் இப்போதைக்கு தெரியவில்லை.

எப்படிப் பார்த்தாலும் இது பெரிய ராஜதந்திரம்தான். ம.க.இ.க தோழர்கள் அன்றைக்கு அரங்கை விட்டு வெளியேறும்போது, “ம.க.இ.க பாசிசம் ஒழிக” என்று கூச்சல் போட்டார்கள் சில அல்லக்கைகள். இந்தக் கண்கொள்ளாக் காட்சியின் வீடியோ பதிவை புத்ததேவுக்கு அனுப்பி வைத்தால், ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கு ஆதரவாக கல்கத்தா படைப்பாளிகளைப் படை திரட்டுவதற்கு மார்க்சிஸ்டுகளுக்கு அது பெரிதும் உதவும்.

என்ன இருந்தாலும் சில காரியங்களை சில பேரால்தான் சாதிக்க முடியும் என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். ஜெயலலிதா மட்டும் இல்லையென்றால், அத்வானி, ஜஸ்வந்த் சிங், சு.சாமி, மணி சங்கர் ஐயர், டி.என்.சேஷன், சங்கராச்சாரி, இந்து ராம் முதலான பல கொம்பாதி கொம்பர்களின் உணைமையான முக விலாசத்தை உலகம் அறிந்திருக்க முடியுமா? அந்த வகையில் லீனா ஆற்றியிருக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

கவிதை என்ற சொல்லால் அழைக்கப்படுவதற்கே தகுதியில்லாத ஒரு கழிவுக்கு “சுக்குமி – ளகுதி – ப்பிலி” என்று பதம் பிரித்து, படைப்பாளிகளை பொருள் விளக்கம் சொல்ல வைத்ததன் மூலம், தனது இரண்டாவது கவிதையில் ஒரு கம்யூனிஸ்டை எந்தெந்த இடங்களுக்கெல்லாம் அவர் அழைத்துச் சென்றாரோ, அதே இடங்களுக்கு படைப்பாளிகளையும் அழைத்துச் சென்று, அவர்களுடைய வாயில் தன்னுடைய சொற்களை ஒவ்வொன்றாய் பிடுங்கிப் போட்டு, அவற்றை மென்று கட்டவிழ்ப்பு செய்யும் வேலையையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்.

படைப்பு சுதந்திரத்தின் காவலர்கள் பிரதியை அசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிசத்தையும் கம்யூனிசத் தலைவர்களையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தும் எழுத்து என்பதுதான் லீனாவின் கவுஜை பற்றி நாங்கள் கூறிய விமரிசனம். அவ்வாறு இல்லை என்றால் அதன் பொருளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று கவுஜாயினி விளக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

இதை தந்திரமாக இருட்ட்டிப்பு செய்து விட்டு, “தடை விதிக்கிறார்கள், போலீசு வேலை செய்கிறார்கள்” என்று திசை திருப்பினார்கள். அப்புறம் “இது ஆபாசம் என்பதுதான் இந்து மக்கள் கட்சியின் கருத்து. ம.க.இ.க வின் கருத்தும் அதுதான். ரெண்டு பேரும் பழைய பஞ்சாங்கங்கள், ஒழுக்கவாதிகள், எனவே ரெண்டு பேரும் ஒண்ணுதான்” என்று முத்திரை குத்தினார்கள்.

“யோனி, மயிரு என்று எழுதி விட்டால் பெரிய வீரம் போலவும், அதைக் கேட்டு ம.க.இ.க காரர்கள் பயந்து நடு நடுங்கி துடிப்பதைப் போலவும் அந்த சீமாட்டிக்கும் படைப்பாளிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோருக்கும் ஒரு நெனப்பு.

மேற்படி சொற்களைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்கள் நாங்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம்.

“யோனி, புணர்தல், குறி” என்பன போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த, ரீஜென்டான சொற்களுக்குப் பழக்கமில்லாதவர்களும், ஒரிஜினல் தமிழில் மட்டுமே இந்த சொற்களைப் பயன்படுத்துகின்றவர்களுமான பெண்களுடன், கூட்டத்திற்கு வந்திருந்த படைப்பாளிகளை நேரில் சந்திக்க வருகிறோம்.

ஆமா, கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.

உங்கள் கவிதைக்கு நாங்கள் தடை விதிப்பதாக அல்லவா குற்றம் சாட்டுகிறீர்கள்? இதற்கு கழுவாய் தேட ஏழுமலையான் நோட்டீசு போல எங்கள் சொந்த செலவில் அந்தக் கவுஜையை அச்சடித்துக் கையோடு கொண்டு வருகிறோம்.

படைப்புரிமைக்கு குரல் கொடுத்த கலகக்காரர்களின் மனைவி, சகோதர சகோதரிகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் “பிரதி”யைக் கொடுக்கிறோம். “இந்தக் கவுஜைக்காகத்தான், சார் குரல் கொடுத்தார். ஆனால் இந்தக் கவுஜையைப் படித்து கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு கோபம் வந்தது. இது தவறா? இந்தப் பிரதியை நீங்கள் எப்படி வாசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் நியாயம் கேட்கிறோம்.

தன்னுடைய கட்சியின் கொள்கையைப் பக்கத்து வீட்டுக் காரனிடம் பேசுவதற்கு ஒரு திமுக காரன் தயங்குவானா? தன்னுடைய சினிமாவைப் பற்றி பெண்டாட்டியிடம் பேச ஒரு சினிமாக்காரன் கூச்சப்படுவானா? அப்படி இருக்கும்போது வீரமிக்க படைப்பாளிகள் மட்டும் பதுங்கி விடுவார்களா என்ன? பதில் சொல்லட்டும். மேலும் பெண் எழுத்துக்கு ஆபத்து நேர்ந்திருப்பதைப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உங்களுடைய அலுவலகங்களுக்கு வருகிறோம். கல்லூரிகளுக்கு வருகிறோம். மாணவர்களிடம் இந்தக் கவுஜையைக் கொடுத்து, “ஆசிரியன் செத்துவிட்டான். பிரதிதான் மிச்சமிருக்கிறது. மாணவர்களாகிய உங்கள் வாசிப்பு அனுபவத்தை சொல்லுங்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.

சரக்கின் உன்மத்த நிலையில் குடிகாரனின் வாயிலிருந்து தெறிக்கும் எச்சிலுக்கு அந்தக் குடிகாரனும், படைப்பின் உன்மத்த நிலையில் படைப்பாளியின் வாயிலிருந்து தெறிக்கும் சொற்களுக்கு படைப்பாளியும் பொறுப்பேற்க முடியாது என்ற உங்கள் “படைப்புத் தத்துவத்தை” அவர்களுக்கும் விளக்குங்கள்.

தீக்கதிர், தாமரையின் ஆதரவு பெற்ற கவுஜாயினியின் இந்தக் கவிதையை போஸ்டராக அடித்து சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர்கள், ஊழியர்கள் நிரம்பிய பகுதிகளில் ஒட்டுகிறோம். செலவுதான். நாங்கள் கலாச்சார போலீசு இல்லை என்று நிரூபித்தாக வேண்டுமே, வேறு என்ன செய்வது?

நீங்களும் பேசுங்கள் நாங்களும் பேசுகிறோம். மற்றவர்களும் பேசட்டும். அடிதடி வன்முறை, தடை, கலாச்சார போலீசு வேலை எதுவும கிடையாது. “உரையாடலைத் தொடர்கிறோம்”. அவ்வளவுதான்.

இந்த வழிமுறையெல்லாம் முறைகேடானது என்று யாரேனும் பதறினால் அவர்களைக் கேட்கிறோம் – படைப்பாளிகளை “முறை”க்குள் அடைக்க முடியுமா? வீடு, அலுவலகம் என்ற “வெளி”க்குள் அடைக்க முடியுமா?

“வேண்டுமானால் நீங்கள் ஒரு கூட்டம் நடத்தி உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். இந்த மாதிரி எதிர்ப்பெல்லாம் ‘மரபு’அல்ல” என்று யாரேனும் முனகலாம்.

அவர்களுக்கு எங்கள் பதில் இதுதான்.

“எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை”

Thursday, April 15, 2010

பெண்ணெழுத்துப் பாதையில் முட் கற்கள் பதிக்கும் லீனா மணிமேகலை

Source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5740:2010-04-13-19-16-28&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

இவர்கள் ஏன் இப்படி ஒரு பெண்ணைத் தாக்குகிறார்கள் என்றுதான் நானும் அந்த லீனாவின் கவிதைகளைப் படித்துத் தொலைத்தேன். உலகின் சகல பிரச்சனைகளுக்குமே ஆண்குறிதான் காரணம் என்பது போலவும் உபரி மதிப்பு, உழைப்பு, புரட்சி எல்லாமே ஒரு புணர்தலில் அடங்கியிருக்கிற்து என்பது போலவும் லீனாவின் கவிதை இருந்தது. இதைப் படிக்கிற மாத்திரத்தில் வினவு தோழர்களின் எதிர்வினையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குக் கூட கோபம் வரும். அப்படியான மூன்றாம் தரமான கவிதை. ஒரு மார்க்சிஸ்ட் இக்கவிதையை வாசிக்கும்போது தார்மீக ரீதியில் கோபமடைவதுதான் அவரது அரசியல் நேர்மையாக இருக்க முடியும். வினவு கட்டுரையை அப்படித்தான் என்னால் பார்க்க முடிகிறது.

