Wednesday, September 30, 2009

சுருட்டல் மன்னன் கருணாநிதி








ஐயா கலைஞர் அவர்களே…இதோ உங்கள் சொத்து...பட்டியல்..



எங்களுக்கு தெரிந்த வரை தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.



*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.



கருணாநிதியின் பக்கம் 81,82 ல்…………..



*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.



இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்…………….



* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.



பக்கம் 92,93 ல்…………………………



* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.



இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு



2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்



3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு



4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)



5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்



6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்



7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்



8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்



9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு



10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி



11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்



12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)



13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)



14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)



15. தயாநிதி மாறன் வீடு



16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை



17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு



18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்



19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை



20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்



21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை



22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்



23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்



25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி



26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக



27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது



28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை



29. அந்தமான் தீவின் நிலங்கள்



30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்



31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு



32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை



33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்



34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது



35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு



36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்



37. செல்வம் வீடு



38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்



39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.



40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்



41. செல்வம் வீடு-பெங்களுர்



42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்



43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை



44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.



45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்



46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.



47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்



48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.



TOTAL VALUE OF ASSETS ARE ESTIMATED AROUND RS 37,000 CRORES.

திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.





Monday, September 28, 2009

இலங்கையில் போர் நடந்த காலம் இந்திய ஊடகத் துறையின் இருண்ட காலம்

தமிழக ஊடகவியலாளர் கவிதா என்பவர் சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களின் நிலைமை, மனித
உரிமைகள் போன்றவற்றைக் கண்டறிந்திருந்தார்.
அவர் இப்போது தமிழகத்தின் "காலச்சுவடு" இணையச் சஞ்சிகைக்கு இலங்கையின் நிலை குறித்தும், இலங்கை நிலைப்பாட்டில் இந்திய ஊடகங்களின் பங்களிப்புக் குறித்தும் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வரைந்திருக்கிறார்.
அது இங்கு மீள்பிரசுரமாகின்றது.
ஒர் ஊடகவியலாளராக, குறிப்பாக ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பணிபுரியும் ஊடகவியலாளராக, இங்கு நின்று பேசுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கும் சொல்ல சில விடயங்கள் இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை இந்திய ஊடகங்களின் மொழி குறிப்பாகத் தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ஊடகங்களின் மொழி சில வார்த்தைகளுக்குள் சுருங்கிவிட்டது.
புலி எதிர்ப்பு அல்லது புலி ஆதரவு என்று சுருங்கிவிட்ட மொழியைக் கொண்டு, அதனடிப்படையிலும் அந்தப் பின்னணியிலும் பெரும்பாலான ஊடகங்கள் செயற்படுகின்றன
.பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் புலி ஆதரவுநிலை என்பது ஒரு வியாபார உத்தி. பிரபாகரனின் மரணத்தைச் இலங்கை அரசு அறிவித்த பிறகு வந்த ஒரு தமிழ்ப் பத்திரிகை தனது மரணம் குறித்த செய்தியைப் பிரபாகரன் பார்த்துக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை அட்டையில் வெளியிட்டது. அந்தப் பத்திரிகை விற்பனை செய்யப்பட்டது; மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கினார்கள். சில மாதங்களுக்கு முன்பு இலங்கையைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் என்னுடன் கலந்துகொண்ட தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் பிரபாகரனின் படத்தை அட்டையில்போட்டால் அந்த இதழ் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பிரதிகள் கூடுதலாக விற்பனையாகின்றது என அந்த அரங்கில் சொன்னார். அப்போது போர் முடிந்திருக்கவில்லை. பிரபாகரன் இறந்திருக்கவில்லை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இன்றைய சூழலில் பிரபாகரனுக்கே அதிகம் பொருந்தும். இதனால் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். பிரபாகரன் குறித்த செய்திக்குப் பின்னால் இருக்கும் வணிக சாத்தியங்கள் இத்தகைய செய்திகளை ஊக்குவிக்கும் சக்தியாக மாற்றக்கூடிய அவலம்தான் இதில் பிரச்சினை. வணிக நிலை ஒரு புறம் இருக்க, தமிழ்ப் பத்திரிகைகளின் பொதுவான புலி ஆதரவு நிலையும் சரி, ஆங்கில ஊடகங்களின் பொதுவான புலி எதிர்ப்பு நிலையும் சரி ஈழத்தின் உண்மைகளிடமிருந்து, மக்களிடமிருந்து வெகுவாக விலகியிருந்தன என்பது மேலும் தீவிரமான பிரச்சினை.
பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக எழும்பிய தன்னெழுச்சியான ஆதரவை இப்படிப்பட்ட எதிரெதிர் நிலைகள் கலைத்துப் போட்டுவிட்டன என எனக்குத் தோன்றுகிறது. இலங்கையில் இருந்த தமிழர்கள் படும் அசலான துயரங்களை சொல்லப்போனால் இலங்கையில் தமிழனாக இருப்பதே துயரம் என்று இன்றும் தொடரும் நிலையை பெரும்பாலான ஊடகங்கள் கணக்கிலெடுக்கவில்லை கவனப்படுத்தவுமில்லை. அவர்களுக்குத் தேவை ஒரு பிரதிநிதி. அவர்களது அரசியல் மற்றும் வியாபார உத்திகளுக்கு ஏற்றாற்போல அந்தப் பிரதிநிதியை கதாநாயகனாகவோ வில்லனாகவோ முன்னிறுத்திக்கொள்கிறார்கள். இதற்கான எதிர்வினையை நான் தமிழகத் தேர்தல் குறித்த செய்தி சேகரிப்புக்காகச் சென்ற பல கிராமங்களில் பார்க்க முடிந்தது. பல இடங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு இருந்தது. ஆனால் அதை வைத்து வாக்குகளைத் தீர்மானிப்பதில் மக்களுக்குச் சிக்கல் இருந்தது. அது வேறு, இது வேறு என்பதே அவர்களது மனோபாவமாக இருந்தது. சிதம்பரத்தை அவர் தொகுதிக்குள் செய்யாமல்விட்ட விடயங்களுக்காகத் தோற்கடிப்போம், மற்றபடி அவரது ஈழ நிலைப்பாடு பற்றி எங்களுக்குப் பெரிய அக்கறை இல்லை என்று சிவகங்கையில் நான் பேட்டி கண்ட மக்கள் சொன்னார்கள். ஈழத் தமிழரின் துயரங்களைச் சரியான மொழியில், சரியான முறையில் மக்களிடம் எடுத்துச் செல்லாதது ஊடகங்கள் செய்த மிகப் பெரிய தவறு. ஒரு பத்திரிகையாளர் என்ற காரணத்தால் பெரும்பாலான பத்திரிகைகளைப் படித்துவிடுவேன். ஆனால் கடந்த நவம்பரில் இலங்கைக்குச் செல்லும்வரை அங்கு வெள்ளை வான் கடத்தல்கள் நடப்பது எனக்குத் தெரியாது. புலிகளாக இருக்கக்கூடும் என்று கருதப்படும் அப்பாவி இளைஞர்கள் இலங்கை அரசாலும் துணை இராணுவத்தினராலும் வெள்ளை வான்கள் மூலமாகக் கடத்தப்படுகிறார்கள். வெள்ளை வான் என்பதற்கு இலங்கை அதிகார வர்க்கத்தின் அகராதியில் பல அர்த்தங்கள் உண்டு. சக்கரங்களின் மீது பயணிக்கும் பயங்கரவாதம், மரணம், காணாமல் போவது என்று பல அர்த்தங்கள். போர் புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல 2005ஆம் ஆண்டிலிருந்து கடந்த நவம்பர் வரை இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் இளைஞர்கள் அப்படிக் காணாமல் போயிருக்கிறார்கள். கொழும்பில் மட்டும் 300 இளைஞர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இங்கு நமது ஆங்கில ஊடகங்கள் கட்டமைத்துக்கொண்டிருப்பது போல இலங்கையில் நடந்தது புலிகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிரான போர். அதிலும் அந்தப் போரில் பாதிக்கப்பட்டது, வடக்கிலிருந்த தமிழர்கள் மட்டுமல்ல, கிழக்கிலும் கொழும்பிலும் இருந்த தமிழர்களுக்கும் எதிராகவும் அந்தப் போர் நடந்தது. இந்த விடயத்தைக் கொழும்புக்கு நேரில் செல்லும்வரை என்னால் உணர முடியவில்லை. தமிழ்நாட்டிலிருந்து வரும் எந்த ஊடகமும் இது பற்றி எழுதவில்லை. கொழும்பிலேயே தன் செய்தியாளரை வைத்திருக்கும் "த இந்து" உட்பட எந்த இந்திய ஆங்கில ஊடகத்திற்கும் அரச பயங்கரவாதத்தின் இத்தகைய முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதை அவர்கள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தார்கள். இராணுவம் தந்த செய்திகளை மீள்பிரசுரம் செய்துகொண்டிருப்பவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவும் முடியாது. நடந்து முடிந்த போரில் வெற்றி அல்லது தோல்வி குறித்த மயக்கங்களில் அவரவர் அரசியலுக்கு ஏற்பப் பத்திரிகையாளர்களும் சிக்கிக் கொண்டுவிட்டார்கள். இந்தப் போரின் அவலங்களை மனித உரிமைப் பிரச்சினைகளாகப் பார்க்கவும் சொல்லவும் இந்தியப் பத்திரிகைகள் தவறிவிட்டன.
குறிப்பாக மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் "த இந்து" போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் செய்த இமாலயத் தவறு அதுவாகும்."த இந்து" வைப் பொறுத்தவரை போர் நடந்து கொண்டிருந்தால் அரசு Zero Civilian Casuality (பொதுமக்களில் யாருக்கும் உயிர்ச் சேதம் நிகழாத) கொள்கையைக் கடைபிடிக்கிறது என்று அர்த்தம். பொதுமக்கள் சிறிதும் பாதிப்படையாத ஒரு போர் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகிறது. போர் முடிந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் அது பத்திரிகை ஆசிரியர் ராமைப் பொறுத்தவரை Low intensity conflict (தீவிரம் மட்டாக இருக்கும் போர்).சமீபத்தில் வவுனியா முகாம் சென்று மூன்று மணிநேரம் இருந்து திரும்பிவந்துவிட்டு அது ஒரு மேன்மையான அனுபவம் என்று எழுதியிருந்த ராம். அந்தச் சமயத்தில் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒரு பேட்டி எடுத்திருந்தார். மூன்று பகுதிகளாக அந்தப் பேட்டி வெளியானது.
அந்தப் பேட்டியில் குறிப்பிட்ட சில விடயங்களை மட்டும் இங்கு உதாரணம் காட்ட விரும்புகிறேன். குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் கொல்லப்பட்ட "த சண்டே லீடர்" பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவைப் பற்றி ராம் எழுப்பிய கேள்விகள். ராம்: இலங்கையில் பத்திரிகையாளர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் நெருக்கடிகள் பற்றியும் சர்வதேச அளவில் கவலை எழுப்பப்பட்டது. இவர்களில் சிலர் உங்களுடைய நண்பர்கள். குறிப்பாக லசந்த விக்ரமதுங்க. அவர் 2009 ஜனவரியில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜூன் மாதம் பெண் பத்திரிகையாளரான கிருஷ்ணி இஃபான் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, பல மணிநேரம் விசாரிக்கப்பட்டு, பிறகு கண்டியில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி மஹிந்த: இவையெல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன. நீங்கள் தெருவில் யாருடனாவது சண்டைபோடுகிறீர்கள்; அந்த மனிதர் உங்களை அடித்துவிட்டால், அதற்கு அரசு பொறுப்பேற்க முடியுமா? பத்திரிகையாளர்கள் எங்களுக்கு எதிராக இருந்தால்கூட நாங்கள் அவர்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. உதாரணமாக, ஒரு தமிழ் நாளிதழின் உரிமையாளரும், ஆசிரியரும் புலிகளை ஆதரிப்பதற்கான சாட்சியங்கள் எங்களுக்குக் கிடைத்தன. ஆனால் நாங்கள் அவர்களைப் பத்திரிகையாளர்களாகத்தான் நடத்தினோம். லசந்த என் நண்பர்தான். அவ்வப்போது வந்து என்னைச் சந்திப்பார். நிறைய விடயங்களைப் பற்றிச் சொல்வார். என் கட்சியில் நடக்கும் விடயங்களையெல்லாம் கூடச் சொல்வார். அதிகாலை இரண்டு மணிக்குக்கூட வருவார். பிறகு என் வண்டியில் அவரைக் கொண்டுவிடச் சொல்வேன். ராம்: கடைசியாக அவர் உங்களுக்குத்தான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டாரா?ஜனாதிபதி மஹிந்த: ஆமாம். ஆனால் நான் அந்த நேரத்தில் பிரார்த்தனையில் இருந்தேன். நான் வெளியில் இருந்திருந்தால் தொலைபேசியை என்னிடம் கொடுத்திருப்பார்கள். பிறகு, என் பாதுகாவலர்களிடம் மிகவும் கோபித்துக்கொண்டேன்.லசந்த விக்ரமதுங்க இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு தலையங்கம் அவர் இறந்த பிறகு "த சண்டே லீடரில்" வெளியானது. பரபரப்பைக் கிளப்பிய அந்த தலையங்கத்தை ராமும் படித்திருப்பார். அதன் பிறகும் இப்படிப்பட்ட தட்டையான கேள்விகளை அவரால் எப்படிக் கேட்க முடிந்தது என்று புரியவில்லை. அந்த தலையங்கத்திலிருந்து சில வரிகளை மட்டும் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். "தனது சொந்த மக்களைத் தொடர்ந்து குண்டுவீசிக் கொல்லும் ஒரே நாடு இலங்கைதான் என்ற எங்களது அதிர்ச்சியை நாங்கள் ஒருபோதும் மறைத்ததில்லை. நான் இரண்டுமுறை கொடுமையாகத் தாக்கப்பட்டேன் என்பது பரவலாக அறியப்பட்ட செய்தி. ஒருமுறை எனது வீட்டின் மீது எந்திரத் துப்பாக்கி குண்டு மழை பொழிந்தது. அரசின் உத்தரவாதங்கள் இருந்தாலும் இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் பற்றி எந்த விசாரணையும் நடக்கவில்லை; அவர்கள் பிடிக்கப்படவும் இல்லை. இந்தத் தாக்குதல்களில் அரசின் கை இருக்கும் என்று நம்புவதற்கு எனக்குக் காரணம் இருக்கிறது. இறுதியாக நான் கொல்லப்படும்போது, அரசுதான் அந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கும். "ஜனாதிபதி மஹிந்த, என்னுடைய மரணத்தைத் தொடர்ந்து நீங்கள் பொருத்தமான தார்மீகச் சொற்களை உதிர்ப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். பொலிஸ்துறை உடனடி விசாரணை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவீர்கள். ஆனால் நீங்கள் இதற்கு முன்பு உத்தரவிட்ட விசாரணைகளைப் போல இதிலிருந்தும் எந்த உண்மையும் வெளிவரப்போவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனது மரணத்துக்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்று நம் இருவருக்குமே தெரியும். ஆனால் அவரது பெயரைச் சொல்லும் தைரியம் இருக்காது. என் உயிர் மட்டுமல்ல உங்கள் பாதுகாப்பும் அந்த மௌத்தில்தான் இருக்கிறது.''லசந்த விக்ரமதுங்க இலங்கையில் மிகவும் மதிக்கப்பட்ட மிக முக்கியமான பத்திரிகையாசிரியர்களில் ஒருவர். இங்கு என். ராம் போல (இப்படிச் சொல்வதற்கு என்னை லசந்தவின் ஆன்மா மன்னிக்கட்டும்). அவர் கொல்லப்பட்டபோது இங்கிருந்த ஊடகவியலாளர்கள் சிலர் இலங்கை அரசுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பத்திரிகை சுதந்திரத்துக்கான முன்னோடியாகப் பல சமயங்களில் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட "த இந்து" விலிருந்து ஒரு பத்திரிகையாளர்கூட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆச்சரியப்படும் விதத்தில் "த இந்து" நடத்திக்கொண்டிருக்கும் "ஏசியன் காலேஜ் ஒவ் ஜெர்னலிஸம்" என்கிற ஊடகவியல் கல்லூரியிலிருந்து 60 மாணவர்கள் வந்திருந்தார்கள். உரத்த குரல்களில் கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களுடன் வந்த ஒரு பேராசிரியரிடம் எனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன். அவர் சொன்னார்: அவர்கள் இன்னும் ஊடகவியலாளராக மாறவில்லை என்று நான் மிகவும் அவமானமாக உணர்ந்த தருணங்களில் ஒன்று அது.மக்களை விடுங்கள், இலங்கையில் ஊடகங்கள் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு வருவது பரவலாக அறியப்பட்ட விடயம். அங்கு போர் முடிந்த பிறகு புலம்பெயர்ந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை பத்துக்கும்மேல். காரணம், அவர்களது புகைப்படங்கள் அரசு சார்புத் தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டன போர்க் காலத்தில் துரோகச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்கிற குறிப்புகளுடன். இப்படியொரு செய்தி வெளியான பிறகு அந்தப் பட்டியலில் இருந்தவர்களில் ஒருவரான போத்தல ஜயந்த என்கிற சிங்களப் பத்திரிகையாளர்மீது கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. இலங்கையில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதை இந்திய ஊடகங்கள் கணக்கில் எடுக்கவில்லை இலங்கையில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவது, இந்தியாவில் குறிப்பாக இந்திய ஊடகத் துறையில் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்திருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. லசந்த விக்ரமதுங்க மரணத்துக்குப் பிறகு ஒரு போராட்டம், வித்தியாதரன் கைதுக்குப் பிறகு ஒரு போராட்டம் என்று இங்கொன்றும் அங்கொன்றுமாகப் போராட்டங்கள் நடந்தன. ஆனால் இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் மீது மிகத் தீவிரமாக நடந்துவரும் தாக்குதல்கள் இங்குள்ள ஊடகங்களால், குறிப்பாக ஆங்கில ஊடகங்களால் பெரிய அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இலங்கை ஊடகங்களுக்குத்தான் உயிர்ப் பயம். சர்வதேச ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் இலங்கைப் பிரச்சினையில் ஏன் மெனம் காக்க வேண்டும்? இந்த விடயத்தில் "த இந்து" வின் இரட்டை நிலைப்பாடு பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். "த இந்து" குழுமத்திலிருந்து வரும் "ஃபிரண்ட் லைன்" என்ற மாதமிருமுறை இதழ் சற்றே ஆழமான செய்திக்கட்டுரைகளை வெளியிட்டு வரும் ஓர் இதழ். மிகவும் குறைவாகவே இது விற்பனையாகிறது. இராணுவம் தந்த செய்திகளை "த இந்து" வில் அப்படியே எழுதும் அப்பத்திரிகையின் இலங்கைச் செய்தியாளர் முரளிதர ரெட்டி, ஃபிரண்ட் லைனில் எழுதுவதை எந்த ரகத்தில் சேர்ப்பதென்று தெரியவில்லை. எந்த முகாமுக்குச் சென்று வந்தது மேன்மையான அனுபவம் என்று ராம் சொன்னாரோ அந்த முகாம் நாஜிகளுக்கான வதை முகாம் போல இருக்கிறது என்று முஸ்லிம் தகவல் மையத்தை மேற்கோள்காட்டி ஃபிரண்ட் லைனில் சொல்கிறார் முரளிதர ரெட்டி. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதைப் பற்றியும் அதில் அவர் பேசுகிறார். "த இந்து" வைத் தவிர இங்கு வெளிவரும் ஏனைய ஆங்கிலப் பத்திரிகைகள் "த இந்து" வைப் போலத் தீவிரமாகப் புலிகளை எதிர்ப்பதில்லை, இலங்கை அரசின் குரலைப் பிரதிபலிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் தமிழ் ஈழம், அதன் மக்கள், அவர்களது துயரங்கள் குறித்து ஒருவிதமான மௌனத்தையே இவை கடைப்பிடித்தன. சமீபத்தில் "ரைம்ஸ் ஒஃப் இந்தியா" இல் வெளிவந்த வவுனியா முகாம் பற்றிய கட்டுரைகளை விதிவிலக்காகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ஊடகங்களைப் பொறுத்தவரை இலங்கையின் மனித உரிமை என்பது பூசாவில் உள்ள சிறுவர் போராளிகளுக்கான முகாமில் தொடங்கி புத்தளத்திலுள்ள விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான முகாமில் முடிவடைந்துவிடும். போருக்குப் பிந்திய காலகட்டத்தில் சிறுவர் போராளிகளைப் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் கிட்டத்தட்ட எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் வெளியிட்டன. சிறுவர் போராளிகளின் பிரச்சினைகள், இஸ்லாமியர்களின் துயரங்களைப் பற்றி எழுதுவது அவசியம்தான். ஆனால் அப்படிப்பட்ட கட்டுரை களை வெளியிடுவதற்குப் புலிகள் ஒடுக்கப்படும் வரை அவர்கள் காத்திருந்ததன் மர்மம்தான் விளங்கிக்கொள்ளும்படி இல்லை. போர் முடிந்த பின்னர் தமிழகத்தில் உரக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கும் புலி எதிர்ப்புக் குரலையும் நாம் இந்தச் சூழலில் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.இலங்கை அரசின் வெற்றிக் கொண்டாட்டங்களில் உளவியல் ரீதியாக ஒடுங்கிப் போயிருக்கிறார்கள் தமிழர்கள். முடிந்தால் புலம்பெயர்வது; முடியாவிட்டால் அடிமை வாழ்க்கைக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வது என்று வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களுக்குத் தீவிரப் புலி ஆதரவு, வலுக்கும் புலி எதிர்ப்பு ஆகிய குரல்களின் பின்னணியிலிருக்கும் அரசியல் எந்த விதத்திலும் உதவாது. மாறாக, அவர்களது பிரச்சினைகளை அதிகமாக்கவே செய்யும். வட இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பற்றியும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஈழத்தமிழர்கள் பற்றிய பெரிய அக்கறை எதையும் இந்த ஊடகங்கள் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. ஆனால் பிரபாகரனின் மரணச் செய்தியைக் கொண்டாட்ட மனநிலையோடு அணுகினார்கள். பிரபாகரனின் மரணத்துக்கு முன்னும் பின்னும் தமிழர் வாழும் பகுதிகள் பற்றியும் அங்கு துயருறும் மக்கள் பற்றியும் சுருக்கமாகவேனும் செய்திகளைத் தர இந்த 24 மணி நேர செய்தி அலை வரிசைகளுக்கு முடியவில்லை. என் பார்வையில், இலங்கையில் போர் நடந்த காலம் இந்திய ஊடகத் துறையின் இருண்ட காலம். இனிமேல் அவர்கள் எப்படிச் செயற்படுவார்கள் என்பது குறித்து எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை. இரு பக்கத்து உண்மைகள் பற்றியும் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மனிதர்களின் துயரம் பற்றியும் மொழி மற்றும் தேச எல்லைகளைக் கடந்து இனிமேலாவது இந்த ஊடகங்கள் பேசும் என்பதற்கான உத்தரவாதங்களோ அறிகுறிகளோ காணப்படவில்லை. புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பு என்கிற பெயரில் இலங்கை மக்கள் மீது குண்டுகளைப் போல வீசப்பட்ட இந்திய ஊடகங்களின் கள்ளத்தனமான மெனங்கள் தொடரும் என்பதற்கான சாட்சியங்களாக உங்களைப் போலவேநானும் இருப்பேன், தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் அதில் பங்கு இருக்கிறது என்கின்ற கூடுதல் குற்றவுணர்ச்சியுடன்.

