Monday, November 30, 2009

குத்துக்கரணம் அடிக்கும் கருணாநிதி










தமிழினத்தின் துரோகி கருணாநிதி செய்வதெல்லாம் செய்து விட்டு இப்போது திடிரென ஒரு கேள்வி பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். உலக தமிழினத்தின் தலைவராக வேண்டும் என்ற இரட்டை வேட முயற்சியில் தமிழின துரோகி என்ற பட்டத்தால் வெந்து போயுள்ள ஐயாவின் கேள்வி பதில்.


முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

கேள்வி: ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில் “இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மவுனமாக அழுவது யாருக்கு தெரியும்?” என்கிறாரே கருணாநிதி? என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கு வேக வேகமாக பதில் சொல்லப்பட்டிருக்கிறதே?

பதில்: நான் எனது கடிதத்தில், “இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது” என்று எந்த இடத்திலும் எழுதவே இல்லை. ஆனால் நான் எழுதாததை, நான் கூறாததை கூறியதாக ஒரு கேள்வியைக் கேட்கச் செய்து, அதற்கு என்னைத் தாக்கி பதில் கூறப்பட்டுள்ளது. நான் என்னுடைய கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறேன். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை.

இப்படி சகோதர யுத்தம் காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டோம். முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறினோம்.

இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக்கொண்டு போய்விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை நான் எழுத நேரிட்டது.

இப்படியெல்லாம் பொதுவாக என்னுடைய வேதனையை வெளிப்படுத்தினேன். அதையெல்லாம் மறைத்துவிட்டு இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என்று நான் சொன்னதாக கற்பனையாக ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்காக என்மீது பாய்ந்து விழுந்து குதறி பதில் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்த இதழ் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது! அந்த இதழின் சிறப்பு செய்தியாளர் ஒருவர் நான் எழுதாததை எழுதியதாகச் சொல்லி கேள்வி கேட்டு அப்படி நான் எழுதினேனா இல்லையா என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஒருவர் என்னைத் தாக்கி பதில் சொல்லியிருப்பது; என் மீது வசை பாடுவதற்காகவே இருவரும் சேர்ந்து ஜோடித்த நாடகமேயாகும்.

கேள்வி: ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில் “சகோதர யுத்தம் நடத்தியதால் தான் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக கருணாநிதி சொல்கிறாரே?” என்று ஒரு கேள்வியும் அந்த இதழில் கேட்கப்பட்டு, அதற்கும் உங்களைத் தாக்கி பதில் கூறப்பட்டுள்ளதே?

பதில்: இதுவும் நான் சொல்லாததுதான். சகோதர யுத்தம் நடந்தது என்று சொல்லியிருக்கிறேன். அதனால் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக ஒட்டுமொத்தமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதிலே என்ன தவறு என்று தெரியவில்லை.

கேள்வி: “மாவீரன் மாத்தையா” என்று நீங்கள் ஒரு துரோகியை அழைத்து விட்டதாக அந்த இதழுக்கு பேட்டி அளித்தவர் சொல்லியிருக்கிறாரே?

பதில்: மாத்தையாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே அவர்தான்! அப்போது அவரை மாவீரன் மாத்தையா என்று தான் அறிமுகம் செய்துவைத்தார்.

கேள்வி: அந்த இதழில் வந்த பேட்டியில் “வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டது என்று வேதனைப்படுகிறாரே கருணாநிதி?” என்ற ஒரு கேள்வியும் இடம் பெற்று, அதற்கும் பேட்டி அளித்தவர் எந்த அளவிற்கு உங்களைத் தாக்க முடியுமோ அந்த அளவிற்கு தாக்கி பதில் அளித்திருக்கிறாரே?

பதில்: இந்த கருத்து நான் எழுதியது தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதிலே என்ன தவறு? “விடுதலைப்படை முகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு தளபதிகளுக்கு தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக்கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு; இது போன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்” என்று நான் எழுதியது உண்மைதான். இதிலே எந்தப் பிழையும் இருப்பதாக நான் இப்போதும் உணரவில்லை. நாம் கூறியதை அலட்சியப்படுத்தி இப்போது நம்மைத் தாக்கி மிக வேகமாக பதில் சொல்லியிருப்பவர்கள் சொன்ன யோசனைகளையெல்லாம் கேட்ட காரணத்தினால்தான் இன்று இலங்கை தமிழினம் அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாகி தவிக்கின்றது என்பதுதான் ஆதாரபூர்வமான உண்மை!

வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு என்று நான் கூறியிருப்பதில் இருந்தே, அவர்களின் வீரத்தைப் பாராட்டியிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு நம்மைத் தாக்க வேண்டுமென்ற வெறி கொண்டவர்களுக்கு அப்படித்தான் பதிலளிக்கத் தோன்றும். வீரத்தையும், விவேகத்தையும் பற்றி நான் இப்போது கூறவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “சாக்ரடீஸ்” ஓரங்க நாடகத்திலேயே “வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்!” என எழுதியிருக்கிறேன். அந்த வசனத்தை பல மேடைகளில் பேசிக் காட்டியவர்கள்தான் இப்போது அதனை இழித்துரைக்கிறார்கள். எனக்கு அப்போது பேசியதுதான் மனதிலே நிற்கிறது.
Source: http://kavishan.blogspot.com/2009/11/blog-post_4290.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FOYnN+%28%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29

Monday, November 23, 2009

சிரிப்புக்குள்ளாகியுள்ள செம்(மறி) மொழி மாநாடும் சிக்கலில் மாட்டியுள்ள சிவத்தம்பியும்: சங்கிலியன்





ஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில் தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

தமிழால் தன்னை வளர்ததுக் கொண்டவர் என்ற தனித்துவமான முத்திரையை மேலும் ஒரு முறை அழுத்தமாகப் பதிவுசெய்துகொள்ள அவர் மேற்கொண்டுள்ள மற்றுமோர் முயற்சி இதுவாகும்.

