Friday, August 16, 2013

தாய்மொழியைப் புறக்கணித்து நிலை நின்றார் இலர்

தமிழண்ணல்
நன்றி: தினமணி 


தமிழகம் தவிர்த்து, பிற இந்திய மாநிலம் எதுவும் ஆங்கிலத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடவில்லை. அவை தத்தம் தாய்மொழிகளுக்கே ஏற்றம் தந்தன. அங்கு மேல்தட்டில் மிகக் குறைவாக விரிசல் இருந்தாலும், பொதுமக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியையே நாடுகின்றனர்.
தொடக்கக் கல்வியில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்கவும் அவர்கள் விரும்பவில்லை. வட இந்தியப் பெருமொழிகளான இந்தி, வங்காளம், குசராத்தி, மராத்தி யாவும் முழுமையாய் தாய்மொழி வழிக் கல்வியையே ஏற்று, விரும்பிப் படிக்க வைக்கின்றனர். அம்மொழிகள் ஒவ்வொன்றிலும் அம்மொழி எண்களே பயன்படுத்தப்படுவதாலும் இதை அறியலாம்.
தமிழகத்தில் மட்டுமே இயற்கைக்கு மாறான உணர்வு திணிக்கப்பட்டு விட்டது. இங்கு அரசு, ஆங்கிலத்திற்கு நிகரான ஆதரவை தமிழுக்குத் தந்து, நிதியை உயர்த்துமேயானால், ஓரிரு ஆண்டுகளிலேயே பெரு மாற்றம் ஏற்பட்டு, தாய்த் தமிழ் அரியணையில் அமர்ந்து கோலோச்சும் காட்சி உருவாகிவிடும். தாய் மொழியைப் புறக்கணித்து உலகில் நிலை நின்றார் எவரும் இலர்.
வங்காளத்தில் கொல்கத்தா, துர்க்காபூர், அசன்சோலா போன்ற சில நகரங்களில் மட்டுமே ஓரிரு ஆங்கிலவழிப் பள்ளிகள் உள. கிராமங்கள் அனைத்திலும் தொடக்கம் முதல் முடிவு வரை தாய்மொழி வழியே செழித்தோங்குகிறது. பொதுமக்களிடம் ஆங்கிலவழி எடுபடாததால், கல்வி வணிகர்கள் ஆங்கிலத்தைக் காட்டி மாய மந்திரம் செய்ய முடியவில்லை.
சாந்தி நிகேதனில் உலகப் பெருங் கவிஞர் தாகூர் தொடங்கியதில், அனைத்தும் வங்காளமே. ஓரிரு வகுப்புக்கள் தவிர்த்து, அனைத்திலும் தம் தாய்மொழியையே போற்றினார் இரவீந்தரநாத தாகூர்.
ஒருமுறை அங்குள்ள குடியிருப்பில் வசிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் மனைவி, வீட்டில் தன் பிள்ளைக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும்போது, எண்களை பற்றி கூறி, இன்று நாம் பயன்படுத்தும் அரபி எண்களை எழுதிக் காட்டிக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அடுத்த வீட்டு வங்காளப் பெண்மணி, ""என்னம்மா இது, உங்களுக்கென்று, உங்கள் தாய்மொழியில் எண்கள் இல்லையா'' என்று கேட்டாராம். அந்தத் தமிழ்ப் பெண்மணிக்கு வெட்கமாகப் போய்விட்டது. அங்கு எங்கு நோக்கினும் வங்காள எண்களே பெரும்பகுதி பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பலசரக்குக் கடையில், பொருள்கள் வாங்கினால், வங்க மொழி எண்களிலே எழுதிக் கொடுக்கின்றார்.
இதே நிலையில் குசராத்தி, மராத்தி, இந்தி போன்ற மொழிகளிலும் அவரவர் தாய்மொழி எண்களே பயன்படுத்தப்படுகின்றன.
மகாராட்டிர மாநிலத்தில், மராத்தி மட்டுமே தொடக்கக் கல்வியில் உளது. அங்கு ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக கற்பிக்கலாமா என்று பேசினர். அவ்வளவுதான். உடனே இங்கு "மகாராஷ்டிரம் ஆங்கிலத்திற்குத் திரும்புகிறது' என்று திசை திருப்பும் முறையில் செய்தி வெளியிட்டிருந்தனர். வங்காளத்திலும் தொடக்க நிலையில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக மட்டும் கற்பிக்கலாமா என ஆராய ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அத் துணைவேந்தர், தாய்மொழிக் கல்வியின் சிறப்பை மிக விரிவாக எழுதி, மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துக்களைக் கற்பிக்கத் தொடங்கலாம் எனப் பரிந்துரை செய்திருந்தார். ஒரு வேடிக்கை என்னவென்றால், தமது அறிக்கையின் ஊடே, தமிழகத்தின் "தாய்மொழிப் பற்றை'ப் பாராட்டிக் குறிப்பிட்டிருந்தார். அதாவது நாம் இந்தியை எதிர்த்தது, அவருக்குத் தெரிந்த அளவில் இவ்வாறு எழுதச் செய்திருக்க வேண்டும்.
இருபது ஆண்டுகளுக்குமுன், பொறியியற் கல்லூரி ஒன்றிற்கு நான் சென்றிருந்தபொழுது, அங்குள்ள பேராசிரியரிடம் ஆங்கில வழியில் பாடம் நடத்துவது பற்றிக் கேட்டேன். ""பெரும்பாலும் முன்னதாக குறிப்பு தயாரித்துக் கொண்டு, அதை வைத்துப் பாடம் சொல்லுவோம். பல ஆண்டு பயிற்சி பெற்றவருக்கு அது மனப்பாடமாகிவிடும். புதியவர்கள் பார்த்துப் படிப்பார்கள்.