** கவிதா *

Source:http://www.uthayan.com/Welcome/afull.php?id=94&L=T&1254129466

Congress கட்சிக்கு ஒரு நீதி, ராஜிவ் காந்தியை கொன்றவர்களுக்கு வேறு நீதி?

சமீபத்தில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களான ராபர்ட் பயாஸ் மற்றும் நளினி ஆகியோர், முன்விடுதலை கோரி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ராபர்ட் பயஸ்
இதையொட்டி, தேசிய ஊடகங்களில் கடும் விவாதம் நடைபெற்றது. இவ்விவாதங்களில் பங்கு பெற்ற பெரும்பாலானோர் இந்த தேசத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்ற கொலையாளிகளுக்கு எவ்வித கருணையும் காட்டக் கூடாது, இவர்கள் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்று பலவாறு கருத்துச் சொன்னார்கள். இந்த விஷயத்தில் என்னதான் நடந்தது ? நளினியும் ராபர்ட் பயாசும் உண்ணாவிரதம் இருக்கக் காரணம் என்ன ? 1991ல் ராஜீவ் கொலை, இந்தியாவை உலுக்கியது என்பது யாரும் மறுக்க முடியாததே. ஆனால், ராஜீவ் மரணத்தை தனியாக ஒரு அரசியல் கொலை என்று பார்க்க இயலாது. ராஜீவ் மரணம், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையோடும், இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய படுகொலைகளோடும் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கையிலிருந்து திரும்பி வரும் அமைதிப்படை
ராஜீவ் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் இன்று முள்வேளிக்குள் மூன்றரை லட்சம் தமிழர்கள் அடைப்பட்டிருக்கமாட்டார்கள். உங்கள் வீட்டிற்குள் ரவுடிகளை அனுப்பி உங்கள் அக்காவையும், தங்கையையும் பலாத்காரம் செய்த ராணுவத்தை அனுப்பியவரிடம், நீங்கள் சமாதானம் பேசுவீர்களா என்று சிந்தித்து பாருங்கள். இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய அட்டூழியத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் விரிவாக விவரித்திருக்கிறது

அமைதிப்படை அட்டூழியங்களை விவரிக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை இது தவிர பல்வேறு ஊடகங்களில் இந்த விஷயம் தெளிவாகவே பதிவு செய்யப் பட்டிருக்கிறது. ராஜீவ் மரணம் குறித்து, வருத்தத்தோடு பேசும் அறிவு ஜீவிகள், இந்திய ராணுவத்தால், அழிக்கப் பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களைப் பற்றி வாய்த்திறக்க மறுக்கிறார்களே ஏன் ? அவர்களின் உயிர், ராஜீவ் உயிரைவிட மதிப்புக் குறைவானதா என்ன ?

ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்று கூப்பாடு போடும் ஊடகங்கள், இந்திரா படுகொலைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியினரால் நடத்தப்பட்ட கொலைவெறியாட்டத்தில், இறந்த 4000 சீக்கிய உயிர்களுக்காக இன்னும் ஒருவர் கூட தண்டிக்கப் படவில்லை என்று தெரியுமா ? 4000 சீக்கியர்கள் படுகொலை செய்யப் படுகையில், ராஜீவ் அளித்த விளக்கம் நினைவிருக்கிறதா ? “ஒரு பெரிய ஆலமரம் விழுகையில், பூமி அதிரத்தான் செய்யும்“ சீக்கியப் படுகொலைகளுக்காக இது வரை 10 விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
1984 சீக்கியர்கள் படுகொலை 1984ல் நவம்பரில் “மார்வா“ கமிஷன் அமைக்கப் பட்டது. ராஜீவ் காந்தி, இந்தக் கமிஷனை உடனடியாக கலைத்தார். மே 1985ல் “மிஸ்ரா“ கமிஷன் அமைக்கப் பட்டு, அது இன்னும் மூன்று கமிஷன்கள் அமைக்க வேண்டும் என்று பரிந்துரை அளித்தது. நவம்பர் 1985ல் தில்லோன் கமிஷன் அமைக்கப் பட்டு, இறந்த சீக்கியர்களுக்கான நிவாரணத் தொகையை பரிந்துரை செய்தது. ஆனால் ராஜீவ் அரசாங்கம், இந்தக் கமிஷனின் பரிந்துரையை நிராகரித்தது. பிப்ரவரி 1987ல், “கபூர்-மிட்டல்“ கமிஷன் அமைக்கப் பட்டு, 72 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தது. ஆனால், அரசு ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. பிப்ரவரி 1987ல் அமைக்கப் பட்ட “ஜெயின்-பானர்ஜி“ கமிட்டி, ஜக்தீஷ் டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் ஆகிய இரு காங்கிரஸ் பிரமுகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யச் சொல்லி பரிந்துரைத்தது. டெல்லி உயர்நீதிமன்றம், இக்கமிஷன் அமைக்கப் பட்டதே செல்லாது என்று தீர்ப்பளித்தது. “மிஷ்ரா“ கமிஷன் பரிந்துரையின் படி அமைக்கப் பட்ட “அஹுஜா“ கமிட்டி, கலவரத்தில் இறந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 2733 என்று உறுதி செய்தது. இதற்குப் பின் மார்ச் 1990ல் அமைக்கப் பட்ட “பொட்டி-ரோஷா“ கமிட்டி சஜ்ஜன் குமார் மற்றும் ஜெக்தீஷ் டைட்லர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்தது. டிசம்பர் 1990ல் அமைக்கப் பட்ட “ஜெயின்-அகர்வால்“ கமிஷனும் ஜெக்தீஷ் டைட்லர், எஜ்.கே.எல்.பகத் மற்றும் சஜ்ஜன் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும் பரிந்துரையை உறுதி செய்தது.