லீனாவின் கவிதைக்கு மறுப்பாக கடினமான வார்த்தைகளுடன் எழுதப்பட்ட வினவு கட்டுரை எழுப்பிய கேள்வி இதுதான்... புரட்சிகரத் தோழனும், மார்க்சும் எல்லாமும் ஆண் குறிதான் என்றால் அக்கவிதையில் ஏன் சேரன் பெயரோ, பாரதிராஜா பெயரோ, சி.ஜெரால்ட் பெயரோ இல்லை என்று கேட்டார்கள். லீனாவின் கவிதையில் அரசியல் இல்லை மிக மோசமான ஆபாசமான கவிதை என்பதை அம்பலப்படுத்திய கேள்வியே இதுதான் என்னும் போது இந்தக் கேள்வியை எப்படி நாம் உதாசீனப்படுத்தி விட முடியும். வினவின் கட்டுரைக்கு பதில் எழுதிய லீனாவும் சரி அவரது ஆண் நண்பர்களும் சரி வினவின் இக்கேள்வியை எதிர்கொள்ளவே இல்லை. மாறாக அவதூறு என்றும் தனிப்பட்ட தாக்குதல் என்றும் கூறினார்கள். இருக்கலாம் தனிப்பட்ட தாக்குதல் இருக்கலாம். ஆனால் அதையே கம்யூனிஸ்டுகள் மீது லீனா செய்யக் கூடாதில்லையா? கவிதைக்குக் கவிதை லெனின், மார்க்ஸ், புரட்சி என்றெல்லாம் எழுதும் லீனா இந்த லிஸ்டில் திராவிடத் தலைவர்களின் பெயர்களையோ, தமிழ்த் தேசியவாதிகளின் பெயர்களையோ சேர்த்திருந்தால் அவர்கள் இவரை விட்டு விடுவார்களா? இவர்களை எழுதினால் எதிர்ப்பு இருக்காது அரசின் ஆதரவையோ கம்யூனிச எதிர்ப்பாளர்களின் ஆதரவையோ பெறலாம், எதிர்வினை வந்தால் கருத்துச் சுதந்திரம் என கூட்டம் போடலாம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு இப்படி கவிதை எழுதுவது என்ன மாதிரி பெண்ணியம் என்று தெரியவில்லை.

பெண் எழுத்தில் யோனி, முலை போன்ற சொற்களை பிரயோகிப்பது தவறல்ல. குடும்பம், சினிமா, சீரியல் என பெண்கள் மீது இவைகள் நிகழ்த்தும் ஆபாச வக்கிரத் தாக்குதல்களை எல்லாம் விட, இம்மாதிரியான கவிதை வரிகள் ஒன்றும் பெண் வாழ்வை பண்பாட்டு ரீதியில் சிதைத்து விடுவதில்லை. பாலியல் சார்ந்த தனது இச்சைகளை கவிதையாகவோ, கட்டுரையாகவோ எழுதவும், அதை விற்கவும் ஒருவருக்கு உரிமையுள்ளது, நாட்டில் எத்தனையோ சரோஜா தேவி புத்தகங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அதை எல்லோரும் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, எந்த விமர்சனமும் வரக்கூடாது என்று நினைப்பதோ எந்த விதத்தில் சரி? அதையெல்லாம் விடக் கொடுமை, அதற்கான எதிர்வினையை அவதூறு என்று சொல்வதும், ஆணாதிக்கச் சிந்தனை என்று சொல்வதும். யோனி, முலை, புணர்ச்சி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பெண்ணியக் கவிதைக்கான அந்தஸ்து கிடைத்து விடும் என்ற மயக்கம் லீனாவுக்கு இருக்கும்போல் தெரிகிறது. இந்த வார்த்தைப் பிரயோகங்களை மற்ற பெண் கவிஞர்கள் எத்தகைய புரிதலுடன், எத்தனை வலியுடன் கையாளுகிறார்கள் என்பதிலிருந்து பார்த்தால், லீனாவின் பிரச்சினை புரிந்து விடும்.

ஈழத்துக் கவிஞர் கலா எழுதிய ‘கோணேஸ்வரிகள்’ கவிதையில் 'சிங்களச் சகோதரிகளே! உங்கள் யோனிகளுக்கு இப்போது தேவையில்லை' (http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html) என்பதைப் படிக்கும்போது வாசகனுக்குக் கடத்தப்படும் வலி, கோபம் இருக்கிறதே அங்கேதான் கவிஞரின் படைப்பு தக்க வைக்கப்படுகிறது. ஆனால் லீனாவின் கவிதையைப் படிக்கும்போது எரிச்சல்தான் வருகிறது. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது.

மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி என எல்லோருமே கலாசாரக் காவலர்களிடமிருந்து பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் லீனாவைப் போல், அதிகாரத்தின் தொனிகளையும் அதன் திசை வழிப் போக்கையும் புரிந்து, தனது மனவக்கிரங்களை அதன்மேல் ஏற்றி எழுதியவர்களில்லை. குடும்பம், சமூகம், தன் மீது நிகழ்த்தும் வன்முறைகளின் வெளிப்பாடுகளாகவே அவர்களின் கவிதைகள் இருந்தன; இருக்கின்றன. உடல்ரீதியாக பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து, பெண்ணுடலைக் கொண்டாடுகிற, அதேநேரத்தில் ஆண்மையப் புணர்தலை எதிர்த்து அவர்கள் எழுதினார்கள். காட்டாக, மாலதி மைத்ரி ஆசிரியராக இருந்து வெளிவரும் அணங்கு இதழில் வெளியான சுகிர்தராணியின் இந்தக் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1676:2009-12-16-01-38-35&catid=962:09&Itemid=216) கவிதையைப் படித்துப் பாருங்கள். அவர்கள் இருவரது பெண்ணியப் புரிதலும் தெளிவாக விளங்கும். ஆண்மைய வாழ்க்கை எப்படி ஒரு பெண்ணின் தனித்துவத்தை சிதைக்கிறது என்பதை இக்கவிதை காட்ட, அதற்கு நேர்மாறாக ஆண்மையப் புணர்தலையே கொண்டாடும் கவிதையாக லீனாவின் கவிதை இருக்கிறது. அரைகுறை பெண்ணிய அரசியல் அறிவுடன் ஒரு கவிதையையும் எழுதிவிட்டு, அதற்கு சப்பைக்கட்டு கட்ட, தனது நண்பர்களையும் ஏவிவிடுகிறார்.

அவரது இருத்தல் தொடர்பாக அவரது நண்பர்கள் எழுதுபவற்றைப் படிக்கும் போது ‘ஒரு பெண் என்றும் பாராமல் இப்ப‌டி எல்லாம் எழுதுகிறார்களே’ என்று கவலைப்படுகிற மனோபாவம் தெரிகிறது. இந்தக் கழிவிரக்கம் பெண்விடுதலைக்கு எதிரான ஒன்றல்லவா? லீனா குழுவினர் ஏன் ஆணிடத்தில் இத்தகைய கரிசனத்தை எதிர்பார்க்கிறார்கள்?

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் நம் வாழ்வின் எல்லா தார்மீக உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கிறோம். கொடூரமான போர் ஒன்றை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து இலங்கையில் நடத்தி முடித்திருக்கிறது. இந்தப் போரிலும் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்களும், குழந்தைகளும்தான். இன்று வரை அந்த இழப்பின் ரணத்திலிருந்து மீளவே முடியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் இந்த நேரத்தில் வடகிழக்கில் இந்திய அரசின் போர் வெறிக்கு ஏதோ ஒரு பழங்குடிப் பெண் பலியாகிக் கொண்டிருக்கிறாள். நிரந்தரமாக தங்களின் வாழ்விடங்களில் இந்திய இராணுவத்தின் தேடுதல் வேட்டையில் கொட்டப்படும் குண்டுகள் அவர்களை நிலங்களில் இருந்து துரத்திக் கொண்டிருக்கிறது. சம காலத்தில் நாம் பார்க்கும் வீர மகளிராக பழங்குடிப் பெண்கள் ஆயுதமேந்தி ஆக்ரமிப்புப் போருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமயச் சூழலில் நிரந்தரமான வறுமையும் வேலையிழப்பும் ஒரு பக்கம் என்றால், பெண் என்றாலே திருமணம் செய்து குழந்தை பெற்று குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் சேவை செய்து வாழ்வதே பாக்கியம் என்கிற ஆணாதிக்க நெறியை வைத்து ஒரு கூட்டம் காசு பார்த்துக் கொண்டிருக்கிறது. திருமணச் செலவுகளுக்கு பணம் தருகிறோம் என்று சுமங்கலித் திட்டத்தில் வருடக்கணக்கில் ஆயிரமாயிரம் பெண்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி நிற்கிறார்கள். குடும்பம் ஒரு வன்முறையான நிறுவனம் என்பது உண்மைதான். ஆனால் ஆணாதிக்கத்தின் வேர்... ஆண் வாரிசு சொத்துரிமையிலும் ஆண் வழி மரபுரிமையிலும் தங்கியிருக்கிறது எனும்போது இந்த அடிமைத்தனமே பெண்ணுக்கு ஒரு அடிமைப் பாதுகாப்பையும் வழங்குகிறது என்பது கசப்பான உண்மை இல்லையா?