திடீரென்று மாணவன் கேள்வி கேட்டால், பெரிதும் தமிழிலேதான் விளக்க நேரும்'' என்றார். அதாவது ஆங்கில வழிக்கு தமிழ் துணையாகுமிடம் பலவாகும். மெட்ரிக் பள்ளிகளிலும் நிலைமை இதுதான். முழுவதும் தமிழிலே விளக்கி, பாட நூலில் அப் பகுதிகளைச் சுட்டிக்காட்டி பலமுறை படிக்கச் சொல்வர். அதாவது பலமுறை படித்தும் எழுதியும் அவை மனப்பாடம் ஆகிவிடும். வேறு சிலர் கடினமான பகுதிகளை எல்லாம் விளக்க தமிழைப் பயன்படுத்திக் கொள்வர்.
""இவை எல்லாம் ஆசிரியர்களின் திறமையைப் பொறுத்தவை. ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தி, முழுவதும் படித்துக் கற்பதென்பது, மிகச் சில பள்ளிகளில் இயலக்கூடும். அதற்கு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகுதியான ஆங்கில அறிவு வேண்டும். மற்றபடி தமிழின் துணையுடன் இருமொழிப் பாடமாக நடந்தால்தான் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்'' என்று என் பெயரன் குறிப்பிட்டான்.
புகழ்பெற்ற பல பள்ளிகளில் மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்தும், திரும்பத் திரும்ப "டெஸ்ட்' என்று வகுப்புத் தேர்வு எழுத வைத்தும் பயிற்சி கொடுக்கிறார்கள். கண்டித்து கொடுமைப்படுத்துகிறார்கள். இது மாணவர்களை பைத்தியம் பிடித்தவர்கள்போல் ஆக்கும். சில மாதம் கழித்து, "நெட்டுருப் போடுவது' பழக்கமாகிவிடும்.
இன்னொன்றும் சிந்திக்க வேண்டும். ஆங்கில மொழியை கற்பது வேறு; ஆங்கில வழியில் பிற பாடங்களைக் கற்பது வேறு.
ஆங்கில வழியில் கற்பதனால், ஆங்கில மொழி அறிவு வராது. இது பாடம் பற்றிய பகுதியோடு முடிந்து விடும். பொது அறிவு வளராது. ஆங்கிலத்திலேயே சரளமாக உரையாடக்கூட முடியாது.
ஆங்கிலம் நன்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் வேண்டுமே? அவர்கள் ஆங்கில மொழி அறிவு பெற்ற, ஆங்கிலத்தில் இளங்கலை, முதுகலை படித்தவர்களாக இருக்க வேண்டுமே? அத்தனை பள்ளிகளுக்கும் நன்கு கற்பிக்கவல்ல ஆசிரியர்களுக்கு எங்கே போவது?
வேதியியல், இயற்பியல், கணிதத்தைக் கற்றவர்கள், என்னதான் படித்தாலும் அவ்வத்துறை அறிவு நன்கமையுமே தவிர, ஆங்கில மொழிப் புலமை இராது. அவர்கள்தான் ஆங்கில வழிப் பாடங்களைக் கற்பிக்கிறார்கள். இது அரைகுறைக் கல்வியாக்கும் முயற்சியே.
ஆங்கிலம் முழுமையாகக் கற்காதவர்கள் ஆங்கில வழியில் நடத்த, ஆங்கிலம் தாய்மொழி இன்மையால் அதில் இயல்பான அறிவு அமையாத மாணவர்கள் அதைப் பயில்வது, "குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம்' ஆடுவது போலாகிவிடும். ஒருவனுடைய உடம்பில் இரத்தம் செலுத்த வேண்டுமானால், இயைபுடைய குருதியைத்தானே தேடுகிறார்கள். ஒவ்வாத உணவை உண்டவன் அதை வெளியேற்றத் துடிப்பதைப் போல மனநிலை கெடும்.
மருத்துவம் கற்ற ஒரு இளைஞர், குழந்தைகள் தாய்மொழி மூலம் கற்பதற்கும் அயல்மொழி மூலம் கற்பதற்கும் உள்ள வேறுபாடறிய ஆராய்ச்சி மேற்கொண்டார்.
ஒருவரது குருதியில் உள்ள மரபணுக்கள் காலங்காலமாக வரும் தனி இயல்புடையவை. அவை தாய்மொழிச் சாயலும் பண்பும் உடையவை. பிறமொழிப் பயிற்சியை அக்குருதியணுக்கள் எளிதில் ஏற்க மறுக்கும். என்னதான் திணித்தாலும் அது காலமெல்லாம் நிலைக்க இயலாது; இடையே புறந்தள்ளிவிடும். இவ்வாறு அவரது ஆய்வு முடிவு பற்றி, என்னிடம் விளக்கினார்.
ஆங்கிலவழிக் கல்வி, கணினிவழித் தொழிலுக்கு இன்று உதவுகிறது. அத்தொழில் மூலம் கைநிறைய ஊதியம் கிடைக்கிறது. இதனால் இளைஞர்கள் எல்லோரும் அத்தொழிலுக்கு ஏற்ற பணியாட்களாக மாறி வருகிறார்கள்.
இதனால் எதிர்காலத்தில் பொது அறிவு மிக்க, திறமை சார்ந்த, சுய சிந்தனையுடைய அறிஞர்களை உருவாக்காமல், கூலிக்கு மாரடிப்பவர்களையே உருவாக்க முடிகிறது.
இது வளரும் சமுதாயத்திற்குக் கேடாகும். ஓரினத்தின் பண்பாடும், நாகரிகமும் அழிவுறும். அனைத்தையும் தந்து, காப்பது மொழியேயாகும். மொழிதான் ஒருவனை மனிதனாக்குகிறது. மொழி சிதைந்தால் நமக்கு என்ன என எண்ணலாகாது.

