Wednesday, December 1, 2010

என் வாழ்க்கை திறந்த புத்தகம்! சொத்துக் கணக்கை வெளியிட்டு, கண்ணுடையோர் காண என கலைஞர் விளக்கம்!

Source:http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=44414

முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். திராவிட தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் தமது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்றும் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.


தெரு வரிசையில் உள்ள கோபாலபுரம் வீட்டையும் மருத்துவமனை அமைப்பதற்கு கொடுத்துள்ள நிலையில், அதுதவிர எந்த சொத்தையும் வாங்கவில்லை என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.




கணக்கு காட்டுகிறேன் கண்ணுடையோர் காண என்ற தலைப்பில் முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது,




18 வயதில் முரசொலி வாரப்பத்திரிகையை தொடங்கினேன். திராவிடர் கழகப் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டேன். கடந்த 1949ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டரில் எழுத்தாளராகப் பணியில் அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன்.




1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்ற கழகம் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டு, விருநகர் நாடார் லாட்ஜில் தங்கினேன்.




சேலத்தில் குடும்பத்தோடு வசித்தபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மணமகள் என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை - வசனம் எழுதியதற்காக அந்தக் காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றேன். இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக உரையாடலை எழுதியபோது, அந்தப் படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியதால் தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத், பத்தாயிரம் ரூபாய் ஊதியத்தைத் தவிர்த்து மேலும் பத்தாயிரம் ரூபாய் ஊதியமாகத் தந்தார். இவைகளைத் தொடர்ந்து 75 திûப்படங்களுக்கு மேல் திரைக்கதை - வசனம் எழுதி, ஊதியம் பெற்றுள்ளேன்.




கடந்த 1957ஆம் ஆண்டு முதல் இதுவரை, தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்துள்ளேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களின் வீடுகளையும் ஒப்பிடும்பொழுது வசதி குறைவான வீட்டில்தான் வாழ்ந்து வருகிறேன். அமைச்சர் ஆவதற்கு முன்பே 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான் கோபாலபுரம் வீடு. இன்றும் தெரு வரிசையில் உள்ள கோபாலபுரம் வீட்டில்தான் வசித்து வருகிறேன். அந்த கோபாலபுரம் வீட்டையும் மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக்கொடுள்ள நிலையில், சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை.




கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை, கலைஞர் கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை, கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை ஆகியவற்றின் மூலம் தமிழரிஞர்களுக்கு விருதுகளும், ஏழை - எளியோருக்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.




மண்ணின் மைந்தன், உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதியதற்காக கிடைத்த பல லட்சம் ரூபாய் தொகையின் மூலம் சுனாமி நிவாரணம், நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி, அருந்ததியின மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.




சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பணத்தில் 10 கோடி ரூபாய் கிடைத்தது. அதில் 5 கோடி ரூபாயை வங்கியில் இருப்பு செய்து கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைத் தொடங்கப்பட்டு ஏழை - எளியோருக்கு மருத்துவம் மற்றும் கல்வி நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.




வங்கிக் கணக்கில் ரூபாய் 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 வைப்பு நிதி தவிர, சேமிப்பு கணக்கில் சுமார் ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 உள்ளது. இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு.




எஞ்சிய காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன். ஏழை - எளிய மக்களின் கவலை தீர்ப்பதையும் கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன்.




கண்ணுடையோர் காண்பதற்காகவே, இந்தக் கணக்கை காட்டுகிறேன். முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கு அல்ல. இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருணாநிதி: யாகாவாராயினும் நா காக்க...

Source:www.dinamani.com

நெல்லைகண்ணன் 

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சிஏஜி அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப்பதும், உச்ச நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல்வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார்
மிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்திரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்பந்தமே இல்லாத அந்தக் குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் பெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட உடனேயே தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும், கேட்கவில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டவர். முதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரியார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால்தான் மேலும் மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்துகின்றன என்கிறார். 

கருணாநிதிக்குத் தெரியுமா? டி.டி. கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். உடன் பெருந்தலைவர் காமராஜும் வருகிறார். கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் செல்கின்றனர். எல்லோரும் சட்டையைக் கழற்றுகின்றனர். காமராஜ் சட்டையைக் கழற்றுகிறார். டி.டி.கே. சட்டையைக் கழற்றவில்லை. காமராஜ் சொல்லுகிறார்-"அவன் பூணூல் போட்டிருக்க மாட்டான், அதான் கழற்ற மாட்டேங்கிறான்' என்று! அந்த ஆச்சாரியாரின் ஆச்சரியமான ஆச்சாரத்தைப் பார்த்துச் சுற்றி இருந்தோர் வியந்தனர்.  
காங்கிரஸ் கட்சி தனது மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணை பதவி விலக வைத்திருக்கிறதே! அவர்மீது விசாரணை நடக்கப் போகிறதே! அவர் என்ன தலித்தா? சுரேஷ் கல்மாடியைப் பதவி விலகச் சொல்லியுள்ளதே, அவர் என்ன தலித்தா? கருணாநிதிக்கு நினைவிருக்கும். அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்கு தமிழர் ஓ.வி. அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். "அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா?' என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே. விபத்து நடந்த சில மணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து பெரியவர் லால் பகதூர் சாஸ்திரியும் நம்மவர் ஓ.வி.அளகேசனும்  பதவி விலகினார்களே! அவர்கள் தலித்துகளா?

போஃபர்ஸ் பீரங்கி என்று தமிழகம் முழுவதும் ரூ. 64 கோடிக்கு விசாரணை வேண்டும். ராஜீவ் காந்தியைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே!  இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்க்கு கேள்வியே கேட்கக் கூடாது என்கிறீர்களே! என்ன நியாயம்?  
1967-ல் ஜெயலலிதா கட்டிய வருமான வரி என்ன? இன்று அவர் கட்டுகிற வருமான வரி என்ன என்று கேட்கிற கருணாநிதி, அவர் 67-ல் கட்டிய வருமான வரி என்ன? இப்போது கட்டுகிற வரி என்ன என்று சொல்வாரா? 
பத்திரிகைகளைப் பார்ப்பனப் பத்திரிகைகள் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இந்த சாமானியனின் சாயம் வெளுத்துவிடும் என்பதாலா? ஜெயலலிதாவைப் பார்ப்பனத்தி என்று இவர் பேசினால் வீரமணி கோபம் கொள்வார். அவர்தான் ஜெயலலிதாவுக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை' என்று பட்டம் கொடுத்தவர். கருணாநிதிக்குக்கூட அந்தப் பட்டத்தை அவர் வழங்கவில்லை. பார்ப்பனப் பத்திரிகைகள் என்று குறிப்பிடுகிற கருணாநிதி, அவற்றை முதலில் இருந்தே இவை பார்ப்பனப் பத்திரிகைகள் என்று புறக்கணித்திருந்தால் நமக்குப் புரியும், இவர் சரியான பெரியாரின் சீடர் என்று. "சோ'வைப் பார்ப்பான் என்பார். பிறகு "சோ'வே என்னைப் பாராட்டியிருக்கிறார் தெரியுமா என்பார். ஓர் ஆங்கில நாளேட்டை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்பார். பிறகு அந்தப் பத்திரிகையே தன்னைப் பாராட்டியிருக்கிறது என்று பெருமை பேசுவார். இவர் குடும்பத்தினர் நடத்துகிற பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதெல்லாம் பார்ப்பனர்கள்தான். எதற்கு அவர்களை இந்தப் பெரியாரின் சீடர் குடும்பம் வளர்க்கிறது? பார்ப்பன வாடையே படாமல் இவர்களின் ஊடகம் நடக்காதா, என்ன? ஜெமினி கணேசன் பிறந்த நாளில் கலந்துகொள்கிறார். ஜெமினியின் மாமா ஒருவர் முதல் மனைவியை இழந்துவிட்டாராம். உடனே எங்கள் இசை வேளாளர் குடும்பத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார். அவரின் பெண்தான் முத்துலெட்சுமி ரெட்டி என்கிறார். அப்படியென்றால், இந்தியச் சட்டப்படி முத்துலெட்சுமி பார்ப்பனப் பெண்தானே! அவரை ஏன் இவர் புகழ்கிறார்? ஜாதிய ஒழிப்பில் ஈடுபட வேண்டிய கருணாநிதி, இன்னும் தன் ஜாதியைக்கூட மறக்க மாட்டேன் என்கிறாரே. கேட்டால், தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவன் என்பார். தன் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தவரே இவர்தானே! பார்ப்பனர்களை இவ்வளவு வசைபாடும் கருணாநிதி, தன் குடும்பத்து இளைஞர்களிடம் பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கலாமே? சொல்லமாட்டார். பார்ப்பனீயம் அவருக்கு மட்டும் இனிக்க வேண்டும். மற்றவர்களுக்குக் கசக்க வேண்டும். இதுதான் கருணாநிதியின் பகுத்தறிவு தர்மம். தனக்குச் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிற கருணாநிதி, நீரா ராடியா, கனிமொழி, ராசா ஒலிக் குறுந்தகடுகள் குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே, ஏன்? ஆ. ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது நீரா ராடியாவா, இல்லை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியா என்று ஆங்கிலப் பத்திரிகைகள் கேள்வி கேட்டு திமுகவின் மானத்தைச் சந்தி சிரிக்கச் செய்கின்றனவே, அதைப்பற்றி இவர் எதுவுமே பேசுவதில்லையே, ஏன்? ஒவ்வொரு தேர்தலின்போதும் நான் தாழ்த்தப்பட்ட பெண்ணை மருமகளாக்கியிருக்கிறேன் என்பார். தன் வீட்டு மருமகளாகிவிட்ட பெண்ணை ஒவ்வொரு தேர்தலின்போதும் தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருணாநிதி செய்கிற மரியாதையா? அவமரியாதையா? அவரது உள்மனதில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் மருமகளாகிவிட்டாளே என்கிற ஆதங்கத்தின், உள்மனதின் ஓலம்தானே அது? அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஆபத்து வருகிறபோதெல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பேசுகிற கருணாநிதி, ஏதாவது பெரும்பான்மை ஜாதி குறித்துப் பேசுவாரா? இதுவரை பேசியிருக்கிறாரா? ராஜாஜி என்கிற பார்ப்பனர்தான் காமராஜையும், காங்கிரûஸயும் வீழ்த்த இவர்களுக்கு உதவினார். உடனே அவரை மூதறிஞர் என்றார்கள். அதற்கு முன்புவரை அவர் குல்லுக பட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார்! மார்க்சிஸ்டுகளோடு தேர்தல் உறவா, தோழர் பி. இராமமூர்த்தியை சர்வதேசச் சிந்தனையாளர் என்பார்கள். உறவு முறிந்த மறுகணமே நொண்டிப் பார்ப்பான் இராமமூர்த்தி என்பார்கள். தோழர் ரங்கராஜனைக்கூட பார்ப்பனர் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியவர் கருணாநிதி. இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சிவகங்கைச் சின்னப் பையன், சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை. அந்தப் பையன் என்னைப் பேசுகிறான் என்றவர்தானே கருணாநிதி. வேலூரில் ""நேருவே ஆரிய திராவிட யுத்தம்'' என்று எழுதியிருக்கிறார் என்று சான்று காட்டுகிறார் கருணாநிதி. என்ன செய்ய கருணாநிதி அவர்களே! அந்த நேருவும்கூட ஒரு பார்ப்பனர்தான். ஆமாம் காஷ்மீரத்து பண்டிட்தானே!

Monday, November 8, 2010

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மறுப்புக்கடிதம்

Source:http://www.viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=58:letter-to-indian-gov&catid=28:report&Itemid=2

குறிப்பிட்ட சில ஆயுதக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுகிறார்கள் என்பதுட்பட அண்மைக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எமது அமைப்பு இந்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்த மறுப்புக்கடிதம்.
Head Quarters,                                                                                         த/செ/க/03/10
Liberation Tigers of Tamil Eelam,
Tamil Eelam.
05/11/2010

Hon Minister P.Chidambaram
Ministry of Home Affairs, North Block
Central Secretariat
New Delhi - 110 001

Dear Sir,
Clarifications of misconceptions of our movement activities

On 19 May 2009 we, the LTTE, announced that we would cease our armed activities.
Since that day we have not engaged in any activity involving arms.

We had pointed out in the past that after we were evicted from the areas that had been
under our control and also cut off from all outside contacts, the Government of Sri
Lanka and certain other agencies were using our name and some of our fighters who
had surrendered and were involved in carrying out various destructive activities.

Nevertheless, with the support of the people we are publicising, using legal and
democratic methods, the false propaganda and treacherous plans of the Government.

