Wednesday, May 15, 2013

தே.மு.தி.க.வில் வெடித்தது ஈகோ: "பண்ருட்டி' - பிரேமலதா "டிஷ்யூம், டிஷ்யூம்!'

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=713311
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், திருப்பூர் பொதுக் கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் அக்கட்சி அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை விட, கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத பிரேமலதாவிற்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம் என, கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
"ஈகோ' பிரச்னை
குறிப்பாக, கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில், யார் முதலில் பேசுவது என்பதில், இவர்கள், இருவர் இடையே," ஈகோ' பிரச்னை உள்ளது. சில மாதங்களுக்கு முன், சென்னையில், கட்சியின் மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதை பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து விட்டார்.இந்த கூட்டத்திற்கு தலைமை வகிக்குமாறு, அவரை, தே.மு.தி.க., தலைமை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பிரேமலதா பங்கேற்ற நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன், பங்கேற்பதை தவிர்த்து விட்டார்.இந்நிலையில், மின்வெட்டு மற்றும் பின்னலாடை தொழிற்பாதிப்பை கண்டித்து, திருப்பூரில், சமீபத்தில், தே.மு.தி.க., சார்பில், அ.தி.மு.க., கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. இதில், விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பிரேமலதா ஆகியோர் பங்கேற்று பேசுவர் என, அறிவிக்கப்பட்டது. விஜயகாந்த் சென்ற விமானத்திலேயே, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், திருப்பூர் செல்வதை, பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து விட்டார். இதுகுறித்து, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் சிலரிடம் விசாரித்த போது, "சில நாட்களாகவே, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், சட்டசபைக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறார். இதன் காரணமாகவே, திருப்பூர் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை' என்றனர்.
"பிடிக்கவில்லை'
அதே நேரத்தில், கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியலில், நாகரிமான பேச்சை கடைப்பிடிக்க வேண்டும் என, பண்ருட்டி ராமச்சந்திரன் கருதுகிறார். ஆனால், அரசியலுக்கு புதியவரான பிரேமலதா, முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து பேசுகிறார். இது, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பிடிக்கவில்லை. இது மட்டுமின்றி, கட்சிக்காக, உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் தராமல், மற்றவர்களுக்கு முக்கியத்துவம் தருவதையும் அவர் விரும்பவில்லை. இதனால், சமீப காலமாக, பிரேமலதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து வருகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர். திருப்பூர் செல்வதை தவிர்க்கவே, "உடல்நிலை சரியில்லை' என்ற காரணத்தை, பண்ருட்டி ராமச்சந்திரன் தரப்பில், கட்சி தலைமையிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. - நமது நிருபர் -