ஜெகதீஷ் டைட்லர் ஆனால் அப்போது இருந்த நரசிம்ம ராவ் அரசு இந்த கமிட்டியை கலைத்து விசாரணையை நிறுத்தி 1993ல் உத்தரவிட்டது. பிறகு டிசம்பர் 1993ல் அமைக்கப் பட்ட “நாருல்லா“ கமிஷனும், இந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யும் பரிந்துரையை உறுதி செய்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இறுதியாக பிஜேபி அரசாங்கத்தால் அமைக்கப் பட்ட “நானாவதி“ கமிஷனும் டைட்லர், சஜ்ஜன் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்வதை உறுதி செய்தது. ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் என்ன செய்தது ? ஜெக்தீஷ் டைட்லருக்கு டெல்லியில் பாராளுமன்றத் தொகுதியில் நிற்க டிக்கெட் அளித்தது. பொதுமக்கள் எதிர்ப்பால், பிறகு டைட்லர் வாபஸ் பெற்றார்.4000 சீக்கிய மக்கள் படுகொலை செய்யப் பட்டதற்கு இது வரை ஒருவரை கூட தண்டிக்காத தேசம் இது. ! ஆனால் ராஜீவ் கொலையாளிகள் மட்டும் சிறையை விட்டு வெளியே வரவே கூடாதாம்.
ராஜீவ் சோனியா
நளினி மற்றும் ராபர்ட் பயாஸ் ஒன்றும் நியாயமற்ற கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை. ஆயுள் தண்டனை பெற்ற மற்ற கைதிகளை 7 ஆண்டுகளுக்குள் விடுதலை செய்கையில், 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்யுங்கள். எங்கள் மீது மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது ? சிபிஎம் கவுன்சிலர், லீலாவதி அழகிரியின் குண்டர்களால் படுகொலை செய்யப் பட்டார். அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப் பெற்று, உயர்நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இவர்கள் அனைவரையும் 7 ஆண்டுகள் முடிந்ததால், அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக அரசு விடுதலை செய்தது. லீலாவதி கொலையாளிகளுக்கு மட்டும் 7 ஆண்டுகள் தண்டனை. ராஜீவ் கொலையாளிகளுக்கு 18 ஆண்டுகள் கடந்த பிறகும் எப்போது விடுதலை என்று சொல்ல இயலாது என்று மத்திய அரசும் மாநில அரசும் சொல்லுகிறது. இந்த அநியாயத்தையும் பாரபட்சத்தையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தால் அது தவறா ? செப்டம்பர் 2008ல் சென்னை உயர்நீதிமன்றம், நளினி முன் விடுதலை செய்வதற்காக கூட்டப்பட்ட ஆலோசனைக் குழுமம் செல்லாது, புதிதாக ஒரு ஆலோசனைக் குழுமத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஒரு வருடம் கழிந்தும் இந்த ஆலோசனைக் குழுமம் தமிழக அரசால் கூட்டப் படவேயில்லை. நளினியும் ராபர்ட் பயாசும் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதும், அரசு அவசர அவசரமாக அக்டோபர் 10க்குள் ஆலோசனைக் குழுமத்தை கூட்டுகிறோம் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கே, உண்ணாவிரதம் இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் தேசிய ஊடகங்கள் ராஜீவ் கொலையாளிகள் வெளியே வரவே கூடாது என்று முழங்குகின்றன. என்டிடிவி சேனலில், நளினி உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றி குஷ்பூ-விடம் கருத்து கேட்கப் பட்டபோது “ஏற்கனவே மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைத்ததன் மூலம் சோனியா நளினிக்கு கருணை காட்டிவிட்டார், இப்போழுது நளினி உண்ணாவிரதம் இருப்பது தவறானது“ என்று கூறுகிறார். ஒரு அரசியல் கொலை வழக்கில் தண்டனை பெற்று முன் விடுதலை கோரி உண்ணாவிரதம் இருக்கும் ஒருவரைப் பற்றி “மானாட மயிலாட“ நிகழ்ச்சியில் அரை நிர்வாண நடனத்திற்கு நடுவராக இருப்பவரிடம் கருத்து கேட்கும் என்டிடிவி நிருபர் சஞ்சய் பின்டோவையும், என்டிடிவியையும் என்னவென்று சொல்வது. ?
18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராஜீவ் கொலையாளிகளை மேலும் சிறையில் வைத்திருப்பது, மிக மிக கடுமையான மனித உரிமை மீறலாகும். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும். (நளினி)

Saturday, September 26, 2009

கலைஞர் இதற்கெல்லாம் கலங்கிப் போவாரா… என்ன?





தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மீண்டும் ஒரு அரைநாள் உண்ணாவிரதப் போராட்டக் களம் திறக்கப்பட்டுள்ளது போலவே தெரிகின்றது.
வன்னி மீதான சிங்களப் படைகளின் தாக்குதல் உச்சம் பெற்று, தமிழீழ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது தமிழகத்தில் எழுந்த உணர்ச்சி அலைகளை உச்ச நிலையை அடைந்த வேளையில், சோனியா காந்தி அம்மையாரின் நரபலி வேட்டை தடைபட்டு விடக் கூடாது, அவர் தரும் வரம் இடை நின்று போகக்கூடாது என்ற கடமை உணர்வோடு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆடிய நாடகமும், எழுதிய கடிதங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
இப்போதும் அவர் கடிதம் எழுதிய சாதனையை ‘கின்னஸ்’ சாதனையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வார ஏடுகள் கூட அடிக்கடி கேலிச் சித்திரம் வரையும் அளவிற்கு அவரது கடித சாதனை ஏற்கப்பட்டுள்ளது.




கருணாநிதி அவர்களது இந்தத் துரோக நாடகத்தைக் கண்டு வெகுண்டெழுந்த முத்துக்குமாரன் தன்னைத் தீயிற்கு இரையாக்கித் தமிழகத்தைப் போர்க் கோலம் பூணச் செய்தார்.
அவரைத் தொடர்ந்து, மேலும் பல தமிழுணர்வாளர்கள் தம்மைத் தீயுக்கு இரையாக்கி தமிழீழ மக்களைக் காப்பாற்றக் கோரினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பல்வேறு தமிழுணர்வுக் கட்சிகளும் அமைப்புக்களும் தொடர் போராட்டங்களை நடாத்தினார்கள். தமிழகப் பெண்கள் பலர் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். தமிழுணர்வுப் பெரியார் பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் தலைமையில் மேலும் பல போராட்டங்கள் என்று தமிழகம் போர்க் களமானது.
கலைஞர் இதற்கெல்லாம் கலங்கிப் போவாரா… என்ன? அணிசேர்க்கக்கூடிய கட்சிகளை அணி சேர்த்து, அதே சோனியாவின் தமிழக காங்கிரஸ் கட்சியுடன் களமிறங்கினார். டெல்லி அசைகின்றது என்றார். டெல்லி பணிகின்றது என்றார். கலைஞர் அவர்களது நாடகத்தில் மன்மோகனும் காமடி சீனுக்கு வந்தார். எம்.கே. நாராயணனும், சிவ்சங்கர் மேனனும் அநுமான் வேடத்துடன் கலைஞரிடம் வந்தார்கள். அதே வேகத்துடன் இலங்கைக்கும் சென்றார்கள். தமிழகத்துத் தமிழர்கள் நம்பிவிட்டார்கள் மீண்டும் சீதைகளை சிறை மீட்க ராமர்கள் புறப்பட்டுவிட்டார்கள் என்று.
பாவம், அவர்களுக்குப் புரியவில்லை நடைபெறுவது மகாபாரதம் என்று. கடல்கடந்து சென்றவர்கள் சகுனிகள் என்று. கொழும்புக்குச் சென்ற சகுனிகள் ராஜபக்ஷ சகோதரர்களுடன் விருந்துண்டுவிட்டு, அவர்களது இன அழிப்புப் போருக்கு ஊக்கமும் ஆதரவும் கொடுத்துவிட்டுத் திரும்பினார்கள். கலைஞர் அகமகிழ்ந்து போனார். என்னால்தான் அவர்கள் கொழும்புக்குப் போனார்கள். இதோ வருகிறது யுத்த நிறுத்தம் என்றார்.
முள்ளிவாய்க்கால் வரை வன்னித் தமிழர்களைத் துரத்திச் சென்ற சிங்களப்படை தமிழர்கள்மீது கொத்துக் குண்டுகளையும், விஷ வாயுக் குண்டுகளையும், தடைசெய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களையும் கொண்டு கொத்துக் கொத்தாகத் தமிழர்களைக் கொன்று குவித்தது. தமிழகம் மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியது. போராட்டங்கள் தீவிரமாகியது. டெல்லியின் தீர்மானத்தை எதிர்த்து நின்றால், காங்கிரஸ் கட்சியின் தயவு இல்லாமல் போய்விடும்.
எனவே, டெல்லியையும் எதிர்க்காமல், தமிழகத்தையும் எழுச்சி கொள்ளாமல் செய்வதற்கு கலைஞர் தேர்ந்தெடுத்த நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அதன் இயக்குனரும், கதாசிரியரும், நடிகருமாகக் கலைஞர் அவர்களே இருந்து, காலை உணவுக்குப் பின்னர், அண்ணா சமாதி அருகே அரைநாள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். தகவல் அறிந்ததும் அவரது மனைவியார் தலைமாட்டிலும், துணைவியார் கால் மாட்டிலும் கதிரை போட்டு அமர்ந்து கொண்டார்கள். தமிழ் சினிமா கதாநாயனுக்கான அத்தனை ஏற்பாடுகளும் தடல்புடலாக நடந்தேறியது. டெல்லிக்குச் செய்தி அனுப்பப்பட்டது. அங்கிருந்து பதிலும் வந்தது.
உண்ணாவிரதம் வெற்றி என்ற அறிவிப்போடு மதிய உணவுக்காக வீடு போய்ச் சேர்ந்தார். அத்துடன் போராட்டங்கள் நிறைவுக்கு வந்தது. டெல்லியின் திட்டப்படி கலைஞரது ஆதரவுடன் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைகள் நடாத்தி முடிக்கப்பட்டது. அந்த இடைவெளியில் நடாத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவுடன் மீண்டும் கைகோர்த்த கலைஞர் வெற்றியும் பெற்று, தன் வாரிசுகளுக்கான மந்திரிப் பதவிகளையும் போராடிப் பெற்றுக் கொண்டார்.
கலைஞர் கருணாநிதியின் அத்தனை துரோகங்களும் தமிழக மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவருக்கு எதிரான அணி மிகப் பலவீனமாக இருந்ததனால் மக்களது நம்பிக்கையை அவர்களால் திரட்ட முடியவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் சிங்கள அரசு அந்த யுத்தத்தில் உயிர்தப்பிய தமிழர்களை வதை முகாம்களுக்குள் வைத்துக் கொடூரமாக சித்திரவதை செய்து, படுகொலைகள் புரிந்துவருவதனால், மீண்டும் தமிழகம் எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்பட்டு வரும் நிலை கலைஞர் மீது கரையோரத் தமிழ் மக்களும் அதிருப்தியில் உள்ளார்கள். இதைத் தனக்குச் சாதகமாக்க அ.தி.மு.க. தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் கையிலெடுத்துப் போராட ஆரம்பித்துள்ளார்.






இந்த நிலையில், கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்ட ‘உலகத் தமிழ் மாநாடு’ பற்றிய அதிருப்தி தமிழகமெங்கும் அதிகரித்து வருகின்றது.
ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாகி, பல்லாயிரக் கணக்கில் பலி கொள்ளப்பட்ட நிலையில், எஞ்சிய தமிழர்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இப்படியான விழா தேவையில்லை என்று பல அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
கலைஞர் கருணாநிதி அவர்களைச் சுற்றி எங்கும் அவருக்கு எதிரான கருத்துக்கள் மேலெழுந்து வருவதால், கலைஞர் அவர்கள் மீண்டும் ஒரு அரை நாள் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய கால கட்டாயத்தினுள் நுழைந்துள்ளார்.
கலைஞர் இதற்கெல்லாம் கலங்கிப் போவாரா… என்ன?
நன்றி: ஈழநாடு

Source: http://tamilseithekal.blogspot.com/2009/09/blog-post_2585.html

ஈழமறுப்புத்தீர்வுகள், இனப்படுகொலை ஏற்புத்தீர்வுகளாய் ..