Everyone knows that after May 2009 the human right violations committed on our
surrendered fighters and on the thousands of Tamil youths arrested under Prevention
of Terrorism Act as well as the repressive acts on all Tamils in the North and East are
being justified by the Government as being necessary to eliminate the LTTE.
These actions of the Government are being manipulated by neighbouring countries
and even certain foreign countries to suit their convenience.

In the above context, we need to clarify the following points:
1. We have not engaged in any activity involving arms after our
announcement in May 2009 that we would cease our armed activities;
2. We have not attempted to regroup our organisation and are not involved
in illegal activity in India (neighbouring country) or any foreign country;
3. We have hitherto carried out our struggle using our own resources with
the help of our people;
4. We have never collaborated with any external armed organisations or
paramilitary forces, nor have we given any help or support to such
groups;
5. We totally reject and strongly condemn the malicious statements that are
being published occasionally linking us with foreign armed groups; as an
example, the recent statement by Indian officials that we have links with
Maoist groups in that country is totally untrue;
6. The LTTE is an organisation that fights for the just rights of the Tamil
people, to achieve their legitimate political goal; We have only fought in
Sri Lanka against the Government and its paramilitary forces;
7. The aim and target of our attacks were solely to defend our people;
Even after the Government’s declaration that the war had ended, the Tamil people are
continuing a democratic struggle for their legitimate rights; The International
Community has accepted that the Tamils have suffered injustice. Nevertheless, the
Tamils are still being threatened and repressed as LTTE or as terrorists for daring to
ask for their democratic and legitimate rights.

The members of our organisation and our supporters are still being prevented from
stating their defence in India or in foreign countries.

We, on our part, have now expressed our desire to support the political process to
achieve the Tamil speaking peoples’ rights. We will put our trust again in laws and
democracy, and accept human rights code.

We request that we be given the opportunity to explain our cause – to achieve the
political, humanitarian and human rights needs of our people – to the International
Community. We are ready to answer all accusations against us in a court of law,
respecting international laws and democratic principles.

Our members are being incarcerated without access to relatives or any legal defence.
They have to be protected from groups that are trying to exploit them in Sri Lanka;
their democratic and individual rights be safeguarded, and they should be given a
chance to return to civilian life in the immediate future.
Yours truly,
Mr. RM. Supan,
Coordinator of LTTE head office.
Tamil Eelam.


Friday, October 29, 2010

தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கட்கு!


ஒரு ஈழத்தமிழனாகிய நான் சிங்களவன் செய்த கொடுமைகளையும் தமிழினத்தின்  வெளிப்படையான சில எதிரிகளையும் தேசத் துரோகிகளையும் நன்கு அறிவேன்.
மேலும் நான் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதாலாய் உங்களைப்பற்றியும் உங்கள் அரசியல் கட்டமைப்பு பற்றியும் செய்திகளிலும் தொலைக்காட்சிகளிலும்பார்ப்பதுண்டு. இதுதவிர ஈழவிடுதலைப்பற்றி யாராவது தமிழகத்தில் குரல் கொடுத்தால் என்ன நடக்கும் என்று நன்கு அறிவேன்.
தமிழினத்தின் தலைவன் நான் என்று நீங்கள் தான் பிதற்றிக்கொள்கிறீர்களேதவிர யாரும் அதை ஏற்றுக்கொண்டதுபோல தெரியவில்லை அய்யா,,,,,,, வயோதிபரே தமிழீழம் மலர்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதை வெளிப்படையாய் சொல்லிவிடுங்கள்.
என் வெளிப்படையான எதிரி என நீங்கள் மார்பில் பாச்சும் வாளை தாங்கிக்கொள்ளும் சக்திஎனக்குண்டு. வாடா என் உறவே என வாயார வரவேற்று முதுகில் அல்லவா அடிக்கிறீர்கள் நீங்கள் நினைத்திருந்தால் இவ்வளவு இழப்பை நாம் இழந்திருப்போமா ? என் தாயகம் தான் வீழ்ந்துபோயிருக்குமா??அப்படி என்னதான் செய்தான் ஈழத்தமிழன். பதவிக்காய் நாடகங்கள் பல ஆடி உண்ணாவிதரம் என்று எம்மை மடையனாக்கி, ஏன்?ஏன் ? இந்த கபட வேலை?? தள்ளாடும் வயதினில் பதவிக்காய் எவ்வளவு நாடகங்கள்அத்தனையும் நாமறிவோம். நெஞ்சம் வலிக்கிறது நினைத்துப் பார்க்கும்போது.
வரலாறு நாளை காறித்துப்பாதா? பட்டமும் பதவியும் எத்தனை நாளைக்கு ? சற்று சிந்தித்து பார்த்து செல்லும்பாதையை மாற்றுங்கள். சோனியா அம்மையுடன் சேர்ந்து என் இனத்தின் அழிவுக்கு அஸ்திவாரம் இட்டதுநீங்கள்தான். இதை மறுக்க எவராலும் முடியாது. உங்களை தமிழினத்தின் துரோகி என்று பாதிக்கப்பட்ட தமிழன்பச்சைகூட குத்திவிட்டான் அவன் நெஞ்சினில். வரலாற்று தவறல்லவா செய்துள்ளீர்கள்.
பரவாயில்லை, ஆனால் ஈழவிடுதலையும் ஈழத்தமிழினமும் உங்களுக்கு பிடிக்காவிடின் அதை வெளிப்படையாக சொல்லிவிட்டு என் இனத்துக்கு எதிரியாகவே இருங்கள். நாங்கள் உங்களை குறை கூறமாட்டோம். ஆனால்தேர்தல் காலங்களில் தமிழீழமே தமிழரின் தீர்வு, தேசியத்தலைவர் வே.பிரபாகரன் என் நெருங்கியநண்பர் எனகூறிவிட்டு மறுநாள் வந்து எதிர்முனையாய் பேசுவதும் அவ்வப்போது தமிழக உணர்வாளர்கள் கொடுக்கும்அழுத்தங்களை சகிக்காது ஈழம் பற்றி சில அறிக்கைகளை விடுவதுமாய் வித்தைகளை காட்டுகிறீர்கள்
தயவு செய்து இவ்வாறான அறிக்கைகள் விடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் மிகவும் வேதனையாக உள்ளது.வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சாதீர்கள். ஈழம் என்ற அந்த புனிதமான சொல் உங்கள் வாயிலிருந்து இனி வருவதை நான் விரும்பவில்லை. காரணம் உங்களை இனி என் சாதி நம்பாது. உங்கள் முகமூடி கிளித்து எறியப்பட்டுள்ளது
ஓர் அன்பான வேண்டுகோள். நீங்கள் துரோகி என்று வரலாற்றில் பதிவாகி வருடங்கள் ஆகிவிட்டது. இனிவரும்தேர்தல் காலங்களில் ஈழம் பற்றி பேசாதீர்கள். அது எம்மை காயப்படுத்துவது மட்டுமல்லாது என் தாய்த்தமிழ் உறவுகளைமுட்டாளாக்கிவிடும்.
மேலும் நாங்கள் ஈழத்தில் பிறந்ததால் சிங்களவன் முற்றுகையில் பல உயிர்களை காவுகொடுத்து பல இழப்புகளையும் சந்தித்துவருகிறோம். ஆனால் என் தாய் தமிழகத்தின் உறவுகள் ஏன் அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்.நட்டநடுக்கடலில் நாயைப்போல சிங்களகாடையர் என் உறவுகளை சுட்டுத்தள்ளியும் நீங்கள் பேசாதிருக்க காரணம்என்ன? எங்கே என் பதவி போய்விடுமோ என்றா?
உங்கள் பதவியை தக்கவைக்க பச்சைத்தமிழனை இரையாக்காதீர்கள். செம்மொழி மாநாடு எல்லாம்நடத்தினீர்கள். அம் மொழியை பேசுவதற்கு கொஞ்சத் தமிழனையாவது விட்டுவையுங்கள்.
தவிர உங்கள் தயவிலும் உங்கள் பெயரிலும் சில தொலைக்காட்சிகள் என் தாய் தமிழை கொண்று கலாச்சாரத்தையும்சீர்கெடுத்து வருகின்றன. இதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு கவலை இல்லை. உங்கள் வங்கிக்கணக்கு நிரம்பிவிட்டால் போதும்.பாடசாலை வாயிலில் ஒட்டுப்பாவாடையுடன் ஒலிவாங்கியை கையில் ஏந்தியபடி புதிதாக வெளிவந்த திரைப்படம்பற்றி விமர்சனம் கேட்பதை பார்க்கும்போது எதிர்காலம் என்னாகுமோ என வேதனையாய் உள்ளது.
இது எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடி வேடிக்கை பார்க்கிறீர்கள். காவரியில் துடுப்பாட்டம் நடக்கிறது,வாயைத்திறக்க மறுக்கிறீர்கள். குடிநீரைக்கூட கொடுக்காத நீங்கள் எங்கே தமிழனுக்கு விடிவைக்காட்டுவீர்கள்.தமிழக எதிர்காலம் அரசியல் சினிமா என்ற இரண்டு சாக்கடைகளில் மூழ்கிக்கிடக்கிறது. இதற்கு முழுப்பொறுப்பும் நீங்கள்தான். தயவுசெய்து என் தமிழை வாழவிடுங்கள். எதிர்கால சந்ததிக்கு நல்ல வழியைக்காட்டுங்கள்.
மேலும் உங்களிடம் ஒரு கேள்வி. இந்திய இறையாண்மை என்றால் என்ன??அண்மையில் இயக்குனர் சீமானை கைதுசெய்தீர்கள். இதற்கான காரணம் என்ன? அப்படி என்னதான் அவர் பேசினார்?தமிழக மீனவரை சிங்களவன் சுட்டால், சிங்களவன் யாரும் நலமாக இங்கிருந்து திரும்பி செல்ல முடியாது. மானமுள்ள மனிதனுக்கு வரும் யதார்த்தமான கோபமிது. இதிலும் வேற்றுநாட்டவனைத்தான் குறிப்பிட்டு சொன்னார் சீமான்.
இதில் எப்படி உங்கள் இறையாண்மை கெட்டுவிடும். கறையான் பிடித்த உங்கள் இறையான்மை தமிழனைகொல்லும்போது கெட்டுவிடாதது ஏன் ? ஏன் இந்த கபடநாடகம் ?? தள்ளாத வயதில் பதவிக்கும் பணத்திற்கும் இவ்வளவுபோராசையா??
நீங்கள் தாய்ப்பால் குடிக்கவில்லையா?? தாய் மண்மீது தடுக்கி விழுந்து முத்தமிடவில்லையா??நீங்கள் தமிழனா ?? இவை அனைத்தும் புரியாத புதிராக உள்ளது எனக்கு.
அய்யா வயோதிபரே, எட்டிப்பாக்கும் அளவு எமன் உங்களை நெருங்கிவிட்டான். எனவே இன்று முதல் ஒரு தமிழனாய்இருங்கள். தமிழை வாழவிடுங்கள். கூண் விழுந்த தமிழ் முதுகை நிமிரவிடுங்கள். கலைந்துபோன கலாச்சாரத்தைகாப்பாற்றுங்கள். கதறி அழும் ஏழைகளை காப்பாற்றுங்கள் .
ஈழ விடுதலை பற்றி அவ்வப்போது விடும் அறிக்கைகள் எம்மை காயப்படித்திய வண்ணமே உள்ளன. மானமுள்ள தமிழன்உங்கள் முன் மண்டியிட்டு நிற்கமாட்டான். இனிவரும் காலங்கள் கட்டாயம் பதில் சொல்லும். உங்கள் கல்லறை மீது கூடகறையான் புற்றிருக்கும். அதிலும் கருநாகம் குடிகொள்ளும்.
கரிகாலன் சேனைகள் களமிறங்கும் காலம் வெகு விரைவில் !
இப்படிக்கு,
ஈழத்தாய் மைந்தன்
சங்கிலியன்
sankiliyan@hotmail.com

Saturday, October 9, 2010

தமிழினத்தை அழித்து ஒழித்த கருணாய்நிதி சென்னையில் சூத்திரதாரி சோனியாவுடன் சந்திப்பு.

தமிழினத்தை அழித்து ஒழித்த கருணாய்நிதி சென்னையில் சூத்திரதாரி சோனியாவுடன் சந்திப்பு.
என்னும் எவ்வளவு அப்பாவி உயிர்கள் அழியும் என தெரியவில்லையே?

Wednesday, September 29, 2010

எந்திரன் படத்தைப் புறக்கணிப்போம்! தமிழினத் துரோகி கலைஞர் குடும்பத்தாரின் கனவை முறியடிப்போம்!!










