Thursday, September 8, 2011

காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் -தினமலருக்கெதிராக வழக்குத் தாக்குதல்?

ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் – காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் – தினமலர்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295&Print=1
இந்தப் பதிவை தினமலம் அகற்றி விட்டது
பிரித்தானியாவில் பரமேஸ்வரன் பத்திரிக்கைக்கு எதிராக தாக்கல் செய்து வெற்றி பெற்றிருந்தார்
அது போல் ஏன் தமிழ்நாட்டில் செய்வதில்லை?
பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடாத்துதல் அத்தோடு முடிந்து விடுவது  ஆனாலும் இந்த ஊடகங்கள் நிறுத்துவதாக இல்லை
முத்துக்குமார் வயிற்று வலி , காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள்  இப்படித் தொடர்கின்றன
ஒரு ஊடகத்திற்கு எதிராகவேனும் வழக்குத் தாக்குதல் செய்ததாக இதுவரை அறியவில்லை
இத்தனை அமைப்புக்கள் இருந்தும் யாரும் இது குறித்து முன்வராதது ஏன் ?
அல்லது அப்படி ஒரு சட்டம் தமிழ்நாட்டில் இல்லையா ?

Friday, September 2, 2011

தீ:நமக்கல்ல இனி எதிரிக்கு வைப்போம்!

நம் உடலுக்கு வைத்துக்கொள்ளும் தீயை, இனி எதிரிகளுக்கு பரிசாய் தருவோம் 

இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன் சாகடிக்கப்பட்ட நேரு குடும்பத்தின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இந்திய அரசு முடிவு செய்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எட்டுவார கால இடைக்கால தடை விதித்து 30.08.11 அன்று உத்தரவிட்டுள்ளது.இம்முவரின் தூக்கு தண்டனை பிரச்சனையில்,கடந்த சில வாரங்களாக கொந்தளித்த தமிழகம், இந்த இடைக்கால தடையை வரவேற்று பட்டாசு வெடித்துள்ளது!.தூக்கு தண்டனையை நிறுத்த தனக்கு அதிகாரமில்லை என்று கூறிய முந்நாள் நடிகையும்,இந்நாள் முதல்வருமான ஜெயாவின் சட்டமன்றம் தூக்குதண்டனையை ரத்துசெய்துவிட்டு ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
                                                              

தூக்குமேடையில் தற்போது நிற்கும் மூவரும் ராஜுவ் கொலையில் நேரிடையாக சம்பந்தம் இல்லாதவர்கள்.கொலையாளிகளுக்கு உதவியவர்கள் என்பதுதான் அவர்களின் மீதான குற்றச்சாட்டு கொலையாளிகளுக்கு அவர்கள் தந்த பொருட்கள் எதற்காக பயன்படுத்த போகிறார்கள்,என்பது கூட தெரியாத அப்பாவிகள்.ராஜிவை கொலை செய்ததாக இவர்களே கூறும்,ஒற்றைக்கண் சிவராஜன்,தானு ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர்.ராஜீவை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறுப்படும் விடுதலை புலிகள் இயக்கமே, இன்று அதன் தலைவர் பிரபாகரன்,உளவு பிரிவு தலைவர் பொட்டுஅம்மன் உட்பட அனைவரும் ஈழ இறுதிக்கட்ட போரில் கோரமாக கொல்லப்பட்டுவிட்டனர்.இவர்கள் மட்டுமல்ல இவர்களோடு சேர்த்து தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக முள்ளிவாய்க்காளில்,50 ஆயிரம் ஈழத்தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர்.தற்போது தூக்குமேடையில் நிற்கும் மூவரும் 21 ஆண்டுகளாக சாவோமா,பிழைப்போமா? என்றுகூட தெரியாமல் தனிமை சிறையில் வைத்து கோரமாக ரசித்த பின்னரும் கூட இந்திய அரசின், தமிழர்களை பழிவாங்கும் கோரப்பசி இன்னும் அடங்கவில்லை.இந்த அடங்கா பசிக்கு ராஜீவை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்பது மட்டும்தானா காரணம்? இல்லை இவர்களின் அடங்காப் பசிக்கு, இதுமட்டுமே காரணமல்ல.ராஜூவ் காந்தி கொலைக்கு பழிவாங்குவதுதான், இவர்களின் நோக்கம் என்றால் இதற்கு முன்னரே இந்திய அரசு தனது சொந்தநாட்டு மக்களாகிய தமிழ்நாட்டு தமிழர்களையே, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து பழிவாங்கிய இந்திய அரசின் நோக்கம்தான் என்ன? தமது உரிமைகளுக்காக போராடிய ஈழத்தமிழர் மீது 1987 ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்போட்டு, ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றும்,ஈழத்தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இந்திய அரசின் நோக்கம்தான் என்ன? நிச்சயம் ராஜீவ் படுகொலை மட்டுமல்ல,தமிழர்கள் மீதான இந்திய ஆளும்வர்க்கத்தின்,பார்ப்பன கும்பலின் நலன்களுக்கு எப்போதுமே அது தமிழக தமிழனாக இருந்தாலும்சரி,ஈழத்தமிழனாக இருந்தாலும் சரி எப்போதுமே அடிபணிந்து போனதில்லை.வரலாற்று காலம் தொட்டு பார்ப்பன எதிர்ப்பு கோட்டையின் அடையாளமாக தமிழர்கள் விளங்குகிறார்கள்.மொழி,பண்பாடு,நாகரிகம் என அனைத்திலும் தனக்கென தனி ஒரு பண்பாட்டை உடையவர்கள்.இந்த சுயமரியாதை தன்மான உணர்வை,தமது வழ்க்கை முறையாகவே கொண்டவர்கள்.எப்போதுமே பார்ப்பன பண்பாட்டின் எதிர்ப்பு கோட்டையாகவும்,இதன் காரணமாகவே, அதன் இயல்பிலேயே இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு எதிரான சிந்தாந்த நடைமுறையை தமது வாழ்வியலோடு உள்ளடக்கியவர்கள்.