உலகின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் வழிநடத்தும் 50×10தினர், ஈழப்படுகொலை நிகழ்வுகளை அவசரமற்ற, முடிக்கக்கூடாத நிகழ்ச்சியாகவே வைத்திருக்கின்றனர். யார் இந்த 50×10தினர்?
உலகின் 50 முன்னணி நாடுகளில் உள்ள, அந்நாடுகளின் அரசியல், பொருளாதார, அயலுறவு கொள்கைகளை தீர்மானித்து வழிநடத்தும் உயர் அதிகாரம் கொண்ட மேல்நிலையில் உள்ள 10 மனிதர்களே இந்த 50×10தினர். இங்கு 50 என்பதும் 10 என்பதும்±.
இன அழிப்பு போருக்கு எதிராகவும், ஈழ அமைவிற்கு ஆதரவாகவும், உலகெங்கும் 10 கோடி தமிழர்களும், இனம் கடந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும், மனிதஉரிமை அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், விமர்சகர்களும், மனிதநேயர்களும் குரல் கொடுத்து வந்தாலும், அவ்வுணர்வுகளையெல்லாம் அலட்சியம் செய்யும் சர்வதேச அதிகாரம் படைத்தவர்கள் இந்த 50×10 தினர்.
ஈராக்கின் இல்லாத இரசாயண ஆயுதங்களுக்காக இன்னும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் இவர்கள், மக்கள் மீதான கனரக ஆயுதப்பயன்பாட்டிற்கு எதிராக, இலங்கை மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கவில்லை. அரச பயங்கரங்களை அப்பட்டமாக நடத்தி வரும் சிங்கள அரசை பயங்கரவாத அரசு என அறிவிக்காதிருப்பது, புலிகளை பயங்கரவாதிகள் என்று அறிவித்த இவர்களின் நேர்மையை சந்தேகப் படுத்துவதாக ஏன் இல்லை? புலிகள் மீதான தடை என்பது அவர்களது நடவடிக்கைகள் பற்றியது. ஈழப்பிரிவினைக் கோரிக்கை என்பது சமூகநிலைமைகள் பற்றியது. ஆனால், புலிகள் மீது தடை விதித்தாலும், ஈழப்பிரிவினைக் கோரிக்கை சரியானது என்று இவர்களில் யாருமே அறிவிக்காதது, இவர்களின் தற்செயலான கருத்து ஒற்றுமை இல்லை. ஈழ அமைவுக்கு மாற்றாக, இவர்கள் முன்வைக்கும் கவர்ச்சிகர சொற்களாலான தமிழர்பகுதிக்கு சமஉரிமை, சமரசதீர்வு, இறையாண்மைக்குட்ட அரசியல் தீர்வு என்பவற்றில் கோட்பாட்டு நெறிமுறைகளும் இல்லை. சூழல் குறித்த ஆய்வுகளுமில்லை, உலக வழக்குமில்லை.
இறையாண்மைக்குட்ட அரசியல் தீர்வு எனும் 50×10 தினரே, மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்:
1. ஈழ அமைவை விட எவ்விதத்தில் உங்கள் அரசியல் தீர்வு சரியானது என்று இரண்டையும் வேறுபடுத்தி சாதக, பாதங்களுடன் விளக்கம் கூறமுடியுமா?
2. இதுவரை பலநாடுகளின் பிரிவினை அங்கீகரிக்கப்பட்டமைக்கும், உங்களால் ஈழத்தின் பிரிவினை மறுக்கப்படுபமைக்கும் இடையே கொள்கை ரீதியான வேறுபாட்டை நீங்கள் அளிக்க முடியுமா?
3. இதுவரை பிரிவினை அங்கீகரிக்கப்பட்ட தேசிய இனங்களைவிட ஈழத்தமிழ் தேசிய இனம் எவ்வகையில் குறைந்தது என்று விளக்க முடியுமா? படுகொலைகளின் எண்ணிக்கை வகையிலே…, போராட்டங்கள் நீண்டிருக்கும் காலவகையிலே…, தேசிய இன அந்தஸ்து வகையிலே…,
4. ஈழப்படுகொலை, இலங்கையின் ‘இறையாண்மைக்கு’ உட்பட்டது. அந்நியர் தலையிட முடியாது. சரிதான். ஆனால் அப்படுகொலைகள் சர்வதேச நெறிமுறைகளுக்கும் உட்பட்டதா? இல்லை, இலங்கையின் இறையாண்மை தான் சர்வதேச நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டதா?
5. இனிமேல் முன் வைக்கப்படுகிற, ஏதோ ஒரு அரசியல் தீர்வு சொல்லும், சட்டதிட்டங்கள், தமிழ் இனப்படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்றால், இதுவரை இலங்கையில் இருந்து வந்த சட்டதிட்டங்கள், இனப்படுகொலைச் சட்டதிட்டங்களே என்பதை ஒப்புக் கொள்வீர்களா? இல்லை, இலங்கையின் சட்டங்கள் அவ்வாறில்லை என்றால், லட்சத்திற்கும் மேற்பட்ட படுகொலை செய்தது, சிங்கள ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஆதரவளித்து வரும் சிங்கள மக்களுமே என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டிவரும். சிங்கள பேரினம் காரணமில்லை என்றால், சிங்கள சட்டங்கள் படுகொலை சட்டங்கள் ஆகிவிடும். அதை வகுத்தவர்கள், நடைமுறைப்படுத்தியவர்கள் என்ற வகையில் சிங்கள பேரினமே எப்படிப் பார்த்தாலும் காரணமாகிவிடும்.
ஆனாலும் நீங்கள் சொல்லலாம், உங்கள் அரசியல் தீர்விற்கான புதிய திடடங்கள், சிங்கள மக்களிடையே மனமாற்றத்தையும், சிங்களதமிழ் மக்களிடையே பிணைப்பையும் ஏற்படுத்திவிடுமென்று. நீங்கள் சொல்லும் இச்சோசியத்தை நம்பமுடியாது. ஏனெனில் உங்கள் பொன்னான சமரசதீர்வு சொல்லும் இனச்சமத்துவ நெறிகளைவிட, ஆயிரம் மடங்கு வலிமையுடைய “உயிர்க்கொல்லாமை” வலியுறுத்தும் பௌத்தத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுதான், சிங்களர்கள் இத்தனைப் படுகொலைகளையும் அரங்கேற்றி இருக்கிறார்கள். இனவெறிக்கு முன் தங்கள் மதபோதனைகளையே தூக்கி எறிந்தவர்களுக்கு உங்கள் பொன்னான அரசியல்தீர்வு எம்மாத்திரம் ?
நீங்கள் சொல்லும் சனநாயகத்தீர்வு உங்களை சனநாயக வாதிகளாக காட்டிக்கொள்ள பயன்படுகிறது. அதற்குள் சூழ்நிலை பொருத்தபாடிண்மை மறைக்கப்படுகிறது. அதற்குள் உங்கள் ஆதாயங்கள் ஒளிக்கப்படுகிறது. உண்மையறியா உலகம் ஏமாற்றப்படுகிறது.
6. அப்படியானால், பிரிவினைக்குட்பட்ட தீர்வு எப்போதுமே சாத்தியமற்றதா? என்ற உங்கள் கேள்வி முக்கியத்தவமுடையதுதான். பிரிவினைக்குட்பட்ட தீர்வா? அப்பாற்பட்டதீர்வா? என்பது சூழலைப் பொறுத்தது. 50,60,70 கள் வரை ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கும் சூழ்நிலைகளை இக்காலங்கள் கொண்டிருந்தது. முன்வைத்திருந்தால், தீர்க்கப்பட்டிருக்குமா? அல்லது மேலும் வளர்ந்திருக்குமா? என்பது வேறுவிசயம். எனினும் முன்வைக்கும் சூழல் இருந்ததாகக் கொள்ளலாம். அதன்பிறகு தமிழர்கள் தமிழீழம் கேட்க, சிங்களர்கள் உக்கிரமடைந்து தாக்க, பதிலுக்கு தமிழர்களும் ஆயுதமேந்த தொடங்கிவிட்டார்கள். அதன்பின் அரசியல் தீர்வு சாத்தியப்பாடு மெல்லகுறைந்து முடிவுக்கு வந்துவிட்டது. இனமுரண், இனப்பகையாகி, இனமுறிவாகி அதன் உச்சத்திலிருக்கிறது. ஈழம் பெறாமல் தமக்கு வாழ்வில்லை என்று தமிழர்களும், அதற்கு விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று சிங்களர்களும் அனைத்துக் களங்களிலும் நேருக்கு நேர் நிற்கிறார்கள்.
இந்நிலையில் சேர்ந்து வாழச்சொல்லும் உங்கள் எந்த தீர்வும், இவர்களின் இனப்பிணைப்பை உறுதிப்படுத்துமா? முரண்பட்ட இரு இனங்களை பிணைப்பது, அரசியல் தீர்வென்ன, மனித குலபேராற்றலுக்கே அப்பாற்பட்டது. இரு இனங்களின் தலைமுறைகள்நீண்ட பரஸ்பர உணர்வு படிமங்களுக்கு மட்டுமே இவர்களைப் பிணைக்கும் ஆற்றல் உண்டு. பிணக்கு என்பது மிகவிரைவாக ஏற்படுவதும், பிணைப்பு என்பது மிகமெதுவாக நிகழ்வதும் எல்லா உறவுகளிலுமான பொதுவிதி. இங்கே 60 ஆண்டுகள் பிணக்குக்கு என்றால் எத்தனை ஆண்டுகள் பிணைப்புக்கு? இதையெல்லாம் மூடி மறைத்து எப்படி நீங்கள் சமரசதீர்வை சாத்தியம் என்கிறீர்கள்?