“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்” என்று பாடினான் அன்று எட்டயபுரம் தந்த எழுச்சிக் கவிஞன் பாரதி! வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து வீறு கொண்டு எழாமல், ஆமைகளாய் ஊமைகளாய், அடிவருடிகளாய் கூனிக்குறுகிக் கிடந்த இந்தியரைப் பார்த்து இப்படித்தான் ஏக்கப் பெருமூச்சு விட்டான் அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி.
இன்று விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழனைப் பார்க்கும் போது, நமக்கும் அப்படித்தான் பாடத் தோன்றுகிறது.



ஏன் தெரியுமா? ‘சன்’ குடும்பத் தொலைக்காட்சியில் 19.09.2010 காலை ஒரு செய்தி வெளியானது.
நடிகர் ரஜினிகாந்த நடித்த எந்திரன் திரைப்படம், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரால் தயாரிக்கப்பட்டு அடுத்தமாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறதல்லவா, அந்த எந்திரன் படம் ஆயிரம் நாள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் (ரஜினி ரசிகர்கள்) கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச்சென்று வழிபாடு செய்தார்களாம். ரஜினியின் உருவப் பதாகைகளுக்குப் பாலாபிசேகம்கூட செய்தார்களாம்.
இத்தகைய நிலைகெட்ட மனிதர்கள் காலம் தோறும் இருக்கத்தான் செய்வார்கள்
என்பதற்காக நெஞ்சு பொறுக்காமல் அன்றே பாடினார் போலும் பாரதி.



தமிழக முதல்வர் குடும்பத் தொலைக்காட்சிகள் அனைத்தும் அன்று முள்ளிவாய்க்கால் 4ஆம் கட்ட ஈழப்போரில், ஈழத்தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் கொத்துக் குண்டுகளாலும், இரசாயனக் குண்டுகளாலும் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது அலறித்துடித்து அந்த அப்பாவித் தமிழர்கள் பெண்டு, பிள்ளைகளோடு, பதுங்கு குழிகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்த போதிலும் வன்னெஞ்சர்கள் சர்வதேசப் போர் விதிமுறைகளையும் மீறி இராணுவ டாங்குகளால், உயிருடன் துடிதுடிக்க ஏற்றிச் சிதைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், தமிழ் இளைஞர்கள் கூட்டங்கூட்டமாக கைகள் பின்புறம் கட்டப்பட்டு, சிங்கள இராணுவத்தினால் நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொன்ற சொல்லொணாத் துயரச் சம்பவங்களையும் சேனல்4, சி.என்.என், பி.பி.சி, ஏ.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒலிபரப்பின. அப்பட்டமான அந்த தமிழினப் பேரழிவு அவலங்களைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்து உறைந்துப் போயினர். தாங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழினத்திற்கெதிராக நடந்தேறிய போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் வீதியில் நின்று போராடி உலக மக்களுக்கு உணர்த்தினர்.
ஆனால் மனித நேயம் சிறிதும் இன்றி தமிழைக்காட்டி, தமிழனைக்காட்டி பிழைப்பு நடத்தும் கருணாநிதிக் குடும்பத் தொலைக்காட்சிகள் அந்த சூழ்நிலையில்கூட, மானாட மயிலாட என்று குத்தாட்டம் போட்டுக் குதூகலித்துக் கிடந்தனர்.



அம்மணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பிடரியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட இலண்டன் சேனல்4 காணொலிக் காட்சிகளைச் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே பாணியில் அவை கிராபிக்சுக் காட்சிகள் என ஏகடியம் பேசினர். ஆனால் ஐ.நா.அமைப்பு அவற்றை ஆய்வு செய்து அந்த சேனல்4 காட்சிகளி;ல் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்தது.
வெளிநாட்டு ஊடகங்களும், இணைய தளங்களும் ஈழத்தமிழர்களுக்கெதிரான இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்த எத்தனையோ ஆதாரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றன.



கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளில் இது பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் எச்சரிக்கையாய்ப் பார்த்துக் கொண்டனர்.



2010 சனவரியில் வடஅயர்லாந்து டப்ளின் மக்கள் நீதிமன்றம், , இரண்டு நாட்கள் ஆய்வு செய்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட ஆதாரங்களை முன்வைத்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது.



இதுபற்றிக்கூட கருணாநிதி குடும்பத்தாரது தொலைக்காட்சிகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டன.
ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கீ.மூன் இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்திட மர்சுகி தரூஸ்மன் தலைiயில் மூவர் கொண்ட குழுவை நியமனம் செய்ததையோ, அதை எதிர்த்து இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை, சிங்களர்கள், இலங்கையின் வீட்டுவசதித் துறை அமைச்சர் தலைமையில் முற்றுகையிட்டு அதிகாரிகளைச் சிறைபிடித்து வைத்தனர். ஐ.நா.மன்றத்தை அவமதித்த சம்பவத்தை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட கண்டித்தார்.
ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் பல ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவை வரவேற்றன. ஆனால் இந்தியா இன்றுவரையில் இதுபற்றி எந்தவிதக் கருத்தும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள நெடுமாறன், தா.பாண்டியன், வை.கோ, செந்தமிழன் சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவிற்கு இந்தியா ஆதரவு அளிக்க, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனப் பலமுறை கேட்டும் இதுபற்றிய செய்திகளைக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் ஒருபோதும் வெளியிட்டது கிடையாது.
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” எனக் கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்களே, தமிழரை வீழ்த்திவிட்டு தமிழை மட்டும் எப்படி இவர்கள் வாழ வைப்பார்கள்?






தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் எறிந்தாலும் அமிழ்ந்து போகமாட்டேன்;; கட்டுமரமாய் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்” என்று கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சியில் வசனம் பேசினால் மட்டும் போதுமா? கருணாநிதி என்கிற இந்த “வெள்ளை வேனை” நம்பி தமிழர்கள் பத்திரமாக பயணம் செய்ய முடியுமா?
போர் முடிந்து ஓராண்டு கடந்த பிறகும் இன்னும் சிங்கள இராணுவக் கெடுபிடிகள் தமிழர் பகுதியில் ஓய்ந்தபாடில்லை. அங்கு வாழ இயலாத நிலையில் ஈழத்தமிழர்கள் சிலர் பகீரதப் பிரயத்தனம் செய்து படகிலேறி தப்பி வந்தால், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற தூரத்து நாடுகள் விசாரணை நடத்திய பிறகாவது மனிதாபிமானத்தோடு அகதியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தளங்களில் வழிப்படச் செல்லும்போதே தடுத்துக் கைது செய்யப்படுகிறார்கள். சுற்றுலாத் தளங்களில் மடக்கிப்பிடித்து முகாம்களுக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்.
இலங்கைத் தமிழரானாலும் சரி, கடலோரத் தமிழக மீனவராயினும் சரி, தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டுக் கொல்கின்ற போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்தியாவில் திருப்பதி கோயிலில் சிவப்புக் கம்பள வரவேற்பு – அரச மரியாதை. ஆனால் விடுதலைப் புலிகள் எனப் பூச்சாண்டிக்காட்டி தமிழரை அகதியாகக்கூட இந்தியா கெடுபிடி செய்து ஏற்க மறுக்கிறது என்றால், உலகத் தமிழர்களின் நெஞ்சம் பதைக்காதா? இத்தகைய தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எல்லாம் கருணாநிதி ஒத்து ஊதிக்கொண்டே இருந்தால், வரலாறு அவரைத் தமிழனத் துரோகி எனத் தூற்றும் என்பதைப்பற்றிக்கூட கருணாநிதி கவலைப்டவில்லையே.
தமிழர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, தம்குடும்பம் செழித்துச் செல்வந்தரானால் போதும் என்று அரசியலில் இந்தியாவை வளைத்துப்போட்டது போல், திரைப்படத் துறையையும் கருணாநிதி தனது குடும்பக்கூடாரமாக்கி வளைத்துப்போட்டு விட்டார். கொள்கையில் திராவிட நாட்டை அடையாவிட்டாலும், தனது குடும்பத் தொலைக்காட்சிகளைத் திராவிட மாநிலங்கள் தோறும் திறந்து (திராவிட நாட்டை) குடும்பத்தின் குத்தகை வருமானமாக்கி அடைந்துவி;ட்டார். இனித் தமிழருக்கு காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் முழுதாய் விளைந்து தமிழ்நாடு செழித்துவிடப்போகிறது என்று அப்பாவித் தமிழர்கள் நம்பினாலும் நம்புவர்.
முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதி மன்றம் ஆய்வு ஆணை பிறப்பித்தும், அடாவடியாகக் கேரளா மறுப்பதை எதிர்த்துப் போராட தமிழரைத் தட்டி எழுப்பக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் முன்வரவில்லை.



ஆனால் கருணாநிதி குடும்பம் தயாரித்த எந்திரம் படம் ஆயிரம் நாட்கள் ஓடத் தமிழர்களைக் கோயில் படிக்கட்டுகளில் முட்டி போடமட்டும் முனைப்புடன் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் போட்டியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாமும் தமிழினத்தை வேரறுக்கத் துணை போகிற கருணாநிதிக் குடும்பத் தயாரிப்பான எந்திரன் படத்தைப் பார்த்து ஐரோப்பா யூரோக்களாகவும், இங்கிலாந்து பவுண்டுகளாகவும், அமெரிக்க டாலர்களாகவும், மலேசிய ரிங்கிட்டுகளாகவும், சிங்கப்பூர் வெள்ளிகளாகவும் வாரிக்கொடுத்து கருணாநிதி குடும்பக் கருவூலத்தை நிரபபப் போகிறோமா?
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்த நாடு என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கான ஜி.எஸ.பி வரிச்சலுகையை இரத்து செய்து இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடிகள் தருகின்றன. ஆனால் தமிழராகப் பிறந்த காரணத்திற்காக – தமிழ்ப் பேசுகின்றோம் என்கிற பாவத்திற்காக தொடர்ந்து இனஅழிப்புக்கு ஆளாகி அழிந்து வருகிறோம். நம்மினத்தை அழிப்பவர்கள் செழிப்படைய – நாம் நமது வருவாயை எள்ளுந் தண்ணீராய் இறைத்து வீணாக்க வேண்டுமா?
எந்திரன் படத்தைப் புறக்கணித்தால் எம்மினம் விடுதலைபெற்று விடுமா என்று சிலர் கேட்கலாம்
.



மண்ணைத் துறந்து, மக்களை இழந்து நாடுநாடாய் திரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் இன்று வாழ்வது ஒரு வாழ்க்கையா?



நம் காலை மிதிப்பவரின் தலையை மிதிக்கும் தன்மானச் சூழல் தற்போது நமக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக நமது உள்ளக்குமுறலை வெளிபடுத்தும் ஒரு வழிமுறையாக இதைக்கூடவா நம்மால் தியாகம் செய்யமுடியாது? நமக்கொரு நாடு வேண்டுமென்பதற்காக போராளிகளும், பொதுமக்களும் இலட்சக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்துள்ள அவல நேரத்தில், தமிழினத் துரோகிக் குடும்பப் படங்களைப் பார்த்துக் குதூகலித்துக் கிடப்பது எந்தவகையில் இனப்பற்றாகும்? நமது தாய்மார்களும், சகோதரிகளும், பச்சிளங்குழந்தைகளும் ஒவ்வொரு முறையும் குண்டுவீச்சுக்கு ஆளானபோது உடல் சிதறி உயிர்துடித்து ஓலமிட்டு அலறியபோதும், வெடித்துச் சிதறி அங்கமெல்லாம் சிதைந்து சின்னாபின்னமாகியதைக் கண்டபிறகும் கல்மனம் கொண்ட இரக்கமற்ற இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்தாமல் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் அகோரத்தை வேடிக்கையல்லவா பார்த்துக் கொண்டிருந்தன.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இன்று வரை இந்தியா, இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் தடுக்க அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் என்னென்னவோ முயற்சிகள் எடுக்கிறதே தவிர, தமிழர்களை மீள்குடியமர்த்த எவ்வித அக்கரையும் காட்டவில்லையே. வடக்கு-கிழக்கு பகுதிகள் புத்த விகாரைகளாகவும், சிங்கள குடியிருப்புகளாகவும், சிங்கள இராணுவக் கட்டமைப்புகளாகவும் மாற்றப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை. குறைந்தது வதைமுகாம்களில் உள்ள போராளிகளையாவது விடுவிக்க உதவினார்களா? முள்வேளி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மீள்குடியமர்த்த முயற்ச்சிக்காமல், இலங்கை அரசுக்கு ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை உதவிகளாய் அள்ளித்தருகிறது இந்தியா. இதற்கெல்லாம் உறுதுணையாய் இருக்கும் தமிழினத்துரோகி கருணாநிதியின் குடும்பத் திரைப்படங்களை நாம் பார்த்து திரை செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமா? கன்றுக்கு அநீதி இழைத்ததால், தான் பெற்ற ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த தமிழகத்தில் இன்று தம் மகன்கள், பேரன்களுக்காகவும், தமிழினத்தையே அழித்துக்கொன்ற ராஜபக்சே, சோனியா,மன்மோகன்சிங் நலன்களுக்காகவும் முறைவாசல் செய்துக் கொண்டிருக்கும் துராகிகளுக்கு நமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி எச்சரிப்பதற்காகவாவது எந்திரன் படத்தை புறக்கணிக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். தமிழகத்தின் நம்மினச் சொந்தங்கள் முத்துக்குமாருடன் 16 தமிழர்களும் நம் உறவு முரகதாசும் நமக்காக தங்களது இன்னுயிரை தீக்கிரையாக்கி வீரச்சாவு அடைந்தனரே. அவர்களது தியாகத்தை எண்ணியாவது நாம் துரோகிகளின் தயாரிப்பில் வெளிவரும் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை மெய்ப்பிக்க நமக்கு இதுவொரு அரசதந்திர வாய்ப்பு; நழுவ விடாதீர்கள்!
எந்திரன் படத்தைப் புறக்கணிப்போம்! தமிழினத் துரோகி கலைஞர் குடும்பத்தாரின் கனவை முறியடிப்போம்!!