சங்ககாலத்தில் சமயமற்று வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் சோழர்கள் பார்ப்பன சித்தாந்தத்தை அரச மதமாக ஏற்று அதை தமிழ் சமூகத்தின் மீதும் திணித்தனர்.இதனால் வெகுண்டெழுந்த தமிழர்கள் களப்பிரர்கள் தலைமையில் பார்ப்பன எதிர்ப்பு சமயங்களான சமண,பெளத்தத்தை தமது சித்தாந்தமாக தழுவிக்கொண்டனர்.300 ஆண்டுகள் களப்பிரர்கள் ஆட்சி தமிழகத்தில் கோலோச்சியது.ஆனாலும் பிற்கால களப்பிரர்களில் சிலர் தமது ஆளும்வர்க்க நலனுக்காக பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டனர்.இதன் பின் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் களப்பிரர்களை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினர்.பார்ப்பனக்கும்பலின் துணையோடு சமண,பெளத்த மதங்களை கொடுரமாக கொன்றொழித்தனர்.தமிழர்கள் சாதிகளாக கூறுபோடப்பட்டனர்.ஆனாலும் பார்ப்பன எதிர்ப்பு என்பது தமது வாழ்வியலின் ஒரு அங்கமாக ஆக்கிகொண்டனர்.தென்னிந்தியாவில் ஆரியர்களாக அல்லாது பார்ப்பனர்களாகத்தான் ஊடுருவினர்,பிற்காலத்தில் சோழ மன்னர்கள் வட இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை அழைத்து வந்து சகல வசதிகளுடன் குடியமர்த்தினர்.தென்னிந்தியாவில் ஊடுருவிய பார்ப்பனர்களும்,அவர்களின் மொழியான சமஸ்கிருதமும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகியவற்றில் ஊடுருவியது.தமிழகத்திலே பார்ப்பன பண்பாடு சமூகத்தின் எல்லா அங்கங்களிலும் ஊடுருவினாலும் தமிழ் மொழியின் குறைவற்ற வளம் காரணமாக தமிழ் மொழிக்குள் அதன் இலக்கண வரம்புக்குள் சமஸ்கிருத்தத்தால் ஒருபோது ஊடுருவ இயலவில்லை.
களப்பிரர் ஆட்சிக்கு பின்னர் தந்தை பெரியார் தமிழகத்தை பார்ப்பன எதிர்ப்புக் கோட்டையாக மீண்டும் உருவாக்கினார்.ஆனாலும் தந்தை பெரியாரின் கண்முன்னாலேயே அவர் எழுப்பிய பார்ப்பன எதிர்ப்புக்கோட்டையை அண்ணாதுரை தலைமையிலான பிழைப்புவாத கும்பல் இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு காட்டிக்கொடுத்தது.  
அன்றைய சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் முதல் இன்றைய அண்ணாதுரை,கருணாநிதி,வைகோ,ராமதாசு,திருமா போன்றோரை வைத்து, எப்போதும் கனன்று கொன்டிருக்கும் இந்த நெருப்பில் தண்ணீரை ஊற்றினாலும் அதனை முழுமையாக அணைக்க முடியவில்லை.அது எப்போதும் பற்றிக்கொள்வதற்கு தயாராக தம்மை உருவாக்கிகொண்டு காத்திருக்கிறது.பற்றவைக்கத்தான் தேவை ஒரு தீக்குச்சி மட்டுமே,அந்த தீ குச்சியாக ஈழ இறுதிப்போரின் போது முத்துக்குமாராகவும்,தற்போது செங்கொடியாகவும் இருக்கிறது!