7. நீங்கள் எந்த அரசியல் தீர்வை வைத்தாலும், தமிழ்ப்பகுதிகளில் இராணுவம் நிற்குமா? நிற்காதா? என்பதே முக்கிய கேள்வி. நிற்கும் என்பீர்களேயானால், அரசியல் தீர்வு காலத்திற்கும், முந்தைய காலத்திற்கும் என்ன வேறுபாடு? நிற்கக்கூடாது என்பதற்காகத்தான் முதலில் விடுதலை புலிகளை ஒழித்துவிட்டு அரசியல்தீர்வு என்பீர்களாயின், விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று எப்படி இறுதி செய்வது? தளப்பிரதேச வெற்றிகளே வி.புலிகள் ஒழிக்கப்பட்டதன் பொருள் என்றால், சிங்கள இராணுவம் அதன் பின் தமிழ்ப்பகுதிகளை விட்டு வெளியேறிவிடுமா? அல்லது வி.புலிகள் இன்னும் இருக்கக்கூடும், கொரில்லா போர் தொடங்கக்கூடும் என்று அங்கேயே நிலைகொள்ளுமா? வி.புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று எதை வைத்தும் இறுதி செய்ய முடியாது என்றால், காலாகாலத்திற்கும் தமிழர் பகுதிகளில் இராணுவ ஆட்சிதானா?
போர்க்களத்திலே புலிகளை ஒழித்துவிடவேண்டும் அல்லது ஒழித்துவிடலாம் என்று சொல்கிறீர்களே, சமூக களத்திலே புலிகளின் ஊற்றெடுப்பை தடுக்கமுடியாது என்பதை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? அவ்வூற்றெடுப்பை நிறுத்தாமல், புலிகளை ஒழிப்பதாய் சொல்வது, தமிழ்இனம் வற்றித் தீரும் வரை ஒழித்துக்கொண்டே இருப்பதாய் சொல்வதுதான். புலிகளின் ஊற்றெடுப்பை தடுக்க 3 வழிகள் உண்டு.
அ. சிங்கள தமிழ் இனப்பிணைப்பு – இதை நாம் தீர்மானிக்க முடியாது. காலம் மட்டுமே தீர்மானிக்கும்.
ஆ. ஈழப்பிரிவினை – இதை நாமும் தீர்மானிக்கலாம், காலமும் தீர்மானிக்கலாம். ஒரே வேறுபாடு, நாம் தீர்மானித்தால் எதிர்வரும் இழப்புகளைத் தவிர்க்கலாம். காலம் தீர்மானித்தால் அதையெல்லாம் பார்க்கலாம்.
இ. உளவியல் அழிப்பு – அதாவது தொடர்படுகொலைகள் மூலம் ஒட்டு மொத்த தமிழினத்தையும் ஒரு பீதியுற்ற மனநோய்க்கு ஆளாக்கி, புலிகளின் ஊற்றெடுப்பைத் தடுப்பது. இதுவே சிங்கள அரசால் தீர்மானிக்கப்பட்டு நடந்துவருவதும், 50x 10 தினரே, உங்களால் ஆதரிக்கப்பட்டு வருவதும் ஆகும். எனவே புலிகளை அழிப்பதும் ஏதோ ஒரு விதமாக இனத்தை அழிப்பதும் வேறல்ல அப்படியானால் உங்கள் அரசியல்தீர்வு இன அழிப்பிற்கு பின்னர்தானே நடைமுறைக்கு வர முடியும்?
8. உலகில் 0.2% மனிதபளமும், 0.05% உலக நிலப்பரப்பு கூட இல்லாத, வேறு அரியவளம் ஏதுமிராத, இலங்கையின் வர்த்த மதிப்பு உலக வர்த்தகமதிப்பில் ஒற்றைச் சதவிதத்திற்கும் கீழானதே. 50×10தினரே, நீங்கள் இந்த சொற்ப வளத்தை பங்கிடும் அற்ப நலனுக்காகவே சிங்கள அரசை ஆதரிக்கிறீர்கள் என்றால், பிணத்தில் பணம் பொறுக்குவது, மலத்தில் அரிசி பொறுக்குவதை விட எந்தவகையில் உயர்வானது?
இல்லை, இலங்கையைவிட சுமார் 80 மடங்கு மனிதவளமும், 40 மடங்கு மண்வளமும் கொண்ட இந்தியாவுடனான பொருளாதார நலன்கள் பாதிக்காமலிருக்கவே, போருக்கு மறைமுக தலைமையளிக்கும் இந்தியாவை மீற மறுக்கிறீர்கள் என்றால், இலங்கûயில் ஈழத்தமிழர்களுக்கு பதிலாக உங்கள் அமெரிக்க மக்கள், பிரித்தானியமக்கள், பிரெஞ்சு, ஜெர்மானிய மக்கள் படுகொலை செய்யப்பட்டாலும், இந்தியாவுடனான பொருளாதார நலன்களையே முதன்மை படுத்துவீர்களா? மாட்டீர்கள் என்றால் ஈழமக்கள் மட்டும் என்ன புழுக்களா? பூச்சிகளா? அவர்கள் நம் தாயுலகப் பொதுமக்கள் இல்லையா?
இல்லை, இராணுவ கேந்திர முக்கியத்துவத்தை அடைவதற்குத் தான் உங்களில் முன்னனி நாடுகளைச் சேர்ந்தவர்கள் முயல்கிறீர்கள் என்றால், இது சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பதை போன்றது. உங்களை பொறுத்தவரை, இலங்கை தெற்காசிய இராணுவ கேந்திர முக்கியத்துவம் உடைய சிறு துரும்பு. எனினும் இத்துரும்பு பல்குத்த உதவும் சூழ்நிலை வருமா? வராதா? சூழ்நிலையில் பயன்படுமா? பயன்படாதா? பயன்பட்டாலும் யாருக்குபயன்படும்? என்ற தீர்க்க தரிசனமெல்லாம் உங்களிடம் இல்லை. இன்றைய கணிப்பை காலம் மாற்றாது என்ற உறுதிப்பாடும் இல்லை. இருப்பினும் ஒரு வெற்று வாய்ப்பை அடையும் போட்டியில் சிங்கள அரசின் இணக்கத்தைப் பெற ஆயுதம் தருகிறீர்கள், நிதி தருகிறீர்கள், அரசியல் தீர்வு தருகிறீர்கள், இன அழிப்பிற்கு பயங்கரவாத அழிப்பு என பெயர்தருகிறீர்கள். சிலநேரம் சிங்கள அரசைமிரட்ட ஈழப்படுகொலைகளை கருத்துப் பணியமாய் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் இலட்சக்கணக்கான மனித உயிர்கள் அழிவதாயினும், உங்கள் நலனுக்கான சிறு துரும்பைக் கூட விட்டுத்தர மாட்டீர்கள்.
ஈழப்படுகொலை – உங்களுக்கு இலாபம்தரும் இரவல் மூலதனம் எனவே அதை இழக்க மாட்டீர்கள்.
ஈழப்படுகொலை – உங்கள் நன்மைக்குச் செய்யப்படும் நரபலி எனவே தடுக்கமாட்டீர்கள்.
இது மனித நலன்களை மிருகநலன்களுக்கு உட்படுத்துவதுபோல் இல்லையா?
9. 70% மொத்த வாக்குபதிவில் 36 சதவீதம் பெரும்பான்மை பெற்று,தங்களுக்கு ஆதரவளிக்காத 64 சதவீதம் மக்களையும் சேர்த்து 100% மக்கள் மீதும் அதிகாரம் செலுத்துவதைக்கூட முழுசனநாயக அரசுகள் என்று தகுதி பேசும் நீங்கள், 90% மக்களின் உணர்வையும் உயிரையும் கூட ஆதரவாய் பெற்ற புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்தீர்கள் அதற்கும் முன்னதாக இருந்து அவர்கள் அமைத்த தமிழீழ சனநாயக அரசை அங்கீகரிக்க மறுத்தீர்கள். இது 36% மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றவர்களெல்லாம் சேர்ந்து 90 % மதிப்பெண் பெற்றவனை மக்கு என்று உரக்கக் கூறி நம்பச் செய்வது போல்இல்லையா? நீங்களும் முழு சனநாயகத் தலைவர்கள் இல்லை உங்கள் செயல்களிலும் சனநாயகம் இல்லை. இருந்திருந்தால், 10 மணி நேரத்தேர்தல் நடத்தி, ஈழவிடுதலையையும், புலிகள் ஆதரவையும் முடிவு செய்திருக்கலாமே அல்லது சிங்கள அரசிற்கு உங்கள் கருத்தாக இதைச் சொல்லியிருக்கலாமே? ஏன் இந்த அரசியல்தீர்வு பாவனைகள்?
10. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட 42 நாடுகளிலும் பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்டதால், அவ்வெல்லைகளைத் தாண்டி தமிழ் ஈழத்திலும் அது பயங்கரவாத இயக்கம் ஆகிவிடுமா? இந்தியாவிற்கு பாகிஸ்தான் ‘பகைநாடாக’ இருப்பதால், பாகிஸ்தான் பாகிஸ்தானிய மக்களுக்கே பகை நாடாகிவிடுமா? உங்கள் எல்லைகளில் நீங்கள் பயங்கரவாத இயக்கம் என அறிவித்தாலும், தமிழீழ எல்லைக்குள் அது மக்கள் இயக்கமே என்பதை நேர்மையோடு சொல்லியிருக்க வேண்டும். அந்த நேர்மையில்லாமல் நடந்து கொண்டதால், உலகின் பார்வையில் மக்கள் வேறு, புலிகள் வேறு என்று ஆக்கிவிட்டீர்கள். இன அழிப்புப் போரை பயங்கரவாத எதிர்ப்புபோராய் ஆக்கிவிட்டீர்கள். இத்தகைய உங்கள் கருத்தியல் பங்களிப்பு, இன்றைய இனப்படுகொலைகளின் அடிப்படையாக இருக்கும்போது, அடுத்ததான உங்கள் ‘அரசியல் தீர்வு’ பங்களிப்பு எப்படி அழிவற்றதாக இருக்கமுடியும்?
எனவே சமரச தீர்வு, சனநாயகத்தீர்வு என்றெல்லாம் கூறப்படும் இறையாண்மைக்குட்பட்ட அரசியல் தீர்வு, பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனற்றதாகும். எதை எதையோ தீர்வாகச் சொல்லி, ஈழப்பிரிவினையை மறுக்கும் துர்நோக்கமாகும்.
50×10 தினரின் அரசியல் தீர்வு என்பது :
1.சனநாயக வார்த்தைகளால் கூறப்படும் (சிங்கள) அதிகாரத்தீர்வு.
2.இனப்படுகொலைகள் தொடர்ந்துசெல்ல பாதைபோடும் தீர்வு.
3.இது எப்போதும் தமிழ்ப்பகுதிகளில் இராணுவ ஆட்சியையே தொடர வழி செய்யும் தீர்வு.
4.இது தமிழ் மக்களின் உயிரச்சத்தையும், வாழ்வியல் அச்சத்தையும் உதாசீனப்படுத்தும் தீர்வு.
5. இது முற்றிலும் பிளந்து கிடக்கும் இரு சமூகங்களை ஒரே சமூகம் போல் காட்டும் காட்சிப்பிழையும், கருத்துப்பிழையும் கொண்ட தீர்வு
6.இது தமிழ்மக்களின் நலன்களிலிருந்து அல்லாமல். நாடுகளின் இராஜதந்திர நலன்களுக்காய் சொல்லப்படும் தீர்வு.
7. இது தேசிய இன உணர்வுகளை உணரமுடியாத அவ்வுணர்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட நேரெதிரான அதிகார உணர்வாளர்களால் முன்வைக்கப்படும் தீர்வு.
8. இது இரத்தப்புற்றுநோயை, இலேசான தொற்றுநோய் போல் பாவிக்கும் மருத்துவம் போன்ற தீர்வு.
9. குழந்தைக்கு பால் பொருத்தமான உணவு என்பதால் அதன் ஆயுள்முழுவதும் பாலே பொருத்தமான உணவு என்பதைப் போன்ற காலப்பொருத்தமற்ற தீர்வு.
10. இது இனஒதுக்கலுக்கும், இன ஒழிப்புக்கும் காரணமாயிருந்து வரும் சிங்கள பெரும்பான்மை அதிகாரம் என்னும் மூலவேரை அப்படியே தொடர அனுமதிக்கும் தீர்வு.
11. இது அதிகாரத்தில் பெரும்பான்மை, சிறுபான்மை விகிதாச்சாரம் சொன்னால், மீண்டும் சிங்கள பெரும்பான்மை அதிகாரத்திற்கே வழிவகுக்கும் தீர்வு.
12.இது அதிகாரத்தில் இருவருக்கும் சமபங்கு என்று சொன்னால், சிங்கள பேரினத்திற்கு செய்யும் துரோகத்தீர்வு. அவர்களால் ஏற்கப்படாமல், இனப்படுகொலைகளை மேலும் மூர்க்கப்ப்படுத்தம் தீர்வு.
13.சமஉரிமைகள் வழங்கப்பட்டாலும் மீண்டும் அது சிங்கள பெரும்பான்மையால் கடந்த காலங்கள் போல் மறுக்கப்படக்கூடிய தீர்வு.
14.இது சமஉரிமைச்சட்டங்களை மீறும் சிங்களர்களைத் தடுக்க தமிழர்க்கு அதிகாரம் தரமுடியாத தீர்வு.
15.பிரிந்தே ஆகவேண்டிய இறுதி எல்லையில் தமிழர்களும், சேர்த்துவைத்து அழித்தே ஆகவேண்டிய இறுதி எல்லையில் சிங்களர்களும் இருக்கும் சமூக சூழ்நிலைகளை முற்றிலும் பொருட்படுத்தாத தீர்வு.
16.அதிகாரமற்ற மக்களுக்கும், போடப்படும் ஒப்பந்தத்தை எல்லாவிதத்திலும் மீறமுடிந்த அதிகாரமிக்க அரசுக்கும், இடையில் கிட்டத்தட்ட ஒப்பந்தமாயில்லாத, மிக பலவீனமான ஒப்பந்தத்தை நம்புகின்ற தீர்வு.
17.இதுவரையிலும் நடந்து வருகின்ற, இன்னும் தொடரவிருக்கின்ற அப்பாவி மனித உயிர் அழிவுகள் குறித்து, கொஞ்சமும் பதற்றப்படாத, ஈவு, இரக்கம் காட்டாத தீர்வு.
18.பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பங்களை மதிக்காமல், அன்னியரால் வன்முறையாக திணிக்கப்படும் தீர்வு.
19.தமிழர்களின் தரப்பு புலிகள் என்பதையே மறுத்து, இருதரப்பு என்பதே இல்லாமல் செய்து ஒரு தரப்பாய் ஒப்பந்தம் போடும் ஏகபோகர்களின் தீர்வு.
20.இது மொத்தித்தில் ஈழத்தமிழ் தேசிய சுய நிர்ணய உரிமையின் மீது சர்வதேச மீறல் படும் தீர்வு.
உலகமக்கள் யாவரும் பிழையான தீர்வுகளை மறுக்கவும், தனி ஈழ அமைவிற்கு ஆதரவளிக்கவும் ஒவ்வொரு விதத்தில் கடமைப்பட்டவர்களே.
அமெரிக்கமக்களே,செப்.11-தாக்குதலின் பின் அவசரகோலமாக சம்பந்தமற்ற முறையில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதால் அதைப்பயன்படுத்தி பயங்கரவாத அழிப்பு என்ற பெயரில் சிங்கள அரசு செய்து வரும் இன அழிப்பில் உங்கள் காரண-காரிய பங்குக்கு பொறுப்பேற்று தடையை நீக்கி, தனிஈழ அமைவை ஆதரியுங்கள்
பிரித்தானிய மக்களே,1948-ல் உங்கள் முன்னோர்கள் செய்து சென்ற வரலாற்றுப் பிழைகளின் கோரவிளைவுகளுக்கு தார்மீகப்பொறுப்பேற்று, அதற்கான வரலாற்றுத்திருத்தமாக தனிஈழ அமைவை ஆதரியுங்கள்.
தேசியவிடுதலை பெற்ற மக்களே,நீங்கள் தேசிய விடுதலை உணர்ச்சிகளை நடைமுறைகொண்டவர்கள், சக தேசிய இனத்தின் விடுதலை உணர்ச்சியை மதித்து, தனிஈழ அமைவை சகோதர உணர்வோடு ஆதரியுங்கள்.
ஈழப்போராட்டத்திற்கு பின் விடுதலை பெற்ற தேசிய இனங்களே,உங்கள் தேசிய விடுதலை போராட்டத்திற்கு மூத்த தேசிய விடுதலைப்போராட்டம் என்ற வகையில், ஈழவிடுதலை போராட்டம் புறவயத்தாக்கமாக நின்று உங்கள் எழுச்சிக்கு ஆதர்சனமாய் உதவாமல் இருந்திருக்க முடியாது. அதற்கான உங்கள் நன்றிக் கடனை தீர்க்கும் விதத்தில் தனி ஈழஅமைவை உரக்கஆதரியுங்கள்.
20-ம் நூற்றாண்டு மத்தியில் பிரித்தானிய காலனி விடுதலை பெற்ற மக்களே,உங்கள் நாடுகளின் விடுதலை என்பது, அன்றைய பிரித்தானிய காலனி நாடுகளின் பொதுப் போராட்டத்தின் பொதுவிளைவு. அப்பொதுப் போராட்டம் என்ற வகையிலேயே, உங்கள் விடுதலையில் இலங்கைக்கும் பங்குண்டு. ஆனால் உங்கள் பங்கால் இலங்கை பெற்ற விடுதலை இன்னும் போய் ஈழத்தமிழர்க்கு சேரவில்லை. சேராத பிரதிபலனை சேர்க்க தனி ஈழ அமைவை ஆதரியுங்கள்.
புலம் பெயர்தமிழர் வாழும் தேசமக்களே,ஈழத்தமிழர் வேதனையை, உலகமக்கள் எல்லோரினும் கூடுதலாக உணரமுடிந்தவர்கள் நீங்களே. ஏனெனில் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து அவர்களின் சொந்தங்களாகிவிட்ட மக்கள் நீங்களே, உங்கள் சொந்தங்களை காக்கும் கடமையாக
தனி ஈழ அமைவை ஒரே தீர்வென ஆதரியுங்கள்
உலகமக்களேஉங்கள் ஆதரவு நாகரிகத்திற்கா? காட்டுமிராண்டித்தனத்திற்கா? என்ற கேள்வி அரசியல் தீர்வுக்கா? தனிஈழ அமைவிற்கா? என உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. நாகரீகமே என்று பதிலளிக்க தனி ஈழ அமைவை ஆதரியுங்கள்.
தமிழக மக்களே,நீங்கள் விரும்பினாலும், வெறுத்தாலும், ஏற்றாலும், மறுத்தாலும், ஈழ மக்கள் தங்களின் தாயாகவே உங்களை தத்தெடுத்துவிட்டவர்கள். தாயின் அரவணைப்பும், பாதுகாப்பும் இருக்குமென்று நம்பியே சிங்களத்தை எதிர்க்கும் துணிச்சல் கொண்டார்கள். ஏழாம் தர ஊடகச் செய்திகளாலும், 8-ம் தர அரசியல்வாதிகளாலும், 80-களில் இருந்து வந்த உங்கள் பெரும் ஆதரவு, 90-களில் தடுமாறியது. இப்போது மீண்டும் தடுமாறி தன்னெமுச்சி ஒன்று வயப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மனிதாபிமானத் தடுமாற்றங்களை விட்டு அரசியல் நியாயங்களிலிருந்து உங்கள் தாய்மைப் பொறுப்பை செய்தால், இலங்கைக்கு உதவ இந்தியா உங்களை மீறமுடியாது. சிங்களம் உலகை மீறமுடியாது.
ஈழ மறுப்புத் தீர்வுகளை இனம் காண்போம்!தனி ஈழ அமைவொன்றே தீர்வென்போம்.!!
பிரபாகரன்
இக்கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை படைப்பாளிக்கு அனுப்ப:praba.k865@gmail.com

இத்தாலிப் பெண்ணின் இன்னொரு முகம் ஈழத்தமிழனின் சோகத்துக்குக் காரணம் சோனியா

சொந்த நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படும் அவலம் விஸ்வரூபம் எடுத்ததில், ஐந்து கண்டங்களில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தஞ்சம் புகுந்திருக்கும் சூழல்.