தமிழை நூலாகக், கலையாக, கவியாக, மேடைப் பேச்சாக, அரசியலாக விற்று தன்னை வளர்ததுக்கொண்ட (செல்வம் நிறைவாகச் சம்பாதித்த – திருமிகு) முத்துவேலு கருணாநிதி அவர்கள் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட வயது முதிர்நதவர் என்பதைச் சுருக்கமாகத் தமிழ் வளர்தத பெரியார் என்ற சொல்லும்போது தவறாக உலகத் தமிழினம் தமிழைக் கருணாநிதி வளர்ததார் என்ற தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது என அன்னை தமிழின் பெயரால் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனது முதல்வர் பதவிக் காலத்தை வளர்ததுக்கொள்ள தமிழை மட்டுமல்ல தமிழர்களின் தன்மானத்தையும் விற்று தனித்துவத் தலைவராகி விட்டார். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதுபோல் மத்திய அரசிடம் மடிப்பிச்சையேந்தி பதவி வேட்டையாடியதும், அதை உலகத் தமிழினத்தின் கண்களிலிருந்து மறைக்க தற்பொழுது உலகத்தமிழ் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை நடத்துவதும் கண்டு உலகத் தமிழினம் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றது.

அதுமட்டுமல்ல தன்னை வளர்கக தழிழை மேலும் விற்பது போன்று 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவரகள் இலங்கையின் சிங்கள கடற்படையினரால் கச்சதீவுக் கடலில் வைத்து நாய்களைவிடக் கேவலமாக நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுச் சாகடிக்கப்பட்தோடு கோடிக்கணக்கான பெறுமதியுள்ள அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டது.

அதற்காக இலங்கை அரசை எதிர்தது ஒருசொல்தானும் கேட்காது, அழிக்கப்பட்ட அந்த அப்பாவி மீனவர்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும் ஈடாக கேட்டிருப்பது, தன்னை வளர்ககும் தனியான திட்டத்திற்கு அவர் இலங்கை அரசைக் கேட்டிருப்பது, தள்ளாத வயதில் உள்ள ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தமிபி அவர்களை அரசு பலாத்காரமாக அவரது செம்(மறி) மொழி மாநாட்டிற்கு அனுப்பிவைக்கச் செய்வதுதான்.

தனது நாட்டில் பிறந்தவர்களாயிருந்தும், தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால், கோடிக்கணக்கான சொத்துக்கள் அறுநூறுக்கு மேற்பட்ட உறவுகளின் உயிர்கள், பல்லாயிரக்கணக்கான உறவுகள் அடிபாட்டிற்குள்ளான அவலங்கள் அனைத்தையும் இலங்கை அரசை ஏன் என்று ஒரு வார்ததை தானும் கேட்காதவரான தமிழால் வளர்நத தலைவரும், அவரது தயவால் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்தக்கொண்ட மத்திய அரசும் அவுஸ்திரேலியாவில் ஓருசில சீககிய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதும் போர்ககொடி தூக்குகிறார்கள்.
இப்படியே தமிழையும் தமிழ் இனத்தையும் விற்றும், இனஅழிவிற்கு வழிகாட்டியாய், உறுதுணையாய் இருப்பதன் மூலமும் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட பெரியாரின் சேவைகளை எழுதிக்கொண்டு போனால் ஏடுதாங்காத அளவிற்குக் கோடிட்டுக் காட்ட முடியும். ஆனால் அதற்கு நேரம் போதாது என்பதல் ஒருசிலவற்றை ஒப்புவித்திருக்கின்றோம்.
பாவம் உறவுகளின் பேரழிவிற்கு உள்ளாகி மனம் சொந்து நடைப்பிணங்களாக நடமாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் அறிஞர்களை, இலங்கை பாசிச அரசின் கெடுபிடிகளுடன் தமிழால் தான் வளரும் தாகத்திற்குப் பலியாக்கப் போகிறாரோ (செல்வம் நிறைவாகச் சம்பாதிதத – திருமிகு) திருமிகு முத்துவேலு கருணாநிதி அவர்கள் உலகத் தமிழினத்தை உற்று நோக்கிப் பார்ததுக் கொண்டிருக்கும் உண்மைத்துவம் இதுவாகும்.
- சங்கிலியன்

Wednesday, November 18, 2009

தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று கருணாநிதியை வரலாறு தூற்றும்







[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 04:44.28 AM GMT +05:30 ]

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார்.
இது தொடர்பாக இந்திய நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி:-

மௌனத்தின் வலி: கருணாநிதி வேதனை

இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த மௌனத்தின் வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது.

நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகி விட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதை நாம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தாலோ என்னவோ அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

"எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ?' என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது.

"இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். அமைதி முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார் அவர். தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். மேலும், 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை அதிபர் தேர்தலில் 1.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை.

இதை எண்ணிப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின, எங்கே போய் முடிந்தன என்பதை நினைத்துப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம்முடைய மௌன வலியாருக்குத் தெரியப் போகிறது?'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். (Dinamani - November 18,2009)

கருணாநிதியின் மேற்படி பாசாங்கு அறிக்கை தொடர்பாக "நக்கீரன்" வெளியிட்டுள்ள விளக்கம்

கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. இல்லை பாசாங்கு செய்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். விடுதலைப்புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் - வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி - தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப் புதுக் கதை பேசுகிறார்.

வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார்.

இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்க மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார்.

இந்த விக்கிரமசிங்கவும் அவரது கட்சிக்காரரும்தான் கருணாவை விலைபேசி புலிகளிடம் இருந்து பிரித்தார்கள். தேர்தலின் போது அதைச் சொல்லித்தான் பரப்புரை செய்தார்கள்.