Monday, March 18, 2013

இராஜதர்ம முடிவா? புலனாய்வு முடிவா? - பூநகரான்

Source: http://www.lankawin.com/show-RUmryDScNYes0.html
ஈழத் தமிழர் விவகாரத்தில், இந்திய மத்திய அரசு சுய முரண்பாடு மிக்க முடிவுகளை எடுத்தெடுத்தே அவ்வப்போது மத்திய நடுவண் அரசின் இறுதி முடிவுகளை இறுதி நேரத்தில் மாற்றி மாற்றி வருகிறது.
அத்தோடு அது அமெரிக்காவின் உச்சமட்ட இராஜதந்திர ராஜீக முடிவுகளை மட்டுமன்றி , ஐ நா அவையின் உத்தியோகபூர்வமான முடிவுகளைக் கூட மாற்றி வந்திருக்கிறது. இதற்கு பூகோள அரசியலில் இந்தியாவின் சமகால நிலைப்பாட்டுப் பலம் மட்டும் காரணம் என்று கூறி தமிழராகிய நாம் தப்பி விட முடியாது.
உண்மையில் இதற்கு ஒட்டு மொத்த புலம்பெயர்ந்த தமிழரின் இராஜதந்திரமற்ற வெற்று அரசியலும், சரியான பாதையில் செயற்படுபவர்களிற்கும் நகர முனைபவர்களிற்கும் தடையாக உள்ள உணர்ச்சி முதலீட்டுப் புலம்பெயர் குழுக்களும், இதனை உணர்ந்து மொழி வழித் தேசிய ரீதியில் அரசியல் சிந்தனையை முடுக்கி விடாது உணர்ச்சி வேக ஆதரவை அளிக்கும் நாங்களுமே பொறுப்பாவோம்.
தற்போது கருணாநிதியைச் சந்தித்து சமாதானப்படுத்த இந்திய மத்திய அமைச்சர்கள் சென்னை வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் டெல்லியில் இருந்து மத்திய அரசின் அரசியல் முடிவுகளை மாற்றி வரும் புலனாய்வாளர்களையும், இந்திய மத்திய அரசின் இராஜதந்திரிகள் ஸ்தானத்தில் உள்ள பிரதான அலுவலர்களையும் அல்லவா சந்திக்க வேண்டும்.
இந்த இடத்தில் கலைஞர் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் காண வேண்டுமாயின் அவர்களை திரும்பிச் சென்று மத்திய அரசில் உள்ள தமிழ் விரோத சக்திகளை சந்திக்குமாறு கூறி எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசின் அதிகாரிகளைச் சந்திக்க மறுத்ததை அவர் உற்றுக் கவனிக்க வேண்டும்.
கோடிக்கணக்கில் உலகெலாம் தமிழர் இருந்தும் அவர்களிற்கு என்று ஒரு நாடு இல்லை என்று சிறீலங்காவின் அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்ததையும், அன்மையில் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய தமிழரிற்காக ஐநாவில் குரலெழுப்ப பிரதிநிதித்துவம் இல்லையென்ற உரையையும் கலைஞர் தன்னைச் சந்திக்கும் மத்திய அமைச்சர்களிற்கு உணர்த்த வேண்டும்.
இந்தியா தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தாது தமிழகத்தை பிரித்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நோக்குமானால் காலப் போக்கில் தமிழகமும் தமிழீழம் போல் பிரிவினைக்கு தள்ளப்படும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
கேட்கப்படுவதும் கோரப்படுவதும் மட்டும் பிரிவினை அல்ல. புறக்கணிப்பும், அமுக்குவதும், மாற்றான் தாய் மனப்பான்மையும் கூட பிரிவினையே என்பதை துப்புத் தேடும் புலனாய்வாளர்களிற்கும், பொது ஜனத் தொடர்பும், வாக்கெடுப்பும் அன்றி தங்கள் சுய மன அபிலாஜைகளின் அடிப்படையில் தங்களிற்குரிய இறுதி முடிவை மாறறியமைக்கும் வாய்ப்புள்ள அதிகாரிகளை இந்திய தேசியம் பற்றி சிந்திக்கவும் வைக்க வேண்டும்.