மெக்காலே அயல் மொழியினன். அவன், தன் மொழியைத் திணித்து, தனக்கு உண்மையாய் உழைக்கும் பணியாட்களை உருவாக்கினான். நாமோ நம் மக்களையே காலமெல்லாம் பணியாளர்களாகி முடங்கிப் போக வழிசெய்கிறோம்.

பணம் மட்டுமே முக்கியமா? "உண்பது நாழி; உடுப்பது இரண்டு' என வாழ்ந்தவர்கள்தானே கல்வி மேதைகளாகி, விஞ்ஞானிகளாகி, புதிய கண்டுபிடிப்பாளர்களாகி காலமெல்லாம் நினைக்கப்படுகிறார்கள்.
புற்றீசல்கள் ஒரு சிறு பருவத்துடன் போய்விடும். அதுபோல ஆங்கில மோகமும் நிலை பெறாது. நம் இளையோரின் அறிவும் திறனும் வீணாக வேண்டுமா?
நடுவுநிலையுடன் சிந்திப்பவர்கள் உண்மையை உணர்வார்கள்!

கட்டுரையாளர்: தமிழறிஞர்

Saturday, August 10, 2013

சாதித்தார் சிந்து :உலக பாட்மின்டனில் அசத்தல்

 நன்றி: தினமலர் 

குவாங்சு: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றையர் பிரிவில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார் சிந்து. நேற்று நடந்த காலிறுதியில், சீனாவின் ஷிஜியன் வாங்கை வீழ்த்தினார். இதன்மூலம் குறைந்தபட்சம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். 
சீனாவில் உள்ள குவாங்சு நகரில், 20வது உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் "நம்பர்-12' இடத்தில் உள்ள இந்தியாவின் சிந்து, சீனாவின் ஷிஜியன் வாங்கை (நம்பர்-8) சந்தித்தார். 55 நிமிடங்கள் நீடித்த காலிறுதியில், அபாரமாக ஆடிய சிந்து 21-18, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

புதிய வரலாறு:
இந்த வெற்றியின் மூலம், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார். முன்னதாக செய்னா நேவல் நான்கு முறை (2009, 10, 11, 13) காலிறுதி வரை சென்றார். அரையிறுதிக்கு முன்னேறிய சிந்து, குறைந்த பட்சம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் ஒற்றையரில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார். தவிர, உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில், மூன்றாவது முறையாக இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக இந்தியாவின் பிரகாஷ் படுகோனே (வெண்கலம், பிரிவு-ஒற்றையர், 1983, இடம்-டென்மார்க்), ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா (வெண்கலம், பிரிவு-பெண்கள் இரட்டையர், 2011, இடம்-லண்டன்) ஆகியோர் பதக்கம் வென்றனர்.
செய்னா, காஷ்யப் "அவுட்'
உலக பாட்மின்டன் காலிறுதியில், உலகின் "நம்பர்-4' வீராங்கனையான <இந்தியாவின் செய்னா நேவல், தென் கொரியாவின் இயான் ஜு பெய்யிடம் (16வது இடம்) 21-23, 9-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்த வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் காஷ்யப் (17வது இடம்), உலகின் "நம்பர்-3' இடத்தில் உள்ள சீனாவின் பெங்யு டுவிடம் 21-16, 20-22, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
உலக பாட்மின்டன்: சிந்து செய்திக்கு பாக்ஸ்
ஆந்திர பெண்
முதன்முறையாக உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் களமிறங்கிய இளம் இந்திய வீராங்கனை சிந்து, 18, சீன வீராங்கனைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.
கடந்த 1995ல் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பிறந்த சிந்து, கோபிசந்தின் பாட்மின்டன் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நெதர்லாந்து ஓபன் (2011), இந்திய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு (2012) தொடர்களில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், சமீபத்தில் மலேசியாவில் நடந்த மலேசிய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு தொடரில் தங்கம் வென்று சாதித்தார். சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வரும் இவர், சீன வீராங்கனைகளுக்கு மட்டுமல்லாமல், சக நட்சத்திர வீராங்கனை செய்னா நேவலுக்கும் சவால் தருகிறார்.
தந்தை மகிழ்ச்சி
சிந்துவின் வெற்றி ரகசியம் குறித்து அவரது தந்தை பி.வி. ரமணா கூறுகையில், ""உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து பதக்கத்தை உறுதி செய்தது மெய்சிலிர்க்க வைக்கிறது. சீன வீராங்கனைகளுக்கு எதிராக இவரது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இவரது முன்னேற்றத்துக்கு கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் போட்டியின் மீது உள்ள ஈடுபாடு முக்கிய காரணம்,'' என்றார்.
பயம் அறியாதவர்: உதய் பவார்
முன்னாள் வீரர் உதய் பவார் கூறுகையில், ""சிந்து, உலக சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கத்தை உறுதி செய்த செய்தி அறிந்தேன். இளம் வீராங்கனையான இவர், எதிரணி வீராங்கனைகளை கண்டு ஒருபோதும் பயப்படமாட்டார். தொடர்ந்து இரண்டு முன்னணி சீன வீராங்கனைகளை வீழ்த்திய இவர், நிச்சயமாக பைனலுக்கு முன்னேறி தங்கம் வெல்வார் என நம்புகிறேன். இது, இவரது உடல் மற்றும் மனவலிமையை வெளிப்படுத்துகிறது,'' என்றார்.
கோபிசந்த் நம்பிக்கை
இந்திய பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், ""காலிறுதியில் செய்னா, காஷ்யப் தோல்வி அடைந்தது வருத்தம் அளித்தது. இந்நிலையில் சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது உற்சாகம் அளித்தது. சீன வீராங்கனைகளை வீழ்த்துவது எளிதான காரியமல்ல. சொல்லிக் கொடுப்பதை விரைவில் புரிந்துகொள்ளும் திறமை படைத்த இவர், இன்றைய அரையிறுதியிலும் சாதிப்பார் என நம்புகிறேன்,'' என்றார்.