குடும்பம் என்னும் நிறுவனம் சிதைய வேண்டும். ஆண் வழிச் சொத்துரிமை அழிக்கப்பட வேண்டும். பாலியல் பிண்டங்களாக பெண்களை மோகிக்கும் போக்கு மறைய வேண்டும் என்பது தான் சரியான பெண்ணியமாக இருக்க முடியும். குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. சரி வெளியில் வரலாம். ஆனால் குடும்பத்தை உதறித் தள்ளுகிற பெண்களுக்கு என்ன விதமான பாதுகாப்பு இங்கே இருக்கிறது? அதுவும் ஏழைப் பெண்களுக்கு - தலித் பெண்களுக்கு? பெண் விடுதலை சிந்தனை என்று வரும்போது அதை முன்னெடுக்கிறவர்களின் வர்க்க நிலையையும், சாதீய இருத்தலையும் இங்கே கேள்விக்குள்ளாக்கியாக வேண்டும். ஏனென்றால் ஒரு தலித் பெண்ணும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணும் சந்திக்கும் பிரச்சனைகள் ஒன்றானவை அல்ல; வெவ்வேறானவை. இம்மாதிரியான பிரச்சனையின் ஒரு தொடர்ச்சி தான், லீனா நடத்திய வால்பாறை கவிதைக் கூட்டத்தில் தலித் படைப்பாளிக்கு நேர்ந்தது.

பணம், செல்வாக்கு, சமூக அந்தஸ்து என்கிற நிலையில் ஒடுக்கப்பட்டு சேரிகளில் வாழும் பெண்களுக்காக சென்னையில் ஏசி அறைகளில் அமர்ந்து கவிதை எழுதலாம்; ஆனால் சேரியில், ஊரின் ஒதுக்கி வைக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்கிற அவஸ்தையைப் போலல்ல கவிதை என்பது. சும்மா ஒரு கவிதைக் கூட்டம் நடத்தவே நமக்கு இயற்கை எழில் கொஞ்சும் - மனித நடமாட்டம் இல்லாத அமைதிப் பிரதேசம் தேவை இருக்கிறது. வாழ்க்கை அப்படியில்லை தோழர்களே! இந்த நெருக்கடிகளில் இருந்து எங்கு தப்பிச் செல்ல முடியும்? எல்லையோர மக்களை துரத்தி விட்டு விஸ்தரிப்புக் கனவுகளோடு மக்கள் வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ நெருக்கடியில் ஒரு பழங்குடிப் பெண் எங்கு தப்பிச் செல்ல முடியும்?

சமீபத்தில் ஒரு பெண்கவிஞருடன் பேசியபோது அவர் சொன்னார், ‘லீனா இப்படி எல்லாம் எழுதுவதால் உண்மையாகவே பிரச்சனைகளை எழுத முனையும் பெண்கள்தான் கலாசார பாசிசத்தை சந்திக்க நேரிடும்.’ மற்றபடி பரபரப்புக்காக இப்படி எல்லாம் எழுதி விட்டு எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையாக இதை சிலர் மாற்ற முனைவதும் வேடிக்கையான ஒன்றுதான். எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையும் லீனாவின் பிரச்சனையும் ஒன்றா? லீனாவுக்கு அப்படி என்னதான் பிரச்சனை? கூலி கொடுக்காத தொழிலாளியை கூட்டுச் சித்திரவதைக்குள்ளாக்குவதும் பின்னர் அடி வாங்கியவரையே கருங்காலி என்று எழுதுவதும், விருதுகளுக்காக சினிமா எடுப்பதும், எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று கலவரக் கவிதை எழுதுவதும், தமிழ் சினிமாவில் பெண்களை ஆக மோசமாக இழிவுபடுத்தி தேவர் சாதி பெருமை பேசும் படங்களை எடுக்கும் பாரதிராஜாவை பாராட்டுவதும், இவைகள் எல்லாமே விமர்சனத்திற்குள்ளாகும் போது வரிந்து கட்டி பெண் இனத்திற்கே இழுக்கு என்று லபோ, திபோ என்று அடித்துக் கொள்வதும்.... இதெல்லாம் என்ன வகையான பெண்ணியம் லீனா?

‘நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு; வாரத்துக்கு ஏழு நாளு, வந்தவளோ நாலு பேரு; மூணு பேரு குறையுதடி கணக்கு’ என்ற பாடல் வரிகளை தனது படத்தில் சேர்த்துக்கொண்ட பாரதிராஜா, உங்களது கவிதைகளைப் படித்து புருவம் உயர்த்துவது (லீனா பேட்டி, புத்தகம் பேசுது ஏப்ரல் 2010) தங்களுக்கு உறுத்தலாகப் பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருமிதத்துடன் அதைச் சொல்கிறீர்கள். தினம் ஒரு பெண் தேடி அலைவதும், அந்தளவிற்கு வசதியில்லாதவர்கள் இரண்டு பொண்டாட்டி கட்டிக்கொண்டு திரிவதும், பெண்களை காக்க வேண்டும் என்பதற்காக அல்ல; பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் கழிசடைத்தனத்தின் வெளிப்பாடு. அதை நீங்கள் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்வதோடு, அத்தகைய ஆணாதிக்கவாதிகளின் பாராட்டில், அரவணைப்பில் மெய்மறப்பது எந்த வகையான பெண்ணியம் லீனா?

இப்படி எல்லாம் கேட்டால் உடனே உங்களை தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாகக் குறைபட்டுக் கொள்கிறீர்கள். இடது வலது அடிப்படைவாதிகள் என்று ம.க.இ.க.வினரையும் இந்துப் பாசிஸ்டுகளையும் ஒன்றாகச் சேர்த்து எழுதுகிறீர்கள். இது யுத்த தந்திரமா? அல்லது பிழைப்புவாதமா? தமிழகமெங்கிலும் இந்துப் பாசிஸ்டுகளுக்கு எதிராக முற்போக்கு சக்திகள் தொடர்ந்து போராடுகிறார்கள். திராவிட இயக்கம், முற்போக்கு என்றெல்லாம் பேசிய கருணாநிதி அரசு அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கிறது. ராயப்பேட்டையில் பெரியார் திக அலுவலகத்தையும் தாக்கி அங்கிருந்த பெரியார் சிலையையும் உடைத்து வீசியது ஒரு ரௌடிக் கும்பல். நியாயமாக பெரியார் சிலையை இந்து மக்கள் கட்சிக்காரன் தானே உடைக்க வேண்டும். ஆனால் இங்கே உடைத்தது திமுக தொண்டர்கள். பெண்களை இரவோடு இரவாக அடித்து இழுத்துச் சென்று ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் போட்டு உள்ளே தள்ளினார் கருணாநிதி........ தெரியுமா லீனா உங்களுக்கு? யோனி....... தூமை இப்படியான சில வரிகளைப் போட்டு கவிதை எழுதினால் அது முற்போக்கு என்று தெரிகிறது. ஆனால் இந்த வார்த்தைகளை கூச்சமான ஒன்றாக நினைத்து பிரயோகிக்கத் தயங்கும் பெண்கள் ரோட்டிற்கு வந்து போராடத் தயங்குவதில்லை. அவர்கள் சிறைக்குச் செல்லவும் அஞ்சுவதில்லை. நீங்களோ இம்மாதிரி வார்த்தைகளில் கபடியாடி விருதுகளுக்காக படம் எடுத்து வசதியாக வாழ்ந்து.......... ஆனால் சமூக நோக்கங்களுக்காக போராடுகிறவர்களைக் கொச்சைப்படுத்துகிறீர்கள்.

கருத்து சுதந்திரத்தில் அக்கறை உள்ளவர்களாக திடீரென்று இன்று களத்தில் குதித்திருக்கிறீர்களே, நீங்களும் அ.மார்க்சும்? கடந்த ஆண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது - போரை நிறுத்தச் சொல்லியும், இந்திய அரசின் உதவிகளைக் கண்டித்தும் பேசிய கொளத்தூர் மணி, சீமான், பெ.மணியரசன் மற்றும் எண்ணற்ற பெரியார் தி.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்களே, அது கருத்துச் சுதந்திரத்திற்கான மறுப்பு இல்லையா? அப்போது நீங்கள் இருவரும் எங்கே போனீர்கள்? கேரள சிபிஎம் கட்சியினரால் பால் சக்காரியா தாக்கப்பட்டபோது, கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று - ஒரு கண்டனக் கூட்டம் வேண்டாம் - குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது எழுதினீர்களா? உங்களது கருத்து சுதந்திரத்திற்காக இன்று போராடுபவர்கள் மக்கள் தொலைக்காட்சியைத் தாக்கியபோது, ஒரு முக்கல் முனகலாவது தங்களிடமிருந்து வந்ததா? தங்கள் கவிதை மீது விமர்சனமும் புகாரும் வருகிறது என்றதும், பணி ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவரை கூட்டம் நடத்தச் சொல்லி, இத்தனை களேபரம் பண்ணுகிறீர்கள்.

நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த தமாசுக் கூட்டம் எப்படி சிரிப்பாய் சிரிக்கிறது பாருங்கள்! இதை நீங்கள் முன்கூட்டியே - அதாவது நீங்கள் அழைத்தும் பல எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்ள மறுத்தபோதே - எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் தனக்குத்தானே கோபுரம் கட்டும் அவசரம் உங்களது கண்ணை மறைத்து விட்டது. இப்போது என்றில்லை, எப்போதும் இப்படித்தான் இருக்கிறீர்கள். நான் சில வருடங்கள் பத்திரிக்கைத் துறையில் வேலை பார்த்திருக்கிறேன். உங்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே, சக பத்திரிக்கையாள நண்பர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். நீங்கள் வந்துவிட்டுப் போனாலோ, உங்களுக்குப் பின்னால் வெடித்துச் சிரிப்பார்கள். வேறு எந்த பெண் படைப்பாளியைப் பார்த்தும் அவர்கள் இப்படி சிரிப்பதில்லை. எப்போதும் self marketing செய்வதில் தாங்கள் காட்டும் முனைப்புதான் பலரது கேலிக்கும் ஆளாக்குகிறது. இதை கீற்று குழுமத்தில் சேர்ந்தபின்பு, உணரும் சந்தர்ப்பம் எனக்கும் வாய்த்தது. லயோலா கல்லூரிப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் அனுப்பிய கட்டுரையுடன் 2 பக்க சுயவிளம்பர கேட்லாக்கும் வந்தது. அத்துடன் விதவிதமான புகைப்படங்கள் வேறு. கீற்றுவுடனான எனது மூன்று வருடப் பயணத்தில் வேறு எந்த ஆண்/பெண் படைப்பாளியோ இப்படி கேட்லாக் அனுப்பியதை நான் பார்த்ததில்லை.

உங்களுக்கான கட்-அவுட்டை நீங்களே சுமந்து திரிவது எல்லோருக்கும் சிரிப்பாகத்தான் இருக்கிறது (இப்போது உடன் சுமப்பதற்கு அ.மார்க்சும் வந்திருக்கிறார்). கவிதை, ஆவணப்படம் ஆகியவற்றை தங்களை விளம்பரத்திக் கொள்ளும் முயற்சியாக நீங்கள் கைக்கொண்டால் அதற்கான எதிர்வினை வரத்தான் செய்யும். அதைத்தான் வினவு தோழர்கள் எழுதினார்கள். நீங்களும் அ.மார்க்சைப் போலவே, தனிமனித அவதூறு என்று சொல்கிறீர்கள்.

ஜீன்ஸ் பேண்ட் போட்டு, டீ. ஷர்ட் போட்டு, தலைமுடியை ஹெர்லிங் பண்ணி வெள்ளை ஹூண்டாயில் வந்திறங்கும் போது நவீனமாகத்தான் இருக்கும். உடுத்தும் உடையில், மணக்கும் முடியில், காஸ்டிலியான வாழ்வில் நாம் காண்பது நவீன தோற்றமாக உங்களைப் போன்றோருக்குத் தோன்றலாம். ஆனால் சிந்தனை? அதற்கும் இந்தச் சமூகத்திற்கும் எத்தனை பெரிய இடைவெளி..?. கொஞ்சம் மாடிப்படிகளில் இருந்து இறங்கி ரோட்டிற்கு வாருங்கள் லீனா. தெருக்கோடியில் சீமாட்டிகளிடம் ஒரு முழம் பூவை விற்க படாதபாடு படுகிற ஏழைத் தாயின் வாழ்க்கையை கொஞ்சமேனும் புரிந்து கொள்ளுங்கள்.... அதை வைத்து ஆவணப் படம் எடுத்து விற்று விடாதீர்கள். அந்த வாழ்க்கைக்கும் கண்ணாடி அறைகளுக்குள் மினுங்கும் வாழ்வுக்குமான முரணைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

தமிழ் இலக்கிய உலகில் பெண்ணிய எழுத்துக்களுக்கான பாதை இன்று இராஜபாட்டையாக இருக்கிறது என்றால், அது அம்பை தொடங்கி, மாலதி மைத்ரி, இளம்பிறை, குட்டி ரேவதி, சுகிர்தராணி உள்ளிட்ட பெண் படைப்பாளிகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் நிகழ்ந்தது. புதிதாக எழுத வரும் என் போன்ற பெண் எழுத்தாளர்களுக்காக அவர்கள் அந்தப் பாதையை செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தயவு செய்து அந்தப் பாதையில் முட் கற்கள் போடும் வேலையை உங்களது படைப்புகளின் மூலம் செய்யாதீர்கள்.

பெண்ணியப் படைப்பு என்னவென்பதை முன்னோடிகளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் காலம் இருக்கிறது. நல்ல படைப்புகளைத் தாருங்கள்! வாழ்த்துக்கள்!!
- மினர்வா ( minerva@keetru.com )

Tuesday, April 13, 2010

பழைய நடிகை லீனாவும் புது ப்ரொட்யூசர் அ.மார்க்சும்

Source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5739:2010-04-13-10-52-39&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

தமிழ்த் திரைப்படங்களின் அசத்தலான ஃபார்முலாக்களில் ஒன்று ஒரே பாடல் காட்சியில் கதாநாயகன் பேப்பர் போடுவதில் ஆரம்பித்து ஊறுகாய் கம்பெனி தொடங்கி, வியர்வை சிந்தி கடுமையாக உழைத்து பெரும் பணக்காரனாகிவிடுவது. இந்த ஃபார்முலா விளம்பரங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. "நான் வளர்கிறேனே ம்ம்மி" காம்ப்ளான் விளம்பரம், "குடிக்க வேணாம், அப்படியே சாப்பிடுவேன்" ஹார்லிக்ஸ் விளம்பரம் இரண்டும் வெற்றிகரமான உதாரணங்கள்.

தமிழ் இலக்கிய உலகத்திலும் இந்த ஃபார்முலா வெற்றி பெற்றிருப்பதைக் கவனிக்கும்போது, தமிழ் நாட்டிற்கே உரிய இந்த ஸ்பெஷாலிட்டியை பாராட்டியே ஆகவேண்டும் என்ற பரவசம் ஏற்படுகிறது. இன்று பெரிய இலக்கியவாதிகளாக பெயர் பெற்றிருக்கும் பலர் சினிமாப் பாட்டைப் போட்டு அந்த கேப்பில் இலக்கியத்தில் முன்னுக்கு வந்தவர்கள். அவர்களை எல்லாம் ஏப்பம் விட்டு ஒரு சில விளம்பரப் படங்களால் முன்னுக்கு வந்தவர் என்ற பெருமை லீனா மணிமேகலையையே சேரும்.

"பறை" பட சர்ச்சை, லயோலா கல்லூரி துப்பட்டா தகராறு, தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த யாரோ ஏற்பாடு செய்திருந்த இரண்டு ரயில் பெட்டிகளை கடத்திச் சென்ற The Great Train Robbery துணிகரக் கொள்ளை, யோனியில் மசிர் கவிதை, கூலி கேட்ட தொழிலாளியை கடல் கடந்து வந்த எழுத்தாளரை அடியாளாக ஏவி விட்டு அடித்த "செங்கடல்" படம் என்று அடுத்து அடுத்து வெற்றிகரமான சுயவிளம்பரப் படங்களைத் தந்த லீனா மணிமேகலையின் அடுத்த விளம்பரப் படமான இந்துத்துவா எதிர்ப்புப் படமும் ஒரு வாரம் வெற்றிகரமாக "ஏ" சென்டர்களில் ஓடும் என்று நம்பலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

வெற்றிகரமான விளம்பரப் பட நடிகை லீனாவின் சளைக்காத இந்த படைப்பு முயற்சிகளில் ஏப்ரல் – 15 அன்று ரிலீசாக இருக்கும் இந்துத்துவா எதிர்ப்பு, கலாச்சார அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு எதிரான கருத்துச் சுதந்திர போர்ப் பிரகடனப் படம் இரண்டு வகையில் முக்கியமான மைல் கல்.

வருடத்திற்கு ஒருமுறை தமிழ் நாட்டின் கேந்திர மையங்கள் எங்கும் "கலை இலக்கிய இரவு" விழாக்கள் நடத்தி தமிழ் கலாச்சாரப் பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிபிஎம் – மின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் போன்ற மூத்த ஃபிகர்களையும், தமிழ் அறிவுப் பரப்பின் சீனியர் அறிவாளிகள், கவிஞர்கள், எழுத்தாளர்களையும் வைத்து 5 மணி நேரத்தில் எடுத்து அன்றே ரிலீசாகப் போகும் படம் என்பது ஒரு சாதனை.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய அறிவாளியாகவும், மனித உரிமைப் போராளியாகவும் மட்டுமே அறியப்பட்டிருந்த அ. மார்க்ஸ் அவர்களை, இந்த மெகா விளம்பரப் படத்தின் மூலம் ப்ரொட்யூசர் அந்தஸ்திற்கு உயர்த்தியிருப்பது அதைவிட பெரிய சாதனை. ஒரே படத்தில் இரண்டு மைல் கல்கள்.

