Thursday, September 24, 2009

மூன்று மணிநேர திரையரங்கு சுகமும் அறுபத்துயொருவருட கால போராட்ட வலிகளும்




இந்திய தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சி நிறுவனங்களும், அவர்களின் ஏனைய நிறுவனங்களும் தமது பொருளாதார வளர்ச்சிகளுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்ற மடல் ஒன்றை எனது நண்பர் ஒருவர் கடந்த வாரம் எனக்கு அனுப்பியிருந்தார்.கருணாநிதியின் குடும்ப சொத்தாக விளங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் தொலைக்காட்சி நிறுவனம், சன் திரைப்பட நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் என்பன முக்கியமானவை. இந்த தொலைக்காட்சிகள் ஈழத்தமிழ் மக்களின் அண்மைய பேரவலங்களை முற்றாகவே புறக்கணித்திருந்தன.ஒரு இனம் அழிவின் விழிம்பில் அவலக்குரல் எழும்பிய போதும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. தனது மூன்று மணிநேர உண்ணாவிரதத்தின் மூலம் வன்னியில் போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற கருணாநிதியின் போலியான பிரச்சாரங்களை மிகைப்படுத்திய இந்த ஊடகங்கள் இறுதிக்கட்ட தாக்குதல்களின் மோசமான விளைவுகளை தமிழகத்தில் இருட்டடிப்பு செய்திருந்தன.மேலும் இந்த நிறுவனங்கள் சிறீலங்கா அரசின் தாக்குதல்களிலும், குண்டு வீச்சுக்களிலும் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் அவலங்களை புகைப்படங்களாக வெளியிடுவதை தவிர்த்து வந்ததுடன், தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாளர்களையும் பெரும் விமர்சனம் செய்திருந்தன, செய்து வருகின்றன. ஈழத்தமிழ் மக்களுக்கு இந்த கூட்டம் செய்த அழிவுகளுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் பலம் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் மக்களிடம் உண்டு.ஆனால் அவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்த தவறி வருகின்றனர் என்பதுடன், கருணாநிதியின் குடும்ப திரைப்பட நிறுவனமான சன் திரைப்பட நிறுவன்தினால் தற்போது தயாரிக்கப்படுத் எந்திரன் திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் மிக அதிகளவான பொருட்செலவில் தயாரிக்கப்படுவதாகவும், அது ஏறத்தான 30 நாடுகளில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் பணங்களை சுரண்டும் நம்பிக்கையுடன் தான் தயாரிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த திரைப்படத்தை 30 நாடுகளில் வெளியிடுவதன் மூலம் பல மில்லியன் டொலர்களை ஈழத்தமிழ் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள இந்த நிறுவனங்கள் முயல்கின்றன. ஆனால் நாம் அதனை முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்பதும் அவர் முன்வைத்துள்ள வாதங்கள். அவரின் கூற்றுக்கள் அனைத்தும் உண்மையானவை தான். இன்றைய உலக ஒழுங்கில் நாம் எந்த பதில் நடவடிக்கையை மேற்கொண்டாலும் அது பொருளாதாரத்தை மையப்பப்படுத்தியதாக இருந்தால் தான் அது எதிர்த்தரப்புக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பாகவும் அமையும்.