கால் நுற்றாண்டுகளுக்கு மேலாக ஆயுதமேந்திப் போராடி வரும் போராளிகள் ஒருபக்கம். சொந்த மக்கள் மீதே தரை, கப்பல் மற்றும் வான்வழி என சிங்களப் பேரினவாத இராணுவம் நடத்தும் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கைப் பார்க்கும் அவலம் ஒரு பக்கம்.
1960 இல் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி ஐந்து லட்சம் மலையகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாகத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவதில் இருந்து ஈழ அவலத்தில் இந்தியாவுக்கான பங்கு தொடங்குகிறது. உழைத்து, உழைத்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கித் தந்த அந்த மலையகத் தமிழர்கள் வெறும் கையுடன் தமிழகம் வந்திறங்கி அவர்களில் பலர் அந்த வெறுங்கையை ஏந்தி, பிச்சையெடுக்கத் தள்ளப்பட்டனர் என்பதுதான் கொடுமையின் உச்சக் கட்டம்.
இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன என்கிற ஜே.வி.பி. கட்சியினர் ஆயுதமேந்தி கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அதை அடக்க இந்தியப் படையும், ஆயுதமும் அனுப்பப்பட்ட சரித்திரம் இலங்கைக்கு என்றைக்கும் இந்தியா பக்கபலமாக இருக்கும் என்பதை உலகிற்கும் ஈழத் தமிழனுக்கும் சொல்லாமல் சொல்லியது. பாகிஸ்தானை துண்டாடி வங்கதேசம் பிரிந்தபோது அதை வேடிக்கை பார்த்த இலங்கைக்கு, தமிழக மீனவர்களின் உரிமையான கச்சதீவை விட்டுக் கொடுத்தது இந்திரா காந்தியின் இந்திய அரசு. காஷ்மீரில் இருந்து ஒரு பிடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிற இந்தியக் குடியரசு தான் பாகிஸ்தானில் இருந்து வங்க தேசத்தைப் துண்டாடிவிட்டு, இந்தியாவின் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.
ஈழத் தமிழனின் உரிமைகள் மறுக்கப்பட்டு, உயிர்கள் பறிக்கப்பட்ட அவலநிலையில் வேறு வழியில்லாமல் ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திரா காந்தி அரசு 1983 இல் அளித்த பயிற்சி அங்கு தமிழீழம் மலர வேண்டும் என்பதற்கல்ல. அது, இலங்கை அரசை அச்சுறுத்த போராளிகளைப் பயன்படுத்திக் கொண்ட இந்தி(ரா)ய அரசின் குள்ளநரித்தனம்.
இந்நிலையில் வந்த ராஜீவ் காந்தி தனது நீண்ட மூக்கை ஈழப் பிரச்னையில் நுழைத்தார். இதிலிருந்தே இலங்கை-இந்தியாவுக்கான கருப்புச் சரித்திரத்துக்குச் சிவப்புச் சாயம் பூசப்பட்டது.
ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம் போடப்பட்டது. இந்திராவின் குள்ள நரித்தனத்தை மிஞ்சும் ஒரு காரியத்தை ஜெயவர்த்தன செய்து முடித்தார். அதாவது, ஒப்பந்தத்தை அமுலாக்கும் பொறுப்பு இந்திய அரசிடம், அதாவது ராஜீவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, தமிழ்ப் படையினரின் ஆயுதங்களைத் திரும்பப் பெற இந்தியப் படையினரின் உதவியை இலங்கை நாடியது. ஆக்கிரமிப்பு பேராசையில் இருந்த ராஜீவும் இதற்குப் பலிக்கடா ஆனார்.
பிரபாகரனும் ஆயுதங்களை ஒப்படைத்து விடுவார். மூன்று நாட்களில் வேலை முடிந்து விடும்” என்றுகூறி யாழ்ப்பாணம் சென்ற இந்தியப் படை திரும்பி வர மூன்று ஆண்டுகள் ஆனது. பிரபாகரனும் ஆயுதத்தை ஒப்படைக்கவில்லை. சுதந்திர தமிழ் ஈழத்தை உருவாக்கும் முயற்சியையும் கைவிடவில்லை என்பதுதான் இந்திய-இலங்கை அரசுகளின் முகத்தில் அறைந்த உண்மை.
தமிழகத்தில் இருந்து ஒக்டோபர் 3, 1987 இல் திரும்பிக் கொண்டிருந்த புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 13 பேரை பருத்தித்துறை அருகே கடலில் கைது செய்தது, இலங்கை அரசு. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே அவர்களை உயிரோடு விடக்கூடாது என்று கங்கணம் கட்டியது இலங்கை அரசு. அந்தப் போராளிகள் சயனைட் குப்பிகளைக் கடித்து உயிரை விட்டனர். இந்தச் சம்பவத்துக்குப் பின் தான் ‘எங்களுடைய இராணுவம் பெரியது எங்களால் இருபது ஆண்டுகள் போராட முடியும்” என்கிற திமிரோடு இலங்கையில் திரிந்த இந்தியப் படையினரின் 1,300 வீரர்களை கொன்று குவித்தனர், போராளிகள்.
ராஜீவின் நீண்ட மூக்குடைந்த அந்த ஆத்திரத்தில் ஈழப்பெண்களை சீரழித்தார்கள். அப்பாவித் தமிழர்களைப் பலி கொடுத்தார்கள். வி.பி.சிங் ஆட்சிக்கு வந்ததும் இலங்கையில் ஈழப் பெண்களை துகிலுரித்து பலாத்காரம் செய்த இந்திய அமைதிப் படையைத் (!) திரும்ப அழைத்துக் கொண்டார்.
தமிழர்களின் நலனைப் பாதுகாத்த ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தைப் போராளிகள் ஏற்க மறுத்து விட்டார்கள் என்று தமிழகக் காங்கிரஸார் இன்றும் வாய் கிழிகிறார்கள். ஆனால், அந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கையில் இந்திய ஓயில் கோரேஷனுக்குச் சொந்தமான நு}ற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் உருவானது. ஆக, இது யாருடைய நலனைக் கருத்தில் கொண்டு போடப்பட்ட ஒப்பந்தம்? அதில் எப்படி தமிழனுக்குத் தீர்வு கிடைக்கும்? ராஜீவ் து}க்கிப் பிடித்த இலங்கை ஒப்பந்தத்துக்கு நீண்டகால குறிக்கோள் எதுவும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.


ராஜீவ் கொலைக்குப் பின், இந்தியாவில் புலிகள் தடை செய்யப்பட்டனர். ஹிந்து ராம், சோ, சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, ஞானசேகரன், தங்கபாலு, இளங்கோவன் போன்றோர,; ராஜீவ் கொலையால் ஈழத் தமிழனின் பிரச்சினை திசைமாறிப் போனதாகப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
நாம் கேட்கிறோம். 60 இல் ஏற்பட்ட சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம் எந்தத் தமிழனின் நலனைக் காத்தது?

இந்திரா கச்சதீவை தாரை வார்த்துக் கொடுத்தது ஈழத் தமிழனின் நலனுக்காகவா?

ராஜீவ் காந்தி அமைதிப் படையை அனுப்பி, தமிழ்ப் பெண்களை சீரழித்து போராளிகளின் எண்ணிக்கையையும் ஆவேசத்தையும் அதிகரிக்கச் செய்தது தமிழ் மக்கள் மீதான அக்கறையிலா?

ஏதோ ராஜீவ் காந்தி கொலையால் புலிகளை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் பண்ணையார்களுக்கு ராஜபக்சவுடன் அப்படியென்ன இணக்கம் வேண்டி கிடக்கிறது?

காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் ஹசன் அலிக்கு ஒரு நாட்டின் அதிபரான ராஜபக்ச வாழ்த்துக் கடிதம் எழுத காரணம் என்ன? இதிலெல்லாம் தமிழனின் நலன் என்ன இருக்கிறது?
பாகிஸ்தானும், சீனாவும் இலங்கையோடு கொஞ்சிக் குலாவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை உணர்வுடன், ஓடோடிச் சென்று இலங்கைக்கு ஆயுத உதவியைச் செய்தது இந்திய அரசு.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்குத் து}க்குத் தண்டனை இரத்துக்குப் பரிந்துரைத்த ராஜீவ் மனைவி சோனியாவை தியாகத்தின் மறு உருவம்! என்கிறார்கள் கதர் சட்டை கோடீஸ்வரர்கள். அதே நளினியை வேலு}ர் சிறையில் சந்தித்துச் சென்றார், ராஜீவ்-சோனியா தம்பதியின் மகள் பிரியங்கா. ராஜீவ் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பெங்களூரு ரங்கநாத்தை சந்தித்து சோனியா பேசிய விவகாரம் அண்மையில் தான் வெளியானது.
இதையெல்லாம் கவனித்த போது சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் காந்தி போன்றோர்கள் ஈழ மண்ணுக்குச் செய்த துரோகத்தை சோனியா தலைமையிலான காங்கிரஸ் மற்றும் இந்தியக் குடியரசு செய்யாது என்கிற ஒரு மாயை உருவானது என்னவோ உண்மைதான். ‘சோனியா குடும்பத்தின் கருணையே கருணை என்று காங்கிரஸ் கi(ர)ற வேஷ்டிகள் ஃபிளக்ஸ் போர்டுகள் அச்சிட்டு மகிழ்ந்ததையும் மறக்க முடியாது. ஆனால், இந்த மாயை ஒரு ஏமாற்று வேலை.

சோனியா தன்னிடம் என்ன பேசினார்? என்று பெங்களுர் ரங்கநாத், நளினி போன்றோரின் பத்திரிகை பேட்டிகளில் இருந்து நாம் அறிவது என்ன?
‘ராஜீவ் காந்தியை ஏன் கொன்றீர்கள்?”
‘ராஜீவ் காந்தியை கொல்ல வந்தவர்கள் என்னென்ன பேசிக் கொண்டார்கள்?”
‘இதில் யாராருக்குத் தொடர்பு இருக்கிறது?”
‘இந்தக் கொலைத் திட்டத்தில் மற்றவர்களின் பங்கு என்ன?”
‘இந்தப் படுகொலை ராஜீவோடு நின்று விடுமா? அவரது வாரிசுகளான எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்படுமா?”
இதுபோன்ற கேள்விகளையே சோனியாவும் பிரியங்காவும் கேட்டதாக நளினி மற்றும் ரங்கநாத் ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள். இதில், அந்த இறுதிக் கேள்வி தான் முக்கியத்துவம் வாய்ந்தது. ராஜீவைக் கொன்ற நபர்களால் தமக்கும், தமது குடும்பத்துக்கும் ஏதாவது அச்சுறுத்தல் இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ளவே சோனியா முயல்கிறார். அப்படியென்றால் அவருக்குள் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது. அந்த நெருடல் என்ன? ராஜீவ் காந்தியின் அமைதிப்படை இலங்கையில் செய்த அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட வேதனைப்பட்ட எத்தனை, எத்தனையோ பேர் மாவீரர்களாக மாறிவிட்ட நிலையில் அவர்களால் நாமும் நமது குடும்பமும் பழி வாங்கப்படுவோமா? என்கிற பயமே சோனியா குடும்பத்தை அச்சுறுத்தி வருகிறது.
‘புலி வாலைப் பிடித்தால் விட்டுவிடக் கூடாது. விட்டால் அது கடித்துவிடும்” என்கிற போக்கில், தன் கணவர் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் தேடாமல் அடிபட்ட பாம்பை முற்றிலும் கொன்று விட்டால் வரும் காலத்தில் அது திரும்ப வந்து கடிக்கும் என்று அச்சப்பட வேண்டியதில்லை என்கிற நிலையிலேயே சோனியா அண்ட் குடும்பம் இருக்கிறது. இந்திரா, ராஜீவ் போன்றோர் கூட ஆக்கிரமிப்பு என்கிற பேராசையால் இலங்கைக்கு உதவினார்கள். ஆனால், சோனியாவே அடிப்படை ஆதாரமற்ற உயிர் பயத்தால் வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழ் மக்களைக் கொன்றொழிக்க முயன்று வருகிறார். சோனியாவின் ஆசையை நிறைவேற்றியே ஆகவேண்டிய பொறுப்பிலிருக்கும் மன்மோகன் சிங்கிற்கு வேறு வழி கிடையாது.
படையினரையும், இராணுவ அதிகாரிகளையும், ராடார்களையும், வட்டியில்லா கடன்களையும் வழங்கி, சோனியாவின் கனவில் வந்து பயமுறுத்தும் தமிழ் மக்களை கொன்றொழித்து வருகிறார் மன்மோகன் சிங். அதிலும் எம்.கே.நாராயணன், சிவசங்கரமேனன் போன்ற பாலக்காட்டு பார்ப்பன அதிகாரிகளும் சோனியா மனதில் கொளுந்து விட்டெரியும் பய நெருப்புக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சோனியாவைச் சந்தித்த பெங்களுர் ரங்கநாத், ‘ராஜீவ் கொலையாளிகள் சந்திராசாமி, சுப்பிரமணிசுவாமி பற்றியும் பேசிக் கொண்டார்கள்” என்று சொன்னதை சோனியாஜி காதில் போட்டுக் கொள்ளாதது ஏன்? (ராஜீவ் படுகொலை விசாரணையின் போது இதைச் சொன்னதற்காக ரங்கநாத்தின் பல்லை உடைத்திருக்கிறார், ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் சாந்த சொரூபியான அப்போதைய சிபிஐ இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன்.)
ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதும் சுப்பிரமணிய சுவாமி, ‘ராஜீவ் கொலையில் சோனியாவின் பங்கிருக்கிறது” என்று சொல்லி வரும் நிலையில் திருமாவளவனின் உருவப் பொம்மையை எரிக்கும் காங்கிரஸார், சுப்பிரமணிய சுவாமியின் உருவப் பொம்மையை எரிக்காதது ஏன்?
விடயத்துக்கு வருவோம். சோனியாவின் அர்த்தமற்ற, அடிப்படையற்ற அச்சத்தால் பயத்தால் ஈழ மக்கள் இன்றளவும் இன்னல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கணவர் ராஜீவ் செய்த தவறைத் திருத்திக்கொள்ள வழியிருக்கும் போது, அந்தத் தவறைத் திரும்பச் செய்வதன் மூலம் தன்னையும் தன் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று சோனியா காந்தி நினைக்கிறார் போலும். இதற்கெல்லாம் காலம் தான் இனி பதில் சொல்லும்!.