அதாவது தவறான இராஜதந்திர முடிவால் பாரதம் என்கிற தேசிய உணர்வு மிக்க இராஜதர்ம முடிவை மாற்றக் கூடாது என்பதை எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிடின் ஒட்டு மொத்த தமிழக ஆதரவுடன் பாரதீய ஜனதா அரசிற்கு ஆதரவு அளித்து, அதன் மூலம் “காங்கிரஸ் இந்தியாவின்” திரு நம்பியார் போன்ற அதிகாரிகளும் திரு நாராணயசுவாமி போன்ற அமைச்சர்களும் இதர அரசியல்வாதிகளும் சிறீலங்காவுடன் சேர்த்து சர்வதேச விசாரணைக்கு உட்பட வேண்டிய தேவையை உருவாக்குவதைத் தவிர வேறு மார்க்கம் தமிழக தமிழர்களிற்கு இல்லை.
அதாவது தமிழக கோட்டை அதிகாரப் போட்டிக்கு அப்பால், தமிழகம் இணந்து செயற்பட வல்லதாக, சிறீலங்கா அரசால் 2002 ம் ஆண்டிலிருந்து வெளியேற்றப்பட்ட, வெள்ளைப்புலிகள் என முத்திரை குத்தப்பட்ட பழைய கண்காணிப்பு அதிகாரிகளையும், லூயி ஆர்பர் போன்றவர்களையும், பிரித்தானியா கனடா அடங்கலாக உள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கனேடிய ஊடக நண்பர்களை எல்லாம் என்று திரட்டி ஒரு உலகளாவிய ஈழத் தமிழர் மனித உரிமை ஜனநாயக அமைப்பை அமைத்து அதற்குள் தமிழகத்தின் முதல்வராக வருபவரையும், எதிர்க்கட்சித் தலைவராக வருபவரையும் உள்ளடக்கி டெல்லி தமிழகத்தை பிரித்தாளும் வாய்ப்பை தவிடு பொடியாக்க வேண்டும்.
இதனை புலம்பெயர்ந்த அமைப்புக்களோ அன்றில் கனடாவின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களோ என்றோ செய்திருக்க வேண்டும். இதனையே தமிழரின் இராஜதந்திரமற்ற வெற்று அரசியல் என்று தொடக்கத்திலேயே சுட்டியுள்ளேன்.
அமெரிக்காவையும் அதன் சிறீலங்காவிற்கு எதிரான அழுத்தங்களையும் தீர்மானங்களையும், அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மாற்றி அமைக்கவில்லை. இந்தியாவே அதனை மாற்றுகிறது என்பதை புலம் பெயர்ந்த தமிழராகிய நாம் உணர வேண்டும்.
தலைவர் பிரபாகரன் அன்றே இனங் கண்டதைப் போல், இந்தியாவே பெரும் தடைக்கல் என்பதை நாம் உணர்ந்து இந்தியாவை எதிர்ப்பதை விட்டு அமெரிக்காவை எதிர்ப்பது நியாயமானதாகவோ விவேகமானதாகவோ புலப்படவில்லை.
சரியான ராஜீக நகர்வுகளிற்கான சர்வதேச ராஜீக வெளியற்ற புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்களாவது இத்தகைய தவறுகளை நம்மவர்க்கு கூட்டிக் காட்டி உள்ள அமெரிக்க ஆதரவையும் இழக்காது காக்க முயல வேண்டும்.
என்றோ கடனைத் தீரத்திருக்க வேண்டிய கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகக் கருணா ஆவாரா?
அல்லது உறுதியுடன், சமாதானப்படுத்த வரும் மத்திய அமைச்சர்களை இராஜதர்மத்தின் அடிப்படையிலும், தமிழக அபிலாஜைகளினதும், அவசர பாதுகாப்புத் தேவைகளின் அடிப்படையிலும், தமிழகத்தையும் அடக்கிய இந்திய தேசிய நிலைப்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பாரா?
அல்லது உண்மையை அறியாது பொய்யை மீண்டும் நம்பி கறள் பிடித்த வெற்று வாளாவாரா? என்பதை நாளைய செய்திகள் தான் நமக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தமிழக மக்களிற்கும் மாணவர்களிற்கும் புலம் பெயர் ஈழத் தமிழரின் நன்றி.
kuha9@rogers.com