இந்த ரணில் விக்கிரமசிங்கதான் . தீர்வு எதனையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவர். 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் நாள் ஒஸ்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் உள்ளக தன்னாட்சி யோசனையை முன்வைத்தார்கள். அதனை அவரது பதவி காலத்தில் நடைமுறைப்படுத்த ஒரு சின்ன அசைவைக்கூடச் செய்யாதவர்.

விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவின் துணையோடு மூழ்கடித்தவர். அந்தச் சாதனையை நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியவர்.
மேற்குநாடுகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்குநாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை வீழ்த்த சதிசெய்தார். விடுதலைப் புலிகளை சிக்க வைக்க வலை பின்னினார்.
இது போன்ற காரணங்களின் அடிப்படையில்தான் தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்தார்கள். இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசும் வேண்டாம் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது. ஏனென்றால் ரணில் விக்கிரமாசிங்கவும் ராஜபக்சவும் அடிப்படையில் சிங்கள - பெளத்த இனமத வெறியர்கள்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசு செய்த சதிதான் காரணம். அதில் பங்காளியாக இருந்த திமுக கட்சியும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். இந்தியா மட்டும் ஒதுங்கி இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போர்க்களத்தில் வீழ்த்தியிருக்க முடியாது.

இதனை நேற்றுக் கூட இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான் என மீண்டும் சத்தியம் செய்திருக்கிறார். இதோ கருணாநிதிக்கு பல்லக்குத் தூக்கும் விடுதலையில் (17-11-2009) வந்த செய்தி.

கொழும்பு, நவ. 17_- விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக்கட்ட போரின்போது இந்தியா அளித்த ஆதரவு காரணமாகவே இலங்கை மீதான உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலரும், அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதரவினால்தான் போரை நிறுத்தக்-கோரும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்து, தொடர்ந்து தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார்.

எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.
நக்கீரன்






Tuesday, November 17, 2009

பேரன்புக்குரிய கலைஞர் கருணாநிதிக்கு




பேரன்புக்குரிய கலைஞர் கருணாநிதிக்கு,
வணக்கம்.

பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம்। ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச்சொல்லும்படியாக எதுவுமில்லை। உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்।

நிற்க:
பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக்கொண்டிருக்கின்றன। தாகம்தீர்க்க மழையில்லை। இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது என்றிருந்த காலமும் மாறி நாமும் கொஞ்சம் மாறியிருக்கிறோம்.

குடும்பத் தலைவன் உயிருடன் இல்லை. பிள்ளை கண்ணிவெடியில் சிக்கி கால்களை இழந்திருக்கிறது, தங்கை சித்தப்பிரம்மையாய் அலைகிறாள், மனைவியோ எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு.... என பலருடைய காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

மீளக் குடியமர்த்துகிறார்கள். உண்மைதான். வேதனைகளின் ஈரம் இன்னும் காயாமல் இருக்கும்போது பழைய கிராமத்தை பார்க்க முடியவில்லை. அரசமரத்தடிப் பிள்ளையார் முதல் அஞ்சலகம் வரை எதுவுமில்லை. அடையாளமும் இல்லை.
அதே சந்தோசத்தை, அதே நினைவுகளை இனிவரும் காலம் மீளப்பெற்றுத்தருமா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு.

ஆம்! நாம் மீளக்குடியமர்த்தப்பட்டோம் குடிதண்ணீர் இல்லாமல்...
மீளக்குடியமர்த்தப்பட்டோம் மின்சாரம் இல்லாமல்...

எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்। ஏன் நீங்கள் கூடத்தான்।
எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும்போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம்நிறைந்து களிக்கிறேன்। காலம் தள்ளிப்போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப்போகின்றன। ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு, நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்...

உங்களுக்குத் தெரியாது ஐயா।
அனுபவித்தால் தான் தெரியும்। கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?
நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார்நிலத்தை நாம் பறித்தோம்?யார் உரிமைக்கு இடம்கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள்। வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது।

போகட்டும்।
இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள்। அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவிவிலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள்। ஏன் ஆனால் மௌனம் காத்தீர்கள்?
இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள்। தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள்।
ஆனால் பதில்கேட்க மறுத்தீர்கள்.
போராட்டத்துக்கு அழைத்தீர்கள்। சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம்। இடைநிறுத்தினீர்கள்.

எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக்காட்டினீர்கள்। என்ன பயனாயிற்று?

எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை। அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன்।

நான் மட்டுமல்ல। இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்। பனைமரங்களுக்குள் நாம் அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக்கொண்டிருப்போம்।
அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்துவிடாதீர்கள்।

எம்மை ஏமாற்றத்துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்தபின்னும் எம் ஆன்மா சாபமிடும்। இது நிச்சயமான உண்மை।

கலைஞரே,
எமக்கான தேவையை இந்த வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது. முடியுமானால் எம்மை நீங்கள் வந்து பாருங்கள். நீங்கள் தவறு செய்தீர்களா இல்லையா என்பதை அப்போது உணர்வீர்கள்.