Friday, August 9, 2013

மர்மமான முறையில் உடலில் தீப்பிடிக்கும் குழந்தை: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி

 நன்றி: தினமணி /Aug 10, 2013


மர்மமான முறையில் திடீர் திடீரென்று உடலில் தீப்பிடிக்கும் இரண்டு மாதக் குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தரங்கிணி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கர்ணன், அவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த எட்டு நாள்களில் திடீரென அதன் உடலில் தீப்பிடித்தது. குழந்தையின் உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது.
குழந்தை பிறந்த இரண்டரை மாதத்திற்குள் நான்கு முறை இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இதனால் பெற்றோரும் உறவினரும் பீதியடைந்தனர்.
இதையடுத்து அந்தக் குழந்தை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இரண்டு முறை சேர்க்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. குழந்தையின் உடலில் திடீரென தீ பிடிப்பதற்கான காரணத்தை டாக்டர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன் பின்பு புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கும் இதற்கான காரணத்தை டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அந்தக் குழந்தை எடுத்துவரப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து குழந்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை கவனிப்பதற்கென தனியாக ஒரு மருத்துவரும் செவிலியரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

விநோத நோய்: இது குறித்து மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் நாராயணபாபு கூறியது:

கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு இந்த அரிதான நோய் இருந்துள்ளது. கடைசியாக 1980-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி தாமஸ் என்ற 73 வயது முதியவர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அதன் பின்பு உலகிலேயே இந்தக் குழந்தைதான் இந்த விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுதான் முதல் முறை.
குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரியக்கூடிய வாயு உருவாகியுள்ளது. இதனால் அவ்வப்போது குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரிகிறது.
குழந்தையை காற்றோட்டமான, குளிர்ந்த இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய அடுப்பு, மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருள்களை குழந்தையின் அருகில் வைக்கக் கூடாது. எளிதில் தீப்பற்றி எரியும் உடைகளையும் அணிவிக்கக்க கூடாது. குழந்தையின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார் அவர்.
குழந்தை, சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ள அறையில் தண்ணீர், தீயணைப்பு சாதனங்கள் உள்ளிட்டவை பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளன. இது அரிய வகை நோய் என்பதால் இதற்கான சரியான சிகிச்சை முறைகள் இல்லையென்று கூறப்படுகிறது.
இந்த அரிதான குழந்தையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்தும், ஆய்வுகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

Wednesday, May 15, 2013

தே.மு.தி.க.வில் வெடித்தது ஈகோ: "பண்ருட்டி' - பிரேமலதா "டிஷ்யூம், டிஷ்யூம்!'

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=713311
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், திருப்பூர் பொதுக் கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் அக்கட்சி அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை விட, கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத பிரேமலதாவிற்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம் என, கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
"ஈகோ' பிரச்னை
குறிப்பாக, கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில், யார் முதலில் பேசுவது என்பதில், இவர்கள், இருவர் இடையே," ஈகோ' பிரச்னை உள்ளது. சில மாதங்களுக்கு முன், சென்னையில், கட்சியின் மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதை பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து விட்டார்.இந்த கூட்டத்திற்கு தலைமை வகிக்குமாறு, அவரை, தே.மு.தி.க., தலைமை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பிரேமலதா பங்கேற்ற நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன், பங்கேற்பதை தவிர்த்து விட்டார்.இந்நிலையில், மின்வெட்டு மற்றும் பின்னலாடை தொழிற்பாதிப்பை கண்டித்து, திருப்பூரில், சமீபத்தில், தே.மு.தி.க., சார்பில், அ.தி.மு.க., கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. இதில், விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பிரேமலதா ஆகியோர் பங்கேற்று பேசுவர் என, அறிவிக்கப்பட்டது. விஜயகாந்த் சென்ற விமானத்திலேயே, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், திருப்பூர் செல்வதை, பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து விட்டார். இதுகுறித்து, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் சிலரிடம் விசாரித்த போது, "சில நாட்களாகவே, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், சட்டசபைக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறார். இதன் காரணமாகவே, திருப்பூர் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை' என்றனர்.
"பிடிக்கவில்லை'
அதே நேரத்தில், கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியலில், நாகரிமான பேச்சை கடைப்பிடிக்க வேண்டும் என, பண்ருட்டி ராமச்சந்திரன் கருதுகிறார். ஆனால், அரசியலுக்கு புதியவரான பிரேமலதா, முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து பேசுகிறார். இது, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பிடிக்கவில்லை. இது மட்டுமின்றி, கட்சிக்காக, உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் தராமல், மற்றவர்களுக்கு முக்கியத்துவம் தருவதையும் அவர் விரும்பவில்லை. இதனால், சமீப காலமாக, பிரேமலதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து வருகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர். திருப்பூர் செல்வதை தவிர்க்கவே, "உடல்நிலை சரியில்லை' என்ற காரணத்தை, பண்ருட்டி ராமச்சந்திரன் தரப்பில், கட்சி தலைமையிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. - நமது நிருபர் -