Monday, November 14, 2011

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!


ராஜீவ் கொலை வழக்கும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
13.11.2011 தினமலரில் அதன் சிறப்பு நிருபர் பெயரில் எழுதப்பட்ட “செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?” என்றொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நீங்களே ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள், விரும்பாதவர்களுக்கு அதன் சுருக்கம் இங்கே:
அதில் 23 வயது சவுமியா எனும் அழகான கேரளப் பெண்ணை ஓடும் ரயிலில் வன்புணர்ச்சி செய்து கீழே தள்ளிக் கொன்ற கோவிந்தசாமி என்ற குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் விவரத்தை தருகிறார்கள். பின்னர் அந்த கோவிந்தசாமி விருத்தாசலத்தைச் சேர்ந்த பச்சைத் தமிழன், மாற்றுத்திறனாளி, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீதான மரண தண்டனையை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டுமல்லவா என்பதை போற்றுவது போல இழிவுபடுத்தும் வஞ்சப் புகழ்ச்சி பாணியில் எழுதியிருக்கிறார்கள்.
தினமலரின் நோக்கம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான தூக்கை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை இங்கே பொதுப்புத்தியில் ஒரு சென்டிமெண்டான விசயத்தை வைத்து இழிவுபடுத்துவதுதான். மரணதண்டனை வேண்டாமென்று கோருபவர்கள் இத்தகைய கொடூரமான காமப் பொறுக்கியை காப்பாற்ற குரல் கொடுப்பார்களா என்று கேட்பதன் மூலம் அந்த அழகான கேரளப் பெண்ணின் அனுதாபத்தை வைத்து ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் மூவரை வில்லனாக்குவதுதான் தினமலரின் நோக்கம்.
அதே நேரம் கூடுதலாக தமிழன், மாற்றுத் திறனாளி, தலித் என்ற விவரங்களின் மூலம் தினமலரின் பார்ப்பன விழுமியங்களை நிலைநிறுத்துவது ஒரு போனஸ் நோக்கம். அதிலும் அந்த கோவிந்தசாமி தாழ்த்தப்பட்டவர் என்பதால் வயிற்றுப்பிழைப்புக்காக சிறு திருட்டுகள் செய்து இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறை செய்து விட்டார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று நயவஞ்சமாக எழுதுகிறார்கள். அதே போல இந்துத்வ இந்திய உணர்வுக்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழுணவர்வை குறி வைத்து தாக்குகிறார்கள்.
என்ன எழுதி என்ன பயன்? தினமலர் உருவாக்கி வைத்திருக்கும் பிற்போக்கான வாசகர் வட்டம் இந்த வஞ்சப் புகழ்ச்சி இகழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தினமலர் இப்படி எழுதலாமா என்று கோபப்படுகிறது. அவர்களெல்லாம் கோவை என்கவுண்டர் மேனியாவில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அல்லவா, அதனால் இளம் பெண் கற்பழிப்பைத் தாண்டி மற்ற விவரங்களின் மறை பொருளை புரிந்து கொள்ள முடியாத துரதிர்ஷடசாலிகள். இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தினமலர் கட்டுரைக்கு அருஞ்சொற்பொருளை எழுதி வாசகர் கடிதத்தில் புலம்பும் அப்பாவித் தமிழர்களுக்கு தேறுதல் சொல்லி வருவதோடு தினமலருக்கு வாழ்த்தையும் தெரிவிக்கிறார்கள்.
மூவர் தூக்கை வெறும் மனிதாபிமான நோக்கில் பேசிய பலரும், அதன் அரசியல் முக்கியத்துவத்தை பேசினால் பிரச்சினை என்று வெறும் சென்டிமெண்டாக மட்டும் மக்களிடம் கொண்டு போனவர்களும், தினமலரின் இந்த சாணக்கிய நரித்தந்திரத்தை எதிர் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். எனினும் அவர்களின் தவறு தினமலரின் வக்கிரத்தோடு ஒப்பிட முடியாத ஒன்று.
முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.
இதுவும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
தினமலர் வாரமலரில் எழுதிப் புகழ்பெற்றவர் அந்துமணி எனும் இரமேஷ். இவர் தினமலர் சென்னை பதிப்பின் உரிமையாளரும் கூட. ராமசுப்பையரின் வழியில் வந்த பார்ப்பன உத்தமர். இவருக்கு இருக்கும் அதிகார செல்வாக்கை வைத்துப் பார்த்தால் இவர் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு சில பெண்களோடு மட்டும் கொஞ்சம் விளையாடி இருக்கிறார். அதில் ஒரு பெண், தினமலர் அலுவலகத்தில் வேலை செய்தவர் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை பாலியல் வக்கிரம் என்று மட்டும் புரிந்து கொள்ளாதீர்கள். அந்துமணிக்கு சினிமா, மேன்மக்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முதலாளிகள் என்று பரந்துபட்ட தொடர்பு, வாய்ப்புகள் இருந்தும் அவர் எப்போதும் எல்லை மீறியவரில்லை.
ஏதோ போதாத காலம், கீழ் பணியாற்றும் பெண்ணிடம் கொஞ்சம் ‘லைட்டாக’ வரம்பு மீறிவிட்டார். பின்னர் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை மனநோயாளியாக ஆக்கி அலுவலகத்தை விட்டு துரத்தி, போலீசு உலகை கொஞ்சம் கவனித்து அந்த புகாரை குப்பைக் கூடைக்கு வீசி எறிந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை கூலிக்கு ஆள் அமர்த்தி கொலையே செய்திருக்கலாம். அப்படி செய்யாதது ஏன் என்பதில்தான் அவரது ஜீனின் மாட்சிமை அடங்கியிருக்கிறது. பார்பனர்கள் எப்போதும் யாரையும் நேரடியாக கொலை செய்து பழக்கமில்லை. அதெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடும் காட்டு மிராண்டிகளான ‘கீழ்சாதி’ பயல்கள் செய்வது. அந்துமணி இரமேஷ் அய்யரை அப்படி எடை போட்டு விடாதீர்கள்.