Sunday, September 26, 2010

இது ‘பகுத்தறிவு சிங்கம்’ கருணாநிதியின் மூட நம்பிக்கை!


கண்ணெதிரில் கட்சிக்கார் யாராவது குங்குமம் வைத்தபடி எதிரில் தென்பட்டால் உடனே அதை அழிக்கச் சொல்வார்…
ராகு காலம் நல்ல நேரம் பற்றிப் பேசுபவர்களை எள்ளி நகையாடுவார்… கடவுள் இல்லை அல்லது இருந்தால் நன்றாக இருக்கும் என நேரத்துக்குத் தக்கபடி கமெண்ட் அடிப்பார்…
ஆனால் இந்த உபதேசமெல்லாம் ஊருக்குதான். தனக்கென்று வரும்போது நல்ல நேரம் பார்த்தால் தப்பில்லை… சங்கராச்சாரியின் பிரசாதம் பரவாயில்லை… சாய்பாபா வீட்டுக்கு வந்து மாஜிக்கில் மோதிரம் வரவழைத்துத் தந்தாலும் ஓகேதான்… வீட்டுக்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலில் தினசரி அவர் பெயருக்கு பூஜை கூட நடக்கலாம்…
-அவர் வேறு யாருமில்லை, பெரியாரின் தொண்டர், அண்ணாவின் அரசியல் வாரிசு, பகுத்தறிவு சிங்கம் தமிழக முதல்வர் கருணாநிதிதான்.
மேடைதோறும் பகுத்தறிவு பேசும் இந்த ‘முத்தமிழ் அறிஞர்’, தஞ்சையில் ராஜ ராஜன் கட்டிய பெருவுடையார் கோயிலுக்கு செல்ல பெரும் தயக்கம் காட்டி வந்தார். காரணம் பெரிய கோயிலுக்கு முதன்மை வாயில் வழியாகச் சென்றால் ஆட்சி போய்விடும் அல்லது ஆயுள் போய்விடும் என்ற மூட நம்பிக்கையால் வந்த பயம்தான்.
பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவுறுவதைக் கொண்டாட நடக்கும் விழாவுக்கு வரும் முதல்வர் கருணாநிதி கோவிலின் முதன்மை வாயில் வழியாக செல்வாரா அல்லது வேறு பாதை வழியாக செல்வாரா என்று பெரும் விவாதமே நடந்தது.


அதற்கு விடை தரும் வகையில் பக்கவாட்டு நுழைவாயில் வழியாக பெரிய கோவிலுக்குள் சென்றார் கருணாநிதி.
ஏன் இப்படி?
எல்லாம் பெரிய கோவிலின் மெயின் கேட் வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கைதான்!
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது, எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு பின்னர் மரணமடைந்தது போன்றவற்றை இந்த மூட நம்பிக்கைக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள் சில அரசியல்வியாதிகள்.
ஆனால் பெரியாரின் தீவிர சீடர்களில் ஒருவரான முதல்வர் கருணாநிதி இந்த மூட நம்பிக்கையைப் புறக்கணித்து மெயின் கேட் வழியாக நுழைவார் என்றே பலரும் நம்பினர். ஆனால் தீவிர நாத்திகம் என்பதெல்லாம் வெறும் ஊருக்கு உபதேசம்தான் என்பதை முதல்வர் மீண்டும் மெய்ப்பித்துவிட்டார்.
உபதேசம் செய்பவர்கள் முதலில் தங்களால் அதைக் கடைப்பிடிக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்
. இல்லாவிட்டால் தாங்களும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டதை ஒப்புக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். எதற்கு போலி பகுத்தறிவுவாதி வேடம்?
-என்வழி

Friday, August 27, 2010

தினமணி கார்ட்டூன்: கருணாநீடிமோனியா

கருணாநீடிமோனியா எப்போதும் குடும்பமாகவே வாழும். அதிவிரைவில் பல்கிபெருகும்.சாதகம் என்றால் மற்ற தேசிய கிரிமிகளுடன் ஒட்டி வாழும்.பாதகம் என்றால் பிரிந்துவிடும் தன்மைகொண்டது.எங்கும் எதிலும் எப்போதும் இருக்கும்.
http://www.dinamani.com/edition/photoonStory.aspx?SectionName=Cartoon&artid=293563&SectionID=221&MainSectionID=221&SEO=&Title=%u0b9a%u0bc2%u0baa%u0bcd%u0baa%u0bb0%u0bcd+%u0baa%u0bb5%u0bb0%u0bcd+%u0baa%u0b95%u0bcd%u0bb8%u0bcd!

Wednesday, August 4, 2010

தலையங்கம்: பொய் முகங்கள்!



Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=282290&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

திங்கள்கிழமை கோவையில், முதல்வர் கலந்துகொண்ட மாபெரும் திமுக பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. விலைவாசி உயர்வுக்கு எதிராகச் சில நாள்கள் முன்பு அதே கோவையில், அதே வ.உ.சி. திடலில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கண்டனக் கூட்டத்தின் வெற்றி, முதல்வரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை முதல்வரின் பேச்சு தெளிவுபடுத்தி இருக்கிறது. முதல்வரின் கோவை வ.உ.சி. திடல் உரையில் காணப்படும் ஆத்திரமும், ஆதங்கமும் தேவைதானா என்று கேட்கத் தோன்றுகிறது. தனக்கு முன்னால் பேசிய அமைச்சர்களை வழியொற்றி, எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிடுவதை இவரும் குறிப்பிட்டு மாய்ந்து போனது வியப்பைத் தருகிறது. ""நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரிகம் கற்றவன். அதனால் கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லட்டும். கருணாநிதி என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல. கருணை மிகுந்த நிதி. அப்படி எடுத்துக் கொள்கிறேன். எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்'', என்றெல்லாம் இவர் மனக்குறையைக் கொட்டித் தீர்ப்பானேன். ஜெயலலிதா, கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைப்பது இவரைப் பாதிக்கவில்லை என்றால், அதை இவர் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? ""நீ, நான் என்று ஒருமையில் பேசிக் கொள்வதாகக் கருதிக் கொள்ளாதே. ஏன் என்றால் உன் வயது என்ன? என் வயது என்ன? சிறு வயதிலிருந்தே உன்னைத் தெரியும் என்ற காரணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக் கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரைப் பார்த்து, நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம், உன்னைப்போல பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். அந்த வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? நான் மரியாதையைத் தேடி அலைகிறேன் என்று யாராவது தயவுசெய்து எண்ணிக் கொள்ளாதீர்கள்'' - இதுவும் கோவையில் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கும் பேச்சுதான். ஜெயலலிதா, முதல்வரைக் கருணாநிதி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? கட்சிக்காரர்கள் அவரைக் "கலைஞர்' என்று அழைப்பது அவர்கள் இஷ்டம். ஆனால், மற்றவர்களும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டும் என்று முதல்வர் ஏன் ஆசைப்படுகிறார் என்பது தெரியவில்லை. முதல்வரின் உறவினர்கள் நடத்தும் தொலைக்காட்சி சேனலிலும், பத்திரிகைகளிலும்கூடக் கருணாநிதி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அப்படி இருக்க எதிர்க்கட்சித் தலைவி மட்டும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன? முதலில் தமிழக அரசியலில் உள்ள அடைமொழிக் கலாசாரமே வயிற்றைக் குமட்டுகிறது. வெளிமாநிலத்தவர் நம்மிடம் இதைப்பற்றி கிண்டலும் கேலியுமாகக் கேள்வி கேட்கும்போது, தமிழகத்துக்கு ஏற்படும் தலைக்குனிவு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? இந்த அடைமொழிகள் அர்த்தமில்லாதவை என்பதை யார் இவர்களுக்கு எடுத்துரைப்பது? ஜவாஹர்லால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும், சர்வதேச அளவில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள் எண்ணிலடங்காது. அவர்கள் யாரும் தங்களது பெயருக்கு முன்னால் "டாக்டர்' பட்டம் போட்டுத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது நாகரிகமில்லை என்பதுகூட நமது தமிழக அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று யாருமே விதிவிலக்கல்ல. பொதுவாழ்க்கையில் வந்தபிறகு அவர்கள் வகிக்கும் பதவிக்கும், அவர்களது தொண்டிற்கும்தான் மக்கள் மன்றம் தலைவணங்குமே தவிர, அவரவர் வைத்துக் கொள்ளும் அல்லது கட்சிக்காரர்களால் தரப்படும் அடைமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. உயிருடன் வாழும்வரை, காமராஜை பெருந்தலைவர் என்றோ, அண்ணாதுரையை "அறிஞர்' என்றோ யாரும் அழைக்கவில்லை. அவர்களும் அழைக்க வேண்டும் என்று விரும்பவுமில்லை. காமராஜ் என்று அழைத்தவர்களும், அண்ணாதுரை என்று அழைத்தவர்களும், அவர்கள் மறைந்த பின்னர் பெருந்தலைவர் என்றும் அறிஞர் என்றும் அழைக்க முற்பட்டனர் என்றால், அது அந்த மாமனிதர்களின் சமுதாயப் பங்களிப்புக்கு மக்கள் மன்றம் அளிக்கும் மரியாதை. "கலைஞர்' என்று கருணாநிதியையும், "அம்மா' என்று ஜெயலலிதாவையும் அழைக்கும் அருவருப்பான அடைமொழிக் கலாசாரம், தமிழகத்திலுள்ள ஏனைய மாநிலக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அரசியல் கலாசாரத்தை, மாற்றிக் காட்டுகிறோம் என்று கூறி கட்சி தொடங்கியவர்கள் டாக்டர் ராமதாஸம், விஜயகாந்தும். ""நானோ எனது உறவினர்களோ பதவி எதுவும் பெற மாட்டோம். அப்படி பதவி பெற்றால் என்னை நாற்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்'' என்று சவால்விட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றதெல்லாம் போகட்டும். தன்னை "மருத்துவர் அய்யா' என்றும் தனது மகனை "சின்ன அய்யா' என்றும் கட்சிக்காரர்கள் அழைப்பதைக் காதுகுளிரக் கேட்டு மகிழ்வதுதான் இவர் செய்து காட்டியிருக்கும் கலாசார மாற்றம். விஜயகாந்தும் இதேபாணியில், கட்சி சின்னம் பொறித்த மோதிரத்தை அணிந்து கொள்வது, கரை வேட்டி கட்டிக் கொள்வது என்று இயங்குவதுடன் நின்றுவிட்டால்கூடப் பரவாயில்லை. தன்னை "கேப்டன்' என்று அழைக்கச் சொல்கிறாரே, அதுதான் வேடிக்கை. விஜயகாந்த் ராணுவத்தில் எந்தப் பிரிவில் கேப்டனாக இருந்தார்? இல்லை, இவர் மதுரையில் ஏதாவது கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுவின் கேப்டனாக இருந்தாரா? அவர் நடித்த நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் ஒன்றான கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தவர் என்பதால் "கேப்டன்' அடைமொழியா? என்ன கேலிக்கூத்து இது. கேட்டால் கட்சித் தொண்டர்கள் மரியாதைக்காக எங்களை இப்படி அழைக்கிறார்கள் என்று கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராமதாஸýம், விஜயகாந்தும் அதற்கு விளக்கம் கூறுவார்கள். அப்படி அழைக்கக் கூடாது என்று சொன்னால் தொண்டர்கள் அழைக்கப் போகிறார்களா? இவர்கள் விரும்புகிறார்கள் } அவர்கள் அழைக்கிறார்கள். அதுதானே நிஜம்? பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் மக்கள் மனதில் இடம்பெற அவர்களது செயல்பாடுகள்தான் உதவுமே தவிர, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் அடைமொழிகள் உதவாது. பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாசார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவு வாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு வயதைக் காரணம் காட்டி மரியாதை தேடிக் கொள்வதோ, பெயரைக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவு என்று கருதுவதோ ஏற்புடையதல்ல. இது முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, அடைமொழிகளால் புளகாங்கிதப்படும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் பொருந்தும். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இதில் எத்தனை பெயர்களைச் சரித்திரம் நினைவில் நிறுத்தப் போகிறது என்பதே சந்தேகம். பிறகல்லவா இந்த அடைமொழிகள்!

ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை


போலி சாதி சான்றிதழை கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துவிட்டார் என்ற காரணத்தைக் காட்டி, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 1990 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. சி. உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது மைனாரிட்டி தி.மு.க. அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது.
அகில இந்திய பணி நியமனங்கள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செய்யப்படுகின்றன. இந்திய ஆட்சிப் பணியில் நியமனம் செய்யப்படும் ஒவ்வொருவரின் பூர்வீகம் குறித்த விவரங்களை கண்டறிவதும், அனைத்துச் சான்றிதடிநகளை சரிபார்ப்பதும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பாகும்.

இந்தச் சூழ்நிலையில் போலி சாதிச் சான்றிதழை காட்டி இந்திய ஆட்சிப் பணியில் திரு. உமாசங்கர் சேர்ந்திருக்கிறார் என்று கருணாநிதியின் அரசு திடீரென்று கூறுவதில் உள்நோக்கம் இருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகிறது.

2007 ஆம் ஆண்டு மே மாதம் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கருணாநிதியின் பேரன்களான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனுக்கு எதிராக கருணாநிதியின் மகன் அழகிரி சண்டையிட ஆரம்பித்தார்.
9.5.2007 அன்று மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மதுரையிலுள்ள தினகரன் பத்திரிகை அலுவலகம் அழகிரிக்கு நெருக்கமான ரவுடி கும்பலால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில், பத்திரிகை அலுவலகக் கட்டிடம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதன் விளைவாக மூன்று அப்பாவி ஊழியர்கள்
கொல்லப்பட்டனர்.
கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில், மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் நீக்கப்பட்டதிலிருந்தே, இந்தத் தாக்குதல் கருணாநிதியின் ஆசியோடு தான் நடைபெற்றது என்பது தெள்ளத் தெளிவாகிறது. மேலும், மாறன் சகோதரர்களின் பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை தடுக்கும் வகையில், ‘மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு’ என்ற பெயரில், அரசு கேபிள் நிறுவனம் தொடங்கப்படும் என்று அறிவித்தார் கருணாநிதி.
இதன் உண்மையான நோக்கம் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திற்கு பிரச்சினை கொடுக்க வேண்டும், போட்டியாகத் திகழ வேண்டும் என்பதுதான். சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற கருணாநிதியின் குறிப்பான கட்டளையோடு தான் அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக திரு. உமாசங்கர் நியமிக்கப்பட்டார்.
அதிநவீன மின்னணு சாதனங்களும், கேபிள்களும் வாங்குவதற்காக, அரசு கேபிள் நிறுவனத்தில் 400 கோடி ரூபா மேல் முதலீடு செய்யப்பட்டது. காவல் துறையிடம் கொடுக்கப்பட்ட புகார்களின்படி, பல இடங்களில் அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை தடுத்திடும் வகையில், அதன் கேபிள்களை சுமங்கலி கேபிள் நிறுவனத்தார் சிதைத்தனர்.

அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்ற தகுதியின் அடிப்படையில், அரசின் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக மாறன் சகோதரர்கள் உட்பட இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பரிந்துரை செய்து இருக்கிறார் திரு. உமாசங்கர். ஆனால், இதற்குப் பிறகு, சண்டையிட்டுக் கொண்ட கருணாநிதி உறவுகளுக்குள் திடீரென்று ஓர் உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது.
இதனையடுத்து, மாறன் சகோதரர்களின் அராஜகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக கருணாநிதியால் நியமிக்கப்பட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. உமாசங்கர் பலிக்கடா ஆக்கப்பட்டு, பழிவாங்கப்பட்டு, அரசு கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அரசு கேபிள் நிறுவனமும் செயலிழந்துவிட்டது. கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டுவிட்டது. கருணாநிதி குடும்பம் பிரிந்து மறுபடியும் சேர்ந்ததன் விளைவாக இவ்வளவு பெரிய நிதி இழப்பை தாங்க வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டனர்.
மாறன் சகோதரர்களின் விரோதத்தை மட்டும் திரு. உமாசங்கர் சம்பாதிக்கவில்லை.
இதற்கு முன்பு, 2006 ஆம் ஆண்டு, தமிழநாடு மின்னணுக் கழகத்தின் (ELCOT) மேலாண்மை இயக்குநராக இவர் நியமனம் செயப்பட்டார். New Era Technologies Ltd என்ற நிறுவனத்துடன் இணைந்து ELNET என்ற கூட்டு நிறுவனத்தை ELCOT துவக்கியது.
இதற்கிடையில், ELNET நிறுவனம் ETL Infrastructures Limited என்ற துணை நிறுவனத்தை தொடங்கியது. இந்த நிறுவனத்திற்கு 700 கோடி மதிப்பில் சொத்து இருக்கிறது.
இந்த நிறுவனம் சென்னைக்கு அருகில் உள்ள பள்ளிக்கரணையில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் 17 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவினை கட்டியுள்ளது. தமிழக அரசு நிறுவனமான ELCOT நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற பெயரைச் சொல்லி, இந்திய அரசிடமிருந்து தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற தகுதியையும் இந்த நிறுவனம் பெற்றுவிட்டது. பின்னர், திரு. தியாகராஜ செட்டியாரை தலைவராகவும், அவரது மனைவி திருமதி உண்ணாமலை தியாகராஜன் அவர்களை மேலாண்மை இயக்குநராகவும் கொண்ட தனியார் நிறுவனமாக ETL நிறுவனம் ஆகிவிட்டது.
ETL நிறுவனத்தின் 700 கோடி ரூபா சொத்துக்கள் இந்த தனி நபர்களிடம் தான் உள்ளது. ELCOT நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்து ETL நிறுவனமும், அதன் 700 கோடி ரூபா சொத்தும் காணாமல் போய்விட்டது குறித்து திரு. உமாசங்கர் கேள்வி எழுப்பியதாலும், இதனுடைய பயனாளிகள் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நெருக்கமானவர்கள் என்பதை
சூசகமாக தெரிவித்ததாலும், திரு. உமாசங்கர் ELCOT நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
ETL நிறுவனம் என்னவாயிற்று? ETL நிறுவனத்தின் 700 கோடி ரூபா சொத்து என்னவாயிற்று? தியாகராஜ செட்டியார் என்பவர் யார்? அவருக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் என்னத் தொடர்பு? அரசு கேபிள் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் எத்தனை பேர் கேபிள் இணைப்பு பெற்றிருக்கிறார்கள்? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செயப்பட்ட 400 கோடி ரூபா என்னவாயிற்று?
அரசு கேபிள் நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட அதிநவீன உபகரணங்கள் என்னவாயிற்று? இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியது கருணாநிதி குடும்பமா அல்லது அப்பாவி தமிழக மக்களா? கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகங்களை வெளிக் கொணர்ந்ததற்காக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஏன் பழிவாங்கப்படுகிறார்? இந்த ஜனநாயகப் படுகொலையை தமிழக மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கெல்லாம் கருணாநிதி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Monday, July 26, 2010

'புலிகள்' இல்லாத வன்னியில்...

http://www.eelanation.com/arasiyal/35-ceylon/633-vanni-current-report.html

'புலிகள்' இல்லாத வன்னியில் ஏராளம் மாற்றங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. இரண்டரைத் தசாப்தங்களுக்கும் மேலாக வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. புலிகளின் ஆட்சி நிலவிய அந்தக் காலப்பகுதியில் கட்டுக்கோப்பும் ஒழுங்கும் நிறைந்த சமூகம் அங்கிருந்ததை அனைவரும் அறிவர்.
ஊழல், களவு, சமூகச்சீர்கேடு என்பன அறவே இல்லை என்னும் அளவிற்குத்தான் அங்கு நிலைமை இருந்தது. புலிகளமைப்பின் பல்வேறுபட்ட மக்களாட்சிக் கட்டமைப்புக்கள் அனைத்தும் வினைத்திறன் கொண்டதாகவும் யாரும் குறைகாண முடியாத தனித்துவத்தினைக் கொண்டதாகவுமே விளங்கின.

நீதித்துறையாக இருக்கலாம், காவல்துறையாக இருக்கலாம், நிருவாகத்துறையாக இருக்கலாம் அனைத்துமே மக்களுக்கு அதியுச்ச சேவையினை வழங்கியதை உலகறியும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் 'புலிகள்' தண்டிப்பார்கள் என்ற அச்சமே குற்றச்செயல்கள் மிகவும் குறைவாக இருந்தமைக்குப் பிரதான காரணம்.

சிறு குற்றத்திற்கும் 'புலிகள்' பெரும் தண்டனை கொடுக்கும் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் சிறு குற்றம் புரிந்தாலும் கடும் தண்டனை விதித்ததாலே அக்குற்றம் மீண்டும் இடம்பெறாது என்ற எண்ணத்தின் காரணமாகவே புலிகளமைப்பு அவ்வாறு நடந்துகொண்டார்கள்.

சுவீடனில் வசிக்கும் எனது நண்பர் ஒருவரின் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்டின் தலைநகருக்கு அண்மையில் பாரஊர்திகளுக்கு என ஒதுக்கப்பட்ட வீதியின் ஓடுதளத்தில் வெறும் 200 மீற்றர் தூரம் வரை இவர் காரினைச் செலுத்தியமைக்காக 18,000 குரோண் பணத்தினை எனது நண்பர் குற்றப்பணமாகக் கட்டியிருந்தார்.

குறித்த நபர் அதே குற்றத்தினை மீண்டும் புரியாமல் இருக்கவே சுவீடன் காவல்துறையினர் பெருந்தொகைப் பணத்தினைக் குற்றப் பணமாக வசூலித்திருந்தார்கள். இதே உபாயத்தினையே கைக்கொண்ட புலிகள் சிறு குற்றத்திற்கும் பெரும் தண்டனை வழங்கினர்.

இதன் விளைவாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் கோதுமை மா அளக்கும் விற்பனையாளர்(சேல்ஸ்மன்) தொடக்கம் உயர் பதவியில் இருக்கும் அரசாங்க அதிகாரி வரை எவருமே ஊழலில் ஈடுபடுவதற்குத் துணிவதில்லை. எடுத்துக்காட்டாக, கல்வித்துறையினை எடுத்துக்கொண்டால் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் திருகோணமலையின் வரோதயநகரில் இருக்கிவரும் வட மாகாணக் கல்வித்திணைக்களத்தினது அதிகாரிகள் கூட தவறிழைப்பதற்குத் துணிவதில்லை. கிளிநொச்சியிலுள்ள புலிகளின் கல்விக்கழகத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

ஆனால் இன்று அனைத்துமே தலைகீழாகிவிட்டன. அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினைக் கூற விரும்புகிறேன். வன்னியில் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் தங்களது தேசிய அடையாள அட்டைகளை வைத்திருக்கவேண்டியது அவசியம். இல்லையேல் அடையாள அட்டை இல்லாதமைக்கான காரணத்தினைக் கேட்டு ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் படையினர் துழைத்தெடுத்துவிடுவார்கள்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இதுபோன்ற தங்களது ஆவணங்கள் அனைத்தையும் இடப்பெயர்வின் போது தொலைத்துவிட்டார்கள். அடையாள அட்டை தொலைத்தவர்கள் மணிக்கணக்கான சிறிலங்கா காவல்நிலையத்தில் காத்திருந்து பொலிஸ் றிப்போட் எடுக்கவேண்டும். அதனைப் பின்னர் கிராம சேவகரிடம் கொடுத்து அடையாள அட்டையினை மீளவும் பெறுவதற்காக விண்ணப்பிக்கவேண்டும்.

இவ்வாறு தனது அடையாள அட்டையைத் தொலைத்த எனது உறவினர் ஒருவர் அண்மையில் முள்ளியவளைப் பகுதியிலுள்ள தனது கிராம சேவையாளரிடம் சென்றிருக்கிறார். நீண்ட நாட்கள் அலைக்களித்த பின்னர் அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்த குறிப்பிட்ட கிராம அதிகாரி அடிக்கட்டைத் துண்டை எனது உறவினரிடம் வழங்குவதற்கு மறுத்துவிட்டார்.

