Saturday, July 17, 2010

நாம் எல்லோரும் தமிழர் தானா: ஒரு போராடும் இனமாக இருக்கவேண்டாமா?

சிங்கள அடக்குமுறை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனைப் பொறுக்காத இளைஞர்களால் ஆயுதப் போராட்டம் வெடித்தது. ஒரு புறம் அரசியல் போராட்டம், மறு புறம் ஆயுதப் போராட்டம் என இரு வடிவங்களில் எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.


அரசியலால் வெல்லமுடியாத நிலத்தை ஆயுதப் போராட்டம் வென்றெடுத்தது. சுமார் 33 வருடம் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் மே 18 ஆம் திகதி மௌனிக்கப்பட்டது. அதுவரை காலமும் புலத்தில் உள்ள மக்களும் சரி, தாயக மக்களும் சரி தமது பங்களிப்பை வழங்கி வந்தனர். அதற்கு ஏற்றால் போல, தாயகத்திலும் பல வெற்றிகரமான தாக்குதல்கள் நடைபெற்றது. ஆரம்பத்தில் பல விடுதலை போராட்ட அமைப்புகள் உருவாகியிருந்தாலும் அதில் விடுதலைப் புலிகளே தாக்குதல் திறன் கொண்ட முதன்மை அமைப்பாக விளங்கியது. புலிகள் இயக்கம் மீது சகோதர யுத்தம், சில படுகொலை குற்றம் போன்றவை சுமத்தப்பட்டாலும், அவர்களின் போராட்ட அர்ப்பணிப்பால், அவற்றை பலர் மறந்து, தம்மையும் அவ்வியக்கத்தில் இணைத்தனர். ஒரு காலத்தில் கீழ்க் காணும் இயக்கங்கள் யாழில் இயங்கியது என்றால் சிலரால் நம்பவே முடியாது..
L.T.T.E - (Liberation Tigers of Tamil Eelam)
– PLOTE - (People’s Liberation Organization of Tamil Eelam)
- TELO - (Tamil Eelam Liberation Army)
- TEA - (Tamil Eelam Arm)
- EROS - (Eelam Revolutionary Organization of Student)
- EPRLF - Eelan People’s Revolutionary Liberation Front
- TELE - (Tamil Eelan Liberation Extremists)
- TELF - (Tamil Eelam Liberation Front)
- TEEF - (Tamil Eelam Eagles Front)
- GATE - (Gurrilla Army of Tamil Eelam)
- RCG - (Red Crescent Gurrillas)
-EM - (Eagles Movement)
-SRSL - (Socidist Revolutionary Social Liberation)
-TEBM - (Tamil Eelam Blood Movement)
-TPCU - (Tamil People’s Command Unit)
-ELT - (Eelam Liberation Tigers)
-TLDF - (Tamil Liberation Defence Front)
-RELO - (Revolutionary Eelam Liberon Organization)
-TERO - (Tamil Eelam Revolutionary Organization)
-TERPLA - (Tamil Eelam Revolutionarry People’s Liberation Army)
-RFTE - (Red Front of Tamil Eelam)
-TELG - (Tamil Eelam Gurrillas)
-NLFTE - (National Liberation Front of Tamil Eelam)
-IFTA - (Ilankai Fredom Tamil Army)
-TEDF - (Tamil Eelam Diffence Front)
-TENA - (Tamil Eelam National Army)
-TPSO - (Tamil People’s Securrity Organization)
-TPSF - (Tamil People’s Securrity Front
-TEC - (Tamil Eelam Commandos)
-TESS - (Tamil Eelam Secuity service)
-PLP - (People’s Liberation Party)
-TELC - (Tamil Eelam Liberation Cobras)
-TPDF - (Tamil People’s Democratic Front)
-TS - (Three Stars)
-ENDLF - (Eelam National Democratic Liberation Front)
-EPDP - (Eelam People Demecratic Party)
-


