Friday, May 29, 2009

சாயம் வெளுக்கும் இலங்கை அரசின் பொய்

தமிழ் ஈழ தேசிய தலைவர் சிங்கள படையால் கொல்லப்பட்டு விட்டதாக உலகுக்கு அந்த அரசு தெரிவித்த பொய் இப்போது சாயம் வெளுக்க துவங்கியுள்ளது.முதலில் பல பொய்களை சொல்லிவந்த சிங்கள அரசு, பின்னர் மக்கள் அதை நம்பாததால் பிரபாகரன் உடல் என சொல்லப்படும் ஒரு பூத உடலை ராணுவ ஊடகம் மூலம் மற்றும் எச்ச பொறுக்கி இந்திய ஆங்கில ஊடகம் வழியாக அகில உலகுக்கு காண்பித்தனர். இவ்வளவு செய்த பிறகும் அதை நம்பாததால், தமிழ் இன துரோகி கருணா மூலம் இறந்தவர் தேசிய தலைமைப்பீடம் என கூற வைத்தனர்.எல்லா சிங்களவர்களும் பிரபா கொல்லப்பட்டு விட்டார் என நம்பி கொண்டு இருக்கும் போது, வெகு சிலர் மட்டும் அப்படி நடந்து இருக்க வாய்ப்பு மிக குறைவு என ஆணித்திருத்தமாக கதைத்து கொண்டு இருந்தனர்.அவர்களின் கூற்று உண்மை தான் என இலங்கை அரசே கண கச்சிதமாக தற்போது உணர்த்தி உள்ளது. நேற்று ஒரு தகவலை இலங்கை அரசு வெளியிட்டு இருந்தது. அதில் தேசிய தலைவரின் பெற்றோர்கள் வவுனியா (வதை) முகாமில் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும், மேலும் அவர்கள் போர் உக்கிரம் அடையும் முன்னரே இந்த பகுதிக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளது.இங்கு தான் அவர்களின் முட்டாள் தனத்தை உலகுக்கு வெளிப்படையாக காண்பித்து உள்ளனர்.இறந்ததாக சொல்லப்படும் தலைவரின் உடலை அடையாளம் காட்ட கருணா மற்றும் தயா இருவரையும் அழைத்து சென்று அவர்கள் இந்த உடல் சத்தியமாக பிரபா அவர்களின் பூத உடல் தான் என அன்பாக சொல்ல வைத்தனர்.ஆனால் தலமை பீடத்தை ஈன்று எடுத்த பெற்றொரே அவர்கள் முகாம்களில் இருக்கும்போது பிரபா என்று கூறப்படும் நபரின் உடலை ஏன் துரோகி கருணா கொண்டு அடையாளம் காண சொல்ல வேண்டும்? ஏனென்றால் அவர்களுக்கு தன் சிங்கமகன் பற்றி நன்றாக தெரியும். இலங்கை அரசால் புணயப்பட்ட அந்த மாய உடலை பற்றிய உண்மையை வெளியே சொல்லிவிடுவார்களோ என தயக்கம் அரசுக்கு இருந்தது.மேலும் உண்மையாகவே தேசிய தலைவரின் பெற்றோர்கள் அங்கு உள்ளனரா என்பது குறித்து சந்தேகம் வழுப்பேற்று உள்ளதுஆகவே, கடைசி கட்டத்தில் அங்கு நடந்த விடயங்கள் குறித்து உண்மை வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த சிலர் உலகின் முன் வெகு விரைவில் வருவர். உண்மையை ஓங்கி ஒலிக்க செய்து இலங்கை அரசின் முகத்தில் கரியை பூசுவர்.அதுவரை, இலங்கை புலனாய்வு சொல்லும் பல தகவல்களை மெய் என நம்பி எமாறவேண்டாம்.ஈழ தாகம் இனிதே நிறைவேறும். அந்த தருணம் மிக விரைவில் வருகின்றது. நம்பிக்கையுடன் காத்து இருப்போம்..

Wednesday, May 27, 2009

கவனம்: இலங்கை புலனாய்வு தன் வேலையை ஆரம்பித்துவிட்டது

கவனம்: இலங்கை புலனாய்வு தன் வேலையை ஆரம்பித்துவிட்டது.

சமீபத்தில் செல்வராஜா பத்மநாதன் என சொல்லப்படும் வீடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் தேசிய தலமை பீடம் வீரமரணம் அடைந்துவிட்டதாக ஒரு அறிவிப்பை செய்திருந்தார்.

ஆனால், இது பற்றிய தகவல் இந்திய நேரப்படி காலை பத்து மணிக்கே இலங்கை புலனாய்வு துறையால் பல பத்திரிகை களுக்கு தெரிவிக்க இருந்தது. இங்கு ஏற்படும் சர்ச்சை என்னவென்றால், பத்மநாதன் என சொல்லப்படும் நபர் இரவு 9 மணிக்கு தான் BBC தமிழ் ஓசையுடன் பேசியுள்ளார். ஆனால் அவர் பேச போகும் தகவல் காலையிலே எப்படி இலங்கை அரசுக்கு தெரியவந்தது?மேலும், பேசிய நபர் அவர்தான் என அவதானிக்க முடியவில்லை, ஏனென்றால் KP யோ அல்லது எஸ் பீ யோ எங்கு உள்ளார்கள் என யாருக்குமே தெரியாது. எனவே இலங்கை புள்ளுறுவிகளின் வேலை என தெளிவாக அறிய முடிகிறது