காரணம் தெரியுமா? ஒரு 'போத்தல்' வாங்கித் தந்தால் மாத்திரமே அடிக்கட்டையைத் தருவேன் என்றிருக்கிறார். இங்கு போத்தல் என அந்தக் கிராம அதிகாரி குறிப்பிட்டது வேறு எதுவுமல்ல, சாராயப் போத்தலைத்தான். அடையாள அட்டைக்கு மாற்றீடாக அந்த அடிக்கட்டைத் துண்டை மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு புதிய வீட்டுத் திட்டங்களுக்கான நிதியினை சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடாக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி என்பன வழங்கி வருகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் குடும்பம் ஒன்றுக்கு வீடமைப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாய்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டத்திற்காக பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு குறிப்பிட்ட கிராமத்தின் கிராம அலுவலருடையதே. இங்கும் இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றது. வன்னியிலுள்ள அனைத்து கிராம சேவகர்களும் இவ்வாறு குற்றமிழைக்கிறார்கள் என நான் கூற விரவில்லை. மக்களுக்குத் தகுந்த சேவையினை வழங்கவேண்டும் என அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பொறுப்புடனும் செயற்படும் கிராம அலுவலர்கள் பலர் உளர்.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமமொன்றிலுள்ள கிராம அலுவலர் ஒருவர் உண்மையில் வறுமையில் வாடும் குடும்பம் ஒன்றுக்கு வீட்டுத்திட்டத்தினைப் பெற்றுக்கொடுக்கவில்லை. இவர்களுக்கான வீட்டுத்திட்டத்தினைப் பெற்றுக்கொடுப்பதை அந்தக் கிராம அலுவலர் வேண்டுமென்றே இழுத்தடிக்க, இவருக்கு அலுவலக உதவியாளராக இருக்கும் பெண்மணி ' 'ஐயாக்கு' கையில் ஏதும் பார்த்து வைத்தால்தானே ஐயாவும் மனம் திறப்பார்' எனக் கூறியிருக்கிறார்.

தம்மிடமிருந்த நகைகளை அடைவு வைத்து 10,000 ரூயாவினை அந்தக் கிராம அலுவலருக்குக் இலஞ்சமாகக் கொடுத்த பின்னரே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கூடிய 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டத்தினை இந்த வறிய குடும்பத்திற்குக் கிராம அலுவலர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோலுள்ளது வன்னியில் பலரது வாழ்க்கை.

மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் 'காசுக்கு வேலை' என்ற திட்டம் தொண்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவரவர் கிராமங்களில் வீதியினை அகலமாக்கி வாய்க்கால்களை வெட்டுதல், பாடசாலைகள் கோவில்களை துப்பரவு செய்தல் போன்ற பணிகளில் கிராமத்தவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நாளொன்றுக்கு ஒருவருக்கு 500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட கிராம அலுவலர் பிரிவில் இந்தத் திட்டத்தின் கீழ் வீதியினை அகலாமாக்கியபோது தறித்து விழுத்தப்பட்ட 25 வரையிலான பாலை மரக்குற்றிகளை அதே கிராம அலுவலர் சட்ட விரோதமாக அறுத்துத் தீராந்திகளாக்கி விற்றிருக்கிறார். இதன் பெறுமதி சுமார் 450,000 ரூபாய்களாகும்.

இதுபோல வன்னியின் பல பாகங்களிலுமுள்ள வர்த்தகர்கள் மற்றும் பணக்காரர்கள் தேக்கு, முதிரை, பாலை, வேம்பு உள்ளிட்ட மரங்களைச் சட்டவிரோதமாக அறுத்துத் தள்ளுகிறார்கள். முள்ளியவளைப் பகுதியில் வசித்துவரும் ஒரு பணக்காரரின் வீட்டுக்கு இரவில் இரண்டு அல்லது மூன்று ரைக்ரர் லோட் முதிரை மரங்கள் தினமும் வந்திறங்குகிறது. இவர்கள் சிங்களக் காவல்துறையினருக்கும் படையினருக்கும் பணத்தினை இலஞ்சமாகக் கொடுத்துவிட்டே மரக்கடத்தலில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் சாதாரணமாக தமது வீடுகளுக்கான கதவு, யன்னல் தேவைகளுக்காக தமது நிலங்களில் நிற்கும் மரங்களைத் தறிக்கும் மக்களை காவல்துறையினர் பலவகைப்பட்ட ஆவணங்களையும் அத்தாட்சிகளையும் கோரி படாதபாடு படுத்துகிறார்கள்.

வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த காலப்பகுதியில் வனவளப் பாதுகாப்புப் பிரிவு ஏற்கனவேயுள்ள வனங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முனைப்புக்களையும் மேற்கொண்ட அதேநேரம் மீள் வனமாக்கல் திட்டங்கள் பலவற்றையும் முன்னெடுத்திருந்தது. மக்களின் மரத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், குறித்த மரத்தின் பரம்பல் மற்றும் மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மரங்கள் தறிக்கப்பட்டன.

சட்டவிரோதமாக யார் மரம் வெட்டினாலும் வன வளப்பாதுகாப்புப் பிரிவினர் கடுமையான நடவடிக்கையினை எடுத்தார்கள். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அது போராளியாக இருந்தாலும் கூட கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் சட்டவிரோதமாக மரத்தினை வெட்டினால் மூன்று மாதங்கள் ஊதியம் எதுவுமின்றி மீள் வனமாக்கால் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதுதான் வழமையாக இருந்தது. வன்னியின் சொத்தாகக் கருதப்படும் காடுகளைப் பாதுகாப்பதற்கு வனக்காவல் படையையே வனவளப் பிரிவு கொண்டிருந்தது.

வன்னியில் பரவலாக இடம்பெறும் இன்னொரு பிரச்சினையினை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். களவு - இது இப்போது மலிந்து கிடக்கிறது. வன்னியில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்கள் தங்களது சொந்துக்கள் அனைத்தையுமே அங்கு விட்டுவிட்டே வந்தார்கள். இந்தச் சொத்துக்களை அபகரிக்கும் செயற்பாட்டில் படையினர் ஒருபுறமும் மக்கள் ஒருபுறமுமாகவும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

25,000 ரூபா பெறுமதியான நீர்ப்பம்பிகள் 6,000 ரூபாய்க்கும், 40,000 பெறுமதியான முதிரம் கதவுகள் சோடி 12,000 ஆயிரத்திற்கும் விற்பனையாகின்றன. விசுவமடுப் பகுதியிலுள்ள கறுப்புச் சந்தையில் இதுபோன்ற பொருட்களைத் தேவையான அளவு கொள்வனவு செய்யலாம். மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத பகுதிகளுக்கு கள்ளத்தனமாகச் செல்லும் இவர்கள் இந்தப் பொருட்களை அங்கிருந்து கொண்டுவருகிறார்கள்.

வன்னியில் போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் ஆரம்பத்தில் மக்கள் தங்களது சொத்துக்களுடன் இடம்பெயர்ந்திருந்த போதும் மோதல்கள் தீவிரம் பெற, தங்களது சொத்துக்களை அந்தத்த இடத்திலேயே போட்டுவிட்டு வெறும் உடுப்புக்களுடன் மாத்திரம் இடம்பெயர்ந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகள் இல்லாத வன்னியில் இள வயதினர் மத்தியில் குடிப்பழக்கமும் புகைப்பழக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. சமூகச் சீர்கேடுகள்பற்றிச் சொல்லவே தேவையில்லை. அண்மையில் கிளிநொச்சிப் பகுதியிலுள்ள தேநீர்சாலை ஒன்றில் தேநீர் அருந்துவதற்காகச் சென்றிருந்தேன். 15 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகரெட் பக்கெற்றை வாங்கி கடையருகில் நின்றவாறே புகைப்பிடிக்கிறான்.

வன்னி இடப்பெயர்வின் பின்னர் தனது கல்வியினை இடைநிறுத்திய இந்தச் சிறுவன் தற்போது கூலி வேலை செய்கிறானாம். இந்த உணவகத்தில் '21 வயதிற்கும் குறைந்தவருக்கு சிகரெட் விற்காதே' என்ற அரசாங்க அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்ததையும் நான் கண்டேன். எங்களது இளம் சந்ததியினர் பயணிக்கும் திசையினை எண்ணும்போது என்மனம் அழுகிறது.

ஏனையவர்களின் சொத்துக்களை மக்கள் அபகரிப்பதும் அதிகம் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் அண்மைய நாட்களில் இடம்பெற்றுவரும் இதுபோன்ற அபகரிப்புச் சம்பவங்களை நான் கூறத்தான் வேண்டும்.

வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த காலப்பகுதியில் அவர்களது செயற்பாடுகள் அனைத்தும் கிளிநொச்சியை மையப்படுத்தியதாகவே இருந்தன. இந்தக் காலப்பகுதியில் திருமணம் செய்த போராளிகள் பலரும் கிளிநொச்சி நகரினை அண்டிய பகுதிகளில் காணிகளை வாங்கி வீடுகளைக் கட்டியிருந்தார்கள். வெளிநாடுகளிலுள்ள தங்களது உறவினர்களின் உதவியுடனும் பெற்றோர்களது உதவிகளுடனும் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே சிறு துண்டு நிலத்தினை வாங்கி இவர்கள் வீடுகளைக் கட்டியிருந்தார்கள்.

இப்போது இந்தப் போராளிகள் ஒன்றில் இறுதிப்போரின் போது வித்தாகிவிட்டார்கள் அல்லது சிறிலங்கா இராணுவத்தினரின் தடுப்பு முகாம்களில் வாடுகிறார்கள். கணவன் தடுப்பில் இருக்கும் நிலையில் குடும்பத்தினைக் கொண்டு நடத்துவதற்கே தினமும் போராடும் இவர்களது மனைவிமார் தங்களது வீடுகளையும் காணிகளையும் பார்த்து வருவதற்குக் கிளிநொச்சி சென்றபோது பெரும்பாலும் ஏமாற்றமே காத்திருந்தது.

காரணம் தெரியுமா? போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இதுபோன்ற சொத்துக்களின் ஆவணங்கள் அனைத்தையும் இவர்கள் இழந்துவிட்டார்கள். உயிருடன் மிஞ்சுவோமா எனத் தெரியாத நிலையில் இந்த ஆவணங்கள் முக்கியமானவையாக அப்போது இவர்களுக்குத் தெரியவில்லை.

இன்று இந்தக் காணிகளை இவர்களுக்கு விற்றவர்களே - போராளிகள் கஸ்ரப்பட்டுக் கட்டிய வீடுகளில் குந்தியிருந்துகொண்டு - எழும்ப மறுக்கிறார்கள், இராணுவத்திடம் போய் முறையிட்டுவிடுவோம் என அச்சுறுத்துகிறார்கள். எங்கள் காணிகளை அடாத்தாகத்தானே பறித்தீர்கள் என வீண் வம்பு பேசுகிறார்கள்.

கிளிநொச்சியின் செல்வாநகர் பகுதியில், ஒரு போராளி நானறிய நாலரை இலட்சம் பணம்கொடுத்து காணியொன்றை வாங்கி, 13 இலட்சம் பெறுமதியில் வீடு ஒன்றைக் கட்டியிருந்தார். லண்டனிலுள்ள தனது சகோதரன் அனுப்பிய பணத்திலேயே அவர் அந்தக் காணியை வாங்கியிருந்தது எனக்குத் தெரியும். இறுதிப்போரின் போது அந்தப் போராளி இறந்துவிட, இரண்டு பிள்ளைகளுடன் உறவினரின் தயவுடன் வாழும் இந்த யுத்த விதவை அண்மையில் தனது காணிக்குச் சென்றபோது அங்கு காணியை இந்தப் போராளிக்கு விற்றவர்கள் குடியிருப்பதைக் கண்டாள்.

'காணியைத் தராவிட்டால் பிள்ளையைப் பிடிப்பேன் என நீங்கள் அச்சுறுத்தியதனாலேயே காணியைத் தந்தோம்' எனப் படுபொய் கூறியிருக்கிறார்கள். இனியும் இங்கு வந்தால் உன்னையும் இராணுவத்திடம் பிடித்துக்கொடுத்துவிடுவோம் என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட மோசமானது யாதெனில், உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்கும் இந்தப் போராளிக் குடும்பங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு இப்போது வன்னியில் எவருமில்லை. இதே வன்னி மக்களுக்காக தங்களது உயிரையே விலையாகக் கொடுத்துப் போராடியவர்களுக்கு மக்கள் கொடுக்கும் சன்மானம் இதுதான்.

புலிகள் இல்லாத வன்னியின் நிலை இதுதான். நாம் இன்னொரு உண்மையையும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். வன்னி மக்கள் அனைவரும் இவ்வாறு மோசமான நடந்துகொள்கிறார்கள் என நான் கூற வரவில்லை.