இத்தனை போராட்ட இயக்கங்களும், அமைப்புகளும், படைகளும் தமிழர்களிடம் இருந்தது. பலஸ்தீன விடுதலை அமைப்பாக இருக்கட்டும், அல்லது ஆபிரிக்க விடுதலைப் போராக இருக்கட்டும், குறைந்தது 7 அல்லது 8 அமைப்புக்களுக்கு மேல் இருப்பதாகத் தெரியவில்லை ஆகக் கூடியது 20 அமைப்புகள் என்று வைத்துக்கொண்டாலும், தமிழீழத்தில் தான் சுமார் 36 அமைப்புகள் ஒருகாலத்தில் இருந்தது. இது எதை எடுத்துக காட்டுகிறது? எம்மில் எப்போதுமே ஒரு ஒற்றுமை இல்லை என்பதையே எமக்கு உணர்த்தி நிற்கிறது. எதை எடுத்தாலும், பிரிவு, ஒருவரை ஒருவர் துரோகியாக்குவது, தனது சொந்தப் பகையைத் தீர்ப்பது என்பது தற்போது தமிழர்களுக்கு இடையே வாடிக்கையாகிவிட்டது.

33 வருடம் நடந்த ஆயுதப் போராட்டம் மே 18 முதல் மௌனிக்கப்பட்டது. போரில் புலிகள் பல பின்னடைவுகளைச் சந்தித்தவேளை, அவர்கள் இங்கு இப்படித் தாக்குவார்கள், அங்கு இவ்வாறு எதிர் தாக்குதல் நடக்கும் என பல கட்டுரையாளர்களும் தம்மை புத்திஜீவிகள் என்போரும் பக்கம் பக்கமாக எழுதியிருந்தார்கள். இதில் இக்பால் அத்தாஸும் அடங்குவார். அவரை இலங்கை இராணுவம் கைதுசெய்வது போல நாடகம் ஆடி, பின்னர் அவர் ஏதோ இலங்கை அரசுக்கு எதிரானவர் என்று காண்பித்து, அதன் மூலம் தமிழர் இணையங்களில் எல்லாம் அவர் எதிர்வு கூறல் வெளிவர, புலிகள் போரில் பாரிய வெற்றியடைவார்கள் என்ற ஒரு பிரம்மையை சிங்களம் வேண்டும் என்றே ஏற்படுத்தி இருந்தது. பின்னர் மே 18ல் எல்லாம் முடிவடைந்தும், திடீரென மக்கள் சலிப்பில் மூழ்கினர், இதுவே அவர்களின் திட்டமும் கூட.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் கூட்டம் ஒன்று, புலிகளுக்கு காசு சேர்த்தவர்கள், பெரும் பணத்தை சுருட்டி விட்டார்கள் என்ற பரப்புரையை திட்டமிட்டு மேற்கொள்ள அதனை பெரும் விடயமாகச் சிலர் பேசுவதும், தமிழர் தேசிய தொலைக்காட்சி என்று தம்மை அடையாளப்படுத்தும் தொலைக்காட்சியும் எரியும் நெருப்பில் எண்ணை வார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பெரும் வேதனைக்கு உரிய விடயம். ஜூலை 23ம் நாள் பிரித்தானியாவில் இருந்து ஜெனீவா வரை நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் ஒரு இளைஞர், ஜூலை 23ம் நாள் இரவு நேரப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எத்தனை தமிழர்கள் அறிவார்கள்? அல்லது தமிழ் தேசிய தொலைக்காட்சி என்று தன்னை பீற்றிக்கொள்ளும் தொலைக்காட்சி இதனை வெளிக்கொண்டு வருகிறதா? ஏன் செய்யவில்லை?