ஐயா,
நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக பலர் சொல்லிக்கொள்கிறார்கள்। எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை। எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லிவிடுங்கள்। கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக்கொண்டே புள்ளிவைத்து முடித்துவிடுகிறோம்। கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது।

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம்। ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்।

அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு!
எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்।

இப்படிக்கு,
ஓர் ஈழத்தமிழன்
Source: http://puthiyamalayagam.blogspot.com/2009/11/blog-post_13.html

Monday, November 9, 2009

விரக்தியில் தமிழினமும், விழா தேடும் கலைஞரும்…

“ரோம் நகர் பற்றி எறிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் அதிகாரப் போதையை புரிந்து கொள்ள முடிகிறது.” கலைஞரின் நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை தொடர்ந்து, ஈழத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தால் காப்பாற்றப்பட்ட மக்கள் எப்படிச் சிங்கள அரசின் முள்வேலி சிறைக்குள் ஆறு மாதத்திற்கு முன் வந்து சேர்ந்தார்கள் என்பது கலைஞரின் குடும்ப செய்தி சேவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரிந்திருக்காது.


ஆறு மாதக்காலத்திற்குப்பின் திடீரெனக் கலைஞருக்கு ஈழத்தமிழர்மேல் கரிசனைப் பிறக்க உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தும் கேட்காத இராஷபட்சே, கருணாநிதியின் குழு இலங்கை சென்று வந்தவுடன் ,மக்களை முகாமை விட்டு வெளியே செல்ல அனுமதித்திருக்கிறார்.



“இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கின்றது! முகாம்களில் முள்வேலிக்குள்ளிருந்தோர்; நாளை முதல் நல்லமைதி கண்டோம் என்று நமை வாழ்த்துகின்றார். விம்மி அழுத அந்தநாள் எங்கே? இன்ப நாளிதே எனப் பாடிடும் இந்த நாள் எங்கே? “ - என அறிக்கை வெளியிடுறார் கருணாநிதி.



என்ன ஒரு நாடகத்தனமான அறிக்கை, அதிகாரமும், மீடியா பலமும் இருக்கிறது என்ற காரணத்தினால் தான் கற்பனையாக கூறுகின்ற எதையும் தமிழக மக்களை நம்ப வைத்துவிடலாம், தன்னிடம் அடிபொடிகளாக இருக்கும் அறிவு ஜீவிகளையும், அமைச்சர்களையும், சினிமாக்காரர்களையும் விட்டு ஆதரவு அறிக்கை வெளியிட்டால், தனக்கு தமிழினத் தலைவர் பட்டம் கிடைத்து விடும் என்று கணக்கு போடுகிறார் கலைஞர்.



ஈழத்தமிழினம் எதற்காக போராட ஆரம்பித்ததோ அந்தக் காரணங்கள் இன்றும் ஆழிந்துவிடவில்லை, அது சிங்கள இனவெறியாலும், துரோகத்தாலும் பல்கிப் பெருகி, இன்று அந்த மக்களின் உயிரையும், வாழ்க்கையையும் வேட்டையாடி விட்டது.



சொந்த இனம் வேட்டையாடப்படும் போதும் தனது ஆட்சிக்கு எந்த பாதகமும் வந்து விடக்கூடாது என ஆஸ்பத்திரி நாடகம், நீதிமன்ற தடியடி, கண்ணீர் அறிக்கைகள், கைதுகள் என சிங்கள அரசு இன ஒழிப்பு நடத்தி முடிக்க கால அவகாசம் வாங்கித்தந்த கலைஞர் இன்று எதுவுமே நடக்காதது போல் அந்த மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப போகின்றனர் என்கிறார்.



காங்கிரஸை ஆட்சிக்கட்டிலிருந்து இறக்கிவிட்டு திராவிடக் கட்சிகள் ஆட்சியை பிடிக்க காரணமாயிருந்த மொழிப் போரில் தீக்குளித்த தியாகிகள் 6 பேர், ஆனால் கடந்த ஒரு வருடத்தில் ஈழப்பிரச்சினைக்காக தீக்குளத்தவர்கள் 16 பேர், அனைத்து தரப்பு மக்களும் நடத்திய போராட்டங்கள் எத்தனை? அவற்றிற்கு கருணாநிதி அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருந்துவிட்டு, 8 கோடித் தமிழனை ஒன்றரைக் கோடிச் சிங்களவனிடம் கெஞ்சச் சொல்லும் இந்த புத்திசாலித் தலைவர், தமிழனுக்காக எல்லாம் செய்தது போல் நாடகம் ஆடுகிறார். சகோதரப் போர்தான் இத்தனை இழப்புகளுக்கும் காரணம் என்று கதை பேசுகிறறார். சகோதரப் போர்தான் காரணம் என்றால் 2000 ல் சிங்களவனை விரட்டி அடித்தது எப்படி ? உலக நாடுகளையும், சிங்களவனையும் பேச்சு வார்த்தை மேசையில் உட்கார வைத்ததெப்படி?, செப்டம்பர் 11 க்கு பிறகான உலகின் தவறான தீவிரவாதக் கொள்கையும், கருணாக்களின் சுயநலமும் தான் இன்று ஈழம் பிணக்குவியல்களும், பிச்சைக்காரர்களும் நிறைந்த தேசமாய் மாறிப்போனதற்கு காரணம்.



சகோதர யுத்தமே காரணம் என்று பழைய கதையை மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த இராஷதந்திரி கடந்த ஒரு வருடத்தில் இவர் ஆடிய நாடகங்கள் எத்தனை?.

ஈழத்தில் இந்திய போர் நிறுத்தம் செய்யவில்லை என்றால் 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவோம் என்றார். விலகினாரா ?
மூன்று முறை ஈழப் போரை நிறுத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். என்ன நடந்தது ?
ஈழப்போரை நிறுத்த சொல்லி பிரதமருக்கு அடித்த தந்திக்கு என்ன பதில் வாங்கித் தந்தார்?
போராட்டங்களும், தேர்தலும் முடிந்த பிறகு கலைஞருக்கு ஏன் உடல் நலக்குறைவு ஏற்படவில்லை.
கலைஞர் ஏன் இத்தனைப் பேர் மீது தேசியப்பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சினார். அவர்கள் ஏன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இப்பொழுது திருட்டுத்தனமாக இராஷபட்சே அழைத்தவுடன், அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பாமல் தன் ஆதரவு குழுவை அனுப்பும் கருணாநிதி ஏன் ஜனவரியில் இராஷபட்சே விடுத்த அழைப்பை ஏன் ஏற்கவில்லை?.