என்ன நடக்கிறதோ அதனை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர எவராலும் எதுவும் செய்துவிட முடியாத நிலையில், பலர் இவற்றைப் பார்த்துப் பெருமூச்செறிந்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்றதொரு சமூகம் வன்னியில் உருவாகுவதற்குப் படையினர்தான் தூபமிடுகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மீள்குடியேற்றப்பட்ட வன்னியில் தோன்றும் பிரச்சினைகள் இவை.

வன்னி தனது தனித்துவத்தினை இழக்காத வகையில் எவ்வாறுதான் மீளப்போகிறதோ என்ற அச்சம்தான் அனைவரது மனங்களிலும் தங்போது குடிகொண்டிருக்கிறது.

- யாழினி

Thursday, July 22, 2010

ரூ 1,500 கோடி கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய தினஞீமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் நள்ளிரவில் திடீர் கைது மேலும் இருவரும் கைதாகி சிறையில் அடைப்பு பொய்ப் பு

Source:http://www.thinaboomi.com/2010/july/22/index1.php

1,500 கோடி கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய தினஞீமி நாளிதழின் ஆசிரியரும், அதிபருமான எஸ். மணிமாறன் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

அவருடன் சிறப்பு செய்தியாளர் எம். ரமேஷ்குமார் மற்றும் இந்த ஊழலை அம்பலப்படுத்த உதவிய முத்தையா என்பவரும் பொய்ப் புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தினஞீமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் கைதானதற்கு தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். பத்திரிக்கை சுதந்திரம் முற்றிலும் பறிபோய் விட்டதாக அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறும் கிரானைட் ஊழல்களைப் பற்றி தினஞீமி நாளிதழ் கடந்த பல ஆண்டுகளாகவே துணிச்சலோடு செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த கிரானைட் தொழிலில் பல பண முதலைகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தும் கூட மிகுந்த துணிச்சலோடு அந்த தொழிலில் நடக்கும் ஊழல்களை தினஞீமி நாளிதழ் கடந்த பல ஆண்டுகளாகவே இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி வந்தது. குறிப்பாக, மதுரை மாவட்டம் கீழவளவு, கீழையூர், ரெங்கசாமிபுரம், அடஞ்சாண்பட்டி போன்ற பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத சுரங்கத் தொழில் பற்றி தினஞீமி நாளிதழ் செய்தி வெளியிட்டு வந்தது. மேலும் சட்டவிரோதமாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கிரானைட் குவாரிகள் தோண்டப்படுவதால் அதனால் பொதுமக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும் தினஞீமி நாளிதழ் அவ்வப்போது அம்பலப்படுத்தியது. வெடிகுண்டு வைத்து கிரானைட் குவாரிகள் உடைக்கப்படுவதால் பல வீடுகளில் கற்கள் விழுந்து அந்த வீடுகள் நாசமாயின. மேலும் இந்த தொழில் மேற்கொள்ளப்படுவதால் சுற்றுப்புற கிராமங்களில் சிலிக்கான் தூசி பரவி பொதுமக்கள் பலவித நோய்க்கு ஆளானதையும் தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது.

மேலும் மதுரை மாவட்டம் ரெங்கசாமிபுரத்தில் பவள மாரியம்மன் கோயிலுக்கு மிக அருகில் கிரானைட் குவாரி தோண்டப்பட்டதால் அந்த கோயில் தொங்கிக் கொண்டிருப்பதையும் தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது. கோயில் இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில்தான் கிரானைட் குவாரி தோண்டப்பட வேண்டும். ஆனால் 10 அடி தூரத்திலேயே கிரானைட் குவாரி தோண்டப்பட்டதை தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது.

மேலும் கிரானைட் குவாரிகளின் ஞிளம், அகலம், ஆழம் இவற்றை கணக்குப் பார்த்து அனுமதி வழங்க வேண்டும். அப்படி செய்யாததால் பலகோடி முறைகேடுகள் நடக்கின்றன என்பதையும் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு அவை சம்பந்தமில்லாத இடங்களில் எல்லாம் குவித்து வைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதையும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதையும் தினஞீமி நாளிதழ் மிக துணிச்சலோடு சுட்டிக் காட்டியது.

இதன் ஒரு கட்டமாக மாவட்ட கலெக்டர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்ட போது, எங்கெல்லாம் குவாரிகள் இல்லையோ அந்த கலெக்டர்கள் மட்டும் பதிலளித்தார்கள். குவாரி உள்ள மாவட்டக் கலெக்டர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் தினஞீமி நாளிதழ் மாநில தகவல் ஆணையத்தையும் அணுகியது. அங்கிருந்தும் சரியான பதில் கிடைக்காததால், முடங்கிப் போன தகவல் ஆணையம் என்று கூட செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும் இந்த ஊழல் தொடர்பாக சென்னை உயர்ஞிதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த எம். ரமேஷ்குமார் என்பவர் வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கும் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.

பின்னர் அடுத்த கட்டமாக தமிழக கவர்னரிடம் கூட ஒரு முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இப்படியாக தினஞீமி நாளிதழ் பல்வேறு காலக்கட்டங்களில் தமிழகத்தில் நடைபெறும் கோடிக்கணக்கான மதிப்பிலான கிரானைட் ஊழல் பற்றி செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் கூட சில சாட்டிலைட் படங்களை வெளியிட்டு மதுரை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத கிரானைட் குவாரி பற்றி செய்திகள் வெளியிடப்பட்டன. ரூ 1,500 கோடி கிரானைட் ஊழல் நடந்திருப்பதாகவும், விதிமுறைகளை மீறி சுரங்கத்தில் இருந்து கற்கள் கடத்தப்படுவதாகவும் தினஞீமி நாளிதழ் பரபரப்பு செய்திகளை படத்துடன் வெளியிட்டது. இந்த செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எரிச்சலையூட்டியிருக்கக் கூடும்.

இதன் காரணமாகவோ என்னவோ, தினஞீமி ஆசிரியருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. இருந்தாலும், தினஞீமி நாளிதழ் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். தொடர்ந்து ஊழல் பற்றிய செய்திகளை வெளியிடுவோம் என்று துணிச்சலாக சில தினங்களுக்கு முன்பு கூட தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. அதற்கு மறுநாளும் கிரானைட் சுரங்க ஊழல் பற்றி மிகப் பெரிய படத்துடன் தினஞீமி நாளிதழ் செய்தி வெளியிட்டது.

மேலும் ஒவ்வொரு முறையும் கிரானைட் செய்திகளை வெளியிடும் போதும் தினஞீமி நாளிதழில் ஒரு பாக்ஸ் செய்தி இடம்பெற்றிருக்கும். அதாவது, கிரானைட் குவாரிகளினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் சம்பந்தமாக தங்களுக்கு தகவல் எதுவும் தெரிந்திருந்தாலோ மேலும் புகைப்பட ஆதாரங்கள் இருந்தாலோ அவற்றை அனுப்புமாறு மக்களைக் கேட்டுக் கொள்ளும் வகையில் அந்த பாக்ஸ் செய்தி இடம் பெற்றது. அதன் பேரில் பொதுமக்கள் தந்த பல தகவல்களின் அடிப்படையில் பல செய்திகள் அடுக்கடுக்காக ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான் தினஞீமி நாளிதழுக்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. அதையும் பொருட்படுத்தாமல் துணிச்சலோடு செய்திகளை வெளியிட்டது தினஞீமி நாளிதழ்.

இதற்கிடையில் சிலர் கொடுத்த பொய்ப் புகாரின் அடிப்படையில் தினஞீமி நாளிதழ் ஆசிரியரும், அதிபருமான எஸ். மணிமாறன் மற்றும் அந்த நாளிதழின் சிறப்பு செய்தியாளர் எம். ரமேஷ்குமார் மற்றும் கீழையூரை சேர்ந்த( இந்த ஊழலை அம்பலப்படுத்த உதவிய) முத்தையா ஆகியோரை நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரை தல்லாகுளம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது இ.பி.கோ. 341, 384, 387,392 மற்றும் 511, 394 _ பி ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொய் வழக்கின் அடிப்படையில் தினஞீமி ஆசிரியர் மணிமாறன் உட்பட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நள்ளிரவில் ஒரு சமூக விரோதியை கைது செய்வது போல ஒரு பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்துள்ள செயல் பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதலாகும். பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த கைது நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளனர். திருப்ஞீர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பத்திரிக்கையாளர் சங்கங்கள் இந்த கைது நடவடிக்கைக்கு தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

பத்திரிக்கைகளின் குரல் வளையை நெறிக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். முறைகேடுகளை பற்றி செய்திகளை வெளியிட்டால் அதை சட்டப்ஞீர்வமாகத்தான் அவர்கள் சந்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஒரு பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்வது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பது போலாகும். இடிப்பாரே இல்லா ஏமரா மன்னன் கெடுப்பான் இலானும் கெடும்.

என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். எனவே தவறுகளை சுட்டிக் காட்டினால் அது தவறா? என்று பொதுமக்களும் கேட்கிறார்கள். மன்னன் தவறு செய்தால் அதை யாரும் தட்டிக் கேட்கலாம். இல்லாவிட்டால், கெடுப்பவர் இல்லாவிட்டாலும் அவன் தானாக கெட்டு விடுவான் என்கிறார் திருவள்ளுவர்.

அந்த அடிப்படையில்தான் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டன. அதற்கு தமிழக காவல் துறை கொடுத்திருக்கும் பரிசுதான் கைது நடவடிக்கை. ஜனநாயகத்தை நெறிக்கும் இதுபோன்ற செயல்களை தினஞீமி நாளிதழ் வன்மையாக கண்டிக்கிறது.

Saturday, July 17, 2010

நாம் எல்லோரும் தமிழர் தானா: ஒரு போராடும் இனமாக இருக்கவேண்டாமா?

சிங்கள அடக்குமுறை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனைப் பொறுக்காத இளைஞர்களால் ஆயுதப் போராட்டம் வெடித்தது. ஒரு புறம் அரசியல் போராட்டம், மறு புறம் ஆயுதப் போராட்டம் என இரு வடிவங்களில் எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.


அரசியலால் வெல்லமுடியாத நிலத்தை ஆயுதப் போராட்டம் வென்றெடுத்தது. சுமார் 33 வருடம் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் மே 18 ஆம் திகதி மௌனிக்கப்பட்டது. அதுவரை காலமும் புலத்தில் உள்ள மக்களும் சரி, தாயக மக்களும் சரி தமது பங்களிப்பை வழங்கி வந்தனர். அதற்கு ஏற்றால் போல, தாயகத்திலும் பல வெற்றிகரமான தாக்குதல்கள் நடைபெற்றது. ஆரம்பத்தில் பல விடுதலை போராட்ட அமைப்புகள் உருவாகியிருந்தாலும் அதில் விடுதலைப் புலிகளே தாக்குதல் திறன் கொண்ட முதன்மை அமைப்பாக விளங்கியது. புலிகள் இயக்கம் மீது சகோதர யுத்தம், சில படுகொலை குற்றம் போன்றவை சுமத்தப்பட்டாலும், அவர்களின் போராட்ட அர்ப்பணிப்பால், அவற்றை பலர் மறந்து, தம்மையும் அவ்வியக்கத்தில் இணைத்தனர். ஒரு காலத்தில் கீழ்க் காணும் இயக்கங்கள் யாழில் இயங்கியது என்றால் சிலரால் நம்பவே முடியாது..
L.T.T.E - (Liberation Tigers of Tamil Eelam)
– PLOTE - (People’s Liberation Organization of Tamil Eelam)
- TELO - (Tamil Eelam Liberation Army)
- TEA - (Tamil Eelam Arm)
- EROS - (Eelam Revolutionary Organization of Student)
- EPRLF - Eelan People’s Revolutionary Liberation Front
- TELE - (Tamil Eelan Liberation Extremists)
- TELF - (Tamil Eelam Liberation Front)
- TEEF - (Tamil Eelam Eagles Front)
- GATE - (Gurrilla Army of Tamil Eelam)
- RCG - (Red Crescent Gurrillas)
-EM - (Eagles Movement)
-SRSL - (Socidist Revolutionary Social Liberation)
-TEBM - (Tamil Eelam Blood Movement)
-TPCU - (Tamil People’s Command Unit)
-ELT - (Eelam Liberation Tigers)
-TLDF - (Tamil Liberation Defence Front)
-RELO - (Revolutionary Eelam Liberon Organization)
-TERO - (Tamil Eelam Revolutionary Organization)
-TERPLA - (Tamil Eelam Revolutionarry People’s Liberation Army)
-RFTE - (Red Front of Tamil Eelam)
-TELG - (Tamil Eelam Gurrillas)
-NLFTE - (National Liberation Front of Tamil Eelam)
-IFTA - (Ilankai Fredom Tamil Army)
-TEDF - (Tamil Eelam Diffence Front)
-TENA - (Tamil Eelam National Army)
-TPSO - (Tamil People’s Securrity Organization)
-TPSF - (Tamil People’s Securrity Front
-TEC - (Tamil Eelam Commandos)
-TESS - (Tamil Eelam Secuity service)
-PLP - (People’s Liberation Party)
-TELC - (Tamil Eelam Liberation Cobras)
-TPDF - (Tamil People’s Democratic Front)
-TS - (Three Stars)
-ENDLF - (Eelam National Democratic Liberation Front)
-EPDP - (Eelam People Demecratic Party)
-