விடுதலைப்புலிகளின் போரிடும் வலுவை முற்றாக அழிப்பதற்கு இந்த உலகம் திட்டமிட்டபோது அவர்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் நிதிவளங்களையே முதலில் குறிவைத்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகள் மீது அனைத்துலகத்தில் கொண்டுவரப்பட்ட தடைகளும் அவர்களின் நிதிவளங்களையும், வினியோக வளங்களையும் முடக்கும் திட்டத்தின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டது. எமது இனத்தின் விடுதலை வேட்கையை அவர்கள் எவ்வாறு நசுக்க முற்பட்டார்களோ அதனையே நாமும் பின்பற்றி அவர்களுக்கான நெருக்கடிகளை உருவாக்க வேண்டும்.இந்திய திரைப்படங்களை ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிப்பார்களாக இருந்தால் அது பொருளாதார சேதத்தை இந்திய சினிமா துறையில் ஏற்படுத்தும். தமிழகத்தை பொறுத்தவரையில் சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்தது. நடிகர் விஜய் இந்திரா காங்கிரசுடன் சாயமுற்பட்டு வருவதும் அதனால் தான். சினிமாத்துறை மீதான பொருளாதார சுமைகள் அரசின் பொருளாதார வளங்களை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் இந்திய சினிமாக்களை அதிலும் குறிப்பாக கருணாநிதியின் குடும்ப நிறுவனங்களின் வெளியீடுகளை நாம் எவ்வாறு புறக்கணிக்கப்போகின்றோம் என்பதுதொடர்பாகவும் பல வாதப்பிரதிவாதங்கள் கடந்த வாரம் ஏற்பட்டிருந்தன.அதாவது தமிழ் திரைப்படங்களை பார்க்கவே கூடாதா? ஏன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அது தவறான வாதம் திரைப்படங்களை பாருங்கள் ஆனால் திரையரங்குகளுக்கு செல்வதை தவிர்ப்பதே உகந்தது. ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவருவதற்கு சில வருடங்கள் காத்திருக்கும் எமக்கு அதனை திரையரங்குகளை தவிர்த்து டீவிடிகளில் (DVDs) பார்ப்பதற்கு எடுக்கும் ஒரிரு மாதங்கள் அதிகம் நீண்டதல்ல.ஈழத்தமிழ் மக்கள் இந்திய திரைப்படங்களை திரையரங்குகளில் பார்ப்பதை முற்றாக புறக்கணிக்கும் சந்தர்ப்பத்தில் அதனை கொள்வனவு செய்வோர் மெல்ல மெல்ல அதனை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பொருளாதார இழப்புக்கள் ஆட்சியில் இருக்கும் அரசின் மீதான வெறுப்பாகவே மக்களிடம் மாறும்.பொருளாதார கட்டமைப்பு என்பது பல நுண்ணிய படிமுறைகளுடாகவே பரிணாமம் எடுப்பதுண்டு. நாம் செலவிடும் ஒவ்வாரு பவுண்ஸ்களும் அல்லது டொலர்களும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையானது. எனவே அதனை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும்.இதற்கு நான் இங்கு ஒரு சிறு உதாரணத்தை குறிப்பிட்டு கொள்கின்றேன், வேல்ஸ் (Wales) மானிலத்தின் கார்டிஃப் (Cardiff) தலைநகரத்தில் உள்ள கார்டிஃப் பல்கலைக்களகத்தில் (Cardiff University) நான் பணிபுரிந்த காலத்தில் என்னுடன் வேல்ஸ் மாநிலத்தின் கார்பிலி (Caerphilly) பகுதியில் வசிக்கும் மாணவன் ஒருவர் பணியாற்றிகொண்டிருந்தார். அவர் தனது கிராமத்திற்கு நான் வந்து செல்ல வேண்டும் எனவும், அங்கு பண்டைய காலத்து அரசர்களின் அரண்மனை ஒன்று உள்ளதாகவும் அடிக்கடி கூறுவார்.ஆனால் எனக்கு நேரம் கிடைப்பதில்லை எனவே போவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இறுதியாக அவர் என்னை அழைத்த போது ஒரு உண்மையை கூறினார். அதாவது நான் அங்கு வந்து அங்கு சில பவுண்ஸ்களை செலவு செய்தால் அது தமது கிராமத்தின் வர்த்தக நடவடிக்கையில் உயர்வை ஏற்படுத்தும் என கூறியிருந்தார். அதாவது பொருளாதார வலிமையின் அடித்தளம் எங்கிருந்து கட்டி எழுப்பப்படுகின்றது என்பதை அன்று நான் புரிந்து கொண்டேன்.