ஐநா சபையில் இலங்கையின் இன அழிப்புக்குச் சாதகமாக இந்தியா வாக்களித்தபோது, கூட்டணியில் முக்கியத்தலைவரான கருணாநிதி அதைத் தடுக்க என்ன செய்தார் ?.



குடும்ப நலனென்றால் எந்த முறையில் பேச வேண்டும். தமிழர் நலன் என்றால் எந்த முறையில் பேச வேண்டும் என நன்கறிந்த இந்த இராஷதந்திரி, இனவிடுதலைக்காய் சயனைடு குப்பியுடன் எந்த நேரமும் மரணத்தை எதிர்நோக்கி போராடிக் கொண்டிருந்தவர்களை இந்த அறிக்கைப் புலி குறை சொல்கிறார்.



கலைஞர் அவர்களே வாக்குக்கு மாற்றாக நோட்டையும், இலவசங்களையும் எந்தக் கூச்சமும் இல்லாமல் பெற்றுக் கொண்டு “ மானாட மயிலாட”, “எல்லாமே சிரிப்புதான்” . பார்த்து வரும் பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு முதல்வராய் இருந்து விட்டு போங்கள். ஆனால் மொத்த தமிழினமும் அவ்வாறனதல்ல.



இனத்திற்காய் ஆயுதம் தாரித்தும், நெருப்பில் வெந்தும் இறந்து போன 38 ஆயிரம் வீரர்களை கொண்டது, இலட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்த இனம், அதிகார பலமும், அரசியல் பலமும் இல்லாது போனாலும் வல்லரசுகளையும் நியாயம் கேட்கும் கூட்டம், குடியேறிய நாடுகளில் எல்லாம் இரண்டாம் தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு என்றாவது ஒரு நாள் கௌரவமாக வாழ முடியும் என்ற கனவுகளுடன் வாழும் மக்களையும் கொண்டது.

ஆனால் குடும்ப நலத்திற்காய் சோனியாவிடம் அடிமையாய் இருக்கும் நீங்கள் விடுதலைக்காய் போராடும் ஒரு சுய மாரியாதைக் கொண்ட இனத்தின் தலைவனாக இருக்க முடியாது.



நாங்கள் பொரியாரின் சுயமாரியாதையையும், காமராசாரின் அரசியல் தூய்மையாகவும், பிரபாகரனின் அர்ப்பணிப்புடன் கூடிய வீரத்தையும் கண்ட இனம், அவர்களுடன் ஒப்பிடும் போது 80 வயதிலும் குடும்ப நலன் மட்டுமே குறிக்கோளாய் உழைக்கும் உங்கள் தகுதி என்னவென்று உங்களுக்கே தெரியும்.



கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச மக்களின் தொடர்பில் இருந்து ஈழமக்களை தீவிரவாதத்தின் பெயரால் தனிமைபடுத்தி சிங்கள அரசியலும், இராணுவமும் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றன.



தங்களது அதிகாரத்திற்கும், குடும்ப நலத்திற்குமாய் தமிழகத்தில் எழுந்த அனைத்துப் போராட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்து ஈழத் தமிழினத்திற்கு நடந்த கொடுமைக்கு எங்களையும் பங்கேற்க வைத்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி விட்டீர்கள்.



ஆனால் புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துக் கூறி போராட்டம் நடத்தியதன் விளைவாக ஓரளவு அந்தந்த நாடுகள் இலங்கையின் அத்துமீறல்களை கண்டிக்க ஆரம்பித்துள்ள நிலையில், கருணாநிதியின் சுயநல அரசியல் விளையாட்டும், அதிகார, மீடியா பலமும் அதனை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்போல் தெரிகிறது .



இதுவரை சிங்கள இனவெறி அரசு எந்த விசயத்தில் நேர்மையாக நடந்து கொண்டது. இப்பொழுது அது 58 ஆயிரம் மக்களை விடுவிக்கிறோம் என்று கூறியவுடன் புளகாங்கிதம் அடைந்து அறிக்கை வெளிவிடும் கலைஞரும், அவர்களது குடும்ப செய்திப் பிரிவும், கலைஞரைப் பாராட்டி சுவரொட்டி ஒட்டும் உடன் பிறப்புகளும்.

அவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள்?
அவர்களின் பெயர்ப்பட்டியல் என்ன?
இராணுவத்தால் சித்திரவதை செய்து கொல்லப்படுபவர்களும், விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலில் இணைக்கப்பட்டால் என்ன செய்வது?
விடுவிக்கப்படுவர்கள் சர்வதேச அமைப்புக் கண்காணிப்பின் கீழ்தான் விடுவிக்கப்படுகிறார்களா? அவர்களை சர்வதேச அமைப்புகளும், பத்திரிக்கைகளும் சந்திக்க முடியுமா?
அவர்களின் சொந்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தப்படுகின்றனரா?, அவர்களின் நிலங்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா?


என எதை பற்றியும் ஆராயமல் ஈழத்திலுள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியில் திளைப்பது போல் பேசத் தொடங்கியுள்ளனர். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எனும் அடுத்த நாடகத்திற்காக.



உலகத் தமிழர் அனைவருககும் தலைவனாய் உலகத்தமிழ் மாநாடு நடத்தும் இடத்திலும் நீங்களில்லை, அதனை கண்டுகளிக்கும் மனநிலையிலும் தமிழினம் இல்லை.