லீனா மணிமேகலையின் இந்த விளம்பரப் படத்தின் கதைக் கருவும் திரைக்கதை அம்சங்களும் மணிரத்தினத்தின் பாணியில் மிக மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பதும் கடந்த இரண்டு வாரங்களாக இலக்கிய வட்டாரங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாடாவதி ஜர்னலிசத்திற்கு வாழ்க்கைப்பட்டுவிட்டால் எதையாவது எழுதித் தொலைக்க வேண்டும் என்பது விதி. மணிரத்தினத்தின் வாரிசு லீனா மணிமேகலை வாயில் இருந்து ஒரு தகவலும் கசியப் போவதில்லை. மணிரத்தினம் மேதை, அதனால் பேசுவதில்லை என்று சொல்கிறார்கள். லீனா மேதையா மக்கா என்ற கேள்வியும் எரிச்சலும் பொத்துக் கொண்டு வந்தது. மக்கு என்கிறார்கள் பலர். நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. யோசனைக்கு நடுவே எடிட்டரின் ஏகவசனங்கள் பத்தி பத்தியாக மூளைக்குள் ஓட, மேசை முன்னே மல்லுக்கட்டி உட்கார்ந்ததும் பேனா வழியாக சிந்தனைகள் தானாக வழிய ஆரம்பித்துவிட்டது.

ஃபோக்கஸ் லீனா இல்லை. புதுப்பட ப்ரொட்யூசர் அ. மார்க்ஸ். இரண்டு விமர்சனக் கணைகள்.

விமர்சனக் கணை ஒன்று. லீனா மணிமேகலையை வைத்து அ. மார்க்ஸ் எடுக்கும் இந்த முதல் படத்தில், சிபிஎம் – மின் மூத்த மூன்று ஃபிகர்கள் ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அ. மார்க்ஸ் ஒற்றைக் காலில் நின்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. கலாச்சார அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கும் சிபிஎம் – க்கும் ஏழாம் பொருத்தம். இந்த சிபிஎம் கட்சிதானே அவர்களுடைய சொந்த கட்சித் தலைவர் W. R. வரதராஜன் மீது ஒழுக்கக் குற்றச்சாட்டு வைத்து, கட்சியில் இருந்து ஒதுக்கி, தற்கொலை செய்து கொள்ள வைத்தது? W. R. வரதராஜன் தற்கொலைச் செய்தி தினசரிகளில் ஒரு வாரம் பரபரப்பாக பேசப்பட்டு, சிபிஎம் – மின் மானம் கப்பலேறிய பிறகு, எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் தோழர். வரதராஜனுக்கு செவ்வணக்கம் செலுத்தி பிரச்சினையை குழிதோண்டிப் புதைத்ததும் இதே சிபிஎம் தானே? W. R. வரதராஜன் மரணம் கொலையாக இருக்கலாம் என்று செய்தி வெளியிட்ட பாமக அலுவலகத்தை சூறையாடிய சிபிஎம் காம்ரேடுகள் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அதே சிபிஎம் – மின் லீடிங் ஃபிகர்கள் கலாச்சார அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் எந்த முகத்தோடு கலந்து கொள்கிறார்கள்? அவர்களை புதுப் ப்ரொட்யூசர் அ. மார்க்ஸ் இந்த விளம்பரப் படத்தில் நடிக்க வைப்பதன் மர்மம் என்ன?

கணை இரண்டு. கேரளாவின் மூத்த எழுத்தாளர் பால் சக்காரியா கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கேரளாவின் காஸர்கோடு என்ற மாவட்டம் பையனூரில் சிபிஎம் – மின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) உறுப்பினர்களால் தாக்கப்பட்டார். காரணம்? அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரள காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் உன்னிதன், மல்லாபுரம் மாவட்டம் மஞ்சேரியில் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தபோது, DYFI உறுப்பினர்கள் அவருடைய வீட்டிற்குள் புகுந்து இருவரையும் தாக்கி வீடியோ எடுத்ததை பால் சக்காரியா கண்டித்து அறிக்கை விட்டிருந்தார். அறிக்கை விட்டதற்கு பால் சக்காரியாவுக்கு கிடைத்தது உதை. இது சிபிஎம் கருத்து சுதந்திரத்திற்குத் தரும் ஜனநாயகம். விளம்பர நடிகை லீனோவோ புதுப்பட ப்ரொட்யூசர் அ. மார்க்சோ கேரள சிபிஎம் – மின் இந்த ரவுடித்தனைத்தைக் கண்டித்து ஒரு அறிக்கையாவது விட்டார்களா? கண்டனக் கூட்டம் நடத்தினார்களா? இல்லை இனிமேலாவது நடத்துவார்களா? அப்படி நடத்தினால் அதில் சிபிஎம்-மின் மூத்த மூன்று பிகர்களும் கலந்து கொள்வார்களா?

அப்படி எல்லாம் முடியாது என்றால், பிறகு என்ன எழவுக்கு இப்போது இந்த ஒப்பாரி விளம்பரப் படத்தை அ.மார்க்ஸ் அவசர அவசரமாக தயாரித்து வெளியிடுகிறார்?

விளம்பரப் பட நடிகை லீனா மணிமேகலை மீது இந்து மக்கள் கட்சி ஒரு போலீஸ் புகார் கொடுத்துவிட்டதற்காக போராட்டக் களத்தில் குதிக்கும் புதுப் ப்ரொட்யூசர் அ. மார்க்சுக்கு இந்த நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரம் இருக்காது. பெருஞ்சித்திரனார் முதல் மனுஷ்யபுத்திரன் வரை பலபேருடைய கோவணங்களை உருவி சேர்த்து வைக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும். இப்போதான் தெரிகிறது, அடுத்து யார் கோவணத்தை உருவலாம் என்ற அவரசத்தில் இருந்த அ. மார்க்சின் கோவணத்தை யாரோ உருவி விட்டிருக்காங்க என்று.
- அ.அமுதன் ( amuthan70@yahoo.com )

Monday, April 12, 2010

லீனா மணிமேகலை: என் வேலை தொடைகளை எப்பொழுதும் பரப்பியே வைத்திருப்பது


நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை (endra Bull dog) எழுதிய இரண்டு (Kuppai)கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும்.

1.முதல் கவிதை:
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்

என் (Leena) வேலை என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது

நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்

அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்

எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்

எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்

பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும் கலைக்க முயன்றும்
என் சூலகத்தில் தங்கிவிட்ட கருக்கள்

அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
——————————
2. இரண்டாவது கவிதை:
If Communists have any respect on their leaders, they should explain what it means to this prostitute.

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்

பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்

-(pottai)லீனா மணிமேகலை
கவிதை எழுதியோ, கோட்ம்பாக்கத்தில் புகுந்தோ, என்ன செய்தாவது எப்படியாவது பிரபலமாக விரும்பும் லீனா மணிமேகலை என்னும் பெண் இப்படியான இரண்டு கவிதைகளை தனது பிளாக்கில் எழுதியிருந்தார். அந்தக் கவிதை சொல்ல வருகிற கருத்து அல்லது வெளிப்படுத்த விரும்பும் உணர்ச்சி இதுதான். மத்திய கிழக்கில் அமெரிக்கா வீசிக் கொண்டிருக்கும் குண்டுகளுக்கும்., வன்னியில் பேரினவாத இலங்கை அரசு நடத்திய கொலைகளுக்கும், ஆபகானில், பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் இன்னும் இன்னும் உலகில் ஏகாதிபத்தியங்கள் மக்கள் மீது தொடுத்துள்ள போர்களுக்கும் இலட்சியம் ஒன்றே ஒன்றுதான். அது ஆண் குறியின் வெறி….. தவிரவும் மதவாதிகள், பாசிஸ்டுகள், உழைக்கும் ஏழை மக்கள், புரட்சிகர சக்திகள், என எல்லோரையும் ஒரே கூண்டில் அடைத்து அத்தனை பேரையும் ஆண்குறியின் வடிவமாகக் காணும் மணிமேகலை, மயங்கி மல்லாந்து கிடந்தபடியே காறித்துப்புகிறார். கவிதை தெறிக்கிறது.

சில காலங்களுக்கு முன்பு தமிழில் பாலியல் கவிதைகளை பெண்கள் எழுதுவதில்லை என்ற மனக்குறையை சிலஅறிவுஜீவிகள் வெளியிட்டிருந்தனர். 60, 70 களில் சரோஜாதேவி என்ற பெயரில் பலான இலக்கியங்களைப் படைத்து வந்த படைப்பாளி ஒரு ஆணாகத்தான் இருக்கமுடியும் என்று உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அமைப்பியல்வாதம், கட்டுடைத்தல் போன்றவை அப்போது அறிமுகமாகவில்லை என்பது மட்டுமல்ல, இந்த அறிவுஜீவிகளும் அப்போது ( நடுத்தர) வயதுக்கு வரவில்லை. பிறகு ஐரோப்பிய கலகத் தத்துவங்களால் கிளர்ச்சியூட்டப்பட்ட நடுத்தரவர்க்க கலகக் காரர்களின் குழு “பலான கதைகளையும் கவிதைகளையும் பெண்களே எழுதினால் எப்படி இருக்கும் என்று தங்களது நடுத்தர வயதில் ஆசைப்பட்டது. இந்த எழுத்தியக்கத்தையும் தொடங்கி வைத்தது. தம்மை பிரபலப்படுத்திக் கொள்ள வேறெந்த தனித்திறமையும் வாய்க்கப்பெறாத, மாதர்குல மாணிக்கங்களில் சிலர், புணர்ச்சி இலக்கியம் என்ற இந்தப் புதிய ஜெனரை (Genre) படைக்கத் தொடங்கினர்.