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இதுவரை காலமும் போராட்டத்திற்கு சிறிய தொகை கூடப் பங்களிப்புச் செய்யாத சிலர் கூட தாமும் கடைசிநேரத்தில் பணம் கொடுத்ததாகவும், அந்தப் பணம் எங்கே போனது என்றும் கேள்விகேட்பது பெரும் வெட்கக்கேடான விடயம். போராட்டங்கள் நடந்து இலங்கை இராணுவத்தின் பல முகாம்கள் அழிக்கப்பட்டபோது, எவரும் எதுவும் பேசவில்லை, புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியபோது இவர்கள் பேசவில்லை, ஆனையிறவு பெரும் தளம் வீழ்ந்தபோது இவர்கள் எதுவும் பேசவில்லை, ஆனால் மே 18 க்குப் பின்னர் எதையும் பேசலாம் என எண்ணுகின்றனர். ஒருவன் விழுந்து போனால் அவன் மீது ஏறி மிதிப்பதே தமிழன் கொள்கையாக வைத்துள்ளானா?, இல்லை ஒரு கை கொடுத்து தூக்கிவிடும் மனம் நமக்கு அற்றுப்போய்விட்டதா?

காசு கொடுத்தோம் அவர் அதை சுத்திவிட்டார் என்று கூறுவோர், உண்மையாகவே முன் வந்து தாம் யாரிடம் கொடுத்தோம் என்று கூறுவது நல்லது. கொடுதவரிடம் விளக்கம் கேட்பது நல்லது. அதை விடுத்து ஒட்டுமொத்தமாக விடுதலைக்காய் அயராது உழைக்கும் அனைவரின் மீதும் பழியைப் போட்டு, எமது போராட்டத்தை திசைதிருப்பி ஸ்தம்பிக்கச் செய்யாதீர்கள். தவறு இழைத்தவர்களை அடையாளம் கண்டு பிடியுங்கள். போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட பணத்தை தனி நபர் சுருட்டிவிட்டார் என்று கூறுவோரும், இவ்வாறு தமிழர்களை யார் தூண்டுகிறார்கள் என்போர் குறித்தும் தமிழர்கள் மிகுந்த அவதானமாகச் சிந்தித்துச் செயல்படவேண்டும். இவர்கள் ஏன் இவ்வாறு பிரிவினையைத் தூண்டுகிறார்கள் என்பது குறித்து நாம் நன்கு ஆராயவேண்டும். சுயலாபம் கருதி இவ்வாறு சிலர் தூண்டி விட இதை அறியாத பாமர மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
புலிகள் போராடும் வரை போராடினார்கள், உலக அரசியல், உலக நாடுகளை உலுக்கிய இஸ்லாமிய பயங்கரவாதம், இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கை அரசு புலிகளை எப்போது பயங்கரவாதப் பட்டியலில் இட்டதோ அன்றே எம் போராட்டம் பின்னடைவைச் சந்தித்தது. எப்போது கருணா பிரிந்தாரோ அன்று பாரிய பின்னடைவை அடைந்தது. உலக நாடுகள் கூடி எப்போது புலிகளை அழித்தே தீருவோம் என்று களமிறங்கியபோது அன்றே எமது போராட்டம் சிதைக்கப்பட்டது. இது தான் உண்மை. புலம்பெயர் தமிழர்களாகிய நாம் இதுவரை பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு போராட்டத்தை புலிகள் கைகளில் விட்டிருந்தோம், அவர்களும் அதனை செவ்வனவே செய்துவந்தனர். இப்போது போராட்டத்தை அவர்கள் புலம்பெயர் மக்களின் கைகளில் விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அதனை நாம் செய்ய விரும்பாது, ஒருவர் மீது ஒருவர் குறைகூறுவதை பரம்பரை பழக்கம் போலச் செய்து வருகிறோம்.

போராட்டத்திற்காக பணம் சேர்த்த சிலர் அதனைக் கையாடல் செய்திருக்கலாம். அவர்கள் நிச்சயம் அடையாளம் காணப்படவேண்டும், ஆனால் அதற்காக உண்மையாக விடுதலைக்காக உழைக்கும் நபர்களையும், இதனைச் சாட்டாக வைத்து கொச்சைப்படுத்துவது, இலங்கை புலனாய்வுத் துறையின் திட்டம், இதற்கு நீங்களும் துணைபோக வேண்டாம் புலம்பெயர் தமிழர்களே... சரியான குற்றவாழிகளை அடையாளம் கண்டுபிடியுங்கள், அதைவிடுத்து எல்லோரையும் சாடி, அதனூடாக நேர்மையாக உழைத்துவரும் சிலர் மீது பழி சுமத்தி அவர்களையும் ஒதுக்கினால், இனி வரும் காலங்களில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க, பலரும் அஞ்சுவார்கள், அல்லது எமக்கு ஏன் பொல்லாப்பு என்று ஒதுங்கிப் போகும் நிலை தான் மிஞ்சும், இதனையே இலங்கை அரசும் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.