நடத்தப்பட வேண்டியது உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு, யூத இனம் வாழும் நாடுகளெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக கொள்கைகள், கொண்ட நாடுகளாக உள்ளன. ஆனால் தமிழன் வாழும் நாடுகளில் எல்லாம் அவன் இரண்டாம் தர குடிமகனாக நடத்தப்படுகிறான்.



6 ½ கோடி மக்கள் இருந்து தமிழனின் குரலைக் கேட்க இந்தியாவில் ஆளில்லை, ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தமிழன் அதிகமாக வாழும் அனைத்து நாடுகளும் தமிழருக்கு எதிராகவே வாக்களித்தன.



எனவே உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒருங்கிணைந்து அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கும், அரசியல் இருப்புகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும். காலம் தாழ்ந்திருந்தாலும், உடனடியாக கூட்டப்பட வேண்டியக் கூட்டம் அதுதான்.



(நட்புக்காக : தனஞ்செயன்)
Source: http://anburajabe.blogspot.com/2009/11/blog-post_09.html

Friday, November 6, 2009

திருப்பணிக்குக் காத்திருக்கும் சோழர்காலக் கோயில்

நாம் வாழும் இல்லத்திற்கு வருடம் ஒரு முறை பொங்கலுக்கு வெள்ளை அடித்து சுத்தம் செய்து பாதுகாத்து வருகிறோம். அது போல இறைவன் வாழும் இடமாகிய ஆலயத்தை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து சாந்தி செய்து கும்பாபிஷேகம் செய்வது மரபாகும். ஆலயம் முழுமையாகச் சிதைந்தோ, பிளவுப்பட்டோ, அஷ்டபந்தனம் சிதைந்து இருந்தாலோ பாலாலயம் செய்து எல்லாவற்றையும் சரி செய்து குடமுழுக்கு செய்வர்.


ஆகம சாஸ்திரப்படியும், ஆலயத்தின் முறைப்படியும் வெகுநாட்களாகப் பூஜை நடைபெறாவிடில் சிவபெருமான் லிங்கத்தை விட்டு விமானத்திற்கு வந்து மூன்று வருடங்கள் வரையிலும் யாவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருப்பதாகவும், பன்னிரெண்டு வருடத்திற்கு தல விருட்சத்தில் இருந்து அனுக்கிரஹம் செய்வதாகவும், அதற்கும் மேற்பட்டால் தல விருட்சத்திலிருந்து நீங்கி, சூர்ய மண்டலத்திலிருந்து அருள் பாலிப்பதாகவும் ஐதீகம். ஆகவே இறைவனை நம்முடனேயே வைத்திருக்க ஆலய கும்பாபிஷேகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாது செய்யப்பட வேண்டும். இந்த வகையில் பூந்தோட்டம்-திருநள்ளாறு செல்லும் சாலையில், "சேஷ மூலை' என்ற கிராமத்தில் சிவாலயத் திருப்பணியை மேற்கொள்ளும் பாக்கியத்தை சில அடியார்களுக்கு இறைவன் அளித்துள்ளார்.


இக்கோயிலில் ஆதிசேஷன் பூஜை செய்து அவர் அருள் பெற்றதால் இந்த ஊரை "சேஷன் மூலை' என்றும், ஸ்வாமியை "சேஷபுரீஸ்வரர்' என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள அம்பாளின் பெயர் "திரிபுரசுந்திரி' ஆகும். இந்தச் சிலை மிக நேர்த்தியாக சதுர் புஜங்களுடன் உள்ளது. இங்கு அம்பாள், சுவாமியின் வலப் பாகத்தில் வரும் வண்ணம் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.


அம்பிகை இறைவனின் வலப்பாகத்தில் வீற்றிருக்கும் தலங்கள் "கல்யாணத் தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. பாண்டிய மண்டலத்தின் அம்பிகை, மலயத்வஜ பாண்டியனுக்கு மகளாகப் பிறந்து சிவபூஜை செய்து சிவபெருமானை மணந்து கொண்டாள். இதைக் குறிக்க மதுரை மீனாட்சி, கல்யாணப் பெண்ணாக-சிவபெருமானுக்கு வலப்பக்கத்திலேயே கோயில் கொண்டுள்ளாள். நெல்லை காந்திமதி, மதுரை மீனாட்சி, குற்றாலம் குழல்வாய் மொழியாள் போல "சேஷ மூலை'யிலும் இறைவனின் வலது பாகத்திலேயே அம்பிகை எழுந்தருளியுள்ளாள்.


கல்யாண சுந்தரியாக அம்பிகை இங்கு காட்சி தருவதால், திருமணத் தடையுள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து வேண்ட அவர்கள் குறை நீங்கும்.


சேஷபுரி ஆலயத்தில் "தரும நந்தி' என்ற அழைக்கப்படும் நந்தி பகவான் சிலை, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆலயங்களில் சிவபெருமானை நோக்கியவாறு நந்தியின் சிலை அமைக்கப்பட்டு இருக்கும். நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் தொப்புள் கொடிப் பந்தம் என்று கூறுவர். நந்தியின் மூக்கு, சிவபெருமானின் நாபிக் கமல உயரத்திற்கு இருக்கும்படி அமைப்பர். இதனால்தான் சிவபெருமானுக்கும், நந்திக்கும் இடையில் செல்லக் கூடாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.


பிரதோஷ வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானை தரிசனம் செய்தல் சிறப்பு. பல ஆலயங்களிலும் பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடக்கும்.


நந்திதேவர் எப்பொழுதும் சிவலிங்கத்தின் முன், அதையே பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதால் அவருடைய அனுமதி பெற்று உள்ளே சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும்.