இதற்கு மேல் அந்துமணியை கைது செய்து அந்த பாலியல் வன்புணர்ச்சிக்கான வழக்கில் விசாரித்து அவருக்கு தூக்குதண்டனை வாங்கித்தரவேண்டும் என்று யாராவது கிளம்பினால் அது தருமத்தின்படியும், மனு தர்மத்தின்படியும், பார்ப்பன நெறிப்படியும் அநீதியானதாகும். மேலும் உலகை ஆளும் ஒரு பார்ப்பனனை அப்படி தூக்கில் போட்டால் இந்தியாவே இயற்கை சீற்றத்தால் அழியுமென்பது உறுதி. ஆகவே யாரும் அந்த புண்ணியவானுக்கு தீங்கிழைக்காமல் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஏற்கனவே காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதிக்கு அப்படி ஒரு அபகீர்த்தி நிகழ்ந்ததனால்தான் சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். பெரியவாள் துறவறத்தோடு, பார்ப்பன தர்மத்தையும், இந்து மதத்தையும் அல்லும் பகலும் பாடுபட்டு காப்பாற்றும் திருப்பணியை செய்து வந்தவர். தொடர்ச்சியாக அந்த வேலைகளில் ஏற்பட்ட களைப்பு காரணமாக சில பல பார்ப்பன மாமிகளின் மேல் கை வைத்து விட்டார். அதுவும் கூட வன்புணர்ச்சி என்று முடிவு செய்துவிடக்கூடாது. அதெல்லாம் பெரியவாளுக்காக சில பக்தர்கள் ஒப்புதலுடன் மேற்கொண்ட பரிகாரங்கள்.
அனுராதா ரமணன் மட்டும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பெரியவாளின் செய்கையில் குற்றம் கண்டுபிடித்து பொதுவெளியிலும் அம்பலப்படுத்தினார். அவர் புராணக்கதைகள் எதையும் படித்ததில்லை போலும். ஆனானப்பட்ட இந்திரனும், விசுவாமித்திரனும் கூட இப்படி சில தருணங்களில் சஞ்சலப்பட்டவர்கள்தான். அதையெல்லாம் பரப்பிரம்மத்தின் ஆகிருதி விளையாட்டு என்று கொள்வதை விடுத்து இகலோக மனிதப்பதர்களின் நோக்கில் ஆய்வு செய்வது தவறு.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாத குசும்புப் பார்ப்பான் சங்கரராமன் தொட்டதுக்கெல்லாம் மொட்டைக்கடிதாசி போட்டு பெரியாவளை இம்சித்து வந்தான். பெரியவாளும் எத்தனை நாள் இந்தக் கொசுக்கடியை சமாளிப்பது? அவாளுக்கும் சமயத்தில் கோபம் வருமோ இல்லியோ? பக்தரான அப்புவையும், ரவி சுப்ரமணியனையும் கூப்பிட்டு சங்கர ராமனை போட்டுத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அவர்களும் பெரியவாளின் கொசுக்கடியை கோவில் வளாக்கத்திலையே அரிவாளால் அழித்து விட்டார்கள். தெய்வம் நின்று கொல்லுமென்பது பெரியவாளின் விசயத்தில் உண்மையானது.
இது பொறுக்காத சில ஜென்மங்கள் பெரியவாளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது அக்கிரமம். ஆனாலும் பெரியவாள் சஞ்சலப்படாமல் தொடர்ந்து போராடி எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கி, பிறகு நீதிபதிக்கே ரேட் பேசி வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டார். இதெல்லாம் நீதிமன்றங்களில் சகஜம் என்பது ஒரு போண்டா வக்கீலுக்கு கூட தெரியும்.
தற்போது இந்த வழக்கை மறு விசராணை செய்து குற்றத்தை நீருபித்து பெரியவாளை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சிலர் பேசுவது சரியா? பூலோக இந்துக்களின் சர்வலோக குருவை இப்படி ஒரு கொசுக்கடி அழிப்பிற்காக தூக்கில் தொங்க விடுவது சரியா? நேர்மையுள்ள இந்துக்கள் சிந்திக்கட்டும். ஒரு வேளை சில தமிழ் – திராவிட – கம்யூனிஸ்ட் வெறியர்கள் அப்படி பெரியவாளை தூக்கில் போடுவதற்கு காரணமாக இருந்தால் இந்தியா அழிவது உறுதி.
விருத்தாசலம் கோவிந்தசாமி வயிற்றுப்பாட்டுக்காக திருடியதும், நம்மவா முதல்வர் புரட்சித் தலைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும் ஒன்றா? சில அம்மாஞ்சிகள் அப்படிக் கேட்கிறார்கள். கோவிந்தசாமி திருடி, கற்பழித்ததற்கு தூக்கா, முழு தமிழகத்தையும் மொட்டையடித்த ஜெயாவுக்கு வாய்தாவா என்று கேட்பது மாபெரும் அநீதி.
புரட்சித் தலைவி தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே துணிவாக அறிவித்த வீராங்கனை. இது வரை தமிழகம் கண்டமுதல்வர்களில் ஒரே ஒரு  இந்து முதல்வர் இவர்தான் என்று வீரத்துறவி இந்து முன்னணி இராம கோபாலனால் பாராட்டப்பட்ட தாய். அவருக்கென்று குடும்பமோ, குட்டியோ எதுவும் கிடையாது. அவர் சொத்து சேர்ப்பது யாருக்காக? தமிழகத்தில் உள்ள எல்லாக் கோவில்கள்களிலும் பூஜை, புனஸ்காரங்கள், யாகங்கள், குடமுழுக்கு செய்து இந்து தருமத்தை காப்பாற்றுவதற்காகவே அப்படி சொத்து சேர்க்கிறார். அதுவும் பெரிய பெரிய முதலாளிகள் தமிழகத்தில் தொழில் துவங்கி கைமாத்தாக வைக்கும் தட்சிணையைப் போய் அப்படி சொத்து சேர்ப்பு, திருட்டு, ஊழல் என்று சொல்வது யாருக்கு அடுக்கும்?
மல்லையாவின் மெக்டோவல் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுவதனால்தானே சூத்திர, பஞ்சம, சண்டாளப் பயல்களுக்கு இலவச லாப்டாப்பெல்லாம் கொடுக்க முடிகிறது? அதற்கு காணிக்கையாக மல்லையா புண்ணியவான் சில போல கோடிகளை அம்மாவுக்கு கொடுத்தால் என்ன தப்பு?
பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கிற்காக அம்மா எத்தனை நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது? இல்லையென்றால் அந்த கோவிந்தராசனை சட்டுப்புட்டென்று தூக்கில் போட தீர்ப்பளித்த மாதிரி ஓரிரு வருடங்களில் வழக்கை முடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.
வந்தே மாதரம்!
பாரத் மாதாகி ஜெய்!!
இந்து தர்மம் ஓங்குக!!!