எனவே புலம்பெயர் மக்கள், தம்முள் ஊடுருவிள்ளவர்களை முதலில் அடையாளம் காண்பது , நல்லது. குறை கூறுவோர் அல்லது தூண்டுவோர் பின் புலம் என்ன? எதற்காக இவர்கள் குறை கூறுகிறார்கள் என்பதை முதலில் ஆராய்வது நல்லது. நாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை தீவிரப்படுத்த முயலுங்கள், ஐ.நா நிபுணர் குழுவுக்கு உதவுவது, போர் குற்ற விசாரணைகளை துரிதப்படுத்துவது, இன அழிப்பு பற்றிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது, தாயகத்தில் தவிக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் உதவுவது, தாய் தந்தையை இழந்த சிறுவர்களுக்கு உதவுவது என்று எவ்வளவோ இருக்கும் போது, குறிப்பிட்ட ஒரு சிலரால் தூண்டிவிடப்படும் இதுபோன்ற சர்ச்சைக்குள் நாம் ஏன் எமது நேரத்தை வீண் விரயம் செய்ய வேண்டும்?

குறை கூறுபவர்களும், புலிகள் இயக்கத்தை அவதூறாகப் பேசிவருவோரும் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். புலிகள் இயக்கம் போராட்டரீதியாக வீழ்ச்சியடைந்தை, சாதகமாகப் பயன்படுத்தி இவர்கள் தமது காழ்ப்புணர்வுகளை வெளிக்கொண்டுவரும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சிங்களத்தைப் பாருங்கள், ஐ.நாவால் ஒரு பிரச்சனை என்றால் எதிர்கட்சிகள் கூட ஒன்றாக இணைகின்றன. ஆனால் தமிழர்களோ, பிரிந்து நின்று ஆயிரத்தி எட்டு இயக்கங்களை ஆரம்பிப்பதும், உள்ள அமைப்பை இரண்டாக உடைத்து வெளியேறுவதும், ரி.வி யில் ஒரு முறையாவது முகம் காட்ட அலைவதும், இல்லை தன்னை ஒரு அமைப்பின் தலைவர் என்று கூறி பெருமையடிக்கவுமே தமது நேரத்தை பெரும்பாலும் செலவழிக்கின்றனர்.

இந்த நிலை மாறவேண்டும், 33,000 போராளிகள் இறந்திருக்கிறார்கள், அவர்களை புலி எதிர்ப்பாளர்கள் புலிகளாகப் பார்க்கவேண்டாம், தமிழ் இளைஞர்களாகப் பாருங்கள், அவர்களையும் உங்கள் சகோதரராக எண்ணுங்கள், ஒரு இன விடுதலைக்காக அவர்கள் உயிர் நீத்திருக்கிறார்கள், இளமைக்கால நினைவுகள் அனைத்தையும் இழந்து, காதல், காமம், குடிவெறி, அப்பா அம்மாவோடு இணைந்து வாழாமல், பள்ளிக்கூடம் செல்லாது, ஊர் சுற்றித் திரியாது, அனைத்தையும் துறந்து, துறவிகளையும் மாமுனிவர்களையும் விட பல படிகள் மேலே போய் எமது இன விடுதலைக்காய் உயிர் நீத்தனர் அவர்கள். அவர்கள் கனவு நனவாக ஆவது நாம் போராட வேண்டாமா?

இனி வரும் காலங்களில்...அப்படி நாம் சும்மா இருந்தால் எம்மையும், எம்மினத்தையும், பார்த்து காறி உமிழ்வார்கள் வேற்றின மக்கள்...

No comments:

Post a Comment