சிவபெருமானின் வேக வடிவமாகக் கருதப்படுவது பைரவர் ஆகும். பைரவர் என்ற சொல்லுக்கு "பயத்தைப் போக்குபவர்' என்று பொருள். சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்த ஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் திருக்கோயிலின் அனைத்துச் சந்நிதிகளையும் பூட்டி அந்தச் சாவியினை பைரவரின் திருவடியில் சமர்ப்பித்து கோயிலைப் பூட்டுவது மரபு. இவர் ஆலயத்தின் காவலராக இருப்பதால் "úக்ஷத்திர பாலகர்' என்று இவரைக் கூறுவர்.


"சேஷ மூலை' சிவாலயத்தைச் சுற்றி இக்கோயிலின் சுற்று வட்டாரத்தில் திருநள்ளாறு, அம்பர் மாகாளம், திருவீழிமிழலை, திருவேட்டக்குடி, காரைக்கால் போன்ற புகழ்பெற்ற சிவ ஸ்தலங்கள் உள்ளன. சேஷ மூலை ஆலயத்தில் தென்திசைத் தலைவனான தட்சிணாமூர்த்திக்கு சிறப்பாகக் கோட்டம் அமைத்துள்ளனர். இச்சந்நிதியில் இறைவன் மோன நிலையில், சின் முத்திரை தாங்கி அருள்பாலிக்கிறார்.


வடக்கு திசையில் துர்கைக்கு சந்நிதி அமைந்துள்ளது. கோயிலின் முதன்மைத் தெய்வம் வீற்றிருக்கும் இடமாக அமைவது கர்ப்பக்கிரகம் ஆகும். இந்த இடத்தின் மீது கூம்பு வடிவில் உச்சியில் கலசத்துடன் கூடிய கட்டிட அமைப்பே விமானமாகும். இந்தக் கோயிலின் விமானம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இது சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.


இக்கோயிலில் திருப்பணியையொட்டி "புனருத்தாரணம்' செய்யப்படவுள்ள சந்நிதிகள் : கர்ப்பக் கிரஹம், அர்த்த மண்டபம், ஏக தள விமானத்துடன் சிவனுக்கு தனி சந்நிதி, அம்பாளுக்கு தனி சந்நிதி, சிறிய நந்தி மண்டபம், நாகருக்கு சந்நிதி, பிள்ளையார், வள்ளி}தெய்வானை ஸமேத சுப்ரமண்யருக்கு தனி சந்நிதி ஆகியன.


சிவாலயத் திருப்பணி செய்தால் ஒருவரின் 21 தலைமுறைகள் இறைவனின் திருவருளைப் பெறுவதாகக் கூறுவர். முன்பு மிகப் பெரிய கோயில்களை அரசர்களும், இறைவனின் அடியவர்களும் கட்டி இறைப்பணியை எங்கும் பரப்பினர். ஆனால் நாம் நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்களைப் பராமரிக்காமல் அவைகளைப் பாழ்படுத்துகிறோம். அதன் எதிர் விளைவாக இயற்கையின் சீற்றங்களை அனுபவிக்கிறோம்.


நாம் புதிய கோயில்களைக் கட்டுவதைவிட நம் முன்னோர்கள் நமக்கு அளித்த மிகப் பழமையான கோயில்களை பொக்கிஷமாகக் கருதி புனருத்தாரணம் செய்வதே பெரும் புண்ணியமாகும்.


"சேஷ மூலை" ஆலயத் திருப்பணியில் பங்கேற்க விரும்புவோர், "எஸ். வரதராஜன்,

மொபைல் : 94449 17124, 98400 76964. வீடு: 24611244" என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Source: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Religion&artid=150780&SectionID=152&MainSectionID=152&SEO=&Title=

Monday, November 2, 2009

கனிமொழி கூஜா ஜெகத்கஸ்பர் அருட்தந்தையா?

ஃபாதர் ஜெகத்கஸ்பர் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் பெயர், நான்காம் ஈழத்தில் நான்காம் கட்டப்போர் உச்சத்தை எட்டியிருந்த போது தமிழகத்தில் தேர்தல் உச்சத்தில் இருந்தது, அந்த நேரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது மிக கடுமையாக விமர்சனம் எழுந்தது, திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தமிழின துரோகம் அக்கூட்டணிக்கு தேர்தல் தோல்வி ஏற்படுத்துமென்றே நம்பப்பட்டது.
அந்த நேரத்தில் ஃபாதர் ஜெகத்கஸ்பர்(கனிமொழி கருணாநிதி யின் நண்பர் மற்றும் திமுக ஆதரவாளர், ஜெயலலிதாவினால் புலி ஆதரவாளர் என விமர்சிக்கப்பட்டவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டுவிடுவார் என்றே நம்பப்பட்ட ஒருவர்) ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளை எழுத ஆரம்பித்தார்...
அவரோட பதிவுகள் எல்லாம் இயக்குனர் சங்கர் படங்களை போன்றே இருந்தன, பல உண்மைகளுக்கு இடையில் தம் பொய் பரப்புரைகளை புகுத்துவது, முதலில் இலை மறைவாக தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவு தலைவர்களை(இவர்களை எல்லாம் யோக்கியம் என்று சொல்லவில்லை) விமர்சித்தார் அவரோட விமர்சனம் எல்லாமே கருணாநிதியையும் காங்கிரசையும் காப்பது போன்றே இருந்தது.
நக்கீரனில் ஒரு பதிவில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு இவர் போர் நிறுத்தத்திற்கு மிகவும் முயன்றதாகவும் கனிமொழி கண் உறங்காமல் பாடுபட்டதாகவும் எழுதினார், பாவம் நக்கீரன் லேஅவுட் மற்றும் ஃப்ரூப் ரீடர்கள் கண்ணில் அது படவில்லையோ என்னமோ, நக்கீரனின் வேறு கட்டுரைகளின் பக்கங்களில் வேட்டி கட்டிய உயர்ந்த பதவியில் இருக்கும் முக்கிய தமிழர் இன்னுமா முடிக்கலை, இன்னும் என்னவெல்லாம்தான் உதவி செய்வது என்று சிங்களனை திட்டிக்கொண்டே அந்த உயர்மட்ட கூட்டத்திற்கு கலந்து கொள்ள சென்றார் என்று எழுதியிருந்தார்கள், இதில் எது உண்மை?
போர் நிறுத்தத்திற்கு தமிழக காங்கிரஸ் பெரியமனிதர்(ப.சிதம்பரம்?) மற்றும் திமுக பெரிய இடத்து ஆட்கள் எல்லாம் உறங்காமல் முயன்று கொண்டிருந்த போது தமிழகத்தின் முக்கிய ஈழ ஆதரவு தலைவர்கள் இன்னமும் நிலமை மோசமாகட்டும் அப்போது தான் நாம் இங்கே தேர்தலில் வெற்றி பெறலாமென ஜெகத் கஸ்பர் காது பட பேசினார்களாம், கனிமொழியின் நண்பர், திமுகவின் ஜால்ரா ஜெகத் கஸ்பர் காதில் விழுமாறு பேசும் அளவிற்கு அந்த தலைவர்கள் கேணையர்களா? அவ்வளவு தூரம் சொல்பவர் ஏன் கிசு கிசு பாணியில் எழுத வேண்டும் பெயரை சொல்ல வேண்டியது தானே?
போர் முடிந்தும் இப்போதும் திமுகவிற்கும் காங்கிரசுக்கும் விழுந்த துரோக கறையை துடைக்க முடிந்த அளவிற்கு தம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டே இருக்கின்றார் அருட்தந்தை.
தற்போது ஒரு போராளி போன் செய்து சொன்னார் என்றும் பொய்யான நம்பிக்கையை தந்தார்கள் தமிழக தலைவர்கள் அதனால் தான் எல்லாம் போயிருச்சி என்றும் மீண்டும் ஒரு முறை இவர்கள் மீது விழுந்து பிடுங்கியுள்ளார் அருட்தந்தை?
போயும் போயும் இந்த தலைவர்கள் தந்த கணிப்புகளை நம்பி செயல்படும் அளவிற்கு கேணத்தனமாகவா இருந்தார்கள் போராளிகள்? அருட்தந்தையின் புளுகுமூட்டைகளுக்கு அளவேயில்லையா?
ஈழத்தமிழர் விசயத்தில் இப்படித்தான் தமிழகத்தின் ஒவ்வொரு இயக்க ஆட்களும் தங்கள் தலைமைகளுக்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டுள்ளார்கள் தங்கள் தலைமைகளின் துரோகம் தெரிந்தும்.
ஈழத்தமிழர்கள் விசயத்தில் தமிழகத்தின் அத்தனை பேரும் துரோகம் செய்துள்ளார்கள், கட்சி தலைமைகளுக்கு அடிமைகளாய் அவர்களின் துரோகங்கள் தெரிந்திருந்தும் அதை சப்பைகட்டு கட்டும் காவல்நாய்களாய் இருக்கும் தொண்டர்கள், பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்ற பொதுமக்கள் என அத்தனைபேருக்கும் பொறுப்பு உண்டு.
அருட்தந்தை ஜெகத்கஸ்பர் கனிமொழிக்கு கூஜா தூக்கட்டும், திமுகவுக்கு ஜால்ரா போடட்டும் ஏன் உடன்பிறப்பாக மாறி தலைவர் வாழ்க, தளபதி வாழ்க கோசமும் கூட போடட்டும் ஆனால் ஈழத்தமிழ் போராட்டத்தில் தம் ஈனத்தனத்தை காட்ட வேண்டாம்.
நக்கீரன் பத்திரிக்கைக்கு ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், நக்கீரனுக்கு முன்பு தராசு என்றொரு பத்திரிக்கை இருந்தது, ஷ்யாம் அதன் ஆசிரியர், தராசு பெரிய அளவில் விற்பனையில் இருந்தது, மிகப்பிரபலமான அரசியல் பத்திரிக்கை, அந்த பத்திரிக்கைக்கும் திமுக(மற்றும் அப்போதைய உள்துறை செயலாளர் நாகராஜன்)வுக்கும் பிரச்சினை எழுந்தது, பாக்சர் வடிவேலு தலைமையில் ரவுடி கும்பல் அந்த பத்திரிக்கையின் உள் புகுந்து அடித்து இருவரை கொலை செய்தனர்.
இதை சமாளிக்க ஜெயலலிதா ஆதரவுக்கு மாற துவங்கியது இந்த தராசு பத்திரிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக அதன் நடுநிலை குறைய ஆரம்பித்த போது நக்கீரன் களம் இறங்கி மொத்த தராசு வின் வியாபரத்தையும் எடுத்துக்கொண்டு மிகப்பிரபலமானது.
நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் நடந்துள்ளது, இன்னமும் இருக்கலாம், அதற்காக திமுக மற்றும் கருணாநிதியின் முழு ஜால்ராவாக மாற ஆரம்பிப்பது நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் சரியானதாக இருக்காது. திமுக சார்புநிலை என்பதை தாண்டி திமுக ஜால்ரா என்ற நிலைக்கு நக்கீரன் சென்று கொண்டுள்ளது.
தற்போது அரசியல் பத்திரிக்கைகளே இல்லையென நினைக்க வேண்டாம் "தமிழக அரசியல்" என்றொரு பத்திரிக்கை தற்போது சர்க்குலேசனில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, மேலும் உங்கள் மார்க்கெட் பலவீனப்படும் போது மற்றவர்கள் அந்த இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்வார்கள்.
source:http://kuzhali.blogspot.com/2009/10/blog-post_31.html