தனியார்மயப் புரட்சி, நுகர்வியப் புரட்சி, பாலியல் புரட்சி ஆகிய புரட்சிகளை மூன்று மாதத்துக்கு ஒருமுறை தொடர்ந்து அட்டைப்படத்தில் செய்துவரும் இந்தியா டுடே எனும் பூணூல் அணியாத என்.ஆர்.ஐ இந்து தேசியப்பத்திரிகை, இத்தகைய கவிதாயினிகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவே, லீனா மணிமேகலை போன்றோர் ஆடத்தொடங்கினர். மேலை நாடுகளில் கால்பந்து ஆட்டத்தின் நடுவே ஆடையை அவிழ்த்துப் போட்டு ஓடி, கலகம் செய்து, பிரபலமாகும் பரிதாபத்துக்குரிய பைத்தியங்கைப் போல, ஆணுறுப்பு, பெண் உறுப்பு போன்றவற்றை ‘பச்சையாக’ எழுதுவதனால் உலகமே தங்களையும் தங்கள் எழுத்தையும் கண்டு அஞ்சி நடுங்குவதைப் போல இவர்கள் கற்பித்துக் கொண்டனர். இதற்கு ஆமாம் போடுவதற்கு சில பன்னாடைகள். இந்த நவீன ரசனைக்கு ஒரு ரசிகர் கூட்டம். இந்தக் கட்டுரை மேற்படிக் கும்பலை குறிவைத்து எழுதப்படுவதால், அவர்களது கலகச் சொற்களையும் ‘குறி’யீடுகளையும் இதில் அவ்வாறே பயன்படுத்துகிறோம். மற்றப்படி உண்மைகளை உரைக்க வைப்பதற்கு உள்ளாடைகளைக் கழற்ற வேண்டும் என்ற கருத்தோ, விருப்பமோ எங்களுக்கு இல்லை.

லீனாவின் மேற்படி கவிதையில் உலகப் புரட்சியாளர்கள், பிற்போக்கு வாதிகள், மதவாதிகள், லும்பன்கள் போன்ற அனைவரது குறிகளும் இடம்பெறுகின்றன. சீரியல் இயக்குநர்கள் மற்றும் சினிமா இயக்குநர்களது குறிகள் மட்டும் இடம்பெறவில்லை. மேலும் ஆண்குறி வரிசையில் லீனாவின் கணவரான சி.ஜெரால்டின் பெயரும் இடம்பெறவில்லை. காரணம் புனிதமா, அல்லது வேறு ஏதேனும் புதிரா என்று நமக்குத் தெரியாது.

பாலியல் நூல்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம் கொண்ட, ஆனால் கடையில் அதைக் கேட்டு வாங்கும் தைரியம் இல்லாத, இணையத்தில் பலான சைட்களை மேயும் ஆசை கொண்ட, ஆனால் மனைவியிடமோ, பெற்றோரிடமோ சிக்கிக் கொள்வோம் என்ற அச்சமும் கொண்ட “ஆண்குறிகளுக்கு” தீனி போடுவதுதான் லீனாவின் நோக்கம் என்று தெரிகிறது. இத்தகைய கோழைகளின் சந்தையை சார்ந்திருக்காமல், ஷகிலா ரசிகர்கள் போன்ற தைரியசாலிகளை லீனா நம்பலாம். ஷகிலா பட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் சேர்ந்து கொள்ளலாம். லீனாவின் தைரியத்துக்கு அதுதான் பொருத்தமான இடம்.

லீனா எழுதியுள்ள இந்தக் கவிதையை ஓபாமாவோ, கொலைகாரன் ராஜபட்சேவோ பார்த்தால் லீனாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு வரவேற்று அழைத்துச் செல்வார்கள். அப்படியே ஆண்குறி குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க ஒரு மில்லியன் டாலரும் கூட கொடுக்கலாம். காரணம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய பயங்கரவாதம் உலகெங்கும் நடத்தும் ரத்த வெறியாட்டத்தை அந்த ரத்தக் குளியலில் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைகளை, வன்னியில் கொல்லப்பட்ட ஐமப்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழ மக்களின் படுகொலையை மறைத்து அப்படுகொலைகளை ஆப்ட்ரால் ஒரு ஆண் குறி பிரச்சனை என்று எழுதும் லீனாவை ராஜபட்சேவும், ஓபாமாவும் கொண்டாடாமல் என்ன செய்வார்கள் என்ற கேள்வியோடு கட்டுரையைத் துவங்குகிறோம்.

ஆண்குறி கவிதைகள் போக லீனா தற்போது என்ன செய்கிறார் என்று விசாரித்தோம். அவர் செங்கடல் என்றொரு ஆவணப்படமோ, திரைப்படமோ எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இந்தப் படப்பிலில் கலந்து கொள்ள இலங்கை எழுத்தாளர் ஷோபா சக்தி ராமேஸ்வரம் வந்திருப்பதாகவும், செங்கடல் குழுவினர் படப்பிடிப்பை வெற்றிகரமாக ராமேஸ்வரத்தில் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

அந்த நேரத்தில்தான் தமிழ் மக்களின் ஆண் குறியான தினத்தந்தி நாளிதழில் அந்தச் செய்தியை படிக்க நேர்ந்தது. செய்தி இதுதான். வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு பல நாள் ஊதியத்தை கொடுக்க மறுத்த லீனா தலைமையிலான படப்பிடிப்புக் குழுவினரிடம் தொழிலாளர்கள் ஊதியம் கேட்ட போது அவர்களை அலைக்கழித்தார்களாம். வெறுத்துப் போன தொழிலாளர்கள் படம் பிடித்த ஒளிச்சுருளை அல்லது டேப்பை எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பிய போது படப்பிடிப்புக் குழுவினருடன் சேர்ந்து கொண்டு லீனா மணிமேகலை, ஷோபா சக்தி ஆகியோரும் சேர்ந்து அவர்களை தாக்கினார்களாம். கடைசியில் அடிவாங்கியவர்கள் போலீசுக்குப் போக, போலீசும் அடித்தவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்திருக்கிறது.

உடனே லீனா போலீசிடம் சீறிப்பாய்ந்ததாகவும் அப்படிச் சீறியதை படம் பிடித்த காவல்துறையினரை லீனா தள்ளி விட்டதாகவும் கடைசியில் ஷோபா சக்தி, லீனா ஆகியோர் ஸ்டேசனில் இருந்து பத்திரமாக வெளியேறி வந்து விட்டதாகவும் நாம் அறிய முடிகிறது. காவல் நிலையத்தில் மட்டுமல்ல பல இடங்களில் தனது முற்போக்கு முகத்தை காட்ட அஞ்சாதவர் லீனா மணிமேகலை.

ஒரு முறை லயோலாக் கல்லூரிக்கு ஒரு கூட்டத்திற்காக சென்றிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட்டோடு சென்ற அவரை மறித்தது ஒரு கிறிஸ்தவ ஆண் குறி. தன்னை மறித்து நின்ற அந்த ஆண் குறிக்கு எதிராக சினந்து வெடித்தார் லீனா. அதையும் உலக மகா பிரச்சினையாக அதாவது ஈராக், ஆப்கான், குஜராத், ஈழம் போன்ற சில்லறைப் பிரச்சினைகளை விட முக்கியமானதாக சித்தரித்தார் லீனா. அப்போது அவர் காட்டிய ஆவேச எழுச்சிக்கு நிகராக இராமநாராயணன் படங்களில் வரும் அம்மன்களின் வேப்பிலை ஆட்டத்தை மட்டுமே ஒப்பிடமுடியும்.

பல பதிவர்கள், வேலையில்லாத முற்போக்குவாதிகள், விளம்பரங்களுக்காக வேடம்போடும் பெண்ணியவாதிகள் அனைவரும் லீனாவுக்காக திரண்டு வந்தனர். ‘அற்பமான’ உலக அரசியல் பிரச்சினைகளுக்காக சினமடையாதவர்கள் இந்த ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் பிரச்சினைக்காக ஆர்ப்பரித்தது ‘நல்ல’ விசயம்தான். இருக்கட்டும். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கவிதைக் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார் லீனா. ( சுகன் வந்து இலங்கை தேசிய கீதம் பாடினார் அல்லவா? அந்த கூட்டம்தான்) அந்தக் கூட்டம் நடத்தப்பட்ட இடம் – முன்னர் லீனாவை கிறிஸ்தவ ஆண் குறி ஒன்று மறித்து நின்ற அதே இடம்தான்.அந்த கிறித்தவ ஆண்குறிக்கு நேர்ந்த கதி சுகனுக்கு நேரவில்லை. இலங்கை தேசிய கீதத்தில் அத்தகைய ‘குறி’யீடுகள் எதுவும் அவருக்கு தெரியவில்லை போலும்!