தனது கிராமத்தின் மீது அந்த இளைஞனுக்குள்ள பற்று எமது இனத்தின் மீது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் ஏற்பட வேண்டும். நாம் செலவிடும் ஒவ்வொரு நாணயமும் எதிர்த்தரப்பையோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயற்படுபவர்களையோ பலப்படுத்தாது பார்த்துக்கொள்ள வேண்டும். சிறீலங்காவில் கூட தேவைக்கு அதிகமாக நாம் செலவிடும் ஒவ்வவொரு நாணயமும் சிங்கள அரசினை பலப்படுத்தவே உதவும். இந்திய துாதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு இந்திய திரைப்படங்களை திரையரங்குகளில் பார்ப்பதன் மூலம் அதன் பொருளாதாரத்தை நாம் வலுப்படுத்துவோமானால் எமது போராட்டத்தினால் எந்த பலனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்பது தான் எனது கருத்து.திரையரங்குகளில் திரைப்படங்களை பார்க்காது விடுவதால் எமது உயிர் எம்மைவிட்டு பிரிந்து விடாது. மேலும் அதன் மூலம் எமது பிள்ளைகளின் காலாச்சாரங்களும் பாதிக்கப்படுவதில்லை. என்னைப்பொறுத்தரையில் 2000 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள திரையரங்கு ஒன்றில் தமிழ் திரைப்படம் ஒன்றை பார்த்தேன் அதன் பின்னர் கடந்த ஒன்பது வருடங்களாக திரைப்படங்கள் எதனையும் திரையரங்குகளில் பார்க்கவில்லை.மலிவாக கிடைக்கும் டிவீடிக்கள் மூலம் அல்லது இணையத்தளங்கள் மூலம் பார்ப்பதுண்டு. நாம் எமது உரிமைக்காக போராடும் இனம் எனவே நாம் தான் அதிக வலிகளையும், கட்டுப்பாடுகளையும் சுமக்க வேண்டும். ஒரு இந்தியனையோ அல்லது சிங்களவனையோ விட எமக்கு முன்னாள் உள்ள பணி பல மடங்கு அதிகமானது. அதனை கடப்பதற்கான பாதையும் கடினமானது. நீதித்துறையில் ஒரு வாசகம் உண்டு அதாவது கொலை செய்பவனை விட அதனை துVண்டுவதே அதிக குற்றம்.அதனை போல இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளையும், தற்போதைய தமிழக அரசசையும், அதற்கு துணைபோகும் சக்திகளையுமே ஈழத்தமிழ் மக்கள் தமது பிரதான எதிரிகளாக பார்க்கின்றனர்.எமது மக்களின் அவலங்கள் தொடர்பாக மேற்குலக ஊடகங்கள் காட்டும் அனுதாபங்களில் ஒரு விகிதத்தை கூட தற்போதைய தமிழகத்தின் ஆளும் கூட்டணி அரசின் ஊதுகுழல்கள் காண்பிக்கவில்லை.நாம் எந்த கலைஞர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் எமக்கு எமது மக்களில் விடுதலை தான் தற்போதுள்ள தலையாய பிரச்சனை அதனை காணும் வரையிலும் எந்த வழியிலும் நாம் போராடுவோம். எமது கையில் உள்ள அத்தனை வளங்களையும் ஆயுதமாக்குவோம். அதனை தான் எனது நண்பர் எனக்கு கூற முனைந்திருந்தார்.மகாத்தமா காந்தி கூறியதை போல சிறியதோ பெரியதோ எம்மால் முடிந்த பங்களிப்புக்களை நாம் வழங்கும் போது அதுவே எமது வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளின் உந்து சக்தியாக மெல்ல மெல்ல மாற்றம் பெற்றுவிடுவதுண்டு.மூன்று மணிநேர திரையரங்கு சுகத்திற்காக ஒரு இனத்தின் ஆறுபத்தியயாரு வருட கால விடுதலைப் போராட்டத்தையும், வேதனைகளையும் அடகுவைக்க முடியாது. அதனை நாம் தான் சிந்திக்க வேண்டும்.


வேல்ஸ் இல் இருந்து அருஷ்நன்றி: ஈழமுரசு


No comments:

Post a Comment