Source: http://www.nerudal.com/nerudal.228.html

திலீபன்: தியாக தீபத்திற்கு என் அஞ்சலிகள்

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன்.





கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல்,"நவீனன்" என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ?ஜில்? லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.மனம் 'பட பட' வென்று அடிக்கத் தொடங்கியது?மீண்டும் 'நவீனன்' என்று அழைத்தேன்.நவீனன் எழும்பி விட்டான்.
ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது? மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது? ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது.
பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது. திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன். அது மிகவும் குறைவாக இருக்கிறது. 50 என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும்.உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது.
திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.'வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது. அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுயநினைவோடு என்றாலும் சரி.சுய நினைவில்லை என்றாலும் சரி. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ' என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர்.
அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனிதநேயத்தையும் - அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?.......
எது?
ஆம்.சத்தியம்!
என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், அகிம்சை என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான்.
கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், 'கட்டுப்பாடு' என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே பலி கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை.என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன். திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.
'புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள். ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம். இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை'.
இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, புலிகள் பொய்யர்கள் என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம். ஆனால் முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான்.உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்?
265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09.1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.
ஆம். தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர். எங்கும் அழுகைச் சத்தம். விம்மல் ஒலி. சோக இசை. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு. காலை 11 மணிக்கு "என்பார்ம்" செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம்.பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் - கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, 'லெப்டினன்ட் கேணல்' என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும்.
ஆனால், என்ன செய்ய முடியும்?
அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் 'ஓ' என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர். ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.
திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார். அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு.
அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!

கிளிநொச்சி வெற்றி கொள்ளப்பட்ட நாள்

இன்று (27 செப்ரெம்பர்) ஓயாத அலைகள் -2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரம் தமிழர் தரப்பால் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

இன்று கிளிநொச்சியானது தமிழர், சிங்களவர் தரப்பில் மட்டுமன்றி உலகிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழர் தரப்பின் அரசியில் தலைமையகமாகக் கருதப்படுகிறது கிளிநொச்சி. பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று வரும் நகரம் அது.

பின்னணிதொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் இருந்து கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பில்லாமல் இருந்தது. வடபகுதியின் முக்கிய வியாபாரத் தளமாக இந்நகரம் இருந்துவந்தது.1995 இன் இறுதியில் நடந்த யாழ்ப்பாணத்தில் வலிகாம இடப்பெயர்வைத் தொடர்ந்து கிளிநொச்சியின் மக்கள் செறிவு அதிகரிக்கத் தொடங்கியது. 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக சிங்களப்படையினரிடம் வீழ்ந்தபோது கிளிநொச்சியின் சனச்செறிவு அதிகரித்திருந்தது. கிளிநொச்சி புதிதாகக் களைகட்டத் தொடங்கியது. இந்நிலையில் யாழ்ப்பாண இடப்பெயர்வின்பின் மிகக்குறுகிய காலத்துள் வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு முகாம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். "ஓயாத அலைகள்" என்று பெயரிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அம்முகாம் முற்றாகக் கைப்பற்றப்பட்டதோடு முதன்முதலாக தமிழர்படைக்கு ஆட்லறிப் பீரங்கிகளும் கிடைத்தன. அம்முகாமைக் காக்க சற்றுத்தள்ளி தரையிறக்கப்பட்ட படையினரையும் தாக்கி தப்பியோட வைத்ததோடு முல்லைத்தீவு நகரம் தமிழர் வசமானது. இன்றுவரையான போராட்டப் பாய்ச்சல்கள் அந்நகரத்தை மையமாக்கியே நடந்து வருகின்றன.முல்லைத்தீவு இழப்புக்குப் பதிலாக சிங்களப்படைகள் கைப்பற்றப் புறப்பட்ட நகரம் தான் கிளிநொச்சி. யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து களைகட்டியிருந்த கிளிநொச்சிக்கு வந்தது ஆபத்து 'சத்ஜெய' என்ற வடிவில். 'சத்ஜெய -1' என்ற பேரில் பரந்தன் சந்தியைக் கைப்பற்றினர். அதன்பின் 'சத்ஜெய -2' என்ற பேரில் கிளிநொச்சி நோக்கி முன்னேறிய படையினருக்கு அது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலைச் சந்திக்க வேண்டி வந்தது. புலிகளுக்கு அதுவொரு பயிற்சிக் களமாகக்கூட இருந்தது. பெருமெடுப்பில், யுத்த டாங்கிகளின் துணையோடு முன்னேறும் படையினரை எதிர்கொள்வது தொடர்பான ஆற்றலை மெருகூட்டும் நடவடிக்கை அது. தமது பீரங்கியணிகளையும், பீரங்கிச்கூட்டு வலுவையும் அக்களத்தில் மேம்படுத்திக் கொண்டார்கள் புலிகள். பின்வந்த 'ஜெயசிக்குறு' எதிர்ப்புக்கு இச்சமரிலிருந்து பயின்றவையே உதவின.சுமார் ஒருமாதகாலம் இழுத்தடித்த சத்ஜெய நடவடிக்கை, பின் 'சத்ஜெய -3' என்ற நிலைக்கு வந்தது. இறுதியாக கிளிநொச்சி சிங்களப் படைகளிடம் வீழ்ந்தது. ஒருவர்கூட அந்நகரில் இல்லாமல் அத்தனைபேரும் வன்னியின் ஏனைய பக்கங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.கிளிநொச்சியைக் கைப்பற்றவென சிங்களப் படைகள் கொடுத்த இன்னொரு விலை பூநகரி. பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றாக வெளியேறிச் சென்றது சிங்களப்படை. இன்றுவரை சிங்களப்படைகள் எடுத்த வருந்தத்தக்க முடிவுகளில் ஒன்றாக இப்பின்வாங்கல் இருக்கும். சம்பூரை விட்டுப் பின்வாங்கியதால் திருகோணமலைக்கு வந்தது பேராபத்து. அதேபோல் பூநகரியை விட்டுச் சென்றதால் இன்றுவரை யாழ்ப்பாணத்து இராணுவத்துக்குப் பேராபத்து தொடர்கிறது.இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப்போது தம் வீடுகளைப் பார்த்துவரவென கிளிநொச்சிக்குச் செல்வார்கள். சூனியப்பிரதேசம் என அவர்கள் நினைத்த இடங்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டார்கள்.இந்நிலையில் வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையமைக்க 'ஜெயசிக்குறு' என்ற பேரில் இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அவர்களது இலக்கு வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை செல்வதுதான். அந்நடவடிக்கை வன்னியை முழுப்போர்க்களமாக்கியது. சிறிது சிறிதாக முன்னேறி வந்த படைகள் வன்னியின் கணிசமான பகுதியைக் கைப்பற்றியிருந்தன. ஒருகட்டத்துக்கு மேல் முன்னேற முடியாதபோது வேறு முனைகளில் சமர் முனையைத் தொடக்கி இடங்களைப் பிடிக்க முற்பட்டார்கள். இறுதியாக மாங்குளம்வரை வந்தவர்கள், மாங்குளம் சந்தியைக் கைப்பற்ற முடியாமல் திண்டாடி நின்றார்கள்.1998இல் இலங்கைச் சுதந்திர தினமான பெப்ரவரி நாலாம் நாள் கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு பேருந்து விடுவதாக அப்போதைய பாதுகாப்புப் பிரதியமைச்சர் ரத்வத்த சூளுரைத்திருந்தார். (ஆனால் யாரோ கண்டி தலதா மாளிகைக்கு வெடிகுண்டுப் பாரவூர்தியை அனுப்பிவிட்டார்கள்) அதேநாளில் கிளிநொச்சியைக் கைப்பற்றவென புலிகள் தாக்குதல் தொடுத்தனர். அத்தாக்குதல் திட்டமிட்டபடி வெற்றியடையவில்லை. சிலபகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய வேறுசில பகுதிகளை விட்டுப் பின்வாங்க வேண்டிவந்தது. கணிசமான இழப்புடன் அத்தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது.அதன்பின் இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் பல நடந்தன. கிளிநொசச்சியிலிருந்து கண்டிவீதி வழியாக தெற்குநோக்கியும் பாரிய முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

இந்நிலையில் கிளிநொச்சியை மீட்கும்நாள் வந்தது.கிளிநொச்சி மீட்பு1998 செப்ரெம்பர் மாதம், 26 ஆம் நாள். தியாகி திலீபனின் பதினோராவது ஆண்டு நினைவுநாள். அவரின் நினைவுநாள் வன்னியில் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் புலிகளின் அணிகள் தாக்குதலுக்குத் தயாராகின்றன.

26 ஆம் நாளின் இரவில் தாக்குதல் அணிகள் இலக்குநோக்கி நகர்கின்றன. அன்றைய நள்ளிரவு தாண்டி 27 ஆம் நாள் அதிகாலை சமர் வெடிக்கின்றது. கிளிநொச்சி நகரை எதிரியிடமிருந்து மீட்பதற்கான சமர் "ஓயாத அலைகள் -2" என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடந்த கடும் சண்டையின்பின் கிளிநொச்சி நகரம் முற்றாகப் புலிகளிடம் வீந்தது. 1200 க்கும் மேற்பட்ட படையினர் கொல்ப்பட்டனர். கையளிக்கப்பட்ட இராணுவத்தினரது சடலங்களில் 600 சடலங்களை மாத்திரம் அரசதரப்புப் பெற்றுக்கொண்டது. மிகுதியை வழமைபோல் மறுத்துவிட்டது.கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி நகரம் முழுவதுமே உயர்வலுவான பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளையும் பதினைந்துக்கும் மேற்பட்ட முகாம்களையும் ஒரு பிரிகேட் தலைமையகத்தையும் கொண்டிருந்தது. இதன் வெளிப்புற முன்னரங்கப்பகுதி பதினைந்து 15 கிலோமீற்றர் நீளம்கொண்ட வலுவான காவலரண் வரிசையைக் கொண்டிருந்தது. (முல்லைத்தீவுப் படைத்தளம் 5 கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட படைத்தளம்).ஆனையிறவையும் கிளிநொச்சிப் படைத்தளத்தையும் ஊடறுத்து பரந்தனில் நிலைகொண்டிருந்த புலியணியைத் தாண்டி கிளிநொச்சியில் எஞ்சியிருந்த சிங்களப்படைகள் ஓட்டம் பிடித்தன. ஆடுமாடுகள் பட்டிவிட்டு ஓடுவதுபோல் நூற்றுக்கணக்கில் கும்பலாக ஓடித்தப்பிய படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் சில வீரவரலாறுகள் புலிகளால் எழுதப்பட்டன.புலிகளின் மகளிர் படையணியொன்றின் தளபதியாக களத்தில் நின்ற லெப்.கேணல் செல்வி, எறிகணைகளை எதிரிகளுக்கிடையில் வீழ்த்த ஆள்கூறுகளையும் திருத்தங்களையும் பீரங்கிப்டையணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தார். அதில் கொல்லப்பட்டவர்கள் போக மிகுதி இராணுவத்தினர் செல்வியையும் தாண்டி ஆனையிறவு நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.துப்பாக்கியால் சண்டைபிடிக்க முடியாதளவுக்கு கொத்துக் கொத்தாக இராணுவத்தினர்.செல்வியின் பீரங்கிப்படைக்கான அறிவுறுத்தல் இப்படியாக இருந்தது."என்னைச்சுத்தி ஆமிதான் நிக்கிறான். என்னால இனி ஒண்டும் செய்ய ஏலாது. என்னைப்பற்றிக் கவலைப்படாமல் நான் நிக்கிற இடத்துக்கு செறிவா குத்துங்கோ...."அச்சமரில் லெப்.கேணல் செல்வி வீரச்சாவடைந்திருந்தார்.இதே போன்றதொரு சம்பவம் மீண்டும் 11.08.2006 அன்று யாழ்ப்பாணம் மீது புலிகளால் நடத்தப்பட்ட சமரிலும் நடந்தது.ஓயாத அலைகள் -2 சமரில் நிறைய பீரங்கிகள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. புலிகளின் பீரங்கிப்படையணி வளர்ச்சிக்கு முக்கியமான பாய்ச்சலாக அது இருந்தது.புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது படையினர் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றினர். ஆனால் ஏற்கனவே பலதடவைகள் அச்சந்தியைத் தாம் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்திருந்ததால் அவ்வெற்றி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.ஓயாத அலைகள் -2 நடவடிக்கையில் கிளிநொச்சி நகரை மீட்பதற்காககக் களமாடி வீரச்சாவடைந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு எமது அஞ்சலி.