 மூவரின் தூக்குதண்டனையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு,தமிழினத்தின் தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அனைவரும் ராஜீவ் கொலையை நாங்கள் ஆதரிக்கவில்லை,அது கோரமானது.இப்படிப் பட்ட நடவடிக்கைகளை நாங்கள் என்றும் ஆதரித்ததில்லை,ஆதரிக்க போவதுமில்லை என்றுதான் சத்தியம் செய்கிறார்கள்.இதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு,இந்தியாவின் தெற்காசிய மேலாதிக்க நோக்கத்திற்கு தாங்கள் எப்போதுமே எதிரிகளில்லை,என்றும் இந்தியாவின் பிராந்திய துணை வல்லரசு நோக்கங்களுக்கு சிங்களவர்களை விட,தமிழர்களே உண்மையான நண்பர்கள் என்று சாமியாடினாலும் இதை நம்புவதற்கு,இந்திய ஆளும்வர்க்கங்கள் தயாரில்லை.ஏனேன்றால் தமிழனின் தன்மானத்திற்கும்,சுயமரியாதைக்கும் சோதனை வரும்போதெல்லாம்,தனது உடலில் தீ வைத்துக்கொள்வதற்கு முன்னர் யாரென்றே தெரியாதவர்கள்,தனது சாவுக்கு பின்னர் தமிழர்களின் தலைவர்களாகிவிடுகின்றனர்.உயிரற்ற அவர்களின் உடல்கள் மொத்த தமிழினத்தையே தலைமையேற்று வழிநடத்துகிறது.


     சென்னை உயர்நீதிமன்றம் 8 வார இடைக்கால தடை விதித்திருந்தாலும் இது நிரந்தரமாகுமா? இல்லையா? என்பது இக்காலக்கட்டத்தில் தமிழர்கள் எப்படி நடந்துகொள்ளபோகிறார்கள்.என்பதை பொருத்தே அமையபோகிறது.அது இந்திய ஆளும்வர்க்கங்களின் நலன்களுக்கு எஞ்சியதையும் இழக்க போகிறதா? அதாவது பல்லாயிரம் ஆண்டுகளாக நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டே இருக்கும் தமிழர்களின் தனித்த அடையாளங்களை விடப்போகிறதா,இல்லையா என்பதுதான். ஆகவே இந்த தூக்குதண்டனையும்,இடைக்கால தடையும் தமிழர்களுக்கு இந்திய ஆளும்வர்க்கங்கள் வைத்திருக்கும் பரிசோதனை!  


     இப்போது நம்முன்னே இரண்டு வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
1.பார்ப்பன எதிர்ப்பு,சுயமரியாதை,தன்மானம்,நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை தூக்கியெறிந்துவிட்டு அடங்கிவிடு………..
2.மேற்கண்டவைகளை விட மறுத்தால் மூவரின் தூக்கு நிச்சயம்!


     இதில் இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு நமக்கு நிபந்தனை விதித்துள்ளது.இதில் முதலாவதை செய்து மூவரையும் காப்பாற்றுவது என்று தமிழின தலைவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள்.
ஆனால்,இதை எங்களால் ஏற்க முடியாது என்று முத்துக்குமார்,செங்கொடி தலைமையிலான சுயமரியாதை தன்மானத் தமிழர்கள் முழக்கமிடுகிறார்கள்.

ஆம் நாம் இரண்டாவதை தேரிவு செய்ய முடியுமே தவிர,முதலாவது நிபந்தனைக்கு கட்டுப்பட முடியாது.கெஞ்சவோ,கூத்தாடவோ முடியாதுஅப்படியானால் அம்மூன்று தமிழர்களின் சாவு நிச்சயம் தானா?அதை தடுப்பதற்கு வேறு வழிகள் இல்லையா?ஏன் இல்லை. வழி இருக்கிறது.அந்த வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றலும் நமக்கிருக்கிறது.தேவை தலைமை மட்டுமே.எரிவதை இழுத்தால் கொதிப்பது நின்றுபோகும்.நம் உடலில் நாம் தீ வைத்துகொள்வதற்கு பதில் இந்தியாவின் தெற்காசிய பிராந்திய துணை வல்லரசு கனவுகளுக்கு கொல்லி வைப்போம்.இதை செய்வதன் மூலம் அம்மூவரின் உயிரை மட்டுமல்ல,பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் காத்துவரும் பார்ப்பன எதிர்ப்பு,தன்மானம்,சுயமரியாதை,நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை காப்பாற்றுவோம்.