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348858
அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என நினைக்கும் போது! ஆச்சரியமாகவும் இருக்கிறது, இன்னும் அதற்கு எதிர்வினை நடக்கவில்லையே என்று.

கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த அழகுப் பெண் சவுமியா, 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி. ஆளைப் பிடித்தவர்கள், மளமளவென வழக்கை விசாரித்து, அவருக்கு மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விட்டனர். இதுவல்ல செய்தி. இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்ட பிறகும், இன்னும் ஒரு தமிழினத் தலைவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை; ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை; மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது தான் செய்தி. காரணம், அவர்கள் தலையிட்டு, இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள், இந்தப் பிரச்னையில் உள்ளன.
இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.

கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா 

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?
ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!
-நமது சிறப்பு நிருபர்-

Thursday, September 8, 2011

காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் -தினமலருக்கெதிராக வழக்குத் தாக்குதல்?

ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் – காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் – தினமலர்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295&Print=1
இந்தப் பதிவை தினமலம் அகற்றி விட்டது
பிரித்தானியாவில் பரமேஸ்வரன் பத்திரிக்கைக்கு எதிராக தாக்கல் செய்து வெற்றி பெற்றிருந்தார்
அது போல் ஏன் தமிழ்நாட்டில் செய்வதில்லை?
பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடாத்துதல் அத்தோடு முடிந்து விடுவது  ஆனாலும் இந்த ஊடகங்கள் நிறுத்துவதாக இல்லை
முத்துக்குமார் வயிற்று வலி , காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள்  இப்படித் தொடர்கின்றன
ஒரு ஊடகத்திற்கு எதிராகவேனும் வழக்குத் தாக்குதல் செய்ததாக இதுவரை அறியவில்லை
இத்தனை அமைப்புக்கள் இருந்தும் யாரும் இது குறித்து முன்வராதது ஏன் ?
அல்லது அப்படி ஒரு சட்டம் தமிழ்நாட்டில் இல்லையா ?

Friday, September 2, 2011

தீ:நமக்கல்ல இனி எதிரிக்கு வைப்போம்!

நம் உடலுக்கு வைத்துக்கொள்ளும் தீயை, இனி எதிரிகளுக்கு பரிசாய் தருவோம் 

இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன் சாகடிக்கப்பட்ட நேரு குடும்பத்தின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இந்திய அரசு முடிவு செய்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எட்டுவார கால இடைக்கால தடை விதித்து 30.08.11 அன்று உத்தரவிட்டுள்ளது.இம்முவரின் தூக்கு தண்டனை பிரச்சனையில்,கடந்த சில வாரங்களாக கொந்தளித்த தமிழகம், இந்த இடைக்கால தடையை வரவேற்று பட்டாசு வெடித்துள்ளது!.தூக்கு தண்டனையை நிறுத்த தனக்கு அதிகாரமில்லை என்று கூறிய முந்நாள் நடிகையும்,இந்நாள் முதல்வருமான ஜெயாவின் சட்டமன்றம் தூக்குதண்டனையை ரத்துசெய்துவிட்டு ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
                                                              

தூக்குமேடையில் தற்போது நிற்கும் மூவரும் ராஜுவ் கொலையில் நேரிடையாக சம்பந்தம் இல்லாதவர்கள்.கொலையாளிகளுக்கு உதவியவர்கள் என்பதுதான் அவர்களின் மீதான குற்றச்சாட்டு கொலையாளிகளுக்கு அவர்கள் தந்த பொருட்கள் எதற்காக பயன்படுத்த போகிறார்கள்,என்பது கூட தெரியாத அப்பாவிகள்.ராஜிவை கொலை செய்ததாக இவர்களே கூறும்,ஒற்றைக்கண் சிவராஜன்,தானு ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர்.ராஜீவை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறுப்படும் விடுதலை புலிகள் இயக்கமே, இன்று அதன் தலைவர் பிரபாகரன்,உளவு பிரிவு தலைவர் பொட்டுஅம்மன் உட்பட அனைவரும் ஈழ இறுதிக்கட்ட போரில் கோரமாக கொல்லப்பட்டுவிட்டனர்.இவர்கள் மட்டுமல்ல இவர்களோடு சேர்த்து தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக முள்ளிவாய்க்காளில்,50 ஆயிரம் ஈழத்தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர்.தற்போது தூக்குமேடையில் நிற்கும் மூவரும் 21 ஆண்டுகளாக சாவோமா,பிழைப்போமா? என்றுகூட தெரியாமல் தனிமை சிறையில் வைத்து கோரமாக ரசித்த பின்னரும் கூட இந்திய அரசின், தமிழர்களை பழிவாங்கும் கோரப்பசி இன்னும் அடங்கவில்லை.இந்த அடங்கா பசிக்கு ராஜீவை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்பது மட்டும்தானா காரணம்? இல்லை இவர்களின் அடங்காப் பசிக்கு, இதுமட்டுமே காரணமல்ல.ராஜூவ் காந்தி கொலைக்கு பழிவாங்குவதுதான், இவர்களின் நோக்கம் என்றால் இதற்கு முன்னரே இந்திய அரசு தனது சொந்தநாட்டு மக்களாகிய தமிழ்நாட்டு தமிழர்களையே, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து பழிவாங்கிய இந்திய அரசின் நோக்கம்தான் என்ன? தமது உரிமைகளுக்காக போராடிய ஈழத்தமிழர் மீது 1987 ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்போட்டு, ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றும்,ஈழத்தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இந்திய அரசின் நோக்கம்தான் என்ன? நிச்சயம் ராஜீவ் படுகொலை மட்டுமல்ல,தமிழர்கள் மீதான இந்திய ஆளும்வர்க்கத்தின்,பார்ப்பன கும்பலின் நலன்களுக்கு எப்போதுமே அது தமிழக தமிழனாக இருந்தாலும்சரி,ஈழத்தமிழனாக இருந்தாலும் சரி எப்போதுமே அடிபணிந்து போனதில்லை.வரலாற்று காலம் தொட்டு பார்ப்பன எதிர்ப்பு கோட்டையின் அடையாளமாக தமிழர்கள் விளங்குகிறார்கள்.மொழி,பண்பாடு,நாகரிகம் என அனைத்திலும் தனக்கென தனி ஒரு பண்பாட்டை உடையவர்கள்.இந்த சுயமரியாதை தன்மான உணர்வை,தமது வழ்க்கை முறையாகவே கொண்டவர்கள்.எப்போதுமே பார்ப்பன பண்பாட்டின் எதிர்ப்பு கோட்டையாகவும்,இதன் காரணமாகவே, அதன் இயல்பிலேயே இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு எதிரான சிந்தாந்த நடைமுறையை தமது வாழ்வியலோடு உள்ளடக்கியவர்கள்.