இத்தனை போராட்ட இயக்கங்களும், அமைப்புகளும், படைகளும் தமிழர்களிடம் இருந்தது. பலஸ்தீன விடுதலை அமைப்பாக இருக்கட்டும், அல்லது ஆபிரிக்க விடுதலைப் போராக இருக்கட்டும், குறைந்தது 7 அல்லது 8 அமைப்புக்களுக்கு மேல் இருப்பதாகத் தெரியவில்லை ஆகக் கூடியது 20 அமைப்புகள் என்று வைத்துக்கொண்டாலும், தமிழீழத்தில் தான் சுமார் 36 அமைப்புகள் ஒருகாலத்தில் இருந்தது. இது எதை எடுத்துக காட்டுகிறது? எம்மில் எப்போதுமே ஒரு ஒற்றுமை இல்லை என்பதையே எமக்கு உணர்த்தி நிற்கிறது. எதை எடுத்தாலும், பிரிவு, ஒருவரை ஒருவர் துரோகியாக்குவது, தனது சொந்தப் பகையைத் தீர்ப்பது என்பது தற்போது தமிழர்களுக்கு இடையே வாடிக்கையாகிவிட்டது.

33 வருடம் நடந்த ஆயுதப் போராட்டம் மே 18 முதல் மௌனிக்கப்பட்டது. போரில் புலிகள் பல பின்னடைவுகளைச் சந்தித்தவேளை, அவர்கள் இங்கு இப்படித் தாக்குவார்கள், அங்கு இவ்வாறு எதிர் தாக்குதல் நடக்கும் என பல கட்டுரையாளர்களும் தம்மை புத்திஜீவிகள் என்போரும் பக்கம் பக்கமாக எழுதியிருந்தார்கள். இதில் இக்பால் அத்தாஸும் அடங்குவார். அவரை இலங்கை இராணுவம் கைதுசெய்வது போல நாடகம் ஆடி, பின்னர் அவர் ஏதோ இலங்கை அரசுக்கு எதிரானவர் என்று காண்பித்து, அதன் மூலம் தமிழர் இணையங்களில் எல்லாம் அவர் எதிர்வு கூறல் வெளிவர, புலிகள் போரில் பாரிய வெற்றியடைவார்கள் என்ற ஒரு பிரம்மையை சிங்களம் வேண்டும் என்றே ஏற்படுத்தி இருந்தது. பின்னர் மே 18ல் எல்லாம் முடிவடைந்தும், திடீரென மக்கள் சலிப்பில் மூழ்கினர், இதுவே அவர்களின் திட்டமும் கூட.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் கூட்டம் ஒன்று, புலிகளுக்கு காசு சேர்த்தவர்கள், பெரும் பணத்தை சுருட்டி விட்டார்கள் என்ற பரப்புரையை திட்டமிட்டு மேற்கொள்ள அதனை பெரும் விடயமாகச் சிலர் பேசுவதும், தமிழர் தேசிய தொலைக்காட்சி என்று தம்மை அடையாளப்படுத்தும் தொலைக்காட்சியும் எரியும் நெருப்பில் எண்ணை வார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பெரும் வேதனைக்கு உரிய விடயம். ஜூலை 23ம் நாள் பிரித்தானியாவில் இருந்து ஜெனீவா வரை நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் ஒரு இளைஞர், ஜூலை 23ம் நாள் இரவு நேரப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எத்தனை தமிழர்கள் அறிவார்கள்? அல்லது தமிழ் தேசிய தொலைக்காட்சி என்று தன்னை பீற்றிக்கொள்ளும் தொலைக்காட்சி இதனை வெளிக்கொண்டு வருகிறதா? ஏன் செய்யவில்லை?

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இதுவரை காலமும் போராட்டத்திற்கு சிறிய தொகை கூடப் பங்களிப்புச் செய்யாத சிலர் கூட தாமும் கடைசிநேரத்தில் பணம் கொடுத்ததாகவும், அந்தப் பணம் எங்கே போனது என்றும் கேள்விகேட்பது பெரும் வெட்கக்கேடான விடயம். போராட்டங்கள் நடந்து இலங்கை இராணுவத்தின் பல முகாம்கள் அழிக்கப்பட்டபோது, எவரும் எதுவும் பேசவில்லை, புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியபோது இவர்கள் பேசவில்லை, ஆனையிறவு பெரும் தளம் வீழ்ந்தபோது இவர்கள் எதுவும் பேசவில்லை, ஆனால் மே 18 க்குப் பின்னர் எதையும் பேசலாம் என எண்ணுகின்றனர். ஒருவன் விழுந்து போனால் அவன் மீது ஏறி மிதிப்பதே தமிழன் கொள்கையாக வைத்துள்ளானா?, இல்லை ஒரு கை கொடுத்து தூக்கிவிடும் மனம் நமக்கு அற்றுப்போய்விட்டதா?

காசு கொடுத்தோம் அவர் அதை சுத்திவிட்டார் என்று கூறுவோர், உண்மையாகவே முன் வந்து தாம் யாரிடம் கொடுத்தோம் என்று கூறுவது நல்லது. கொடுதவரிடம் விளக்கம் கேட்பது நல்லது. அதை விடுத்து ஒட்டுமொத்தமாக விடுதலைக்காய் அயராது உழைக்கும் அனைவரின் மீதும் பழியைப் போட்டு, எமது போராட்டத்தை திசைதிருப்பி ஸ்தம்பிக்கச் செய்யாதீர்கள். தவறு இழைத்தவர்களை அடையாளம் கண்டு பிடியுங்கள். போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட பணத்தை தனி நபர் சுருட்டிவிட்டார் என்று கூறுவோரும், இவ்வாறு தமிழர்களை யார் தூண்டுகிறார்கள் என்போர் குறித்தும் தமிழர்கள் மிகுந்த அவதானமாகச் சிந்தித்துச் செயல்படவேண்டும். இவர்கள் ஏன் இவ்வாறு பிரிவினையைத் தூண்டுகிறார்கள் என்பது குறித்து நாம் நன்கு ஆராயவேண்டும். சுயலாபம் கருதி இவ்வாறு சிலர் தூண்டி விட இதை அறியாத பாமர மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
புலிகள் போராடும் வரை போராடினார்கள், உலக அரசியல், உலக நாடுகளை உலுக்கிய இஸ்லாமிய பயங்கரவாதம், இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கை அரசு புலிகளை எப்போது பயங்கரவாதப் பட்டியலில் இட்டதோ அன்றே எம் போராட்டம் பின்னடைவைச் சந்தித்தது. எப்போது கருணா பிரிந்தாரோ அன்று பாரிய பின்னடைவை அடைந்தது. உலக நாடுகள் கூடி எப்போது புலிகளை அழித்தே தீருவோம் என்று களமிறங்கியபோது அன்றே எமது போராட்டம் சிதைக்கப்பட்டது. இது தான் உண்மை. புலம்பெயர் தமிழர்களாகிய நாம் இதுவரை பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு போராட்டத்தை புலிகள் கைகளில் விட்டிருந்தோம், அவர்களும் அதனை செவ்வனவே செய்துவந்தனர். இப்போது போராட்டத்தை அவர்கள் புலம்பெயர் மக்களின் கைகளில் விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அதனை நாம் செய்ய விரும்பாது, ஒருவர் மீது ஒருவர் குறைகூறுவதை பரம்பரை பழக்கம் போலச் செய்து வருகிறோம்.

போராட்டத்திற்காக பணம் சேர்த்த சிலர் அதனைக் கையாடல் செய்திருக்கலாம். அவர்கள் நிச்சயம் அடையாளம் காணப்படவேண்டும், ஆனால் அதற்காக உண்மையாக விடுதலைக்காக உழைக்கும் நபர்களையும், இதனைச் சாட்டாக வைத்து கொச்சைப்படுத்துவது, இலங்கை புலனாய்வுத் துறையின் திட்டம், இதற்கு நீங்களும் துணைபோக வேண்டாம் புலம்பெயர் தமிழர்களே... சரியான குற்றவாழிகளை அடையாளம் கண்டுபிடியுங்கள், அதைவிடுத்து எல்லோரையும் சாடி, அதனூடாக நேர்மையாக உழைத்துவரும் சிலர் மீது பழி சுமத்தி அவர்களையும் ஒதுக்கினால், இனி வரும் காலங்களில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க, பலரும் அஞ்சுவார்கள், அல்லது எமக்கு ஏன் பொல்லாப்பு என்று ஒதுங்கிப் போகும் நிலை தான் மிஞ்சும், இதனையே இலங்கை அரசும் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.

எனவே புலம்பெயர் மக்கள், தம்முள் ஊடுருவிள்ளவர்களை முதலில் அடையாளம் காண்பது , நல்லது. குறை கூறுவோர் அல்லது தூண்டுவோர் பின் புலம் என்ன? எதற்காக இவர்கள் குறை கூறுகிறார்கள் என்பதை முதலில் ஆராய்வது நல்லது. நாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை தீவிரப்படுத்த முயலுங்கள், ஐ.நா நிபுணர் குழுவுக்கு உதவுவது, போர் குற்ற விசாரணைகளை துரிதப்படுத்துவது, இன அழிப்பு பற்றிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது, தாயகத்தில் தவிக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் உதவுவது, தாய் தந்தையை இழந்த சிறுவர்களுக்கு உதவுவது என்று எவ்வளவோ இருக்கும் போது, குறிப்பிட்ட ஒரு சிலரால் தூண்டிவிடப்படும் இதுபோன்ற சர்ச்சைக்குள் நாம் ஏன் எமது நேரத்தை வீண் விரயம் செய்ய வேண்டும்?

குறை கூறுபவர்களும், புலிகள் இயக்கத்தை அவதூறாகப் பேசிவருவோரும் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். புலிகள் இயக்கம் போராட்டரீதியாக வீழ்ச்சியடைந்தை, சாதகமாகப் பயன்படுத்தி இவர்கள் தமது காழ்ப்புணர்வுகளை வெளிக்கொண்டுவரும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சிங்களத்தைப் பாருங்கள், ஐ.நாவால் ஒரு பிரச்சனை என்றால் எதிர்கட்சிகள் கூட ஒன்றாக இணைகின்றன. ஆனால் தமிழர்களோ, பிரிந்து நின்று ஆயிரத்தி எட்டு இயக்கங்களை ஆரம்பிப்பதும், உள்ள அமைப்பை இரண்டாக உடைத்து வெளியேறுவதும், ரி.வி யில் ஒரு முறையாவது முகம் காட்ட அலைவதும், இல்லை தன்னை ஒரு அமைப்பின் தலைவர் என்று கூறி பெருமையடிக்கவுமே தமது நேரத்தை பெரும்பாலும் செலவழிக்கின்றனர்.

இந்த நிலை மாறவேண்டும், 33,000 போராளிகள் இறந்திருக்கிறார்கள், அவர்களை புலி எதிர்ப்பாளர்கள் புலிகளாகப் பார்க்கவேண்டாம், தமிழ் இளைஞர்களாகப் பாருங்கள், அவர்களையும் உங்கள் சகோதரராக எண்ணுங்கள், ஒரு இன விடுதலைக்காக அவர்கள் உயிர் நீத்திருக்கிறார்கள், இளமைக்கால நினைவுகள் அனைத்தையும் இழந்து, காதல், காமம், குடிவெறி, அப்பா அம்மாவோடு இணைந்து வாழாமல், பள்ளிக்கூடம் செல்லாது, ஊர் சுற்றித் திரியாது, அனைத்தையும் துறந்து, துறவிகளையும் மாமுனிவர்களையும் விட பல படிகள் மேலே போய் எமது இன விடுதலைக்காய் உயிர் நீத்தனர் அவர்கள். அவர்கள் கனவு நனவாக ஆவது நாம் போராட வேண்டாமா?

இனி வரும் காலங்களில்...அப்படி நாம் சும்மா இருந்தால் எம்மையும், எம்மினத்தையும், பார்த்து காறி உமிழ்வார்கள் வேற்றின மக்கள்...