Source: http://pooraayam.blogspot.com/

இந்துவை வாங்காதீர்கள்


அன்பிற்குரிய தமிழகத் தமிழர்களுக்கு,ஈழம் பற்றிய செய்திகளை நம்மூரில் தெரியவிடாமல் செய்து கொண்டிருப்பதில் ஆங்கில மிடையங்களின் பங்கு பெரியது (தமிழ் மிடையங்களில் ஒருசில கொஞ்சமாக வேணும் செய்திகளை வெளியிடுகின்றன.) அதிலும் முகன்மையான பங்கு வகிப்பது இலங்காரத்னாவின் “The Hindu" நாளிதழ் தான். இவர்களின் திமிரான ஆட்டங்கள், ஈழம் பற்றிய குசும்புகள், அங்கு இவர்கள் செய்த குழப்படிகள், ஈழத்தைத் தமிழகத் தமிழரிடமிருந்து உணர்வால் பிரித்தது, தமிழினக் கொலைக்கு உறுதுணையாக இருப்பது எனப் பலவாறாச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு நாட்டின், இனத்தின், தேசத்தின் எதிர்காலத்தில் விளையாட என்.ராமுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவர்களின் கூட்டிக் கொடுக்கும் செயலுக்குப் பரிசாகப் பெற்ற இலங்காரத்னா பட்டத்தின் ஆழம் இப்பொழுதாவது நம் மக்களுக்குப் புரியட்டும். இவர்களின் அழிச்சாட்டியம் இவர்கள் நாளிதழை நாம் வாங்குகின்ற வரையில் தான் நீளும். இவர்களின் பொய்யும் புளுகும் இவர்களின் வயிற்றில் அடித்தால் தான் நிற்கும். அவர்களை நிற்பாட்டுவது நம் கையில் இருக்கிறது. அதை நாம் ஒவ்வொருவரும் கூட்டாகச் சேர்ந்தால் செய்யமுடியும். இது காந்தி செய்த வழி தான் ”ஒத்துழையாமை இயக்கம்”. இவர்களின் பொருள்களை (இங்கு நாளிதழ்) வாங்காமல் இருந்தால் தானே வழிக்கு வருவார்கள். இது நம்மால் முற்றிலும் செய்யக் கூடிய ஒரு செயல் தான். இனி வரும் நாட்களில் யாரும் இந்துவை வாங்காதீர்கள். கால காலப் பழக்கத்தை நிறுத்துவது நம்மில் பலருக்கும் சரவல் தான். ஆனாலும் செய்யுங்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலப் பழக்கத்தை கடினமாய் முயன்று நிறுத்தி ஒரு மாதமாக நான் வாங்காது இருக்கிறேன். இந்த நாளிதழ் ஈழம் பற்றிய செய்திகளில் நொதுமல் (neutral) நிலை எடுக்கும் வரை இதை வாங்குவதில்லை என்பதே என் முடிவு. (அப்படிச் செய்தி தெரியவேண்டுமென்றால் வலைத்தளங்களுக்குப் போய் தெரிந்து கொள்ளுங்கள்.) நம் காசு வாங்கி இவர்கள் பிழைக்க வேண்டாம். என்னை அறிந்த பலருக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். இந்த வேண்டுகோளை உங்களுக்குத் தெரிந்த எல்லோரிடமும் சொல்லுங்கள். சிறுதுளி பெருவெள்ளம். இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளம் பெருகியிருந்தால் மனம் கொஞ்சமாவது ஆறுதற்படும்.



தமிழீழம்: மயிலே மயிலே என்றால் இறகு போடாது...

கடவுளே போய் காரியம் நடக்கேலை, பூசாரி போகின்றார் எல்லாம் நடந்துவிடும் என்று நம்பச் சொல்கின்றார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், வவுனியாவிற்கு நேரில் சென்று முகாம்களைப் பார்வையிட்டுவிட்டு திரும்பிய பின், உலகத்திலே மிக மோசமான முகாம் என்று தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.இத்தனைக்கும் அவர் பார்வையிடுவதற்கு சென்றிருந்த முகாம், படையினரால் ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்டு தரம் உயர்ந்ததாக காண்பிக்கப்பட்டிருந்த ஒரு தடுப்பு முகாம். அதனையே உலகத்தில் மிக மோசமான முகாம் என பான் கீ மூன் வர்ணித்திருந்தார் எனில், அவர் போகாத ஏனைய முகாம்கள் குறித்து சொல்லத் தேவையில்லை.
இன்றும் அந்தச் சிறை முகாம்கள் அதனை விட மிகமோசமாக, மனிதர்கள் வசிக்க முடியாதவையாக இருக்கின்றன என்பதை சர்வதேச ஊடகங்கள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி வருகின்றன. ஆனாலும் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அங்கு இன்னமும் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார்கள். கடந்த மே மாதம் இலங்கைக்குச் சென்றிருந்த பான் கீ மூன், அந்த மக்களை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்றே அப்போது எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட செயலர் பான் கீ மூன், ‘சிறீலங்கா அரசாங்கம் தன்னால் முடிந்த அதிகளவிலானவற்றை செய்து கொண்டிருக்கிறது' என்று புகழாரம் சூட்டியதுடன், ‘சிறீலங்காவின் முயற்சிகளை தான் பாராட்டுகின்றேன்' என்றும் கூறிவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்காமல் திரும்பியிருந்தார். ஐ.நா. சபையின் நடவடிக்கைகளை வெளிக்கொண்டுவரும் இன்னர் சிற்றி பிரஸ் கூட கேலி செய்கின்ற அளவிற்கு இலங்கைக்கான இவரது பயணம் அமைந்திருந்தது.
ஆனால், பான் கீ மூன் தனது பயணத்தின் போது தனது நலன்சார்ந்த உடன்படிக்கைகளை சிறீலங்கா அரசுடன் செய்துகொண்டிருந்தார் என்ற விபரங்கள் அண்மையில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தமிழ் மக்களைப் பகடைக் காய்களாக வைத்து ஐ.நா பொதுச்செயலர் ஆடிய ஆட்டங்கள் தமிழ் மக்களிடையே பெரும் வேதனையையும், அவரது நடுநிலை தொடர்பாக நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தியிருந்தன.
அத்துடன், பான் கீ மூனின் மருமகன் (மகளின் கணவன்) சித்தார்த் சட்டர்ஜி ஒரு இந்தியக் குடிமகன் என்பதுடன், இந்திய இராணுவ சிறப்பு படையணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், இலங்கையில் இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்த காலத்தில் அங்கு போரில் ஈடுபட்டிருந்தவர் எனவும் தகவல்கள் உள்ளன. இப்போது ஐ.நா. செயலரின் மகளும், மருமகனும் ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
இவர்களுக்கான பதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா. பொதுச் செயலர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்நிலையில்தான், தற்போது இராணுவச் சிறை முகாம்களில் வாடும் தமிழ் மக்களின் நிலை தொடர்பாக நேரடியாக ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அரசியல்துறை அதிகாரியான லைன் பாஸ்கோவே சென்றிருக்கின்றார்.
ஐ.நா. செயலர் பான் கீ மூனினால் நேரடியாக இவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு இத்தனை அவலங்களை ஏற்படுத்திவிட்டு, அந்த மக்களை இன்னும் சிறையில் அடைத்து வைத்திருக்கும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிவிட்டே செயலர் பான் கீ மூன் தனது சிறப்புப் பிரதிநிதியாக பாஸ்கோவேவை அனுப்பிவைப்பதற்கு தீர்மானித்ததாக ஐ.நா. செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறீலங்காவிடம் ‘இரந்து' தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுவிடலாம் என ஐ.நா இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளதையே இது காட்டுகின்றது. மக்கள் மீது உலகில் தடை செய்யப்பட்ட குண்டுகளை எல்லாம் கொண்டுவந்து கொட்டி பேரழிவை ஏற்படுத்திய சிறீலங்கா, வன்னியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளால் அந்த மக்களின் கால்கள் பறி போய்விடும் என்று கவலைப்பட்டு மீளக் குடியேற அனுமதிக்காமல் காலத்தை இழுத்தடிப்பதை இந்த சர்வதேச சமூகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது.
மயிலே மயிலே என்று சிறீலங்காவிடம் கெஞ்சி இறகைப் பெற்றுவிடலாம் என்று நம்பிய உலகிற்கு, தானாக அது இறகைத் தராது, அதனிடம் இருந்து இறகைப் பிடுங்கித்தான் எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இப்போது சரியான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.
உலகிற்குப் புரிந்த இந்தத் தத்துவம், ஐ.நாவிற்கு எப்போது புரியும்..?

காத்திருந்தேன்... கதை முடித்தேன்! ஜெனரல் டயருக்கு மட்டுமல்ல ராஜீவ் காந்திக்கும் அதுவே பொருந்தும்!

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாகாக் கடுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரையும், அவரது மேலதிகாரி மைக்கேல் ஓ டயரையும் இங்கிலாந்து வரை தேடிச் சென்று, ஜெனரல் டயர் நோய்வாய்ப்பட்டு ஜெனரல் டயர் இறந்துவிட, எஞ்சியிருந்த மைக்கேல் ஓ டயரை விழா ஒன்றில் சுட்டுக்கொன்றார் ஷாஹித் உத்தம் சிங். தன் தேசத்து மக்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட கொடியவனில் ஒருவனையாவது சுட்டுக் கொன்ற திருப்தியுடன் 31 ஜுலை 1940 அன்று இங்கிலாந்து நாட்டில் தூக்கிலிடப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டார்.
இவரது எஞ்சிய உடல் பாகங்கள் கல்லறையில் தோண்டி எடுக்கப்பட்டு, 1974-ம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, அரச மரியாதையுடன் அவரது பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மாவீரரைக் கவுரவப்படுத்தி 'காத்திருந்தேன்... கதை முடித்தேன்!' என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் நாடு போற்றும் வீரர்கள் வரிசையில் வரிசைப்படுத்தியிருந்தது. உண்மையாகவே, அந்த தேசிய உணர்வாளனின் தியாகம் போற்றப்பட வேண்டியதுதான். உலக மக்களும் அறிந்து கொள்ள வேண்டியதுதான். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
ஈழத் தமிழர்களான நாங்களும் இதய பூர்வமாக அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம். இப்படியேதான் நாங்கள் எங்கள் நாட்டுப் படுகொலைகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்... இந்திய தேசத்தை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயர்கள் போலல்லாது நாங்கள் மலர்க்கொத்துக்கள் வழங்கி இந்திய அமைதிப்படையை வரவேற்ற காலம்... நம்பிக்கையோடு எம் தேசத்தின் அமைதிக் காற்றைச் சுவாசிக்கும் ஆவலில் குதூகலித்திருந்த காலம்... தமிழர்களைக் காப்பாற்ற என்ற கொட்டொலியுடன் 1987 இல் கால் பதித்த இந்திய அமைதிப்படையை நம்பி விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து அமைதி காத்த காலம்...
தமிழீழ மண்ணில் கால் பதிக்கும்வரை அமைதிப் படையாகவே வந்த இந்தியப் படை தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதும், சுய ரூபம் காட்டியது. சிங்கள தேசத்தின் காவல் படையாக மாறிய இந்திய அமைதிப் படையின் துரோகத் தனத்தைக் கண்டு கொதித்த தமிழர்களை பொறுமை காக்க வைத்து திலீபன் அவர்களிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வைத்து, காந்திய தேசத்திடம் நீதி கோரி, காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
என்ற சாதாரண கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று திலீபனால் ஆரம்பிக்கப்பட்ட தியாக வேள்வி இந்திய அரசால் கண்டு கொள்ளப்படாமலே விடப்பட்டது. உறுதி தளராத திலீபன் 26 செப்ரம்பர் 1987 சனிக்கிழமை காலை 10.48 மணிக்குத் தன் இறுதி மூச்சை எம் சுவாசத்தில் கலக்கவிட்டு கண்களை மூடிக்கொண்டார்.
எதிரியின் கொடுமையிலும் பார்க்க, துரோகியின் துரோகத்தின் வலி தமிழீழ மக்களின் நெஞ்சில் நெருப்பை மூட்டியது. இதைத் தொடர்ந்தும் இந்தியத் துரோகத்திற்கு குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகள் பலியானதால் உருவான கொந்தளிப்பு இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் திரும்பியது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப்படை ஆரம்பித்த நம்பிக்கைத் துரோகப் போர் யாழ். வைத்தியசாலையையும் விட்டு வைக்கவில்லை. யாழ். வைத்தியசாலைக்குள் புதுந்த இந்திய இராணுவம் அங்கு பணியாற்றிய வைத்தியர்கள், தாதிகள், நோயாளிகள் என்று யாரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது. தொடர்ந்து முன்னேறிய இந்திய இராணுவத்தின் கொலைக் கரங்களுக்கு சிறியவர், பெரியவர், இளைஞர், யுவதிகள், ஆண்கள், பெண்கள், வயோதிபர் என்ற வேறுபாடு தெரியவில்லை.
காந்தி தேசத்தின் படைகள் ஈழத் தமிழர்கள் சுமார் பத்தாயிரம் பேரைக் காவு கொண்டது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாத இந்தியப் படை 31 மார்ச் 1990 அன்று அன்றைய சிறிலங்கா அதிபர் பிரேமதாசவால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது. தமது உறவுகள் அழிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் முகமாக, இந்தியத் துரோகங்களுக்கும் ஈழப் படுகொலைகளுக்கும் காரணமான இந்தியாவின் அந்த நாளைய பிரதமர் ராஜீவ் காந்தி அதே உத்தம் சிங் பாணியில் பலி கொள்ளப்பட்டார்.
அன்று துப்பாக்கியுடன் டயரை நெருங்க முடிந்த உத்தம் சிங் போல அந்த தமிழீழப் பெண்ணால் நெருங்க முடிந்திருந்தாலும் நிச்சயம் குறி தவறியிருக்கும் என்பதால், தன்னையே வெடிகுண்டாக்கித் தன் வீரசபதத்தை முடித்துக் கொண்டாள் என்று ஈழத் தமிழர்கள் அவரை மாவீரராக ஏற்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
அன்று, உத்தம் சிங் எடுத்த முடிவைத்தான் பின்னர் தானு எடுத்தார். உத்தம் சிங் தேசிய வீரராக கவுரவிக்கப்பட்டது சரி என்றால், தானுவும் எமது மக்களால் தேசிய வீரங்கனையாகப் போற்றப்பட வேண்டியவர்தான். இந்தியா உத்தம் சிங்கிற்கு உரிய கவுரவம் வழங்க இங்கிலாந்து அரசு அனுமதித்தது போலவே, தமிழீழம் தானுவுக்கு உரிய கவுரவம் வழங்கப்போகும் காலத்தில் இந்தியாவும் அதற்கான அனுமதியை வழங்கவேண்டும்.
நன்றி: ஈழநாடு