Friday, May 8, 2009

ஆங்கில ஊடகங்களால் மறைக்கப்படும் வன்னி காடு


இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள இராணுவத்துக்கும்
நடை பெரும் சமர் கடைசி கட்டத்தை அடைந்து
விட்டதாகவும் தமிழர்கள் இரண்டு மைல் இடத்தில்
அடைக்கப்பட்டு உள்ளதாக பல செய்தி ஊடகங்கள் அதிலும்
குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் செய்திகளை அவ்வப்போது
வெளியிட்டு வருகின்றன.
ஆனால் எல்லோரும் குறிப்பாக
வன்னி காட்டு பகுதிகளை வேணுமென்றே இலங்கை ராணுவம்
கையில் இருப்பதாக பொய் செய்திகளை பரப்பி
வருகின்றனர். உண்மை என்னவென்றால் அந்த காட்டு
பகுதியில் யார் உள்ளார்கள் என்ற விடயம் இலங்கை
அரசுக்கே தெரியாது. மேலும் வன்னி காடுகளில்
நுழைவது என்பது இலங்கை ராணுவத்தால் முடியாத
ஒன்று.
ஆனால் ஆங்கில மற்றும் சிங்கள
ஊடகங்கள் இந்த புதிர் காடுகளை பற்றி மூச்சுவிடவே
மறுக்கின்றனர். ஒரு பொய்யை பலமுறை சொன்னால்
அது உண்மையாக மாறிவிடும் என்பதர்க்கு இணங்க
வன்னி காடுகள் பற்றிய உண்மை நிலையை அந்த
ஊடகங்கள் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளன.
மேலும் தான் பெற்று வந்த பல வெற்றிகளை
செய்திகளாக வெளியிட்டு வரும் ராணுவம் வன்னி
காடுகள் பற்றி இதுவரை தெளிவாக எந்த தகவலையும்
வெளியிட தயக்கம் காட்டி வருவது இங்கே
குறிப்பிடத்தக்கது.
வன்னி காடுகள் பற்றி வெளி
உலகில் உள்ள பலருக்கும் ஏதும் தெரிந்து
இருக்க வாய்ப்புகள் குறைவு. அங்கு சென்று
வந்த இந்திய படை முக்கியாஸ்தர்கள் சொன்னதாக சிலர்
கூறியதை பல நாட்களுக்கு முன் நான்
கேட்க நேர்ந்தது. அவர்கள் கூற்று படி
வன்னி காடுகள் இந்தியாவில் உள்ள அதற் காடுகளையும்
விட மிகவும் அடர்ந்து உள்ளதாம்.
ஆகவே
இனி வரும் நாட்களில் சண்டை வன்னி
காடுகளில் நடை பெற்றால் ஆச்சரிய பட ஒன்றுமில்லை
.
ஆனால் ஆங்கில ஊடகங்கள் அதை எவ்வாறு
நோக்குக்கின்றன என்பது தான் முக்கியம்.

Thursday, May 7, 2009

முக்கிய செய்தி: மு கருணாநிதி சார்பில் ராஜபாக்சே ஒட்டு சேகரிப்பு.

குறிப்பு : இது ரூம் போட்டு யோசிச்சு அடித்த செய்தி

முழுவதுமாக நம்பிய அன்னை சோனியா சென்னை விஜயத்தை ரத்து செய்ததால் தமிழர்களின் தலைவர் மு கருணாநிதி இலங்கை அதிபர் மஹிந்த ராஜபாக்சேவின் உதவியை நாடி உள்ளார். ஆகவே வரும் 11 ஆம் தேதி அன்று சென்னை தீவுத் திடலில் கட்சியினர் புடை சூழ தமிழர்களின் ஒரே தலைவர் வரலாற்று நாயகன் முத்து வேல் கருணாநிதி முன்னிலையில் ராஜபாக்சே சகோதரர்கள் (குறிப்பாக கொதபாயா) டி ம் கே உக்காக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கூட்டத்தில் இலங்கை நாட்டில் உள்ள பல புத்த துறவிகளும் பங்கு கொள்ள இசைவு தெரிவித்து உள்ளதாக அறிய முடிகிறது. அவர்கள் எல்லோரும் அந்த நாட்டில் உள்ள தமிழர்களின் வாழ்வு நிலை பற்றி பேச போவதாக தகவல்.
இனி இந்தியாவை நம்பி தன் கட்சியை வளர்க்க போவதில்லை என கருணாநிதி தெரிவித்து உள்ளதாக அந்த கட்சியின் அதிகார ஊடகம் கொலைஞர் டிவி செய்தி வெளியிட்டு உள்ளது.
சென்னை வரும் ராஜபாக்சே சகோதரர்கள் கலைஞர் அவர்களின் துணைவியார் வீட்டில் தங்கி வேறு சில நகரங்களுக்கும் சென்று கட்சிக்காக தீவிர ஒட்டு சேகரிக்க உள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்து உள்ளது
இந்த சென்னை விஜயம் குறித்து ராஜபாக்சே கருத்து சொல்லும் போது இந்தியா இலங்கைக்கு செய்த அனைத்து உதவிகளுக்கு பிரதிபலனாக அவர்கள் இங்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறி உள்ளனர்.