சங்ககாலத்தில் சமயமற்று வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் சோழர்கள் பார்ப்பன சித்தாந்தத்தை அரச மதமாக ஏற்று அதை தமிழ் சமூகத்தின் மீதும் திணித்தனர்.இதனால் வெகுண்டெழுந்த தமிழர்கள் களப்பிரர்கள் தலைமையில் பார்ப்பன எதிர்ப்பு சமயங்களான சமண,பெளத்தத்தை தமது சித்தாந்தமாக தழுவிக்கொண்டனர்.300 ஆண்டுகள் களப்பிரர்கள் ஆட்சி தமிழகத்தில் கோலோச்சியது.ஆனாலும் பிற்கால களப்பிரர்களில் சிலர் தமது ஆளும்வர்க்க நலனுக்காக பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டனர்.இதன் பின் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் களப்பிரர்களை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினர்.பார்ப்பனக்கும்பலின் துணையோடு சமண,பெளத்த மதங்களை கொடுரமாக கொன்றொழித்தனர்.தமிழர்கள் சாதிகளாக கூறுபோடப்பட்டனர்.ஆனாலும் பார்ப்பன எதிர்ப்பு என்பது தமது வாழ்வியலின் ஒரு அங்கமாக ஆக்கிகொண்டனர்.தென்னிந்தியாவில் ஆரியர்களாக அல்லாது பார்ப்பனர்களாகத்தான் ஊடுருவினர்,பிற்காலத்தில் சோழ மன்னர்கள் வட இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை அழைத்து வந்து சகல வசதிகளுடன் குடியமர்த்தினர்.தென்னிந்தியாவில் ஊடுருவிய பார்ப்பனர்களும்,அவர்களின் மொழியான சமஸ்கிருதமும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகியவற்றில் ஊடுருவியது.தமிழகத்திலே பார்ப்பன பண்பாடு சமூகத்தின் எல்லா அங்கங்களிலும் ஊடுருவினாலும் தமிழ் மொழியின் குறைவற்ற வளம் காரணமாக தமிழ் மொழிக்குள் அதன் இலக்கண வரம்புக்குள் சமஸ்கிருத்தத்தால் ஒருபோது ஊடுருவ இயலவில்லை.
களப்பிரர் ஆட்சிக்கு பின்னர் தந்தை பெரியார் தமிழகத்தை பார்ப்பன எதிர்ப்புக் கோட்டையாக மீண்டும் உருவாக்கினார்.ஆனாலும் தந்தை பெரியாரின் கண்முன்னாலேயே அவர் எழுப்பிய பார்ப்பன எதிர்ப்புக்கோட்டையை அண்ணாதுரை தலைமையிலான பிழைப்புவாத கும்பல் இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு காட்டிக்கொடுத்தது.  
அன்றைய சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் முதல் இன்றைய அண்ணாதுரை,கருணாநிதி,வைகோ,ராமதாசு,திருமா போன்றோரை வைத்து, எப்போதும் கனன்று கொன்டிருக்கும் இந்த நெருப்பில் தண்ணீரை ஊற்றினாலும் அதனை முழுமையாக அணைக்க முடியவில்லை.அது எப்போதும் பற்றிக்கொள்வதற்கு தயாராக தம்மை உருவாக்கிகொண்டு காத்திருக்கிறது.பற்றவைக்கத்தான் தேவை ஒரு தீக்குச்சி மட்டுமே,அந்த தீ குச்சியாக ஈழ இறுதிப்போரின் போது முத்துக்குமாராகவும்,தற்போது செங்கொடியாகவும் இருக்கிறது!