சரி லீனாவின் தாக்குதலுக்கு ஆளான சினிமாத் தொழிலாளிகளுடைய கோடம்பாக்கத்துக்கு வருவோம். சினிமாத் தொழிற்சாலையை (இது தொழிற்சாலையா என்பது வேறு விசயம்) கனவுத் தொழிற்சாலை என்பார்கள். சினிமாக்கனவுகளோடு வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை மென்று துப்பும் தொழிற்சாலை என்பதனால் இப்படி சொல்ல்லாம். அல்லது கற்பனைக் குதிரையில் இரசிகர்களை ஏற்றி விட்டு, தான் மட்டும் காசில் குறியாக இருக்கும் கயமை காரணமாகவும் இந்தப் பெயர் வாய்த்திருக்கலாம். இந்தக் கனவுத் தொழிற்சாலைக்கு ஆண் குறி உண்டா, அல்லது தொழிற்சாலையே ஒரு ஆண்குறிதானா என்பது லீனாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த கனவுத் தொழிற்சாலையை இயக்குவது 24 சங்கங்கள் என்று சொல்வதை விட 24 துறைகள் என்று சொல்லலாம். இந்த 24 துறைகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு திரைப்படம் உருவாக முடியும்.இயக்குநர், கேமிராமேன், டச்சப் பாய், மேக்கப்மேன், டான்ஸ் மாஸ்டர், சாப்பாடு பரிமாறுகிறவர்கள், லைட்ஸ் மேன், புகை போடுகிறவர்கள், மழை பெய்ய வைப்பவர்கள், வெடி குண்டுகள் வைப்பவர்கள் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறை. இந்த வெவ்வேறு துறைகளுக்கும் தனித்தனி சங்கங்களும் உண்டு. ஏ.வி. எம். களும், ஷங்கர்களும், ரஜினிகாந்துகளும், கமலஹாசன்களும் தமிழ் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கோலோச்சும் இந்தத் துறையில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று ஒரு பிரிவினரும் உண்டு. சினிமாவில் கதாநாயகியாகும் கனவுகளோடு வந்து அந்த ஆசைகளாலேயே தூண்டிலில் சிக்கிய புழுக்களாக மாறி, ஆண் குறிகளால் எளிதில் சூறையாடப்பட்டு கடைசியில் இரவு நேர பாலியல் தொழிலாளிகளாக காலத்தை கழிக்கிறவர்கள்தான் இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள். இவர்களில் 95% பேர் பெண்கள்.

இவர்கள் லீனாவைப் போன்று கவிதைகளில் கற்பனையான ஆண்குறிகளை கட்டமைக்கும் வாய்ப்பு பெற்றவர்களல்லர். மாறாக ஆண் குறியின் கோரத்தை ஒவ்வொரு இரவிலும் அனுபவித்து அன்றாடம் கோடம்பாக்கத்தில் தங்களின் உதிரத்தை இழந்து நாற்பது வயதுக்குள்ளாகவே வனப்புகளை இழந்து வாழ்விழ்ந்து கடைசியில் பிச்சைக்காரிகளாகவும், மன நோயாளிகளாகவும், லீனாவின் மொழியில் சொன்னால் செக்ஸ் தொழிலாளிகளாகவும் மாறிப் போகிற பரிதாபப் பெண்கள் இவர்கள்.

இவர்களைப் போன்றே இன்னொரு வகையினரும் உண்டு. இவர்கள் உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள். 95% பேர் ஆண்கள். ஆமாம் லீனாவின் மொழியில் சொன்னால் ஆண் குறிகள். இவர்களின் ஊதியங்களை ஒழுங்கு செய்யும் விதமாக எந்த விதமான யூனியன்கள் எதுவும் கிடையாது. இவர்களுக்காக இருக்கிற யூனியன்கள் பெரிய தலைகளின் அல்லக்கை யூனியன்களாக மட்டுமே செய்லபடும். பெரும்பலான இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் தமது உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. உதவி இயக்குநர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் இருக்கும் ஒரே வருமானம் பேட்டா. ஆமாம், அதுவும் ஷூட்டிங் நடக்கிற நாட்களில் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லோருக்கும் செட்டில் செய்த பிறகு கடைசியாய் வழங்குவார்கள். அந்த பேட்டாவுக்காக அந்த ஆண் குறிகள் காத்திருப்பார்கள். வறுமை, மரியாதையின்மை, வாய்ப்புகள் மறுக்கப்படுதல், அவமானம் என பல அவமானங்களைச் சுமந்தே ஒவ்வொரு உதவி இயக்குநரும் உருவாகி கடைசியில் ஒரு ‘ தமிழ் ஆண் குறி’ சினிமாவைப் படைக்க முடியும்.

லீனா சென்னை வந்த உடன் இயக்குநர் இமையம் பாரதிராஜாவிடம் போய்ச்சேர்ந்தார் ( பல உதவி இயக்குநர்கள் அவரை இன்று வரை நேரில் கூட பார்க்க முடியாமல் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) அப்புறம் சேரன் … அப்புறம் தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய சீரியல் இயக்குநரான சி. ஜெரால்டுடன் திருமணம். வடபழனியில் பல லட்சம் ரூபாயில் சொந்தமான அப்பார்ட்மெண்ட் வீடு, ஆயிரம் விளக்கில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எடிட் ஷூட் , பணக்காரர்கள் பயன்படுத்தும் காஸ்டிலியான கார் என லீனாவின் வளர்ச்சி சடுதியாக வந்து வாய்த்த ஒன்று………………….

யோனிகளை சென்டிமெண்டில் ஆழ்த்தி அடிமைப்படுத்தும் பாரதி ராஜா, சேரன் முதலானவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்வதில் லீனாவுக்கு வருத்தம் இல்லை. அத்துடன் தமிழக யோனிகள் அத்தனையையும் கண்ணீர் சிந்தவைக்கும் சீரியல் இயக்குநரை கை பிடித்ததிலும் அவருக்குப் பிரச்சினையில்லை. உலகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் ஆண் குறி ஒன்றே காரணம் என்று எழுதும் லீனாவுக்கு தனது ‘செங்கடல்’ படத்தில் பணியாற்றிய உதவியாளர்கள் பேட்டா கேட்டவுடன் ஆண் குறிகளே தன்னிடம் வந்து பேட்டா கேட்டது போல் தோன்றியிருக்கும்.

இனி, செங்கடல் பற்றி நாம் கேட்டறிந்த செய்திகள் வருமாறு:

பல பீ வண்டி சீரியல்களின் இயக்குநரான சமுத்திரக்கனி என்பவர்தான் செங்கடல் படத்தின் தயாரிப்பாளராம். ஒரு கோடி ரூபாய் இந்த செங்கடலுக்காக லீனாவிடம் கொட்டப்பட்டிருக்கிறதாம். சமுத்திரக்கனி மீனவ சமூகத்தைச் சார்ந்தவராம். அதனால் தனக்கு வருகிற வரும்படிகளில் கொஞ்சம் பணத்தை மீனவர் பற்றிய படைப்பு ஒன்றிற்காக செலவு செய்யும் ‘நல்ல’ எண்ணம்தான் அவருக்கு.

இந்தப் படம் குறித்து விசாரித்தபோது….செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை, தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது. மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். முழுக்க முழுக்க வெளி நாடுகளில் மட்டுமே காண்பிக்கப்படுமாம். நேர்மையான நோக்கத்துக்காக புலிகளைப் பற்றி விமரிசிப்பது என்பது வேறு, இலங்கை அரசையும் இந்திய அரசையும் நத்திப்பிழைக்கும் வாய்ப்புக்காக புலிகளை விமரிசிப்பது என்பது வேறு. செங்கடலின் ‘ஆழத்தை’ பார்க்கும் போது படத்தில் நிச்சயமாக வில்லங்கம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

சரி இதை இத்தோடு விட்டு விட்டு லீனாவிடமே வருவோம்.

இதற்கு முன்னரும் லீனா மாத்தம்மா, தேவதை, உள்ளிட்ட சில ஆவணப் படங்களை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எடுத்திருக்கிறார். இந்தப்படங்கள் கிறிஸ்தவப் பாதிரிகள், தன்னார்வக்குழுக்களுக்காக எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கின்றன. தன்னார்வக்குழுக்களிடம் பொறுக்கித் தின்னும் பன்னாடைகளும் லீனாவின் ஆண்குறி லிஸ்டில் வரவில்லை. மாத்தம்மா விஷயமே ஓவர் பில்டப் பண்ணி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் அப்போது வந்தன. லீனா ஆவணப்படம் எடுக்கிறேன் என்று பலரையும் மோசடியும் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் சில ஈழத் தமிழர்களிடம் இவ்விதமான தொடர்புகளோடு இருந்து கடைசியில் ஏமாற்றி அது பஞ்சாயத்து செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். லீனா தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு தன்னார்வக்குழுவே வழக்குக் கூடத் தொடர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

லீனா எடுத்த படங்கள் உழைக்கும் மக்கள் தொடர்பானது. அதில் எவ்விதமான யோனி அரசியலையும் நாம் காணவில்லை. தேவதைகள் என்றொரு படம் எடுத்திருந்தார். அதில் உழைக்கும் பெண்களை வைத்து fantasy பண்ணியிருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் சந்திக்கும் ஆண் குறிகள் பற்றியும் அக்கறைப்படவில்லை.அரசியல் பற்றியும் அக்கறைப்பட வில்லை. ஒரே அக்கறை பணம் பணம் பணம் மட்டுமே…..

எப்போதும் ஆண் குறியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அலையும் ஒரு ஈழத்து எழுத்தாளருடனும் லீனா சினிமா முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நமது நாட்டின் ஏழைகள், உழைக்கும் மக்களின் வறுமை, தலித்துக்கள் மீதான சாதிக்கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, விளிம்பு நிலை மனிதர்கள் என 90களுக்குப் பிற்பகுதியில் தன்னார்வக்குழுக்கள் எப்படி இவர்களை குறி வைத்து பணம் பண்ணியதோ அதே வேலையை செய்து கொண்டுருப்பவர்தான் லீனா. சிறிதும் நேர்மையற்ற லீனா தனது படங்களில் வேலை பார்க்கும் யாருக்கும் முறையான ஊதியம் கூட வழங்குவதில்லையாம். எவனாவது ஊதியம் கேட்டால் தனது ‘பெண்மையை’ அவனுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி அமர்க்களம் பண்ணி விடுவாராம்.

இராமேஸ்வரம் பிரச்சினையில் போலீஸ் கையில் இருந்த கேமிரா மொபைலை பிடுங்கிய லீனாவின் ‘தைரியத்தை’ நாம் பாராட்டியே ஆக வேண்டும். எனினும் அந்த காக்கி ஆண் குறிகளுக்கு எதிராக போராடிய லீனா போலீசிடம் இருந்து தன் போர்க்குணத்தால் விடுபட்டார் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது. போலீசிடம் மாட்டிக் கொண்ட ஷோபா சக்தியும், லீனாவும் வெளியில் வர நம்பியது ஒரு அதிகார ஆண் குறியை,,,, ஆமாம் அவர்களை செல்வாக்கான மனிதர்கள் தலையிட்டே விடுவித்திருக்கிறார்கள்.

உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். சிதம்பரம் காவல் நிலையத்தில் கணவனின் கண் எதிரிலேயே பாலியல் வன்முறைக்குள்ளான பத்மினியின் கதை, கடைசியில் கணவனைக் கொன்று விட்டு, பத்மினியை வேட்டையாடின காவல் நாய்கள். அந்தியூர் விஜாயாவையும் நீங்கள் மற்ந்திருக்க முடியாது. வழக்கு ஒன்றிற்காக காவல் நிலையம் சென்றவரை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்தார்கள் காவல்நாய்கள். வாச்சாத்தி, விழுப்புரம், சென்னை என்று ஊர் ஊருக்கும் காக்கி ஆண் குறிகள் குதறிய கதைகள் உண்டு. ஆனால் அந்த காவல்நாய்களையே எதிர்த்து நிற்கிற லீனாவின் துணிச்சல், ஆண் குறிகளின் வக்கிரங்களுக்கு பலியான ஏனைய பெண்களுக்கு ஏன் வரவில்லை? லீனாவிடம் இருப்பது துணிச்சலா, அல்லது அதிகார பீட ஆண்குறிகளுடனான தொடர்பு தரும் திமிரா என்பதுதான் நமது கேள்வி. சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்ட புவனேசுவரியும் லீனாவைப் போன்றே போலீசை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொண்டார் என்பது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. புவனேசுவரிக்கு ஏதாவது பிளாக் இருக்கிறதா, அவர் கவிதை எழுதுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். பதிவர்கள் தெரிவித்தால், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இனி லீனாவின் ஈழப் போராட்ட முகங்கள்…..

போருக்கு எதிராக புதிய அமைப்புத் தொடங்கி டில்லி வரை சென்று போராடியவர் லீனா. சென்னையில் கவிஞர்களை ஒருங்கிணைத்து ஒப்பாரிப் போராட்டம் நடத்தியவர் லீனா. இதெல்லாம் ஈழத்து ஆர்வலர்களிடம் லீனா பற்றி உருவாகியிருக்கும் பிம்பங்கள். இந்த பிம்பங்களை வைத்து லீனா தனது இமேஜை கூட்டிக்கொள்ள முயன்றார் என்பதே உண்மை. அதனால்தான் டெல்லி போராட்டத்திற்குச் சென்று வந்தவுடன், தானே முன்னின்று அப்போராட்டத்தை நடத்தியது போன்ற பேட்டிகளைக் கொடுத்தார். விளைவு – அவரது இலக்கிய நண்பர்களும், பெண்ணியவாதிகளும் அவர் மீது கடும் கோபம் கொண்டனர்.

ஈழத்திற்கான கடற்கரைப் போராட்டம் ஆர்ப்பட்டமாகத் துவங்கியது. ஆனால் சிறிது நேரத்தில் லீனாவின் மகா யோக்கியத்தனம் தெரிந்தது. பேச்சாளர் ஒருவர் போருக்கு துணைபோன யுத்தக் குற்றவாளி சோனியா காந்தி பற்றி பேசத் தொடங்கினார். மைக்கைப் பிடித்த லீனா “யாரும் இங்கே மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்து பேசக் கூடாது” என்று நிபந்தனை போட்டார்.இது யோனிக்கு யோனி செய்யும் உதவி. இதில் ஆண்குறிக்கு தொடர்பில்லை போலும்!

அடுத்து வந்தவர், சரி மத்திய மாநில அரசுகளைத் தானே திட்டக் கூடாது, குறைந்த பட்சம் நமது கோபத்தை ராஜபட்சே மீதாவது காட்டுவோம் என்று ராஜபட்சே பற்றி பேசத் தொடங்கினார். உடனே தலையிட்ட லீனா “இங்கே யார் மனமும் புண்படாமல் பேசுங்கள், யார் மனமும் புண் படாமல் போராடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

லீனாவின் கவிதையில் இராஜபக்சே பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று இப்போதுதான் புரிகிறது. ஜெரால்டு, பாரதிராஜா, சேரன்.. இன்னும் நமக்குத் தெரியாத லீனாவுக்குத் தெரிந்த பலருக்கும்….. கடைசியாக இராஜபக்சேவுக்கும் ஆண் குறி கிடையாது போலிருக்கிறது. இல்லையென்றால் லீனா சும்மா விட்டு விடுவாரா? இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார்: முன்னர் புலிகள் செல்வாக்கோடு இருந்த காலத்தில் புலிகளுக்காக திலீபன் பற்றி ஒரு படம் பண்ணும் முயற்சியில் கூட லீனா இருந்தாராம். இப்போது புலிகள் தோற்றவுடன் – செங்கடல்! அரசியலில் இந்த மாதிரி பிழைப்பவர்களை அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் என்று சொல்வார்கள். இதே வேலையை கலைத்துறையில் செய்வதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.

பொதுவாக போர்ட் போலியோ எனப்படும் சுய படங்களை எடுத்து வைத்துக் கொண்டு தனது புகைப்படங்கள் ஊடகங்களில் அதிகம் வரவேண்டும் என்று ஆசைப்படுவாராம் லீனா. அதற்காகவே தொழில் முறை ஒளிப்பதிவாளர்களை வைத்து மேக்கப் போட்டு நடிகைகள் போல ஆல்பம் வைத்திருக்கிறார். “இதைத்தானே நமீதா, த்ரிஷா, தமன்னா எல்லோரும் செய்கிறார்கள். இத்தகைய ஆல்பங்களைத்தானே, கன்னடப் பிரசாத் போன்றவர்கள் கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்?” என்று நீங்கள் கேட்க நினைக்கலாம். கேட்டால் அடுத்த கவிதையில் இராக், ஆப்கான் வரிசையில் உங்கள் பெயரும் இடம்பெறும் வாய்ப்பு உண்டு.

எதுவும் கேட்கவில்லை. சும்மா பார்த்துக் கொள்கிறோம் என்கிறீர்களா? கேட்டால்தான் பிரச்சினை, பார்த்தால் பிரச்சினையே கிடையாது. …. பார்ப்பதற்குத்தானே ஐயா, போர்ட் போலியோ! அதில் ஆணாதிக்கம் எதுவும் கிடையாதே!

——————————–


பின் ‘குறி’ப்பு: மைனர் கெட்டால் மாமா என்பார்கள். போலி கம்யூனிஸ்டு குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்ல, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களுடன் நெருக்கமான பழக்கமும் உள்ளவர் லீனா. அதான் இந்த லச்சணம்!
ரெண்டு மூணு சீட்டுகளுக்காகத்தன் அந்த அம்மாவிடம் மானத்தை அடகு வைத்திருக்கிறார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். லீனாவின் அலப்பரைகளும் கூட இவர்களுடைய தோலில் கொஞ்சம் கூட உரைக்கவில்லையே! மழுங்கத்தனம் என்றால் என்ன என்று ஒரு நண்பர் விளக்கம் கேட்டார். அதுக்கு அகராதியில் எல்லாம் விளக்கம் கிடையாது. தா.பாண்டியனையும், மகேந்திரனையும் பார்த்துக் கொள்ளுங்கள். இதான் அது.