Monday, March 18, 2013

இராஜதர்ம முடிவா? புலனாய்வு முடிவா? - பூநகரான்

Source: http://www.lankawin.com/show-RUmryDScNYes0.html
ஈழத் தமிழர் விவகாரத்தில், இந்திய மத்திய அரசு சுய முரண்பாடு மிக்க முடிவுகளை எடுத்தெடுத்தே அவ்வப்போது மத்திய நடுவண் அரசின் இறுதி முடிவுகளை இறுதி நேரத்தில் மாற்றி மாற்றி வருகிறது.
அத்தோடு அது அமெரிக்காவின் உச்சமட்ட இராஜதந்திர ராஜீக முடிவுகளை மட்டுமன்றி , ஐ நா அவையின் உத்தியோகபூர்வமான முடிவுகளைக் கூட மாற்றி வந்திருக்கிறது. இதற்கு பூகோள அரசியலில் இந்தியாவின் சமகால நிலைப்பாட்டுப் பலம் மட்டும் காரணம் என்று கூறி தமிழராகிய நாம் தப்பி விட முடியாது.
உண்மையில் இதற்கு ஒட்டு மொத்த புலம்பெயர்ந்த தமிழரின் இராஜதந்திரமற்ற வெற்று அரசியலும், சரியான பாதையில் செயற்படுபவர்களிற்கும் நகர முனைபவர்களிற்கும் தடையாக உள்ள உணர்ச்சி முதலீட்டுப் புலம்பெயர் குழுக்களும், இதனை உணர்ந்து மொழி வழித் தேசிய ரீதியில் அரசியல் சிந்தனையை முடுக்கி விடாது உணர்ச்சி வேக ஆதரவை அளிக்கும் நாங்களுமே பொறுப்பாவோம்.
தற்போது கருணாநிதியைச் சந்தித்து சமாதானப்படுத்த இந்திய மத்திய அமைச்சர்கள் சென்னை வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் டெல்லியில் இருந்து மத்திய அரசின் அரசியல் முடிவுகளை மாற்றி வரும் புலனாய்வாளர்களையும், இந்திய மத்திய அரசின் இராஜதந்திரிகள் ஸ்தானத்தில் உள்ள பிரதான அலுவலர்களையும் அல்லவா சந்திக்க வேண்டும்.
இந்த இடத்தில் கலைஞர் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் காண வேண்டுமாயின் அவர்களை திரும்பிச் சென்று மத்திய அரசில் உள்ள தமிழ் விரோத சக்திகளை சந்திக்குமாறு கூறி எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசின் அதிகாரிகளைச் சந்திக்க மறுத்ததை அவர் உற்றுக் கவனிக்க வேண்டும்.
கோடிக்கணக்கில் உலகெலாம் தமிழர் இருந்தும் அவர்களிற்கு என்று ஒரு நாடு இல்லை என்று சிறீலங்காவின் அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்ததையும், அன்மையில் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய தமிழரிற்காக ஐநாவில் குரலெழுப்ப பிரதிநிதித்துவம் இல்லையென்ற உரையையும் கலைஞர் தன்னைச் சந்திக்கும் மத்திய அமைச்சர்களிற்கு உணர்த்த வேண்டும்.
இந்தியா தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தாது தமிழகத்தை பிரித்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நோக்குமானால் காலப் போக்கில் தமிழகமும் தமிழீழம் போல் பிரிவினைக்கு தள்ளப்படும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
கேட்கப்படுவதும் கோரப்படுவதும் மட்டும் பிரிவினை அல்ல. புறக்கணிப்பும், அமுக்குவதும், மாற்றான் தாய் மனப்பான்மையும் கூட பிரிவினையே என்பதை துப்புத் தேடும் புலனாய்வாளர்களிற்கும், பொது ஜனத் தொடர்பும், வாக்கெடுப்பும் அன்றி தங்கள் சுய மன அபிலாஜைகளின் அடிப்படையில் தங்களிற்குரிய இறுதி முடிவை மாறறியமைக்கும் வாய்ப்புள்ள அதிகாரிகளை இந்திய தேசியம் பற்றி சிந்திக்கவும் வைக்க வேண்டும்.
அதாவது தவறான இராஜதந்திர முடிவால் பாரதம் என்கிற தேசிய உணர்வு மிக்க இராஜதர்ம முடிவை மாற்றக் கூடாது என்பதை எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிடின் ஒட்டு மொத்த தமிழக ஆதரவுடன் பாரதீய ஜனதா அரசிற்கு ஆதரவு அளித்து, அதன் மூலம் “காங்கிரஸ் இந்தியாவின்” திரு நம்பியார் போன்ற அதிகாரிகளும் திரு நாராணயசுவாமி போன்ற அமைச்சர்களும் இதர அரசியல்வாதிகளும் சிறீலங்காவுடன் சேர்த்து சர்வதேச விசாரணைக்கு உட்பட வேண்டிய தேவையை உருவாக்குவதைத் தவிர வேறு மார்க்கம் தமிழக தமிழர்களிற்கு இல்லை.
அதாவது தமிழக கோட்டை அதிகாரப் போட்டிக்கு அப்பால், தமிழகம் இணந்து செயற்பட வல்லதாக, சிறீலங்கா அரசால் 2002 ம் ஆண்டிலிருந்து வெளியேற்றப்பட்ட, வெள்ளைப்புலிகள் என முத்திரை குத்தப்பட்ட பழைய கண்காணிப்பு அதிகாரிகளையும், லூயி ஆர்பர் போன்றவர்களையும், பிரித்தானியா கனடா அடங்கலாக உள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கனேடிய ஊடக நண்பர்களை எல்லாம் என்று திரட்டி ஒரு உலகளாவிய ஈழத் தமிழர் மனித உரிமை ஜனநாயக அமைப்பை அமைத்து அதற்குள் தமிழகத்தின் முதல்வராக வருபவரையும், எதிர்க்கட்சித் தலைவராக வருபவரையும் உள்ளடக்கி டெல்லி தமிழகத்தை பிரித்தாளும் வாய்ப்பை தவிடு பொடியாக்க வேண்டும்.
இதனை புலம்பெயர்ந்த அமைப்புக்களோ அன்றில் கனடாவின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களோ என்றோ செய்திருக்க வேண்டும். இதனையே தமிழரின் இராஜதந்திரமற்ற வெற்று அரசியல் என்று தொடக்கத்திலேயே சுட்டியுள்ளேன்.
அமெரிக்காவையும் அதன் சிறீலங்காவிற்கு எதிரான அழுத்தங்களையும் தீர்மானங்களையும், அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மாற்றி அமைக்கவில்லை. இந்தியாவே அதனை மாற்றுகிறது என்பதை புலம் பெயர்ந்த தமிழராகிய நாம் உணர வேண்டும்.
தலைவர் பிரபாகரன் அன்றே இனங் கண்டதைப் போல், இந்தியாவே பெரும் தடைக்கல் என்பதை நாம் உணர்ந்து இந்தியாவை எதிர்ப்பதை விட்டு அமெரிக்காவை எதிர்ப்பது நியாயமானதாகவோ விவேகமானதாகவோ புலப்படவில்லை.
சரியான ராஜீக நகர்வுகளிற்கான சர்வதேச ராஜீக வெளியற்ற புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்களாவது இத்தகைய தவறுகளை நம்மவர்க்கு கூட்டிக் காட்டி உள்ள அமெரிக்க ஆதரவையும் இழக்காது காக்க முயல வேண்டும்.
என்றோ கடனைத் தீரத்திருக்க வேண்டிய கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகக் கருணா ஆவாரா?
அல்லது உறுதியுடன், சமாதானப்படுத்த வரும் மத்திய அமைச்சர்களை இராஜதர்மத்தின் அடிப்படையிலும், தமிழக அபிலாஜைகளினதும், அவசர பாதுகாப்புத் தேவைகளின் அடிப்படையிலும், தமிழகத்தையும் அடக்கிய இந்திய தேசிய நிலைப்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பாரா?
அல்லது உண்மையை அறியாது பொய்யை மீண்டும் நம்பி கறள் பிடித்த வெற்று வாளாவாரா? என்பதை நாளைய செய்திகள் தான் நமக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தமிழக மக்களிற்கும் மாணவர்களிற்கும் புலம் பெயர் ஈழத் தமிழரின் நன்றி.
kuha9@rogers.com

Monday, November 14, 2011

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!


ராஜீவ் கொலை வழக்கும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
13.11.2011 தினமலரில் அதன் சிறப்பு நிருபர் பெயரில் எழுதப்பட்ட “செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?” என்றொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நீங்களே ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள், விரும்பாதவர்களுக்கு அதன் சுருக்கம் இங்கே:
அதில் 23 வயது சவுமியா எனும் அழகான கேரளப் பெண்ணை ஓடும் ரயிலில் வன்புணர்ச்சி செய்து கீழே தள்ளிக் கொன்ற கோவிந்தசாமி என்ற குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் விவரத்தை தருகிறார்கள். பின்னர் அந்த கோவிந்தசாமி விருத்தாசலத்தைச் சேர்ந்த பச்சைத் தமிழன், மாற்றுத்திறனாளி, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீதான மரண தண்டனையை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டுமல்லவா என்பதை போற்றுவது போல இழிவுபடுத்தும் வஞ்சப் புகழ்ச்சி பாணியில் எழுதியிருக்கிறார்கள்.
தினமலரின் நோக்கம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான தூக்கை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை இங்கே பொதுப்புத்தியில் ஒரு சென்டிமெண்டான விசயத்தை வைத்து இழிவுபடுத்துவதுதான். மரணதண்டனை வேண்டாமென்று கோருபவர்கள் இத்தகைய கொடூரமான காமப் பொறுக்கியை காப்பாற்ற குரல் கொடுப்பார்களா என்று கேட்பதன் மூலம் அந்த அழகான கேரளப் பெண்ணின் அனுதாபத்தை வைத்து ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் மூவரை வில்லனாக்குவதுதான் தினமலரின் நோக்கம்.
அதே நேரம் கூடுதலாக தமிழன், மாற்றுத் திறனாளி, தலித் என்ற விவரங்களின் மூலம் தினமலரின் பார்ப்பன விழுமியங்களை நிலைநிறுத்துவது ஒரு போனஸ் நோக்கம். அதிலும் அந்த கோவிந்தசாமி தாழ்த்தப்பட்டவர் என்பதால் வயிற்றுப்பிழைப்புக்காக சிறு திருட்டுகள் செய்து இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறை செய்து விட்டார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று நயவஞ்சமாக எழுதுகிறார்கள். அதே போல இந்துத்வ இந்திய உணர்வுக்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழுணவர்வை குறி வைத்து தாக்குகிறார்கள்.
என்ன எழுதி என்ன பயன்? தினமலர் உருவாக்கி வைத்திருக்கும் பிற்போக்கான வாசகர் வட்டம் இந்த வஞ்சப் புகழ்ச்சி இகழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தினமலர் இப்படி எழுதலாமா என்று கோபப்படுகிறது. அவர்களெல்லாம் கோவை என்கவுண்டர் மேனியாவில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அல்லவா, அதனால் இளம் பெண் கற்பழிப்பைத் தாண்டி மற்ற விவரங்களின் மறை பொருளை புரிந்து கொள்ள முடியாத துரதிர்ஷடசாலிகள். இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தினமலர் கட்டுரைக்கு அருஞ்சொற்பொருளை எழுதி வாசகர் கடிதத்தில் புலம்பும் அப்பாவித் தமிழர்களுக்கு தேறுதல் சொல்லி வருவதோடு தினமலருக்கு வாழ்த்தையும் தெரிவிக்கிறார்கள்.
மூவர் தூக்கை வெறும் மனிதாபிமான நோக்கில் பேசிய பலரும், அதன் அரசியல் முக்கியத்துவத்தை பேசினால் பிரச்சினை என்று வெறும் சென்டிமெண்டாக மட்டும் மக்களிடம் கொண்டு போனவர்களும், தினமலரின் இந்த சாணக்கிய நரித்தந்திரத்தை எதிர் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். எனினும் அவர்களின் தவறு தினமலரின் வக்கிரத்தோடு ஒப்பிட முடியாத ஒன்று.
முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.
இதுவும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
தினமலர் வாரமலரில் எழுதிப் புகழ்பெற்றவர் அந்துமணி எனும் இரமேஷ். இவர் தினமலர் சென்னை பதிப்பின் உரிமையாளரும் கூட. ராமசுப்பையரின் வழியில் வந்த பார்ப்பன உத்தமர். இவருக்கு இருக்கும் அதிகார செல்வாக்கை வைத்துப் பார்த்தால் இவர் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு சில பெண்களோடு மட்டும் கொஞ்சம் விளையாடி இருக்கிறார். அதில் ஒரு பெண், தினமலர் அலுவலகத்தில் வேலை செய்தவர் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை பாலியல் வக்கிரம் என்று மட்டும் புரிந்து கொள்ளாதீர்கள். அந்துமணிக்கு சினிமா, மேன்மக்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முதலாளிகள் என்று பரந்துபட்ட தொடர்பு, வாய்ப்புகள் இருந்தும் அவர் எப்போதும் எல்லை மீறியவரில்லை.
ஏதோ போதாத காலம், கீழ் பணியாற்றும் பெண்ணிடம் கொஞ்சம் ‘லைட்டாக’ வரம்பு மீறிவிட்டார். பின்னர் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை மனநோயாளியாக ஆக்கி அலுவலகத்தை விட்டு துரத்தி, போலீசு உலகை கொஞ்சம் கவனித்து அந்த புகாரை குப்பைக் கூடைக்கு வீசி எறிந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை கூலிக்கு ஆள் அமர்த்தி கொலையே செய்திருக்கலாம். அப்படி செய்யாதது ஏன் என்பதில்தான் அவரது ஜீனின் மாட்சிமை அடங்கியிருக்கிறது. பார்பனர்கள் எப்போதும் யாரையும் நேரடியாக கொலை செய்து பழக்கமில்லை. அதெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடும் காட்டு மிராண்டிகளான ‘கீழ்சாதி’ பயல்கள் செய்வது. அந்துமணி இரமேஷ் அய்யரை அப்படி எடை போட்டு விடாதீர்கள்.
இதற்கு மேல் அந்துமணியை கைது செய்து அந்த பாலியல் வன்புணர்ச்சிக்கான வழக்கில் விசாரித்து அவருக்கு தூக்குதண்டனை வாங்கித்தரவேண்டும் என்று யாராவது கிளம்பினால் அது தருமத்தின்படியும், மனு தர்மத்தின்படியும், பார்ப்பன நெறிப்படியும் அநீதியானதாகும். மேலும் உலகை ஆளும் ஒரு பார்ப்பனனை அப்படி தூக்கில் போட்டால் இந்தியாவே இயற்கை சீற்றத்தால் அழியுமென்பது உறுதி. ஆகவே யாரும் அந்த புண்ணியவானுக்கு தீங்கிழைக்காமல் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஏற்கனவே காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதிக்கு அப்படி ஒரு அபகீர்த்தி நிகழ்ந்ததனால்தான் சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். பெரியவாள் துறவறத்தோடு, பார்ப்பன தர்மத்தையும், இந்து மதத்தையும் அல்லும் பகலும் பாடுபட்டு காப்பாற்றும் திருப்பணியை செய்து வந்தவர். தொடர்ச்சியாக அந்த வேலைகளில் ஏற்பட்ட களைப்பு காரணமாக சில பல பார்ப்பன மாமிகளின் மேல் கை வைத்து விட்டார். அதுவும் கூட வன்புணர்ச்சி என்று முடிவு செய்துவிடக்கூடாது. அதெல்லாம் பெரியவாளுக்காக சில பக்தர்கள் ஒப்புதலுடன் மேற்கொண்ட பரிகாரங்கள்.
அனுராதா ரமணன் மட்டும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பெரியவாளின் செய்கையில் குற்றம் கண்டுபிடித்து பொதுவெளியிலும் அம்பலப்படுத்தினார். அவர் புராணக்கதைகள் எதையும் படித்ததில்லை போலும். ஆனானப்பட்ட இந்திரனும், விசுவாமித்திரனும் கூட இப்படி சில தருணங்களில் சஞ்சலப்பட்டவர்கள்தான். அதையெல்லாம் பரப்பிரம்மத்தின் ஆகிருதி விளையாட்டு என்று கொள்வதை விடுத்து இகலோக மனிதப்பதர்களின் நோக்கில் ஆய்வு செய்வது தவறு.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாத குசும்புப் பார்ப்பான் சங்கரராமன் தொட்டதுக்கெல்லாம் மொட்டைக்கடிதாசி போட்டு பெரியாவளை இம்சித்து வந்தான். பெரியவாளும் எத்தனை நாள் இந்தக் கொசுக்கடியை சமாளிப்பது? அவாளுக்கும் சமயத்தில் கோபம் வருமோ இல்லியோ? பக்தரான அப்புவையும், ரவி சுப்ரமணியனையும் கூப்பிட்டு சங்கர ராமனை போட்டுத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அவர்களும் பெரியவாளின் கொசுக்கடியை கோவில் வளாக்கத்திலையே அரிவாளால் அழித்து விட்டார்கள். தெய்வம் நின்று கொல்லுமென்பது பெரியவாளின் விசயத்தில் உண்மையானது.
இது பொறுக்காத சில ஜென்மங்கள் பெரியவாளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது அக்கிரமம். ஆனாலும் பெரியவாள் சஞ்சலப்படாமல் தொடர்ந்து போராடி எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கி, பிறகு நீதிபதிக்கே ரேட் பேசி வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டார். இதெல்லாம் நீதிமன்றங்களில் சகஜம் என்பது ஒரு போண்டா வக்கீலுக்கு கூட தெரியும்.
தற்போது இந்த வழக்கை மறு விசராணை செய்து குற்றத்தை நீருபித்து பெரியவாளை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சிலர் பேசுவது சரியா? பூலோக இந்துக்களின் சர்வலோக குருவை இப்படி ஒரு கொசுக்கடி அழிப்பிற்காக தூக்கில் தொங்க விடுவது சரியா? நேர்மையுள்ள இந்துக்கள் சிந்திக்கட்டும். ஒரு வேளை சில தமிழ் – திராவிட – கம்யூனிஸ்ட் வெறியர்கள் அப்படி பெரியவாளை தூக்கில் போடுவதற்கு காரணமாக இருந்தால் இந்தியா அழிவது உறுதி.
விருத்தாசலம் கோவிந்தசாமி வயிற்றுப்பாட்டுக்காக திருடியதும், நம்மவா முதல்வர் புரட்சித் தலைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும் ஒன்றா? சில அம்மாஞ்சிகள் அப்படிக் கேட்கிறார்கள். கோவிந்தசாமி திருடி, கற்பழித்ததற்கு தூக்கா, முழு தமிழகத்தையும் மொட்டையடித்த ஜெயாவுக்கு வாய்தாவா என்று கேட்பது மாபெரும் அநீதி.
புரட்சித் தலைவி தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே துணிவாக அறிவித்த வீராங்கனை. இது வரை தமிழகம் கண்டமுதல்வர்களில் ஒரே ஒரு  இந்து முதல்வர் இவர்தான் என்று வீரத்துறவி இந்து முன்னணி இராம கோபாலனால் பாராட்டப்பட்ட தாய். அவருக்கென்று குடும்பமோ, குட்டியோ எதுவும் கிடையாது. அவர் சொத்து சேர்ப்பது யாருக்காக? தமிழகத்தில் உள்ள எல்லாக் கோவில்கள்களிலும் பூஜை, புனஸ்காரங்கள், யாகங்கள், குடமுழுக்கு செய்து இந்து தருமத்தை காப்பாற்றுவதற்காகவே அப்படி சொத்து சேர்க்கிறார். அதுவும் பெரிய பெரிய முதலாளிகள் தமிழகத்தில் தொழில் துவங்கி கைமாத்தாக வைக்கும் தட்சிணையைப் போய் அப்படி சொத்து சேர்ப்பு, திருட்டு, ஊழல் என்று சொல்வது யாருக்கு அடுக்கும்?
மல்லையாவின் மெக்டோவல் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுவதனால்தானே சூத்திர, பஞ்சம, சண்டாளப் பயல்களுக்கு இலவச லாப்டாப்பெல்லாம் கொடுக்க முடிகிறது? அதற்கு காணிக்கையாக மல்லையா புண்ணியவான் சில போல கோடிகளை அம்மாவுக்கு கொடுத்தால் என்ன தப்பு?
பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கிற்காக அம்மா எத்தனை நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது? இல்லையென்றால் அந்த கோவிந்தராசனை சட்டுப்புட்டென்று தூக்கில் போட தீர்ப்பளித்த மாதிரி ஓரிரு வருடங்களில் வழக்கை முடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.
வந்தே மாதரம்!
பாரத் மாதாகி ஜெய்!!
இந்து தர்மம் ஓங்குக!!!

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348858
அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என நினைக்கும் போது! ஆச்சரியமாகவும் இருக்கிறது, இன்னும் அதற்கு எதிர்வினை நடக்கவில்லையே என்று.

கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த அழகுப் பெண் சவுமியா, 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி. ஆளைப் பிடித்தவர்கள், மளமளவென வழக்கை விசாரித்து, அவருக்கு மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விட்டனர். இதுவல்ல செய்தி. இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்ட பிறகும், இன்னும் ஒரு தமிழினத் தலைவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை; ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை; மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது தான் செய்தி. காரணம், அவர்கள் தலையிட்டு, இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள், இந்தப் பிரச்னையில் உள்ளன.
இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.

கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா 

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?
ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!
-நமது சிறப்பு நிருபர்-