 மூவரின் தூக்குதண்டனையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு,தமிழினத்தின் தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அனைவரும் ராஜீவ் கொலையை நாங்கள் ஆதரிக்கவில்லை,அது கோரமானது.இப்படிப் பட்ட நடவடிக்கைகளை நாங்கள் என்றும் ஆதரித்ததில்லை,ஆதரிக்க போவதுமில்லை என்றுதான் சத்தியம் செய்கிறார்கள்.இதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு,இந்தியாவின் தெற்காசிய மேலாதிக்க நோக்கத்திற்கு தாங்கள் எப்போதுமே எதிரிகளில்லை,என்றும் இந்தியாவின் பிராந்திய துணை வல்லரசு நோக்கங்களுக்கு சிங்களவர்களை விட,தமிழர்களே உண்மையான நண்பர்கள் என்று சாமியாடினாலும் இதை நம்புவதற்கு,இந்திய ஆளும்வர்க்கங்கள் தயாரில்லை.ஏனேன்றால் தமிழனின் தன்மானத்திற்கும்,சுயமரியாதைக்கும் சோதனை வரும்போதெல்லாம்,தனது உடலில் தீ வைத்துக்கொள்வதற்கு முன்னர் யாரென்றே தெரியாதவர்கள்,தனது சாவுக்கு பின்னர் தமிழர்களின் தலைவர்களாகிவிடுகின்றனர்.உயிரற்ற அவர்களின் உடல்கள் மொத்த தமிழினத்தையே தலைமையேற்று வழிநடத்துகிறது.


     சென்னை உயர்நீதிமன்றம் 8 வார இடைக்கால தடை விதித்திருந்தாலும் இது நிரந்தரமாகுமா? இல்லையா? என்பது இக்காலக்கட்டத்தில் தமிழர்கள் எப்படி நடந்துகொள்ளபோகிறார்கள்.என்பதை பொருத்தே அமையபோகிறது.அது இந்திய ஆளும்வர்க்கங்களின் நலன்களுக்கு எஞ்சியதையும் இழக்க போகிறதா? அதாவது பல்லாயிரம் ஆண்டுகளாக நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டே இருக்கும் தமிழர்களின் தனித்த அடையாளங்களை விடப்போகிறதா,இல்லையா என்பதுதான். ஆகவே இந்த தூக்குதண்டனையும்,இடைக்கால தடையும் தமிழர்களுக்கு இந்திய ஆளும்வர்க்கங்கள் வைத்திருக்கும் பரிசோதனை!  


     இப்போது நம்முன்னே இரண்டு வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
1.பார்ப்பன எதிர்ப்பு,சுயமரியாதை,தன்மானம்,நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை தூக்கியெறிந்துவிட்டு அடங்கிவிடு………..
2.மேற்கண்டவைகளை விட மறுத்தால் மூவரின் தூக்கு நிச்சயம்!


     இதில் இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு நமக்கு நிபந்தனை விதித்துள்ளது.இதில் முதலாவதை செய்து மூவரையும் காப்பாற்றுவது என்று தமிழின தலைவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள்.
ஆனால்,இதை எங்களால் ஏற்க முடியாது என்று முத்துக்குமார்,செங்கொடி தலைமையிலான சுயமரியாதை தன்மானத் தமிழர்கள் முழக்கமிடுகிறார்கள்.

ஆம் நாம் இரண்டாவதை தேரிவு செய்ய முடியுமே தவிர,முதலாவது நிபந்தனைக்கு கட்டுப்பட முடியாது.கெஞ்சவோ,கூத்தாடவோ முடியாதுஅப்படியானால் அம்மூன்று தமிழர்களின் சாவு நிச்சயம் தானா?அதை தடுப்பதற்கு வேறு வழிகள் இல்லையா?ஏன் இல்லை. வழி இருக்கிறது.அந்த வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றலும் நமக்கிருக்கிறது.தேவை தலைமை மட்டுமே.எரிவதை இழுத்தால் கொதிப்பது நின்றுபோகும்.நம் உடலில் நாம் தீ வைத்துகொள்வதற்கு பதில் இந்தியாவின் தெற்காசிய பிராந்திய துணை வல்லரசு கனவுகளுக்கு கொல்லி வைப்போம்.இதை செய்வதன் மூலம் அம்மூவரின் உயிரை மட்டுமல்ல,பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் காத்துவரும் பார்ப்பன எதிர்ப்பு,தன்மானம்,சுயமரியாதை,நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை காப்பாற்றுவோம்.
 

Thursday, April 28, 2011

தமிழினத் துரோகிகள்..!

Source: http://www.dinamani.com/

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.

இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.

இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.

இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.

""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.

இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?

தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல..