Tuesday, August 18, 2009

ஈழ மக்களுக்காக பொய்யாக ஏங்கும் தமிழ் அரசியல் வியாபாரிகளே, மனம் மாறுங்கள்.

இது ஒரு முயற்சி:
இந்த இடுக்கையை பதிவு செய்ய எனக்கு மனமில்லைதான். ஆனாலும் என்னால் அடக்கிக்கொண்டு இருக்க முடியவில்லை.

தமிழ் நாட்டில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் தமிழ் தேசிய தலைவரின் பெயரையும் படத்தையும் வைத்துக்கொண்டு பிழப்பு நடாத்தி கொண்டு உள்ளனர். கலைஞர் முதல் திருமா வரை, ஜெயலலிதா முதல் ஈழ உணர்வாளர்கள் என தன்னை பிரகடன படுத்தி கொண்டு அலையும் சில ஜன்மங்கள் வரை அனைவருக்கும் தேசிய தலைவர் தானவர்கள் கண் முன்னால் தெரிகின்றனர். அங்கே 30 முகாம்களில் தன்னை இழந்து தான் கொண்ட பெயர்களை இழந்து நடைப்பிணமாக அலைந்து கொண்டு இருக்கும் மூன்று லட்சம் அப்பாவி மக்களை பற்றி அவர்களுக்கு, அதாவது தமிழ் நாட்டில் அரசியல் வியாபாரம் செய்து வரும் இந்த நாதாரிகளுக்கு எங்கே தெரிய போகிறது?தலித் மக்களின் தலைவராக தன்னை பிரகடன படுத்தி தமிழ் நாட்டின் தேசிய தலைவராக தன்னை தானே கூறிக்கொள்ளும் திருமா ஆகஸ்ட் 17 அன்று அவருடைய பிறந்த தினத்தை படு விமரிசையாக கொண்டாடினார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவருடைய கட்சியினர் பல இடங்களில் தேசிய தலைவரின் முழு உருவ படத்தை தோரணமாக கட்டி இருந்தனர். தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவராக தானே கூறிக்கொள்ளும் மு க விண் உததரவின் படி தேசிய தலைவரின் படம் பல இடங்களில் தார் பூசி அளிக்கப்பட்டன. இது குறித்து திருமவிடம் கட்சியினர் கூறியபோது இந்த விசயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என அவர் கூறிவிட்டதாக அறிய வருகிறது.நமக்கு இங்கு எழுவது ஒரே கேள்விதான். தேசிய தலைவரின் பெயரை கொண்டு தன் அரசியல் வாழ்க்கையை துவங்கிய திருமா போன்ற பல தமிழ் நாட்டு போலிகள் மக்களை இன்னும் எவ்வளவு நாட்கள் ஏமாற்றிக்கொண்டு இருப்பார்கள்.தற்போது விசயத்துக்கு வருவோம். அரசியல் வியாபாரிகளுக்கு அது தான் பொழப்பு என்றால், சில பத்திரிகைகள் அதைவிட மேலே போய் தேசிய தலைவரை கொச்சை படுத்துவதில் போட்டி போட்டு கொள்கின்றன.
குறிப்பாக, சென்னையை சார்ந்த பார்ப்பன பத்திரிகைகள் ஈழம் என்பது கனவு, அது தற்போது கலைந்துவிட்டது என மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றன.இன்னும் சிலரோ, ஒரு படி மேலே போய் தலைவர் எங்கு உள்ளார் என்ற தேவையில்லாத ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போதைய தலையாய பிரச்சினை, சொந்த மண்ணிலே அகதிகளாக அரசு நலன்புரி முகாம்களில் வதைபபடும் மூன்று லட்சம் மக்கள் அவர்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல அனைவரும் பாகீதரண முயற்சி எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.அவர்களை பற்றி, அவர்களின் நிலமையை பற்றி பேசாமல் இருக்கும் ஒவ்வொரு தமிழனும் (என்னையும் சேர்த்து) ஏதோ ஒரு வகையில் தனக்கு தெரியாமலே சிங்களவனுக்கு உதவி வருகிறார்கள்.எனவே, என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தமிழ் நாட்டில் வரிந்து கட்டி கொண்டு ஈழ மக்களுக்காக பேசும் அரசியல் போலிகளே, உண்மையை உணருங்கள். அங்கு கஸ்டத்தில் இருக்கும் மக்களை காப்பாற்ற உண்மையாக உங்கள் உள்மனததை கேட்டு நல்ல முடிவை எடுங்கள். இல்லையென்றால், ஈழ உறவுகள் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்களை மிக கேவலமாக தங்கள் வரலாற்றில் வடித்து விடுவர்.எனவே, ஈழ வரலாற்றில் தம் பெயர்களை பதியும் நேரம் வந்து விட்டது.